வியக்கிறேன்..
உதயநிதி ஸ்டாலின் வரும்போது பெரிதாக நினைக்கவில்லை கொஞ்சம் நையாண்டி கொஞ்சம் யதார்த்தம் ,பக்கத்துவீட்டு பையனை பார்ப்பதை போன்ற தோற்றம்,சினிமா முகம் அவ்வளவுதான் .. அரசியலில் மெருகேற நீண்ட பயணம் தேவைபடும் என நினைத்ததுண்டு ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்கள் விதையின் வீரீயம் வளர்ச்சியில் தெரிகிறது..
..
ஒற்றை செங்கல் தகர்த்தெறிந்துவிட்டது.. மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது.. சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது..
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்
..
மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் .. மக்கள் மொழியில் பேசினால் அடுத்துவருவார்கள் அவர்களின் இணக்கம் வரலாற்றில் புதியதொரு அடையாளத்தை தரும்.. அவர்களுக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதலே எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. உழைப்பு சமரசமற்ற பேராளியாய் கொண்ட கொள்கையில் பிடிப்போடு பிறழாமல் இருத்தல் உயரத்தில் எத்திவைக்கும்..
..
பொதுவாழ்வில் துணிவும் நேர்மையும்,எதிரியை பேசவிடாமல் செய்யும் ஆற்றலும், எதிலும் , களமறிந்து மக்கள் மனமறிந்து செயலாற்றலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்,
திராவிட இயக்கம் எதற்காக தொடங்கபட்டதோ அதனை உணர்ந்து, பள்ளத்தில் கிடப்போரை உயரத்தில் ஏத்திவிட, சமூகநீதியின் குரலாய் தொடர்ந்து ஒலித்திட வேண்டும்..
பெரியாரும் பேரறிஞரும்,பேரருளாளனும் கட்டிகாத்த திராவிட இயக்கம் இன்று பகை சூழ்ந்து தமிழக நலனை காவுகேட்கும் சூழலில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பை உணர்ந்து பகைவர்களை பந்தாடி வழிதவற் வந்துவிட்டீர் நடையைகட்டும் என பறையடித்து விரட்டியவிதம் பெரும்நம்பிக்கை ஒளிக்கீற்றாய் வெளிச்சம் தருகிறது..
..
உதயமாகிறது..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment