Monday, September 12, 2022

மகிழ்கிறேன்..
..
குவைத் அயலக திமுகவின் முப்பெரும் விழா வருகிற #28_அக்டோபரில் நடக்கிறது 
மாண்பிமை அமைச்சர் 
செஞ்சிமஸ்தான்  MLA .., அவர்கள் 
(சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை) கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார்கள்..
தி.மு.கழகஅயலக அணியின் செயலாளர் மானமிகு
புதுக்கோட்டை M.M.அப்துல்லா MP
அவர்களும் 
திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு .
துரைசந்திரசேகரன் அவர்களும்
கலந்துக்கொள்கிறார்,..
..
இப் முப்பெரும் நிகழ்வில்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமான பேராசிரியர்  விருதுகள்  வழங்கப்படவுள்ளது..

#பேராசிரியர்_விருது 

 #செம்மொழிசையத்முஸ்தபா

சமரசமற்ற போராளி எதையும் எதிர்த்தும் ஆதரித்தும் பேசுவதில் தயக்கம் காட்டியதில்லை மிக சிறந்த ஜனநாயகதன்மையை கொண்டவர், கழகத்தின் மீதும் தலைவர் மீதும் பற்றுக்கொண்டவர் சமூக ஆர்வலர் தவறென்பதை சுட்டிகாட்ட தயங்காத நேர்மை பாசாங்கு தெரியாதவர் பழகுவதற்கினிய நண்பர் 
..
#கலைஞர்_விருது 
உரத்தநாடு பாப்பா. கோ.தியாகராஜன் 
Thiyagarajan Pappa 
கொள்கை பிடிவாதகாரன் ..
கலைஞரின் முரட்டுபக்தன்  
கழகம் கண்ட போராட்டங்களில் எல்லாம் களம் கண்டவர் .. தலைவர் கலைஞர் இவரின் உயிர்மூச்சு சோதனையான காலகட்டங்களிலும் கழகத்தை விட்டு பிரியாத தங்கம் ..கழகம் கொடி இரண்டுதான் இவருக்கு தெரியும் எதையும் துணிவோடு பேசும் வெள்ளையுள்ளம் கொண்டவர்..
..
#அண்ணாவிருது 

சிதம்பரம் ந.தியாகராஜன் 
கொள்கை உறுதியோடு பயணிப்பவர் ..கடும் உழைப்பாளி..
குவைதில் இரண்டு முப்பெரும்விழாக்களை நடத்திகாட்டி திமுகவை பேசுபொருளாக்கியதில் பெரும்பங்கு இவருக்குண்டு.. கடினமான காலகட்டத்தில் கூட இயல்பாக கடந்து வென்றுகாட்டியவர் ..
இப்படியொருவரை காண்பது அரிது .. சமரசமற்ற போக்கு தலைமைப்பண்பு, நிர்வாகதிறமை அனைவரையும் அனுசரித்து குவைத்தில் திமுகவை வழிநடத்தும் ஆற்றல் .. பல்வேறு இன்னல்களிலும் தளராது களம்கண்டு செயல்படும் போராளி 
கலைஞரின் மீதும் கழகத்தின் பாசம் கொண்ட நன்மதிப்பாளர்.. 
சமூக ஆர்வலர், உள்ளொன்றும் புறமொன்றும் பேசாத
பாசம் நிறைந்த தம்பி ..
..
இவர்களோடு எனக்கும் 
விருது தருகிறார்கள் 
"#பெரியார்_விருது" 
இன்னமும் திராவிட மாணவனாய் கற்றுக்கொண்டிருக்கிறேன் 
திராவிடத்தை அருமையை, அது சமூகத்தில் செய்த தாக்கத்தை, 
அதன் அவசியத்தை, முத்தான தலைவர்களான பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா  பேரருளாளன் கலைஞர், இனமான பேராசிரியர், இவர்களெல்லாம்
இந்த இயக்கத்திற்காக  உழைத்ததை, கட்டிகாத்ததை, இயக்கத்தை வழிநடத்தியதை, .. திராவிட முன்னோடிகள் செய்த தியாகத்தை  வளரும் தலைமுறை கொண்டு சேர்க்கும் சிறிய பணியை செய்கிறேன் அதற்கு அங்கீகாரமாய் விருது தருகிறார்கள் என நினைக்கிறேன் .. 
இன்னும் கூடுதலாய் இயங்க என்னை ஊக்குவிக்கும் என நம்புகிறேன் 
..
என் இனிய நண்பர்களோடு இணைந்து விருது பெறுவதில் மகிழ்ச்சி 

வெல்க! திராவிடம் 
..
ஆலஞ்சியார் 
வழுத்தூர்
(ஆலஞ்சி மு மன்சூர்)

No comments:

Post a Comment