Tuesday, July 9, 2019

ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்ட்

சிகப்பு கூட ஒரு நாள் தேய்ந்து காவியாக போகும்.. ஆனால் கருப்பு ஒருபோதும் காவியாகாது என்ற கவிஞர் தோழர் #இன்குலாப் வரிகள் ஞாபகம் வந்தது .. .. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் என்பதே பார்பனீயரின் "புதிய ஏற்பாடு" ..எதுவரை இழுத்துச் செல்லவேண்டுமென அறிந்து அதுவரை கொண்டு சுமந்தவர்கள் .. தொடர்ந்து காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி ஐந்தாண்டுக்கொருமுறை ஞானோதயம் வந்து .. தேர்தல் நேரத்தில் மூன்றாம் அணி என பேசி திசை திருப்பி .. மாநில கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ஆசையை வளர்ந்து காங்கிரஸை ஒற்றைபடுத்த பார்பனீயத்திற்கு பயன்பட்ட இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சி .. .. பாஜக வளர துணைபோனது அல்லது உறுதுணையாக நின்றது 1989 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போர்பஸ் ஊழல் பூதாகாரமாக பேசபட்டபோது மூன்றாவது அணி பாஜகவோடு ஒரு புரிந்துணர்வை செய்துக்கொண்டது சில இடங்களில் போட்டியிடுவதில்லை சில இடங்களில் பாஜகவும் போட்டியிட கூடாது அதற்கு அவர்கள் சொன்ன காரணம் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் இதற்கு பெரும் துணையாக இடதுசாரிகள் துணைபோனார்கள் .. 89 முன்பு இரண்டு இடங்களை பெற்ற பாஜக அப்போதுதான் 80 இடங்களை பிடித்து தன்நிலையை உறுதி செய்தது.. அதன் பிறகு காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே போல பார்ப்பதாக கூறி பாஜக வளர்ச்சிக்கு துணைபோய் கடைசியில் வங்கத்தில் கூட கரைய தொடங்கியது .. வங்கத்தில் கம்யூனிஸிட் கரையதொடங்கியதும் மெல்ல படர தொடங்கியது பாஜக .. .. பொலிட் பீரோ உச்சபட்ச அதிகார பீடமாக அறியபடுகிற மத்திய குழுவில் பார்பனர்கள் தங்கள் பிடியை முறுக்கிவைத்துக்கொண்டனர் சகல அதிகாரமும் கொண்ட பீரோ .. தொடர்ந்து பார்பன ஆதிக்கத்தில் தான் இருக்கிறது கம்யூனிஸ்ட் பிரிவதற்கு கூட காரணியாக இருந்தது .. கம்யூனிஸ்ட் ஆர்எஸ்எஸின் முற்போக்கு பேசும் அல்லது பேசுவதாக சொல்லும் ஒரு அமைப்பு அவ்வளவுதான் .. பொதுவுடமை சித்தாந்தத்திற்கும் இந்திய மார்க்.கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமே இல்லையென சொல்லலாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்றாலே அது திராவிடம் தான் திராவிட சிந்தாந்ததம் தான் விளிம்புநிலை மக்களுக்காக ஒடுக்கபட்டவர்களுக்காக தொழிலாளி பாட்டாளி வர்க்கத்திற்காக உழைப்பதும் செயல்படுவதும் வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னதை நடப்பிலாக்குவதும் திராவிடம் தான் .. உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் இடது கம்யூ. கட்சிகளின் கருத்து பாஜகவோடு சேர்ந்தே இசைத்ததை நாடாளுமன்றத்தில் நாம் கண்டதுதான்.. 5% விழுக்காடு உயர்ஜாதியினருக்காக 10% விழுக்காடுதென்பது அயோக்கியத்தனம் பிற பொது சமுகத்திற்கு செய்கிற அநீதி .. இவர்களை அடையாளம் கண்டோம் இனி.. புறக்கணிப்போம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment