Monday, August 29, 2022

(೨ಣೆಯೊಳಗಿನ ಹಿಂಬದಿ ಗೋಡೆಯಲ್ಲಿ ಎತ್ತರದಲ್ಲಿ ಆಕಾಶ ಕೂಡ ಕಾಣಿಸದ ಕಿಂಡಿ. ಸಾವರ್ಕ‌್ರರ ಕೋಣೆಯಲ್ಲಿ ಆ ಕಿಂಡಿ ಕೂಡ ಇಲ್ಲ. ಆದರೂ ಎಲ್ಲಿಂದಲೋ ಬುಲ್‌ಬುಲ್ ಹಕ್ಕಿಗಳು ಹಾರಿ ಸೆಲ್‌ನೊಳಗೆ ಬರುತ್ತಿದ್ದವು. ಅವುಗಳ ರಕೆಯ ಮೇಲೆ ಕುಳಿತು ಸಾವರ್ಕರ್ ಪ್ರತಿದಿನ ತಾಯ್ಯಾಡಿನ ನೆಲವನ್ನು ಸಂದರ್ಶಿಸಿ ಬರುತ್ತಿದ್ದರು.)
In the back wall inside the room, there is a kindle that can't even be seen high up in the sky.  Savarkar's room doesn't even have that kindle.  However, from somewhere, bulbul birds were flying into the cell.  Savarkar used to visit the motherland every day sitting on their rake..
..
அந்தமான் சிறையிலிருந்து புல்புல் பறவை மீதேறி இந்திய பெருநிலம் வந்து போவார் .. 
கர்நாடக மாநில 9 வது பாட புத்தகத்தில் இடம் பெற்ற "கதை " விமர்சனமாகியிருக்கிறது .. பாடநூல் குழுவின் தலைவர் 
புரிந்து கொள்ள "அறிவு" வேண்டுமென்கிறார் கூடவே கல்வி அமைச்சரும் .. 
என்ன கொடுமை 
..
இவர்களை சொல்லி பலனில்லை .. புராண கதைகளை வரலாறாய் நமக்கு தந்து,அதை நம்பவைத்தவர்கள் .. 
இதிகாசம் என்ற பெயரில் கட்டுகதைகள் நம் நெஞ்சில் நிலைபெற வைத்தார்கள்.. பக்தி என்ற பெயரில் நம்மை மடமையில் தள்ளியவர்கள் .. பிஞ்சு உள்ளங்களில் "கடவுளென" கதையளந்து  அதற்காக நம்மை வேறுபடுத்தி மனதில் வேற்றுமையை உருவாக்கி ரத்தத்தில் மண்ணை நனைத்தவர்கள் .. அண்ணன் தம்பியாய் பழகியவனை அரிவாளோடு திரியவிட்டவர்கள் இல்லாத சாதியை உருவாக்கி ரத்த சகதியில் நம்மை மூழ்கடித்தவர்கள் ..
..
அறிவு பெற தெளிவு பெற பள்ளிக்கு செல்பவனிடம் மதத்தையும் சாதியையும் பொய் புனைவுகளை திணித்து மூளையை மழுங்கடிப்பதுதான் இந்திய கல்வியின் பிரதானமாக இருக்கிறது ..  எதையும் அறிவுக்கொண்டு பாரென தமிழகம் விழுப்போடிருப்பதுதான் சங்கிகளுக்கு பெருந்தொல்லை..  பெரியார் மட்டும் இங்கே இல்லாமல் போயிருந்தால்  இதேநிலை தமிழகத்திற்கு வந்திருக்கும்..
..
இன்றைய தேவை எதுவென மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் .. ஆன்மீகம் மெய்ஞானம் என அருதப்பழசுகளை இளம் பிஞ்சுகள் நெஞ்சில் விதைக்காதீர்கள் .. இந்த மண் ஆன்மீக மண் என்றெல்லாம் கதையளக்காமல் நல்லதை சொல்லி தாருங்கள் .. மாணவ செல்வங்கள் மதமேறி  திரியாமல் அறிவுவெனும் பூஞ்சோலைக்கு அழைத்துவாருங்கள் ..
..
உண்மையை சரியான தரவுகளோடு  ஆய்வுகளை வரலாற்றை சொல்லிதாருங்கள் ..பொய்யை மெய்யாக்க முயலாதீர்கள் .. தீமையை விதைத்து தீயவைகளை உருவாக்காதீர்.. 
சாதிசமயற்ற சமுதாயம் உருவாக முயலுங்கள்
இதுபோன்ற பொய்களை பாடமாக்கி நஞ்சை விதைத்து 
வரும் தலைமுறையை நூற்றாண்டு பின்னுக்கு தள்ளாதீர் ..
..
நயவஞ்சக பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .. கூச்சமே இல்லாமல் பொய்யை மாணவச் செல்வங்களில் மூளையில் ஏற்ற நினைக்கும் படுபாவிகளை இனங்கண்டு ஒதுக்குங்கள் ..
அறிவுவெனும் ஒளி வீசட்டும் 
பாசிச சிந்தனை வீழட்டும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment