ஆக்ஸிசன் தட்டுபாடில்லாத மாநிலங்கள் தமிழ்நாடு கேரளம்..
இரண்டுமே பாசிச பாஜகவை ஓரங்கட்டி வைத்திருக்கிறது..
நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதில் தோற்றுப்போயிருக்கிறது தேசம் ..
ஒரே இரவில் பணமதிப்பிழப்பு செய்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவரை கேரளமும் தமிழகமும் புறங்கையால் தள்ளி நிறுத்தியது பாருங்கள் அங்கே இருப்பது தெளிவு..
வடமாநிலம் சுயம் சிந்தனை இழந்து ராம் ராம் என கோஷமிட்டு மதப்பற்றை/வெறியை அரசியலில் கலந்து கோவில் போதும் என்று எண்ணியதால் வந்த வினை இன்று மூச்சுதிணறுகிறது..
..
உயர்/உச்சநீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றன் ஆனால் அவை நீதிமன்றங்கள் தானா? என்ற கேள்வி எழ தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது.. கட்டபஞ்சாயத்து செய்ய தொடங்கியும், பதவிகாலம் முடிந்து கனிவான காத்திருப்பாகவும் பாதைமாறிப்போய் குழிதோண்டி புதைக்கபட்ட நீதிகள் ஏராளம்.. மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை மாட்டுக்கு ஆம்புலன்ஸ் என்றபோதே கொட்டிருக்கவேண்டும் நீதியை நிலைநாட்டுவோர்.. இன்று படுக்கைகள் காலியில்லை ஆக்ஸிசன் காலியில்லை ஏன் இதுவரை பாஜக ஆண்ட மாநிலங்களில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை என கேள்வி கேட்க யாருமில்லை
கேட்டால் சிறை மீறி பேசினால் சுட்டுக்கொல்வோம், கொன்றவனை வெளியிலெடுப்போம் மாலை மரியாதையோடு வரவேற்போம் நீதிபதிகள் விடுவிக்க மறுத்தால் கொல்வோம் விடுவித்தால் கவர்னர் பதவி கிடைக்க ஏற்பாடு செய்வோம் .. குண்டர்கள் கொலையாளிகள் கற்பழித்தவன் அமைச்சராகலாம் இதுதான் நவீன இந்தியா..
..
கேவலமான இருக்கிறது ..
வாய்பந்தல் போடும் பிரதமர் அவர்களே உலகமே உற்றுநோக்குகிறது .. இந்தியா எனும் தேசம் இப்படி திறமையற்ற மூடர்கள் கூட்டத்தில் சிக்கி சீர்குலைந்து நிற்பதை, பொய் பேசியும் பிரதமரை, மதவெறி தூண்டும் ஆட்சியாளர்களை, மனிதனை விட மாட்டை நேசிக்கும் மகாமடையர்களை கொண்டிருப்பதை உலகமோ கவலையோடு பார்க்கிறது .. ஆக்ஸிசன் தேவைக்கு உதவ உலக நாடுகள் வரிசையில் .. பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாநில தேர்தலில் எப்படி தில்லுமுல்லு செய்யலாமென கூட்டுசதிக்கு ஆலோசனை செய்கிறார்கள் ..
மார்ச் மாதமே கொரோனா 2.0 தாக்கம் தெரிந்த போதும் தேர்தலை விரைந்து முடிக்காமல் காலந்தாழ்த்தி பரவல் அதிகமாகிய போது பரப்புரையில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கலந்துக்கொண்டு நாடு எக்கேடு கேட்டால் என்ன ? என பொறுப்பற்றத்தனம் .. கைமீறிபோன பிறகு தொலைகாட்சி தரிசனம் நான் கூட இருக்கிறேன் என வசனம் பேசினால் போதும் .. உயிர்காக்கும் மருந்திற்கு GST போடும் அயோக்கியத்தனம் மொத்தத்தில் முட்டாள்கள் மதவெறியர்கள் கையில் நாடு சிக்குண்டு இன்று கண்ணீர் வடிக்கிறது .. நாட்டின் வளங்களை இரு பெரும் முதலாளிக்கு தாரைவார்த்துவிட்டு அதற்காக தொடர்ந்து நாட்டுமக்களை வஞ்சித்து வரும் கேடுகெட்ட அரசு .. அமைச்சர்கள் அறிவுசார்ந்து சிந்திப்பதில்லை நான் வெங்காயம் தின்பதில்லை அதனால் அது விலை ஏறினால் கவலையில்லை என்கிற அறிவிலிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் மகாமுட்டாள் பிரதமர் கையில் நாடு சிக்கி தவிக்கிறது..
..
தொலைநோக்கு திட்டமில்லை
கல்வியறிவை விட சாதிமதவெறி கைக்கொடுக்கும் என்று நம்புகிற மூடர்கூட்டம், தேர்தல் அரசியலுக்காக
மக்களை பிரித்து வன்முறையை கையிலெடுத்து அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி நீதியை மிரட்டி அல்லது விலைக்கு வாங்கி, அதையும் மீறி எதிர்கட்சிகள் ஜெயித்தால் எம்எல்ஏக்களை கடத்தி மிரட்டி விலைபேசி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க தெரிந்தவர்கள் நாட்டை
நாட்டுமக்களை எப்படி கவனிப்பார்கள் ..
..
இந்த நாட்டிற்கு தன்னலமற்ற சாதி மதமற்ற, சுயபெருமை பேசாத, தொலைநோக்கோடு சிந்திக்கிற மக்களை கல்வியிலும், வாழ்க்கை தரத்திலும் உயர்த்த நல்ல திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் தலைவர்கள் தேவை ..
ஆம்..
அச்சம் தவிர்ப்போம்
அறிவியலால் வெல்வோம் என துணிவோடு செயலாற்றும் தலைவர்கள் .. இனியும் மதவெறியர்களை கோவில் கடவுள் புராணம் என பழமை பேசி மக்களை பிரித்தாளும் குறைமதியாளர்களை விரட்டியடித்து நன் மக்களை நல்ல தலைவர்களை கொண்டாட வேண்டும் .. பாசிச பாஜகவால் நாடு குட்டிசுவரானதுதை கண்டோம் .. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் உலகில் மிகவும் மோசமான ஏழைநாடாக மாறும் ..
..
கொரோனாவை விரட்ட கைதட்டுவதாலோ விளக்கேற்றி மணியடிப்பதாலோ கோ கொரோனா என பஜனை பாடுவதாலோ போய்விடாது .. அறிவியலை கொண்டே வெல்லவேண்டும் .. உயிர்காக்க மாட்டு சாணியும் மூத்திரமும் (கோமியம்) குடித்தால் உயிர்போகும் ..மாறாக தடுப்பூசி போட வேண்டும் புலால் உணவை உண்ணவேண்டும், அறிவியலால் தான் முடியும்..
..
ஆரிய சித்தாந்தம் நாட்டிற்கு தேவையில்லை..
திராவிட சித்தாந்தமே மனிதநலனுக்கானது நாட்டு தேவையானது ..நாட்டின் வளர்ச்சிக்கானது.. கடைசியாக பண்டாரங்கள் ஆண்டால் நாடு கெடும்.. பகுத்தறிவாளர்களால் தான் நாடு மிளிரும்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment