Thursday, April 1, 2021

சலசலப்பிற்கெல்லாம் திமுக அஞ்சுவதில்லை .. திமுக தலைவர் மகள் வீட்டில் ரெய்டு வருமானவரி துறை பாசிச பாஜகவின் சொற்கேட்டு செயல்படுகிறது .. நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கவிஞர் கனிமொழி தூத்துக்குடியில் வாடகை வீட்டில் ரெய்டு நடத்தியது.. கடைசியில் வழக்கு கூட போடமுடியவில்லை வருமானவரி அதிகாரிகளே வாரண்ட் பிறப்பிக்கலாம் என்பதால் தன் விருப்பதற்கு அதை பயன்படுத்துகிறது மத்திய அரசு
..
திமுகவின் வெற்றி வரலாற்று சிறப்பானதாய் அமையும் என்பதை அறிந்து இது போன்ற செயல்களில் நடத்தி ஒரு பரபரப்பை உண்டாக்கலாம் ஆனால் பொதுவாக இதெல்லாம் மக்கள் மனதில் பாஜக மீது வெறுப்பையே தரும் .. இன்று தான் தலைவர் எக்காரணம் கொண்டும் என்னை விழவைக்க முடியாதென திராவிட திமிரோடு பதிலளித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன்பு எ.வ.வேலு வீட்டிலும் ரெய்டு நடந்தது எதுவும் கைப்பற்ற முடியவில்லை ..
..
பூச்சாண்டி காட்டியெல்லாம் பயமுறுத்த முடியாது .. திமுகவின் வெற்றியை எளிதாக்க வேண்டுமானால் இதுபோன்ற சோதனைகள் உதவும்.. 
..
கனமில்லை அதனால்
அஞ்சமில்லை..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment