உலகத்தத்துவஞானி தந்தை பெரியார் நூலகத்தை குவைத்தில் திறம்பட நடத்தி
திராவிட சித்தாந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து, கற்றோரை கல்வியாளர்களை
கொள்கையாளர்களை தேடி,தேடி
கொண்டாடிய மகத்தான மாமனிதர் ..
..
சிலர் கொள்கை பேசுவர், நான் கொள்கைப் பற்றாளன் என்பர்,
தன்னை முன்னிலைபடுத்தி கொள்கை சாயம் அடிப்பர் ஆனால் அய்யா கொண்ட கொள்கையில் உறுதியோடு
தன் வாழ்நாளையே அர்ப்பணிப்போடு
dedication கொள்கை பிறழாமல் வாழ்ந்துகாட்டிய மாவீரன் ..
சமசரம் என்ற வார்த்தையே அவரது அகராதியில் இருந்து நீக்கபட்டது .. ஒவ்வொரு நொடியும் பெரியாரின் கருத்தை பரப்புவதிலும் செயல்படுத்துவதிலும் கண்ணாய் இருந்தவர் .. போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி உள தூய்மையாய் களம்காண்போரை அருகிலேயே வைத்துக்கொண்டு பெரும்படையோட்டம் நடத்தியவர்
..
அவர் திறந்த புத்தகமாய் இருந்தார் .. எங்கெல்லாம் பெரியார் பேசபடுகிறாரோ அங்கெல்லாம் அவர் கண்விரியும் .. நல்ல சிந்தனையாளர்களை கண்டு அவர்களுக்கு களம் அமைத்து தந்து திராவிட சிந்தாந்தத்தை மக்களிடையே கொண்டு சென்றார் ..அவர் நட்ட நாற்றில் நானும் ஒருவன் .. ஆம்
நல்ல விதைகளை தேடி தேடி விதைத்துக்கொண்டே இருந்தார்
நல்ல விதைகள் ஒருநாள் விருட்சமாகும் அப்போதும் அவர் பெயர் நினைவுகூறபடும் ..
..
ஆம்
அவரது நிகழ்ச்சிகள் பலனுள்ளதாகவும் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாகவும் அமையும் .. அண்ணா நூற்றாண்டுவிழா, மணியம்மையார் நூற்றாண்டுவிழா அந்தவருடம் முழுவதும் நடத்தினார் .. ஒருமுறை பெண்களை மட்டுமே கொண்ட ஒரு மேடை என்ற போது சபாஷ் நடத்துங்கள் என எங்களை ஊக்குவித்தார் .. நானும் நண்பர் சிதம்பரம்.ந.தியாகராஜனும் நடத்தினோம் அந்தவாய்ப்பை எங்களுக்கு வழங்கினார் அதுவரை குவைத்தில் முழுக்கமுழுக்க பெண்களை கொண்ட மேடை அமைந்ததில்லை
அந்த மேடையில் மறைந்த மானமிகு பானு இக்பால், மறைந்த இலங்கைசேர்ந்த புகைபடகலைஞர் நசீமா,
"பெரியார் விருது" பெற்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை
மானமிகு சரண்யா தேவி "மஞ்சள் நிலா" இசைக்குழு மஞ்சுளா,கோல்டன் ஸ்டார் சிங்கர் சாமூண்டீஸ்வரி ,சமூக ஆர்வலர்
விஜயா நாயர்..
போன்ற ஆளுமைகள் அலங்கரித்து கம்பீரமாக்கினர் ..
..
பல்வேறு மேடைகளில் கருத்தியளாளர்கள் கொள்கையாளர்கள் முன்னிலைபடுத்தபட்டார்கள், கலைஞர், பெரியார் பிறந்தாள் விழாக்களில் கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி, பெரியார் பிஞ்சு தஞ்சை சித்தார்த் என வரிசை நீளும் .. களப்பணியாளர்களை கொள்கை மறவர்களை கௌரவபடுத்தவும் தவறியதில்லை .. இளைஞர்களை ஊக்கபடுத்தி
விருதுவழங்கியிருக்கிறார் .. தம்பிகள் மேட்டுவளை ஜானவாஸ், கரம்பக்குடி ஜாபர்சாதிக், கொணலை மணிகண்டன் ஆகியோருக்கு
"திராவிட செல்வம் " விருதுவழங்கி ஆசிரியர் அவர்களின் வாழ்த்துகளோடு சான்றிதழை வழங்கி
பாராட்டி கௌரவபடுத்தினார்.. உழைப்பவர்களை முன்னிலைபடுத்துவதிலும் கொண்டாடுவதிலும் அதிக கவனம் செலுத்தியவர் ..
..
ஒரு மனிதன் வாழ்வில் போற்றபட சில பக்கங்களேனும் வேண்டும் .. ஆனால் முழுவதும் வரலாறாய் சிலராலேயே செதுக்கிக்கொள்ள முடியும் .. வீண்விரயமற்ற, நேர்மையாய், நன்நெறியாய், கொள்கை உறுதியாய், எங்கும் வளைந்து கொடுக்காமல், சரியானதை சரியென்றும் தவறை உடனே சுட்டிகாட்டியும் எல்லோருக்கும் நல்ல புத்தகமாய் வாழ்ந்த ஞானி..
..
ஒருவர் ஐம்பதாண்டுகாலம் புத்தங்களோடு வாழ்ந்து, சின்ன சின்ன புத்தக சுமையோடு எல்லா நிகழ்ச்சிகளும் கலந்துக்கொண்டு விருந்தினருக்கு கொள்கை சார்ந்த புத்தகங்களை வழங்கி
மாற்றுகருத்தக்கொண்டோரும் மதிக்கும் பேரன்பாய் வாழ்ந்த பெருமகன் ..
அவரோடு இருந்தேன் பழகினேன் பயணித்தேன் அவரோடு இணைந்து பணியாற்றினேன் என்பது காலம் எமக்கு தந்த பெருங்கொடை
..
வீரவணக்கம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment