பெரியார் ..பெண்கள் கையில் புத்தகத்தை கொடுங்கள் என்றார்..
பெண் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த திராவிட மாடல் அரசு "புதுமைப் பெண்" என்ற திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெண்களின் கல்வியை உறுதி செய்தியிருக்கிறது ..
..
பெண்கள் உயர்கல்விக்கு நுழைய இந்த சமூகத்தில் நிறைய தடங்கல்கள் இருந்தாலும் "வருவாய்" குறைவான குடும்ப நிலை மிகப்பெரியளவில் தடுத்துநிறுத்தும் .. பொருளாதாரத்தை காரணம் காட்டி ஆண் குழந்தைகள் படித்தால் போதும் என்கிற மனப்பான்மை நிறைய நடுத்தரக் குடும்பங்களில் இப்போதும் உண்டு .. பேராசான் #பெரியார் உங்கள் ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்களுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார் .. எந்தளவிற்கு பெண்கல்வி முக்கியம் என்பதற்கு இதைவிட எப்படி சொல்லமுடியும் ..
..
அடும்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் பேசுவோர் கூட பெண்களை உயர்கல்விக்கு அனுப்ப வேண்டும் என அதுவே அவளுக்கு துணை நிற்கும் என்பதை உணர்கிறார்கள் .. பொருளாதார நெருக்கடி சமூக சூழல் அவர்கள் ஒரு கணம் யோசிக்க செய்தால் கல்வி கனவு தகரும் .. பெண்கல்விக்கு உதவி தொகை என்பது மிகப்பெரிய சமூகநீதி திட்டம் .. உண்மையில் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் கரங்களை பற்றிக்கொள்கிறேன்..
..
#பரகத்நிஷா நன்றி தெரிவிக்கும் போது ஒன்றை சொன்னார் .. கல்யாணம் கைவிடும் கல்வி கைவிடாது என்றார் .. கைதட்டிவிட்டு கடந்து போகிற விடயமல்ல.. உண்மை, இளம் விவாகரத்துகள் பல்வேறு காரணங்கள் சொல்லபட்டாலும் அதன் பாதிப்பு "பெண்களுக்கு " தான் அதிகம் ..சுயம் எழ முடியாதவாறு சமூக அழுத்தும் மனதளவில் சிதைக்கும் .. ஆனால் கல்வி எல்லாநேரங்களிலும் கைகொடுக்கும் சுயமரியாதையோடு வாழ .. யாரையும் சேர்ந்து கூனிகுறுகிநிற்க வேண்டிய நிலையிலிருந்து காக்கும் .. கல்வி பெருங்துணையாய் வாழ்நாள் முழுவதும் வரும்.. தன் குடும்பத்தை நல்லநிலையில் நிறுத்த குழந்தைகளை நற்சிந்தனையாளராக, கல்வியாளராக, சமூக பொறுப்புணர்வு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க கல்வியால் மட்டுமே முடியும்
..
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
சிங்கப்பெண்களாய்
தமிழக மாணவிகள்
மிளிரும் காலம் வருகிறது ..
"அன்புள்ள அத்தான் வணக்கம் இந்த "ஆயிழை" கொண்டால் மயக்கமென
நம் புத்தியில் ஏற்றிவைத்த சிரங்குகளுக்கு மருந்தாய்"
உலகத்தையே ஆள
நம் குழந்தைகளை தயார் செய்வோம் ..
தந்தை பெரியார்
நீங்களெல்லாம் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா .. சந்திரமண்டலத்தில குடியேற வேண்டாமா என 1940களிலேயே பேசினார் .. பெண்களுக்கு
தன்னம்பிக்கையை சுயமரியாதையை கல்வி தரும் என்றார் ..
..
உண்மையில் தமிழ்நாடு அரசு சரியான திசையில் பயணிக்கிறது .. சில தம்பிகள் விமர்சனம் என்ற பெயரில் விசத்தை கக்குகிறார்கள் பிச்சை எடுக்கும் செயல் என்பது உழைக்காமல் ஊர்காசில் சோறுதிங்கும் தம்பிகள் உல்லாச வாழ்விற்கு பொருள் ஏது என்றால் வெட்கமே இல்லாமல் தம்பிகள் தந்தார்கள்.. மளிகை கடைகாரர் "மளிகை சாமான்" தந்தார் என சொல்பவர்களுக்கு கல்விக்காக பெண்களின் மேம்பாட்டிற்காக செலவு செய்வது இலவசமாகதான் தெரியும் ..
..
புரிந்துக்கொள்ளுங்கள் இலவசமல்ல, உரிமை ..
இந்த அரசு செய்யும் உயர்கடமை..
உயரத்தை தொட பொருளாதாரம் சுமையாக கூடாதென கடமை உணர்வோடு தகப்பன் சாமி"யாய் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் காத்துநிற்கிறார் ..
வீணர்கள்,விலைபோகாதவர்கள், செல்லாகாசுகள் மண்ணை நாசாமாக்கும் கழிவுகள் உளறுவதை கண்டுக்கொள்ள தேவையில்லை
"அங்கலாய்ப்புகள் முழுமை பெறும்போது உருவாகும் பொருளே "எழுச்சி" என்பார் #பேரறிஞர்அண்ணா.. நம் இலக்கை நோக்கி வீறுக்கொண்டு எழுவோம்
..
உயர்சாதி ஆண்களும் பணக்காரர்களும் படிக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி இடஒதுக்கீட்டை கொண்டுவந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சியாய் பாலின வேறுபாடின்றி அனைவரும் படிக்கலாம் என்ற நிலையை எட்டி .. குறிப்பாக பெண்கள் தடையின்றி படிக்க வேண்டுமென்கிறது திராவிட மாடல் .. தொடர்ந்து
கல்வி ஒன்றே நமக்கான விடுதலையை தரும் ,கல்வி ஒன்றே சுயமரியாதையோடு வாழ வழிவகுக்கும், கல்வி ஒன்றே வேறுபாடுகளை களையும், கல்வி ஒன்றே மூடபழக்கத்திலிருந்து நம்மை மீட்கும்.. நாம் சாதிக்க பிறந்தவர்கள் .. அரசும், அதன் தலைவரும்
திராவிடமும் தொடர்ந்து கைதூக்கி விடும் .. உயர உயர செல்வோம்
வானம் வசப்படும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment