Wednesday, April 28, 2021

இந்தியா சுவாசம் கேட்கிறது..
திறமையற்றவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு உயிர்வளிக்காக (ஆக்சிஸன்) மக்கள் சுவாசமுட்டுகிறார்கள்..
சென்ற ஆண்டே பிப்ரவரியில்  இந்தியா கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்தும் கும்பமேளா நடத்தி உயிர்பலிக்கு காரணமாகியிருக்கிறது இந்தியா .. கொஞ்சம் கூட  வெட்கபடவில்லை தாங்கள் செய்தது மாபெரும் பிழை என்று கூட நினைக்கவில்லை இப்போதும் திமிராக பேச முடிகிறது இந்த குரங்கு புத்திகாரர்களால்.. இந்திய  ஊடகங்களின் வேசித்தனம் உலக நாடுகள் முன் கிழித்தெறியபடுகிறது .. அவசரநிலை காலத்தில் கூட நிமிர்ந்துநின்றவர்கள்  மூர்ச்சையாகி கிடக்கிறார்கள் அனைத்து ஊடகவியலாளர்களும் கள்ளமௌனம் காக்கிறார்கள் 
இந்த அவலநிலைக்கு முக்கிய காரணமான ஊடகங்கள் மனசாட்சியோடு இனியேனும் உண்மைகளை வெளியிட்டு இந்த அரசை தூக்கியெறிய போராடவேண்டும்.. பேனாமுனை
சரித்திரத்தை உருவாக்கும் ஆற்றல்  கொண்டது .. 
இனியேனும் செய்வார்களா..
..
கொலைக்காரர்களும் மதவெறியர்களும் மனித மாமிசத்தை உண்போரும் இந்தியாவை மெல்ல கொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. அகோரிகளை சாமியார்களை கட்டுபடுத்த கெஞ்சவேண்டியிருக்கிறது பிரதமரால்.. எவ்வளவு  இழுக்கு .. சாமியாரை முதல்வராக்கியதின் பலன் அவன் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் தயார் செய்கிறான் மாட்டுக்கு கொரோனா வராமல் இருக்க முககவசம் அணிவிக்கிறான் .. மனித  உயிர் மயிருக்கு சமமென எண்ணி திரிகிறான் .. சென்றாண்டு குழந்தைகளை உயிரை காப்பாற்ற சொந்த செலவில் ஆக்சிஸன் வாங்கிய மருத்துவர் கபீல்கானை தேசிய பாதுகாப்பில் அடைத்த போது மனிதநேயமுள்ளவர்கள் எங்கே போனார்கள். கொஞ்சமும் இரக்கமில்லாத செயலை அரசு செய்கிறதே என நீதிமன்றம் கேள்வி கேட்டதா.. கிரிஜாவுக்கும் அர்னாப்பிற்கும் வேகமாக கதவை திறந்த நீதிமான்கள் அப்போது அமைதிகாத்தார்களே அன்றே  உயிர்வளி(ஆக்சிஸன்)  பற்றாக்குறை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை..
..
ஜோர்டான் நாட்டில் ஏழுபேர் உயிர்வளி கிடைக்காமல் இறந்ததற்காக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்கிறார்
இந்திய ஒன்றிய அரசின்
சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு மன சாட்சி என்று ஒன்று இருந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போன நிலையில் தனது பொறுப்பற்ற தன்மைக்காக பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.. 
இந்திய அரசு முழுவதுமாக தோல்வியடைந்து  நிற்கிறது.. முஸ்லிம்களை ஒடுக்கவேண்டும் என்பதிலேயே சிந்தனையை செலவிடும் முட்டாள்கள்  நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை.. 
..
Dr.மன்மோகன் சிங்
It will be a disaster if Modi becomes PM of India,'  மோடி இந்தியாவின் பிரதமரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும், ' என்றார்..
படித்த திறமையான நல்ல  நிர்வாகியை  புறக்கணித்து 
குஜராத்தில் குருதியில் விளைந்த நஞ்சை நாம் கொண்டாடியதின் விளைவு இன்று இந்தியா அனுபவிக்கிறது .. வாய்பந்தல்  போடும் முட்டாளின் கையில் தேசம் படாதபாடுபடுகிறது .. மதவெறிகளும் பிணந்திண்ணிகளும் நாடாண்டால் என்ன நடக்கும் என்பதை இந்தியா உணர  தொடங்கியிருக்கிறது ..
இதுதான் இவர்கள் சொல்லும் #ராமராஜ்ஜியம்
எழுபதாண்டுகள் காங்கிரஸ் செதுக்கியதை இந்த நவீன கோமாளி ஏழே வருடத்தில்  உடைத்தெறிந்தது நாடு கவலையோடு பார்க்கிறது ..
..
கடவுளோ மதமோ மாட்டுசாணியோ மூத்திரமோ பிணியை நீக்காது ..அறிவியல் கொண்டே சாதிக்க முடியும் .. புராணமும் புரட்டும் போலிகளை உருவாக்கும்.. பகுத்தறிவே நன்மை பயக்கும் அறிவை தரும் 
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தரும் .. இதை ஆள்வோர் புரிந்து கொண்டு மூடவழக்கை இனியும் பின்பற்றாமல் கைதட்டு விலக்கேற்று என பீற்றாமல் 
தடுப்பூசியை எல்லோருக்கும் கிடைக்க , உயிர்வளி தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் .. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment