Saturday, April 3, 2021

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்
நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்.. #லெனின்
..
தேர்தல் பரப்புரைகள் முடிந்தது.. யாருக்கு வாக்களிப்பதென தீர்மானித்திருப்பீர்கள்.. வாக்குசவாடிக்கு போகும் முன் ஒருநிமிடம் யோசியுங்கள்.. கடந்த பத்தாண்டில் பாழாய்போன நமது எதிர்காலம் .. நம் குழந்தைகளின் கனவை,  எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசுபணிகளில் வடவர்களுக்கு அடிப்பணிந்து வேலை செய்யும் நிலையை ஏற்படுத்திய மகாபாவிகள் பன்னீரும் பழனியும் என்பதை ஒரு கணம் யோசித்தால் போதும்.. தமிழக அரசுபணிகளை யாருக்கும் தெரியாமல் கையெழுத்திட்டு பிறமாநிலத்தவரும் வரலாம் என திறந்துவிட்டு இன்று தமிழர்களுக்கு வேலையில்லை என்கிற நிலை இவை மாற்றபடவேண்டாமா..
..
பொள்ளாச்சியின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழுகிறதா.. அந்த குழந்தைகளுக்கு  குறைந்தபட்ச நீதி குற்றவாளிகள் தண்டிக்கபடுவது தானே.. அமைச்சர் பாண்டியராஜன் குழந்தைகளை வளர்க்க தெரியவில்லை என சொன்னதும் முதல்வரே இது நாடகம் என கட்சிகாரனை காப்பாற்ற ஆடிய நாடகம் இவர்கள் முகத்திரை கிழிக்கபடவேண்டாமா.. ?
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்து கொள்ளையடிக்கும் முதல்வர் 40 ரூபாய் விளக்கை ₹400 க்கு வாங்கும் மந்திரி .. குட்கா போதை பொருள் கடத்தலில் மந்திரியின் பங்கு இவையெல்லாம் விசாரித்து தண்டிக்கபடவேண்டாமா..
மிகவும் ஆபத்தானவர்கள் அதிமுக அடிமைகள் .. சொரணையற்று வீண்பழிசுமத்தி மானத்தை இழந்து தமிழகத்தை தலைகுனிய வைத்த இந்த "கேடுகெட்டவர்கள்" தண்டிக்கபடவேண்டும் என்பதை நினைவில் கொள்க..
..
பத்திரிக்கைகளில் பக்கம்பக்கமாக விளம்பரங்கள் திமுக ஆட்சியில் செய்தவையென பட்டியிலிட்டிருக்கிறார்கள் .. பத்தாண்டாய் ஏன் வழக்கு பதியவில்லை .. 2ஜி வழக்கே விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி திமுக மீது சுமத்தபட்ட பழியை துடைத்தாகி குற்றமற்றவரென செய்திகள் வந்ததெல்லாம் மக்கள் அறிவார்கள்.. ஏன் இதுவரை ஒரு திமுககாரன் கூட வழக்கில் தண்டிக்கபடவில்லை.. ஆனால் முதல்வராக ஜெயலலிதா நீதிமன்றம் சென்று குற்றவாளியாய் சிறைக்கென்ற வரலாறு அதிமுக கட்சிக்கு உண்டு .. அதிமுக அமைச்சர்கள் அரங்கநாயகம் மருங்காபுரி பொன்னுசாமி என குற்றவாளிகள் என தீர்ப்பு பெற்றவர்கள் உண்டு .. வரும்காலங்களில் பன்னீரும் பழனியும் கூட சிறைக்கு செல்வார்கள் .. இவையெல்லாம் மக்களுக்கு தெரியும்..  விளம்பரம் என்ற பெயரில் ஊடக அறம் இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது .. அதிமுகவில் சிறைசென்றவர்கள் பட்டியலை நாளை எதிர்பார்க்கலாமா. ? அதானே அறம்.. 
..
சமஸ்கிருதம் தெரியாத நம்மை ரௌடிகள் என்ற பாண்டியராஜனை, அதிமுக வெற்றி பெற்றால்  பாஜக ஆட்சிதான் நடக்கும் என்ற யோகி, உ.பி.முதல்வர் யோகி வருகையையொட்டி நடந்த கலவரத்தை சிறுசம்பவம் இதை கூட செய்யவில்லையென்றால் எப்படி எனும் வானதி.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சி பார்த்து தெரிந்துக்கொண்டேன் எனும் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்து வேலைவாய்ப்புகளை வடவனுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடும் பன்னீர்.. இவர்கள் ஆபத்தானவர்கள்.. இவர்களுக்கு முடிவுகட்ட வாக்களிக்கும் முன் யோசியுங்கள்..
..
நம்பிக்கை தரும் அணிக்கு.. 
நல்லதை விரும்பும், நமது உரிமைகளுக்கு குரல் கொடுத்து மீட்கும் ,காத்துநிற்கும் காவலனாய் திகழும்  திமுக அணியை வெற்றி பெற செய்வது நமது கடமை..
..
உதயசூரியன் நினைவிருக்கட்டும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment