Saturday, July 13, 2019
திராவிடப் படை
தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி...
யார் ஆள்கிறார்களென இப்போது புரியும்
எதையும் சாதிக்க வக்கற்றவர்களிடம் தமிழகம் சிக்கி சின்னபின்னமாகி கொண்டிருக்கிறது மத்தியில் ஆள்வோரிடம் கேட்க கூட அஞ்சுகிறவர்கள் கையில் தமிழகம் .. அன்று மக்கள் செய்த தவற்றின் சொச்சம் இப்போதும் நம் உரிமையை பறித்துக்கொண்டிருக்கிறது ..
..
என்ன செய்துவிட முடியும் இந்த 37 பேரால் என கேட்டவர்கள் தான் இப்போது நம்மை வாங்கி தர சொல்கிறார்கள் .. சுங்கவரி சாலை மேம்பாட்டிற்காக செலவிட்டபட்ட தொகையை சிறுக சிறுக திரும்ப பெறுவது திரு.வாஜ்பாய் காலத்தில் தொடங்கபட்ட திட்டம் பின்பு மன்மோகன் காலத்தில் விரைந்து டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது விரிவாக்கம் செய்யபட்டது குறிப்பிட்ட காலம் வரை வசூலிப்பதென்பதை .. பணம் கொட்ட தொடங்கியதும் வரியை உயர்த்துவதும் காலஅளவை நீட்டுவதுமாக தொடர்கிறது .. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும் .. திமுக எம்பிக்கள் இதை கவன ஈர்ப்பாக கொண்டு வந்து விவாதிக்கலாம் ..
..
மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தவுடன் பார்பன நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதும் அதை சில புல்லுறுவிகள் மல்லுகட்டி ஆதரிப்பதும் தமிழகத்தில் தொடர்கிறது தமிழிசை பார்பனர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு 8 லட்சம் அல்ல 20 லட்சம் சம்பாதித்தாலும் அவர்கள் ஏழைகள் தான் அவர்களுக்கு 10% விழுக்காடு இடஒதுக்கீடு செய்யலாம் என்கிறார் .. பார்பனர்கள் மாதம் அறுபதாயிரம் சம்பாதித்தாலும் ஏழைகளாம் .. ஆனால் மற்றவர்கள் நாற்பதை தாண்டினால் வரிகட்டவேண்டும் அரசின் சலுகைகள் கிடைக்காது
இந்த நாடு பார்பனர்களுக்கானது மட்டுமா சட்டம் யாவர்க்கும் சமமாக வேண்டாமா கிரிமிலேயர் அளவுகோல் எது .. எதற்காக பிற பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டதென்பதை தமிழிசை அறிவாரா.. நிர்மலா பொறுப்பு வகிக்கும் நிதித்துறை அதிகாரிகள் 1040 பேரில் 920 பேர் அதாவது 90% விழுக்காடு பார்பனரென்பதை அறிவாரா .. உயர்பதவி என்றில்லை இடைநிலை பதவியிலும் ஆதிக்கம் அதிகம் இருப்பது தமிழிசைக்கு தெரியுமா .. இத்தனை இடங்கள் IIT IMM ல் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவர்கள் இடங்கள் நிரப்பபடாமல் இதெல்லாம் உயர்வகுப்பினர்களுக்கு தாரை வார்ப்பது தெரியாதா .. யாருமே போராடாத போது உயர்வகுப்பினருக்கு வலிய சென்று 10% இடஒதுக்கீடு ஏன்..
தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பாஜக சேர்ந்து ஆதரிப்பதன் நோக்கம் என்ன ..தமிழக அரசு உறுதியான நிலைபாட்டை எடுத்து மத்திய அரசிற்கு அனுப்பவேண்டும் .. நீட் தேர்வு மசோதா போல காலங்கடத்தாமல் 37 பேர் இருந்தும் நாடாளுமன்றத்தில் வாய் திறக்காமல் கள்ளமௌனம் காத்து கோட்டைவிட்டதை போல் அல்லாமல் விரைந்து நடவடிக்கை தேவை ..
..
திமுக பலம் பொருந்திய கட்சியாக நாடாளுமன்றத்தில் திகழ்கிறது சொல்வன்மையும், செயல்திறனும் போர்குணமும் கொண்ட திராவிட படை இருக்கிறது அதனால் தான் முதல்வர் திமுகவிடம் கேட்கிறார் .. போராளிகளை கொண்ட கட்சி எதையும் அடைந்தே தீருவதென்ற ஒற்றை நோக்கோடு தமிழர் நலன் சமூகநீதி மொழி இன கலாச்சார காவல் என சிறந்த கோட்பாடோடு திறம்பட செயல்படும் திமுக .. அதனால் தான் எடப்பாடி அடிமைகளால் சாதிக்க முடியாது ஆளுமைகளால் தான் முடியுமென நம்புகிறார் .. நல்லது
..
திராவிடப் படை வெல்லும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment