இரு வன்னிய இளைஞர்களை பாமக கொலைச் செய்திருக்கிறது.. சாதிவெறியை தூண்டி இளைஞர்களை வழிகெடுத்து அப்பனும் மகனும் சுகபோகவாழ்வு வாழ அப்பாவிகள் இருவர் கொலைச் செய்யபட்டிருக்கிறார்கள் வேதனை..
..
பாமக வேறு வன்னிய சமூகத்தினர் வேறு என்பதை உணர்த்தியிருக்கிறது.. படி,முன்னேறு என வழிகாட்டாமல் ஆண்டபரம்பரை என மீசையை முறுக்கி கையில் அரிவாளை தருகிற அயோக்கியர்கள் அப்பனும் மகனும்.. பாமக என்ற கட்சியை தடை செய்ய வேண்டும், உண்மையில் சமூகத்தின் மீது அக்கறையில்லை ..அரசியலில் கழிசடையாய் தன் நிலையை உயர்த்த பொய் சொல்வதும், சொல்வதை மாற்றிக்கொள்வதும் பெற்றதாயை கூட அவமானபடுத்துவதும் இந்த கேடுகெட்டவர்களுக்கு இலகுவாக வரும்.. தான் சார்ந்த சமூகத்திற்காக உழைக்க வந்ததாக சொன்னவர் இன்று இளைஞர்களை சாதிவெறிபிடித்து அலைய காரணமானது தான் கொடுமை.. இன்னமும் சிலர் இவர்கள் பின் நிற்பது தங்களை தங்கள் சமுதாயத்தை ஏமாற்றுகிற செயல்..
..
ஏன் தடைச் செய்யபடவேண்டும் 2021 தேர்தல் அறிக்கையில் சமத்துவம் நீதி என்ற தலைப்பில் சொல்லும் வார்த்தைகள் ஒன்றேபோதும் .. சமமாக நடத்துவதென்பது இரு சமமானவர்களுக்கிடையே அன்றி சமமற்றவர்களோடு சமமாக நடத்துவது அல்ல.. இதற்காக தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்தது இவர்கள் மீது தீண்டாமை வழக்கு போடபட்டிருக்கவேண்டாமா .. அரசியல்சாசனத்தை மீறிய செயலுக்கு தண்டனை பெற்றுதரவேண்டாமா.. சாதிமதம் பார்க்காமல் என்ற சொல்லின் பொருள் புரிந்தால் சமமற்றவர் என்ற சொல் வந்திருக்காது .. சாதிவெறியை தவிர வேறொரு கொள்கையும் இல்லாத ஒரே கட்சி பாமக ..
..
கொலைச் செய்கிற அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டார்கள் தனக்கு பிடித்தமானவருக்காக தேர்தல் பணியாற்றியிருக்கிறார்கள் இதில் என்ன தவறு .. சாதியை மறந்து தேர்தலில் முக்கியத்துவம் உணர்ந்து விசிகவிற்காக வாக்குகேட்டது குத்தமா.. கொலையாளிகளை கைது செய்வதோடு முடிந்துவிடகூடாது தூண்டிவிட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரபடவேண்டும் இதுபோன்ற கொடியவர்களுக்கு பெற்று தரும் தண்டனை சமூகத்தில் ஏற்றதாழ்வை சொல்லி பகையையூட்டி கலவரம் செய்து குடிசைகளை கொளுத்தி மனிதர்களை கொன்று தின்னும் இந்த கேவலமான பிறவிகளை கடும்தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்.. சாபமிடுவதில் நமக்கு நம்பிக்கையில்லை ஆனால் நல்லவே இருக்கமாட்டீங்கடா..
..
பாமக தமிழ் சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும்.. இளைஞர்களை ரௌடிகளாக சாதி கலவரம் செய்யும் கருவியாக மாற்றும்.. பதவிக்காக மூளைச்சலவை செய்யபட்ட இளைஞர்கள் சிறுவர்கள் வட தமிழக கிராமங்களில் நிறைந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கண்டறிந்து கல்வியை வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் அவர்களை மீட்க வன்னிய சமூகம் தன்னலற்ற தலைவர்கள் முன்வரவேண்டும்..
..
மதவெறியை வளர்த்து மனிதர்களிடையே விரோதத்தை வளர்க்கும் பாஜக எப்படி ஆபத்தானதோ..அதேபோல சாதிவெறியை வளர்த்து இளைஞர்களை வழிகெடுத்து நாசபடுத்தும் பாமகவும் ஆபத்தானது.. மதவெறியும் சாதிவெறியும் சமூககேடு..
தமிழகத்திலிருந்தே விரட்டபடவேண்டிய நாசகாரசக்திகள் இவர்கள்..
பாமகவை தடைசெய்யவேண்டும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment