Tuesday, April 6, 2021

அமைதி புரட்சி..
காலை விடிந்தவுடன் தமிழகம் மிளிர தொடங்கியது.. மக்கள் தன்னார்வமாய் வாக்குசவாடிகளுக்கு வந்து தங்கள் கடமையாற்றுகிறார்கள்.. அரசியல் தலைவர்கள் தாண்டி சில பிரபலங்கள் குறீயீட்டை உணர்த்தி இந்த பொல்லாத அடிமை அரசும் பாசிசவெறி கொண்ட மய்ய அரசும் மக்களுக்கு தந்த துயரை உணர்ந்தெழுந்து மௌனமாய் சேதி சொன்னார்கள்..  தல தளபதி இருவரும் கருப்பு சிவப்பு (மாஸ்க் மிதிவண்டி ..) நிறத்தில் ..இது தமிழ்நாடு கருப்பே இதன் நிறம் கருப்பும் சிவப்பால் தான் பிடித்த பீடையை விரட்ட முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.. விஜய்சேதுபதி மதம்சாதிக்கெதிராக வாக்களித்தாக சொன்னதும்.. ஜெயம் ரவி நல்லாட்சிக்கென்றதும் நல்ல சேதியை சொல்கிறது
.. 
பொதுமக்கள் இந்த அரசு விரட்டபடவேண்டும் என்பதோடு மானங்கெட்டு தமிழகத்தை தலைகுனிய வைத்த இந்த கேடுகெட்டவர்களுக்கெதிராக விரல் புரட்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்..
ஸ்டாலின் தான் சரியான தேர்வு .. சில உதிரிகளுக்கு வாக்களித்து வீணாய் போவதைவிட ஒருசேர உதயசூரியனுக்கு வாக்களித்து இனத்தை காக்க மௌன புரட்சி செய்திருக்கிறார்கள்.. இது எதிர்பார்த்ததுதான் எனினும் இத்தனை வேகம் எதிர்பார்க்கவில்லை .. தங்கள் குழந்தைகளின் எதிர்கால கனவு நசுக்கபடும் .. வடவனுக்கு வாரிவழங்கி நம் பிள்ளைகளை கூலிப்பணிக்கு அனுப்பிவிடுவார்கள் .. இந்த கெடுமதியாளர்கள் என அஞ்சி ஸ்டாலின் தான் நம்மை காக்கும் சுடலைசாமி என தீர்மானித்து வாக்குகளால் ஒரு பெரும் புரட்சியை செய்திருக்கிறார்கள்..
..
பொதுவாக எல்லா தொகுதிகளிலும் அரசிற்கு எதிரான மனநிலை இருக்கிறது.. 
மண்ணை இழந்துவிட கூடாதென்கிற வெறி தெரிகிறது .. இனத்திற்கென்ற அடையாளத்தை அழிக்க நினைக்கும் ஆரிய கூட்டத்தை விரட்டியடிக்கும் போர் இது.. வெளிப்படையாகவே தளபதி அவர்கள் திராவிட ஆரிய போர் என பிரகடனபடுத்தியது நன்றாக மக்களிடம் பேசபட்டு மொழியை இனத்தை மண்ணை காக்க திமுக ஒன்றே சரியானதென முடிவை மக்கள் எடுத்திருப்பதை உணர முடிகிறது.. பாவிகள் நம்மை தலைகுனிய வைத்துவிட்டார்கள் ..வீர மரபிற்கு சொந்தமான இனத்தை யாருக்கும் எதற்கும் அஞ்சாத தமிழினத்தை பதவி சுகத்திற்காக காட்டிகொடுக்கும் நயவஞ்சகர்களை விரட்டியடிக்க இது தான் சரியான நேரம்  என பெரும் எதிர்பார்ப்போடு வரிசை காத்துநின்று வெயின் தாக்கம் அறிந்து ..நம் பணத்தை எடுக்கவே விடியவிடிய காத்திருந்ததை ஓர்த்து இந்த மகாபாவிகளை வீட்டிற்கு அனுப்ப ஒருநாள் வெயிலில் நிற்பதை நாங்கள் சகித்துக்கொள்வோமென துரோக கும்பலை விரட்டுகிறார்கள்..
..
உதயசூரியன் பார்வையில் 
தமிழகம் விழித்துக்கொண்டதன் அடையாளம் தெரிகிறது.. மக்களின் புன்னகை நல்லாட்சிக்கு வழிவகுக்கும் ..
200+ சீட்டு திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.. தளபதியின் உழைப்பு ..அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை பாசிசத்தை வேரறுக்க, தலையாட்டிகளை உடைத்தெறிய காலம் பார்த்து காத்திருந்த மக்கள் ஒரு மௌன புரட்சியை செய்திருக்கிறார்கள்..
வரலாறு படைக்கும் ..

Congratulations 
The honourable Chief Minister M.K Stalin 😍😍
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment