Friday, April 16, 2021

தமிழ் மீது தீராத பகை ஏன்..
குறிப்பாக பார்பனீயர்கள் தமிழ் மீது குரோத மனப்பான்மையே கொண்டிருக்கிறார்கள்.. தமிழை நீசமொழி சொல்ல அவர்களால் முடிகிறது .. தமிழின் வளர்ச்சியென்பது மொழியோடு மட்டுமல்ல அதன் கலாச்சாரத்தை முன்னெடுப்பதால் .. இவர்கள் கட்டிவைத்திருக்கிற சமஸ்கிருத அல்ல வடமொழிக் கலாச்சாரம் சுக்குநூறாவதால் வரும் கோபம்.. தமிழின் தொன்மை அவர்கள் இருப்பையே காலி செய்கிறது .. 
..
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அவன் கலாச்சாரத்தை நசுக்கு இல்லாதாக்கு என்பார்கள் .. அதன் வளத்தில் இடைசெருகலை செய் .. மொழி கலப்பை செய்.. தமிழ் மொழி மீதான திணிப்பு இவர்களுக்கு எளிதாக காரணம் நம்மவர்களுக்கு மறுக்கபட்டதும் 
அவர்கள் மட்டும் கல்வியில் சிறந்தவர்களாக நாம் நம்பியதும்
நம் மீது தொடுக்கபட்ட மொழித்திணிப்பை  நாம் சரி செய்யாதவரை தொடர் தாக்குதலை செய்துக்கொண்டே இருப்பார்கள் "தமிழ்வாழ்க" என்ற மாநகராட்சி கட்டிடத்தில் மேல் வைக்கபட்ட பதாகை எவ்வளவு உறுத்தியிருக்கிறது..
..
தமிழ்ச் சொற்களோடு கலந்தபோன சமஸ்கிருத வடமொழிச் சொற்களை புறக்கணிக்க வேண்டும் .. அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்க நாம் வடமொழிச் சொல்லை ஏன் சுமந்து திரியவேண்டும் .. அரிச்சுவடியில் இருந்து மாற்றத்தை கொண்டுவரவேண்டும் .. தமிழ் எழுத்துக்களில் கலப்புகளை நீக்கிவிட்டு தனித் தமிழை கொண்டுவர வேண்டும் .. 
..

No comments:

Post a Comment