அம்பேத்கர் போதும் பெரியார் வேண்டாம் என்கிறவர்கள் மிக ஆபத்தானவர்கள்.. தமிழகத்தில் அம்பேத்கரை தவிர்த்து அரசியல் செய்திட முடியும்.. ஆனால் பெரியாரை பேசாமல் அரசியல் இல்லை .. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொன்னால் அம்பேத்கர் இங்கே தேவைபடவில்லை காரணம் பெரியார் தனது பணியை சரியாக செய்திருந்தார்.. தலித் அரசியலோடு முடிந்துபோகிற விடயம் மட்டுமே,பொதுநதியில் இணைய முடியாது ..இங்கே சமத்துவம் என்கிற சொல் செயலில் உண்டு ..விரும்பதகாத சில செயல்களை தவிர்த்தால் இங்கே திராவிடம் என்ற சுவர் காத்துநிற்கிறது .. பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்பது சமநீதிக்கான தொடக்கம் இங்கே பிற சமூகமக்களை ஒருங்கிணைக்கும்.. ஆரியம்/ திராவிடம் என பிரித்து தெளிவான களம் அமைத்தது, அதை தலித் தலித்தல்லாதோர் என திசைதிருப்பல் ஆபத்தானது ..
தமிழகத்தை பொருத்தவரை தலித் மக்களுக்கு பெரும் பாதுகாப்பை தந்தது பெரியாரிய சிந்தனைதான்.. பெருந்தனக்காரராய் பிறந்து சாமானியர்களின் துயரை கண்டு வருந்தி அவர்கள் சமூகத்தில் நடத்தபடும் விதம் கண்டு ஆத்திரம் கொண்டு இந்த சனாதன கட்டமைப்பை அடித்து நொறுக்க பெரும் பயணம் செய்தவர் தந்தை பெரியார்.. இங்கே அம்பேத்கர் தேவைபடாமல் போனதற்கும் பெரியார் என்ற பெருஞ்சுவர் காத்துநின்றதும் காரணம் .. மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியதில் பெரியாரின் பணி யாராலும் ஈடுசெய்ய முடியாதது ..
இங்கே சில நீலசங்கிகள் பெரியாரை தவிர்த்து பேச வருவதின் பின்னில் பாசிசத்தின் பிடி இருக்கும் .. தலித்மக்கள் விடுதலை என்பது அதற்கான தீர்வை அம்பேத்கர் இறுதிஉரையில் சொன்னது தான் "இந்துவாக சாக விரும்பவில்லை" ..
தலித்களை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புசட்டம் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் தண்டிக்கபட்டவர்கள் 2% விழுக்காடு கூட இல்லை .. சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தள்ளுபடி செய்யபட்டதுதான் உண்மை ..
..
திராவிட கழகத்தை சிலர் எதிர்க்க செய்கின்றனர் .. பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை ஆனால் தலித்கள் அதை செய்யும்போது நாம் இடைமறிக்க வேண்டியிருக்கிறது .. அம்பேத்கர் போதும், ஏன் அம்பேத்கர் சாலை இல்லை என்ற கேள்விகள் அவர்களின் அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது .. பிறந்த மண்ணில் அம்பேத்கர் பெயரில் கல்லூரி அமைக்கவே முடியாத சூழலில் இங்கே சட்டகல்லூரி அமைத்ததும் சட்ட பல்கலைக்கழகம் கண்டதும் பெரியாரின் துணைக்கொண்டுதான் .. பெரியாரிய சீடர்களால் தான் முடிந்தது இங்கே எந்த எதிர்ப்பும் வராமல் போனதற்கு பெரியாரிய சிந்தனைகளை ஏற்ற சமூகம் தமிழகம் கண்டிருந்ததே காரணம்
..
பெரியாரை ஏற்று வந்தவர்கள் சாதி சமயத்தை புறக்கணித்தவர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர் ஆனால் சுயசாதி பேசும் மூடர்கள் தான் எங்களுக்கு இவர் போதும் இவர் தேவையில்லையென நவீன புராணம் பாடுகின்றனர்.. நீலசங்கிகள்
அருந்ததியர் புதிரை வண்ணார் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாதவர்கள்.. (ஆனால் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்திற்காகவும் குரல் கொடுத்ததோடு அல்லாமல் தீர்வை கண்டது பெரியாரியம் பேசும் திராவிட இயக்கம்தான்)
இவர்கள் அழுக்கானவர்கள், சுயம் தெளியாதவர்கள் ..
பிணத்திற்கு வீரமணி என பெயர்வைத்து பார்பனர்கள் சுமந்து சென்றதெல்லாம் தெரியாதவர்கள் ஆசிரியரை வசைபாடுகிறார்கள் .. இனியும் அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து பேசுவது தேவையில்லைதான் .. பெரியார் போதும்.. நவீன நீலசங்கிகள் வெகுவிரைவில் உணருவார்கள் அம்பேத்கரை தேசிய தலைவர் என்பதலிருந்து தலித் தலைவராக சுருக்கவேண்டுமென்ற ஆர்எஸ்எஸின் செயல்வடிவம் இவர்கள் .. ஆம் இவர்கள் ஆர்எஸ்எஸின் #அட்டைக்கத்திகள்
நாம் அண்ணலை தேசிய தலைவராக பார்க்கிறோம் அவர்கள் தலித்களுக்கான தலைவர் என்கிறார்கள் ..தலித் சமூகத்தில் பள்ளர் சமூகம் அம்பேத்கரை கண்டுக்கொள்வதில்லை என்பதும் கவனிக்கதக்கது..
..
பார்ப்பனர் / பார்ப்பனரல்லாதோர் என்ற அரசியல்தான் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும்,
நலதாய் அமையும்..
இங்கே பெரியார் போதும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment