Sunday, September 11, 2022

சாஸ்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநன் நெறிகளில் ஆசாரம் பெற்றாலும்
பாத்திரமேந்திப் புறத்திலலைந்தாலும்
பாவனையாலுடல் நொந்து மெலிந்தாலும்
மாத்திரைப்போதில் எமன் வருமப்போது
மற்றொன்றுதவாதுதவாதுதவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன் 
சுக்கானை நேர்பிடி இக்கணமே சொன்னேன்

சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன்
சூட்சக் கயிற்றினைப் பாரடா
ஆதி சூட்சக் கயிற்றினைப் பாரடா

#குணங்குடி_மஸ்தான்சாகிபு_அப்பா

No comments:

Post a Comment