Friday, April 16, 2021

வளர்ச்சி எனநம்ப வைத்த குஜராத் நிலை .. அபாயகரமான காலகட்டத்தில் வெளிச்சம் பெறுகிறது.. இந்த குஜராத் நாயகன் தான் இன்று இந்தியாவின் பிரதமர்.. கல்வி மருத்துவம் கட்டமைப்பு என எதிலும் வளர்ச்சியடையாத ஒரு மாநிலத்தை இந்தியாவிற்கே முன்மாதிரி என பொய்யுரைத்து அதை ஊடகங்கள் அறமின்றி மக்களிடம் கொண்டு சென்றதும் வலைத்தளங்களில் பாஜகவெனும் கீழ்தர சிந்தனையாளர்கள் போட்டோஷாப் செய்து பரப்பியதும் இன்று தோலுரிக்கபடுகிறது.. 
மனிதனை விட மாட்டை கவனிக்கும் மகாபாவிகளால் இன்று உ.பி.யின் நிலை கவலைக்கிடமாக.. இவையெல்லாம் பிரதமர் தெரிந்தும் "மான்கிபாத்" க்கு செலவு செய்கிறார்.. அவர் தொகுதியில் கூட மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை.. ஒரே படுக்கையில் மூவர் என்ன கொடுமை.. கொரோனா மரணங்களை எரிக்க இடுகாடுகளில் இடமில்லை இவர்கள் தான் தமிழ்நாட்டை உத்திரபிரதேசம் போல் ஆக்குவேன் என பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் ..
..
மத அரசியல் செய்கிறவர்களிடத்தில் மனிதம் இருக்காது .. கோவில் கட்டுவதால் ஒன்றும் புண்ணியமில்லை நல்ல மருத்துவமனைகளை கட்டியிருந்தால் அவர்கள் நம்பும் கடவுளர்களே மகிழ்ந்திருப்பர்.. திறமையற்ற நிர்வாகம் அதில் மதவெறியர்களும் மகாபாவிகளும் கைகோர்த்து மதவெறியாட்டம் ஆடுவதும் மதத்தின் பெயரில் எந்த கொடுங்காரியமும் செய்யலாம் சிறுமிகளை வன்புணர்வு செய்யலாம், மாட்டுக்கறிக்காக மனிதனை கொல்லலாம், தலித்களை அம்மணாக்கி விரட்டலாம், உயர் கல்வியை குறிப்பிட்ட பிரிவினருக்கே வழங்கலாம், அதிகாரத்தில் பயிற்சியளித்த மதவெறியர்களை கொண்டுவரலாம், எதிர்த்து பேசினாலோ நீதியை நிலைநாட்ட நினைத்தாலோ கொலை செய்யலாம், ராமனை சொல்லி எதுவும் செய்யலாம் ஆனால் வளர்ச்சி அதெல்லாம் தெரியாது .. மடையர்களாக இருக்கும் வரைதான் இவர்கள் ஆட்டம் தொடர முடியும் .. 
..
கேள்வி எழ தொடங்கிவிட்டாலே முன்னேற்றம் தானாய் வரும்.. இங்கே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு மெச்ச தகுந்தநிலையை அடைந்ததற்கு கல்வியை எளியவர்களுக்கு வழங்கியதும் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அரசு பொதுமருத்துவமனைகளை தொடங்கி ,பாமரனும் உயர்சிகிச்சை பெற வழிவகுத்ததே காரணம் .. அதனால் தான் இங்கே தாமரை என்றால் காறி உமிழ்கிறார்கள் 
இங்கே வளர்ச்சி வளர்ந்த நாடுகளோடு போட்டிபோடும் நிலையில் இருக்கிறது இந்த கட்டுமானங்கள் திராவிட இயக்கத்தின் விழிப்புணர்வில், செயலில் ஆட்சி அதிகாரத்தில் வந்தது எதிலும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட #பேரருளாளன்_கலைஞர் எனும் மாமனிதனின் பெரும் உழைப்பால் உருவானது .. பெரியாரும் பேராசான் அண்ணாவும் காட்டிய வழியில் தமிழகத்தை வடிவமைத்தவர் கலைஞர் பெருமகன் .. 
..
தமிழகம் மட்டும் தனிநாடாக இரிந்திருந்தால் 17வது வளர்ந்த நாடாக  இருக்கும் பொருளாதாரத்தில் வல்லரசாக இருக்கும் என்றார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியா சென்(அமார்த்ய குமார் சென் ) மிகையில்லை தமிழகம் இந்திய ஒன்றியத்தின் பிறமாநிலங்களைவிட கல்வியில் மருத்துவத்துறையில் புரட்சி செய்திருக்கிறது ..
..
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்காக அகமதாபாத் குடிசைகள் மறைக்கபட்டபோதே உமது திறமையான..? நிர்வாகத்தை நாடு அறிந்தது.. 
நாடே பெருந்தொற்றால் பீதியில் பிரதமர் எங்கே.. ? இந்திய ஒன்றியம் கண்ட மோசமான பிரதமர் எங்கே..? வளர்ச்சிபாதைக்கு வழிவகுப்பதாக சொல்லி ஏமாற்றிய பிரதமர் எங்கே..? மனிதர்களை மிருங்களுக்கு கீழாக எண்ணும் பிரதமரே எங்கே.. ? மதவெறியூட்டி மானுடத்தை மாசாக்கும் மதியாளரே எங்கே போனீர்..
வாய்சவடால் வீரரே எங்கே போனீர்.. 

#WhereIsPM 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment