Friday, April 2, 2021

தோற்கிறோம் என்ற பதற்றத்தில் பாஜக அதிமுக எதாவது செய்து கொஞ்சமேனும் மெச்சபடமாட்டோமா என நினைப்பது தெரிகிறது.. தலைவர் மகள் வீடு கரூர் செந்தில் பாலாஜி வீடு என வருமானவரி சோதனை செய்கிறார்கள்.. வீட்டை சுத்தம் செய்ய அரசே செய்யும் ஏற்பாடு இது.. பாஜகவோ அதிமுகவோ சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை.. மதுரைவீரன் படம் பார்த்தாயா என பிரதமர் கேட்கிற நிலையில் தான் அவரது தமிழக அரசியல் அறிவு இருக்கிறது .. ரயில் நிலையத்தை போல எல்லோரும் கோவிலுக்கு வருகிறார்கள் புனிதம் என்னாவது என யோகி கேட்கிறார் அது சரி உ.பி.யில் நாட்டின் முதன்மை குடிமகன் குடியரசு தலைவர் கூட கோவிலுக்குள் நுழைய முடியாது கோவில் தீட்டுபட்டுவிடும் ..
ஆனால் பெரியாரால் 1952 லேயே பரமேஸ்வரன் என்ற பட்டியலினத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்க முடிந்தது .. பரமேஸ்வரன் வரவு கண்டு தில்லை நடராஜரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் பதறும் காட்சிகண்டேன் அந்த மாட்சி கண்டேன் என பேரறிஞர் அண்ணா சொன்னதெல்லாம் காவி யோகிக்கு தெரியுமா என்ன..?
..
கோவையில் யோகி வருகையையோட்டி  கடையடைக்க சொல்லி மிரட்டியதை "சிறு சம்பவம் "  என்கிறார் வானதி சீனிவாசன்.. எது சிறிய சம்பவம் .. வியாபாரிகளை கடையை அடித்து உடைப்போம் என்பதா அதென்ன இஸ்லாமியர்கள் கடைகளுக்கு மட்டும் மிரட்டல் விடுவது .. வாக்கு கேட்க யார் வேண்டுமானாலும் வரலாம் பைத்தியங்களை கூட அழைத்து வாருங்கள் கவலையில்லை அது உரிமையும் கூட அதற்காக கடைகளை அடைக்க சொல்வது அத்துமீறல் .. அதை நியாயபடுத்துவது தரந்தாழ்ந்த செயல்.. கிடைக்கும் கொஞ்ச ஓட்டையும் காலி செய்தாகிவிட்டது ..  பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத நிலைக்கு வந்துவிட்டது  எதையாவது செய்து பரபரப்பை உண்டாக்க நினைக்கும் போதெல்லாம் தமிழகம் அறிவாயுதம் கொண்டு சுக்குநூறாக உடைத்தெறிகிறது காரணம் பெரியாரெனும் பெரும் நெருப்பு கயமையை, அறியாமையை, கோழைத்தனத்தை சுட்டெரித்து .. எதையும் அறிவுகொண்டு சிந்தித்து செயல்பட செய்கிறது.. அதனால் கோவில்களுக்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை வழங்குகிறான் கோவில் முதல் மரியாதையை பிற மதத்தவரும் பெறுகிறான்
..
ஆடு அண்ணாமலை பகிரங்கமாகவே செந்தில் பாலாஜியை மிரட்டுகிறார் அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறதாம் அது கர்நாடக முகமாம் ..தெரியும் அண்ணாமலை IPS அதிகாரி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியானதும் தொடர்ந்து பாஜகவில் ஐக்கிமானதும் தெரியும்..இது போன்ற மிரட்டல் எல்லாம் நிறைய பார்த்தாயிற்று.. வாசுதேவநாயர் என்ற IPS அதிகாரி நீங்கள் யார் என்ற போது மாவட்ட செயலாளர்  என்ற பதிலளிக்க அப்படின்னா .. அதுவா ஜில்லா கலெக்டர் மாதிரி என்று பதிலுரைத்த வரலாறெல்லாம் தெரியாதென்று நினைக்கிறேன்.. கடைக்கோடி தொண்டனை தொட்டுபார் என கனிமொழியே சொல்கிறாரென்றால்  புரிந்திருக்கும் .. பாஜக ஆதரவில் ஆட நினைத்தால் ஆட முடியாமல் போகும் இது கர்நாடகம் இல்லை தமிழகம் ..அதிமுக இல்லை.. திமுக, தீரர்கள் இயக்கம் ..
..
எத்தனை ரெய்டு நடத்தினாலும் கலவரத்தை நடத்த திட்டமிட்டாலும் ..வெட்டுவேன் குத்துவேன் என பேசி மிரட்ட நினைத்தாலும் எதுவும் வேலைக்காகாது .. வேறு மாநிலத்தில் வேண்டுமானால் முயற்சிக்கலாமே தவிர இங்கே ஒன்றும் நடக்காது.. மோடியைவந்து  எனது தொகுதியில் பிரச்சாரம் செய்யுங்கள் வெற்றி பிரகாசமாக இருக்குமென திமுக வேட்பாளர்களென ட்விட் போடுகிறார்கள்.. இதுதான் இங்கே பாஜகவின் நிலை மக்கள் பாஜகவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.. வேறெதாவது யோசிக்கப்பா.. 
..
வாங்க இளநியை குடிப்போம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment