சாஸ்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநன் நெறிகளில் ஆசாரம் பெற்றாலும்
பாத்திரமேந்திப் புறத்திலலைந்தாலும்
பாவனையாலுடல் நொந்து மெலிந்தாலும்
மாத்திரைப்போதில் எமன் வருமப்போது
மற்றொன்றுதவாதுதவாதுதவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன்
சுக்கானை நேர்பிடி இக்கணமே சொன்னேன்
சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன்
சூட்சக் கயிற்றினைப் பாரடா
ஆதி சூட்சக் கயிற்றினைப் பாரடா
#குணங்குடி_மஸ்தான்சாகிபு_அப்பா
No comments:
Post a Comment