..
உண்மையில் பாஜகவோடு உறவு வைத்திருக்கிறதா .. கள்ளகுறிச்சி சம்பவத்தில் மென்மையான போக்கு, கல்வி தொலைக்காட்சியில் CEO நியமனம் என காரணம் சொல்கிறார்கள் .. உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்பவரில்லை நம் முதலமைச்சர் .. எதையும் நிதானித்து சரியாக காய்நகர்த்துபவர் பிடித்தால் பிடி இறுகும் என்பதை சொல்ல வேண்டியதில்லை
..
வெளிப்படையாகவே பாஜகவோடு இணங்கி போகமாட்டோம் கைகட்டி வாய்பொத்தி சொல்லுங்க எஜமான் என குறுகி நிற்க மாட்டேன் நான் கலைஞரின் பிள்ளை என மக்கள் மன்றத்தில் சொல்லிவிட்டுதான் டெல்லி செல்கிறார் ..அது மட்டுமா கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கோடிகணக்கில் தள்ளுபடி செய்தது யார் அப்பன் வீட்டு பணம் என நீதிமன்றத்திலேயே கேட்கும் தைரியம் இந்திய ஒன்றியத்தில் வேறெந்த கட்சிக்காவது உண்டா ..
எங்களுக்கு பாடமெடுக்க உங்களுக்கு தகுதியில்லையென தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஊடகம் வாயிலாக கேட்கிறார்
பொருளாதார அறிவிருக்கிறதா
எங்களை போல நிதி ஆளுமை செய்ததற்கான சான்று இருக்கிறதா கேள்வி எழுப்ப பாஜகவும் அதன் ஊதுகளும் புலம்புகின்றன .. பிரதமரை அழைத்து வந்து திராவிட மாடல் வகுப்பெடுக்கும் தைரியம் இந்த மண்ணுக்கே உண்டு .. இங்கே பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் அப்படி தான் வார்த்தெடுத்திருக்கிறார்கள்
இன்னமும் நம்பிக்கை வரவில்லையென்றால் கெட்டொழியுங்கள் என சொல்வதை தவிர வேறென்ன செய்ய இயலும் ..
..
இந்திய ஒன்றியத்தில் அதிக GST வரி செலுத்துவது தமிழ்நாடுதான் எங்களைவிட ஒன்றியத்தின் மிகப்பெரிய மாநிலமான உ.பி. ஐந்து மடங்கு குறைவாக தான் தருகிறது .. தனிநபர் வருமானம் மனிதவளம் சமூக மேம்பாடு, உயர்கல்வி என அனைத்து முன்னேறிய மாநிலமாக மாற்றியது யார்.. வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்கள் 4% விழுக்காடு குஜராத் மாடலில் 27% விழுக்காடு இங்கே மதம் முன்னெடுக்கபடுவதில்லை சாதியை பேசி வந்தால் பாமக நிலைதான் இதற்கெல்லாம் காரணம் பெரியாரெனும் பெரும் நெருப்பு பாசிசத்தை/பிராமணீயத்தை அண்டவிடாமல் காப்பதுதான் .. அதனால் தான் தலைவர் மிக தெளிவாக "திராவிட மாடல்" என பெயர்சூட்டி திராவிட கொள்கைகளை முன்னெடுக்கிறார் ..
..
மிகபெரிய பணபலம் ஊடகத்தின் துணை, ரௌடிகளையும் களவாணிகளையும், திருட்டுகும்பலையும், கொலை கொள்ளை செய்துவிட்டு திரிபவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு கலவர பூமியாக்க பெரும்திட்டத்தோடு பாஜக செயல்படுகிறது .. விளிம்புநிலை மக்களை விலைபேசும் தந்திரமும், பதவி ஆசைகாட்டி பள்ளத்தில் தள்ளும் சூத்திரமும், ஆளுநரை கொண்டு இடையூறு செய்வதும், சிறிய தவறென்றாலும் ஊதி பெருக்க வலைதளத்தில் பெருமளவில் அறிவிலிகளை அவசரகுடுக்கைகளை நியமித்தும் சதியாட்டமாடும் வேளையிலும் .. மிக கவனமாக ஒவ்வொரு களையும் பிடிங்கியெறிந்து களனி சிறக்க பாடுபடுகிறார்.. நல்ல விளைச்சலுக்கு கொஞ்சம் காத்திருக்கதான் வேண்டும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment