விடியும் ..
வைகறையில்
மெல்லிய ஒளிகீற்று
சிறிதாய்
இருள் கறை நீக்கி
பனி நகர்த்தி
புகைமூட்டம் விலக்கி
மெல்லிதாய் ஒளிவீசும்
கதிரவனின்
காலைப்பணி...
எப்போதும் போல்
இயல்பாய் இயங்குகிறது
இயற்கை ..
..
நாம் தான்
போர்வை விலக்காமல்
கதகதச்சூட்டில்
இன்னும் சிறிது மணித்துளி ..
தொடக்கத்தை தள்ளிவைக்கிறோம்
எல்லாம் பின்னூட்டம் ..
..
நமக்காக அல்ல
விடியல் அது
இயற்கையின்
இயல்பான செயல்பாடு
நாம் தான் விடியலைநோக்கி
நம்மை நகர்த்த வேண்டும்..
..
விடியல்
நமக்காக
காத்திருக்காது..
..
விடியல்
விடியும்..
நமக்கு விடியாத போதும்.
..
விடியல் எப்போது..
விடியம்...
#விடியல் நோக்கு
எல்லாம் விடியும்..
..//
மன்சூர்.பக்கம்..
..
பசித்தவனுக்கு..
ஒரு பேரிச்சம்பழம்..
தந்தாயா .
நீயும் நானும்
ஒரே மதம்
தடுமாறுகிறவனை.
கட்டியணைத்து..
விழாமல்
தாங்கிப்பிடித்தாயா..
நீயும் நானும்
ஒரே ஜாதி..
ஒடுக்கப்பட்டவனுக்காக
உன் குரல்
ஒங்கி ஒலிக்கிறதா
நீயும் நானும்..
தோழர்கள் ..
அறியாமை எனும்
நோயை போக்க.
ஆற்றல் தரும்..
பங்களித்தாயா
நீயும் நானும்..
ஒரே வர்க்கம்..
இயலாதவனை
கண்டால்..உன்
இதயம் இளகுகிறதா..
நீயும் நானும்..
மானுடகுலம்..
தாயையும்
தாய்மொழியையும்,
ஒருப்போல்
நேசிக்கிறாயா..
எனில்..
நீயும் நானும்..
ஒரே #இனம்...
அடுத்தவனில்
உரிமையில்
தலையிடாமல்,
அடுத்த வீட்டுக்காரனிடம்
அன்பை தருகிறயா..
நீயும் நானும்..
மனிதபிறவி..
இல்லையெனியில்
பிரிந்துவிடுவோம்..
இனி..
பரம வைரிகள்.
உலகு..
உனக்கோ
எனக்கோ..
அல்ல..
நமக்கானது..
புரிகிறதா..
புரிந்தால் வா..
புன்னகை
பூக்கலாம்..
ஆலஞ்சி.மு.மன்சூர்
..
#மீள்
No comments:
Post a Comment