Wednesday, March 31, 2021

தோற்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை .. ஒரு அமைச்சர் 
நாங்களெல்லாம் தாயில்லா பிள்ளைகள் மற்றொருவர்.. என்தாயை பழித்துவிட்டார்கள் ஓட்டு போடுங்கள்.. சுகர் இருக்கு பி.பி.இருக்கு ஓட்டு போடுங்கள் .. 
குறுக்குவழியில் உதயநிதி வரபார்க்கிறார் ..இந்திய ஒன்றியத்தின் பிரதமர்.. கோவையில் யோகி  சமஸ்கிருதத்தில் பேச கடைகளை அடைக்கச் சொல்லி ரகளை.. இடஒதுக்கீடு தற்காலிக ஏற்பாடென பன்னீர் இல்லையில்லை நிரந்தரம் என மரம்வெட்டி ராமதாஸ் .. 
எவரும் சாதனையைச் சொல்லி ஓட்டுகேட்கவில்லை ..
..
இவர்கள் யார் ..
மிக ஆபத்தானவர்கள் தஷ்ணபிரதேசமென  போஸ்டர் அடிக்கிற அளவிற்கு எங்கிருந்து திமிர்வந்தது .. இங்கே ஊழலில் திளைந்து உண்டுகொழுத்த பெருச்சாளிகள் உண்டு அவர்களை மிரட்டி பாஜகவை வளர்க்க பெரும்பாடுபடுகிறார்கள் .. எதைச் சொன்னாலும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டி பொம்மைகளாய் பன்னீரும் பழனியும்.. அதிகாரத்தை வைத்து மிரட்டியும் ரெய்டு சிறை என பயமுறுத்தி இந்த கேடுகெட்ட அடிமைஅதிமுகவினரை அடிபணிய வைத்து ஒவ்வொன்றாய் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.. இந்த நான்காண்டு காலத்தில் தமிழகம் இழந்தது ஏராளம் .. கல்வியில் நீட்டை கொண்டுவந்து சாமானியரின் பிள்ளைகளை கூலிதொழிலாளியாக்க தமிழகத்தை உத்திரபிரதேசத்தை போல ஆக்கியே தீருவதென கங்கணம் கட்டி செயல்படுகிறார்கள்..  கல்விக்கான கட்டமைப்பை கண்டு மிரண்டு போய் இத்தனை வசதிகளோடு கல்வியை வேறெந்த மாநிலத்திலும் கிடைக்க வழியில்லையே அதனால்தான் தமிழ்பிள்ளைகள் உயர்கல்வியில் மின்னுகிறார்களென்ற எரிச்சல்
எப்படியேனும் தடுத்துநிறுத்த நீட் என்ற தடுப்பை தந்தார்கள் அதிலும் மத்திய அரசு பாடத்தில் தான் கேள்வி என்ற நிபந்தனையோடு பரிட்சை எழுத வரும் குழந்தைகளை சோதனை என்ற பெயரில் மனஅழுத்ததை தருவது என கல்வியை எட்டாகனியாக்க பார்பனீயம் பெரும் வேலை செய்கிறது..
வேலை வாய்ப்பை தமிழரல்லாதோருக்கு வழங்க எங்குமே இல்லாத மத்தியரசிற்கு இணையான சம்பளம் அதை குறிவைத்து தமிழர்களை அரசு வேலையில் இருந்து முற்றிலுமாக துடைத்தெறிய இந்தி பேசும் மக்கள் தமிழ் தேர்வில் வென்றதாக காட்டும் கொடுமை ..உயர்நீதிமன்றமே சந்தேகத்தை எழுப்பியும் மானங்கெட்ட அடிமை பழநி பன்னீர் வகையறாக்கள் வாய் திறப்பதே இல்லை..
..
தமிழகத்தின் வளங்களை கொள்ளையடிக்க மார்வாடிகளுக்கு தாரைவார்க்க இந்த பாஜகவோடு கூட்டணி  மதவெறியை தூண்டும் பேச்சுகள்.. ராமநாதபுரத்தை கோவையாக்குவோமென மிரட்டல் .. இந்தியை திணிக்க பெரும் முயற்சி.. தமிழ்கலாச்சாரத்தையே பாரத கலாச்சாரமென பேசும் மூடன்.. தமிழுக்கென்று தனியாக கலாச்சாரமில்லை என இங்கே பாண்டியராஜன்களால் பேச முடிகிறதென்றால் மத்திய அரசின் தயவு உண்டென்ற திமிர் .. உண்மையில் இம்முறை தமிழர்கள் தரும் தோல்வி பாஜக பெயரை உச்சரிக்க கூட தமிழக கட்சிகளுக்கு துணிவு வரகூடாது .. அதிமுக எனும் அழுக்கை துடைத்தெறிய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளபட்டிருக்கிறது  234 தொகுதிகளிலும் அதிமுக பாஜக பாமக கூட்டணி மதவெறி சாதிவெறி அடிமைகள் கூட்டணி வரலாறு காணாத தோல்வியை தழுவும்..
..
யோகியின் வரவிற்காக கடைகளை அடைக்க சொல்லும் சங்கிகள் ,கலவரத்தை செய்தாவது வெற்றிபெற எண்ணுகிறார்கள் ..
அவர்கள் எண்ணம் ஈடேறாது.. 
உத்திரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களுக்கு உபி அரசின் சார்பில் மனைகள் வாங்கி வீடு கட்டித்தரப்படும் என்கிறார் யோகி.. இந்த பேச்சொன்றே போதும்..
வானதியின் கட்டுபணம் கிடைக்காமல் போகும்..இவர்கள் செயல்களால் வடவர்களை விரட்ட வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.. அதிமுகவின் தோல்வியை மோடியும் யோகியும் வரலாற்று தோல்வியாக்கி உறுதி செய்திருக்கிறார்கள்..
..
நல்லகாலம் பொறக்குது..
ஸ்டாலின் எனும் நான்.. ஒலிக்கும் 
தளபதி படை தரணி ஆளும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment