Monday, September 12, 2022

அய்யா கோ.சி.மணி..
93 வது பிறந்தநாள் ..
..
தன்மான தளகர்த்தர் 
சோழ மண்டலத்தின் மாவீரன் 
ஒவ்வொரு ஊரிலும் அவர் பெயர் பொறிக்கபட்டிருக்கிறது ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டத்தில் அவர் பாதம் படாத இடமில்லை .. ஒவ்வொரு தொண்டரின் கிளைகழகத்தை சேர்ந்த நிர்வாகிகளின் பெயர் அறிவார் ..தோளில் கைபோட்டு  அவர்கள் குறைகளை கேட்பார் .. ஒவ்வொரு நிகழ்வையும் வரலாறாய் மாற்றும் வித்தைகாரர் ..
..
ஒரு மக்கள் பணியாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரை கண்டு படிக்கவேண்டும் 
இவரது துணைவியார் மரணம் அடைகிறார் .. அன்றைக்கு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தளபதியாய் விரைந்து அவரது இல்லம் செல்கிறார்,.. மனைவி உடல் கிடத்தபட்டிருக்கிறது அந்த சூழலில் கூட தளபதியை தனியாக அழைத்து குடந்தையில் கோவில் தேரோட்டம் .. விளக்குகள்  சரிசெய்யபடாமல் இருக்கிறது வழிகளை சரிசெய்ய வேண்டும் திருவிழாவிற்கு வருபவர்களுக்கு வசதி வேண்டும் இவையெல்லாம் உனது துறையின் கீழ்தான் வருகிறது விரைந்து செய்து கொடு என்கிறார் .. தளபதிக்கு அழுகையே வந்துவிட்டது என்ன மனுஷனய்யா 
மனைவியின் இறுதி ஊர்வலம் புறப்பட தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் கூட தொகுதிக்கு அது  வேண்டும் இது வேண்டும் என கேட்கிறார் .. அது தான் மணி அண்ணன் 
..
இன்றைக்கு "மாமனிதன்" என கொண்டாடபடுகிற வை.கோபால்சாமி கழகத்திலிருந்து நீக்கபட்ட போது இக்கட்டான சூழ்நிலையில் கழகத்திற்கு உரிமை கோருகிறார் எங்கே பொதுக்குழுவை கூட்டுவதென கலைஞர் ஆலோசித்த போது தஞ்சைதான் சரியான இடம் மணி பார்த்துக்கொள்வான் என நம்பி வந்தார் ..  பொதுக்குழு முடிந்து திலகர் திடலில் கூட்டம் எப்படி நடக்கிறதென பார்ப்போமென சில "மனிதர்கள்" கலவரம் செய்ய முற்பட்ட போது அது கலைஞரின் கவனதிற்கு வர  என்ன மணி உன்னை நம்பிதானே வந்திருக்கோம் என்றபோது இங்கே இரு வரேன் என தொம்பன் குடிசை பகுதியில் ஒளிந்திருக்கிறார்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யபட்டவர்கள்  என அறிந்து அங்கு சென்று எவன்டா கூட்டத்தில கலவரபண்ணுவேன்னு சொன்னது என வேட்டியை மடித்துகட்டி நின்றார் பாருங்கள் அதை பார்த்த நாங்களெல்லாம் வாய்பிளந்து நின்றோம் .. திரும்பிவந்து கலைஞரிடம் இப்ப போ பொதுகூட்டத்திற்கு என்றாரே கலைஞர் முகத்தை பார்க்கவேண்டுமே .. குழந்தையின் சிரிப்பை போல கள்ளமில்லாதிருந்தது ..
..
கட்சியின் தொண்டன் எப்படி செயலாற்ற வேண்டுமென்பதற்கு ..மாவட்ட செயலாளர்கள் எப்படி சுழன்று பணியாற்ற வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்..
..
கட்சியின் இக்கட்டான நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர் பொதுக்குழுவில் தலைமைக்கெதிராக சிலர் பேசுவார்கள் இவர் கூட பேசுவார் அது சரியான நடைமுறையில்லையென்று பேசுவார் .. ஒருகட்டத்தில் நிலைமையை சரிச்செய்ய வேண்டுமெனில் கலைஞரின் கண்கள் மணியை தான் தேடும் .. கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மணியை கலைஞர் பார்ப்பார்.. புரிந்துக்கொண்டு மேலே வந்து கலைஞர் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது நமது கருத்துகளை சொல்லிவிட்டோம்,.. தலைவரின் முடிவே இறுதியானதென்று முடித்துவிடுவார்..
..
 அவர் மந்திரியாக இருந்த போதுதான் அழுக்கு நகரம் என்ற அவப்பெயரை மாற்றி கும்பகோணத்திற்கு புதிய முகம் தந்தார் 
கும்பேஸ்வரன் கோவிலைச் சுற்றி சாக்கடைகள் மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும் யானைக்கால் நோயால் கும்பகோணத்தை சுற்றி உள்ளவர்கள் அதிகம் பாதிக்கபட்டார்கள் .. பாதாள சாக்கடையை கொண்டுவந்து கும்பகோணத்தையே சிங்காரித்தவர் .. 
..
விவசாயிகள் பிரச்சனைப்பற்றி துள்ளியமாய் அறிந்தவர் பேரறிஞர் அண்ணா கூட காவிரி கடைமடை பிரச்சனையென்றால் மணியை கூப்பிடு அவனுக்குதான் எல்லாம் தெரியும் என்பார் .. கலைஞரும் காவிரி பிரச்சனையில் மணியிடம் தான் கேட்பார்..கட்சி விடயத்தில் விட்டுகொடுப்பதென்பதே இவரிடமில்லை..
கட்சிப்பணியில் தொண்டர்களோடு
இரண்டற கலந்திருந்தார் 
ஓயாத உழைப்பாளி.. கட்சிக்கெதிராக யார் வந்தாலும் முகம் பார்க்க மாட்டார்..
..
"மேக்கிரி மங்கலத்து போக்கிரி" என அண்ணாவே அழைத்தார்.. 
மணி அண்ணன் மரணித்த போது கலைஞர் இரங்கலில் இப்படிதான் சொன்னார்..
"மணி இல்லாத தஞ்சையை" நினைத்து பார்க்க என் குலைநடுங்குகிறதே என்றார் ..
உடல்நலியுற்றிருந்த நிலையிலும் தன் தலைவரின் பிறந்தாளுக்கு காண வரிசையில் வருகிறார் .. அவரது கையைப் பற்றிபிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் கலைஞர் இருந்தார் அது பல  விடயங்களை சொன்னது.. தொண்டனுக்கும் தலைவனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை சொன்னது..
..
மணி அண்ணன் போன்றோர்களால் தான் திராவிடம் இயக்கம் இன்றைக்கும் அசைக்கமுடியாததாக .. வலுவோடு இருக்கிறது இந்த பிறந்தநாளின் வீரவணக்கத்தை செலுத்துவோம்..
புகழ்வணக்கம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment