Tuesday, July 23, 2019

நவநாகரீக வாழ்க்கை

இப்போதெல்லாம் நவீன நாகரீகம் என்ற பெயரில் நாசூக்காக பேசுவது பெருமையாகிவிட்டது சிரமபட்டு நல்ல சொற்களை தேடி கதைக்கிறோம் இயல்பாக பேசும் வழக்கம் நம்மிடையே காணமல் போய்விட்டது பேச்சில் நையாண்டி நக்கல் இதெல்லாம் இல்லை ஒருவித சோக்குத்தனம் சொற்களில் வந்து மெய்யிழந்து நிற்கிறோம் .. கேலி செய்வதில் கூட நாகரீகம் பார்க்கிறோம் எங்கே கோபித்து கொள்வாரோ என அஞ்சிகிறோம் உறவுமுறை சொல்லி அழைப்பதோ .. மண்ணின் மணமாறாமல் கதைப்பதோ இல்லை .. அதிகம் படித்துவிட்ட நினைப்பு அல்லது அதிகம் அறிந்தவராக நம்மை காட்டிக்கொள்ள பொய் முகமூடி தரிக்கிறோம் .... .. கிராமபுறங்களில் சிலநேரங்களில் மிகவும் கொச்சையாக திட்டுவார்கள். ஆனால்..அது புண்படுத்தாத செயலாகதான் இருக்கும். சில நேரம் நாகரீக சொல் நளினமாய் நடனமாடும்.. ஒருமுறை கீழவழுத்தூர் மளிகைகடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்த போது நடந்த உரையாடல்.. பெரியவர் மூப்பனார் அவர்களும் வேறொரு பெண்மணியும் தரையில் அமர்ந்து வெற்றிலை சீவல் போட்டுக்கொண்டிருந்தார்கள்..அப்போது ஒருவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் .. அவரை மூப்பனார் டேய் #வக்காலி இங்க வாடா என்றார் அவனும் கோபடாமல் வந்து அதான் ஒன்னுக்கு ரெண்டா அக்காள கொடுத்தோமில்ல வச்சு வாழ விதியில்ல மூணாவது ஒரு அக்கா வேணுமோ என்றார்.. அவன் சொல்லறதும் சரிதானே என்றார் அந்த பெண்மணி .. ஆம் அவருக்கு இரண்டுமுறை கல்யாணமாகி மனைவிகள் இருவருமே இறந்து விட்டார்கள் .. அவன் எவ்வளவு நாசுக்காக.. சொன்னான்.. தன்னை திட்டியவரையே சிரிக்க வைத்து சொன்ன சொல்லின் பொருளுணர்ந்து விசரமின்றி பதிலளித்து யதார்த்தமாய் கடந்து போனான் .. மற்றொரு சம்பவம்.. இருபெண்மணிகளுக்கு சண்டை வந்து வீதியிலே வந்து திட்டிக் கொண்டுயிருக்கிறார்கள். மாமியாரும் மருமகளும்.. வார்த்தை தடிக்கிறது.. என்மவன் தொடயிடுக்கில புகுந்து பிள்ளை பெத்த உனக்கு இவ்வளவு திமிருன்னா.. அவனையே இந்த தொட இடுக்கில இழுத்துப்போட்ட எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்டி.. என்கிறாள் தாய்.. நாசுக்கான வார்த்தையில் நடனமாடினாள்.. கிராமங்களில் சிலநேரம் மிகவும் மோசமாக வார்த்தை தடிமனாக கூட பேசுவார்கள் ஆனால்.. அதில் விரசமே வராது அல்லது தோன்றாது.. கொச்சையான வார்த்தைகளை கூட சொல்லும்வண்ணத்தில் தேன் தடவி சென்றுவிடுவார்கள் .. கோபத்தில் வரும் வார்த்தைகள் சில நேரம் அதிரவைக்கும் ஆனால் எல்லைமீறாது .. எசக்குபிசக்கா..பேசினாலும் யதார்த்தமானவர்கள் .. வெள்ளை உள்ளம் கொண்டவர்களாய் இருப்பார்கள் இப்போதெல்லாம் பக்கத்துவீட்டுகாரனையே தேவை திருநாளில் தான் பார்க்கிறோம் பேசுகிறோம் .. அந்தளவிற்கு வேகமேறிய வாழ்க்கை .. உண்மையில் மெய்யிழந்து வாழ்கிறோம் .. வாழ தெரியாமல் வாழ்கிறோம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment