Friday, April 9, 2021

தேர்தல் முடிந்துவிட்டது .. களத்தில் யாரையும் காணோம் ..மக்களுக்காக இயங்க மக்களைப் பற்றி சிந்திக்க இங்கே திமுக தவிர்த்து யாரையும் காணோம்.. சிலர் சாந்து பூசி நடிக்க போய்விட்டார்கள் .. சிலர் வெயிலில் கருத்து போனதற்காக பியூட்டிபார்லர் போய்விட்டார்கள் சிலர் சாதிவெறியை தூண்டி குளிர்காய போய்விட்டார்கள்,சிலர் இருக்கிற இடமே தெரியவில்லை .. ஆனால் திமுக தொடர்ந்து மக்கள் பணியில்..
..
காரணம் திமுக கட்சியல்ல இயக்கம் ..மக்களுக்கான இயக்கம் வெற்றி தோல்விப்பற்றியெல்லாம் கவலைக் கொள்வதில்லை வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்தி தமிழர் மேம்பாட்டிற்காக உழைப்பது கடமையென எண்ணுவதால் அவர்களால் எல்லா நேரங்களில் ஒருபோல இயங்க முடிகிறது.. மக்கள் பணி அதுவே திமுகவின் தொடர்ந்து பேச வைக்கிறது .. திமுக தலைமை எப்போதும் மக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் .. 
..
திடீர் போராளிகள் நாட்டை திருத்த வந்த நவீன கோமாளிகள், ஊழலை ஒழிக்க சகாயம் செய்ய வந்தவர்கள், சாதிவெறி கும்பல்கள், திராவிடத்தை ஒழித்தே தீருவேன் என முழக்கமிட்டவர்கள், பொழுதுபோகாமல் அரசியலுக்க
வந்தவர்கள், இவர்களெல்லாம் தேர்தல் முடிந்து அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள் அல்லது ஒளிந்துக் கொள்வார்கள்..
..
திமுக ஜனநாயக இயக்கம் .. மக்கள் துயர்துடைக்க அவர் தம் முன்னேற்றம் .. நாடு,இனம்,மொழி,கலாச்சாரம், பண்பாடு என தொடர்ந்து அதன் வளர்ச்சி காத்தல் என போராடிக்கொண்டே இருக்கும்.. இதோ தலைவர் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து சானிடேசர் கையுறை,முக கவசம் என பொதுமக்களுக்கு வழங்கவும் "ஒருங்கிணைவோம் வா" என பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.. மற்ற கட்சிகள் தங்கள் பணி தேர்தலோடு முடிந்ததென போய்விட்டார்கள்..
..
அரசியல் யாதெனில் இயங்குதல்.. அது திடீர் அரசியல்வாதிகளுக்கோ அடிக்கடி அணி தாவுகிறவர்களுக்கோ, பாசிசத்தின் அடிமைகளுக்கோ, பிழைக்க அரசியலுக்கு வந்தவர்களுக்கோ, தெரியாது.. இங்கே அரசியல் மக்களுக்காக இனத்திற்காக மொழிக்காக, பள்ளத்தை கிடப்போரை உயரத்தில் தூக்கிவிட, மறுக்கபடும் உரிமைகளை பெற்று தர, நம்மை அடிமைபடுத்த நினைப்போரை விரட்டி அடிக்க.. மானத்தோடு வாழ திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தேவை.. திமுக மட்டும் தான் தொடர்ந்து இயங்கும்,பயணிக்கும், செயல்படும்,காக்கும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment