Thursday, July 18, 2019
சரவணபவன் அண்ணாச்சி
ராஜகோபால்
உழைப்பு மட்டுமே உயர்வை தரும் என்ற உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார் அவரது மரணம் மூடநம்பிக்கை எதிரான கருத்தை நிலைபெற செய்திருக்கிறது ..
தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி எனும் சிறு கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். அந்தக் கிராமத்துக்கு பஸ் வசதி கூட இல்லை. வறுமை காரணமாக ஏழாம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்த அவர், இரவில் தரையிலேயே உறங்குவார்.. பிறகு ஒரு மளிகை கடையில் பணி.. மளிகை கடை பணிக்கிடையே தோன்றிய எண்ணம்
நல்ல சுவையான உணவகத்தை உருவாக்க வேண்டுமென்பது ..
1981-ல் உதயமானது சரவண பவன். சுவையைக் காட்டிலும் பசி தீர்ப்பதே அத்தியாவசியம் என்ற போக்கு நிலவிய காலகட்டத்தில் தேவை அதிகமானதால் தொழிலில் பேரெழுச்சி ஏற்பட்டது..
ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் மலிவு விலையில் பொருள் வாங்கலாம்
தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவாக தரலாம் என்ற தன் அதிகாரியை வீட்டு அனுப்பியவர் உணவின் தரம் மட்டுமே பெயரை நிலைக்க வைக்குமென்று நம்பியவர் இலை போடுவதில் கூட ஒழுங்கை கடைபிடிக்க சொன்னவர்.
வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த காலத்திலும் உணவின் தரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த குறையும் வைக்கக் கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தினார் ராஜகோபால்..
நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஊழியர்களின் பணிச் சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதே சரவண பவனின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது
ஊழியர்களை மாதம்தோறும் தலைமுடியைத் திருத்த வேண்டும் இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற கட்டுபாடுகள்
ஊழியர்களுக்கு முதலில் வேலை உறுதித்தன்மையை ராஜகோபால் தருகிறார். இருப்பிடத்தையும் நிர்வாகமே வழங்குகிறது. சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தங்கள் குடும்பம் ஊரில் வசித்தால், அவர்களைப் பார்த்து வருவதற்கும் ஆண்டுதோறும் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரின் முதல் இரண்டு குழந்தைகளுக்கான கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்கிறார். ஓர் ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவரைப் பார்த்துக்கொள்ள நிர்வாகத்தில் இரண்டு பேரை நியமிக்கிறார். ஓர் ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக்கொள்ள வழிவகுத்துவிட்டாலே அந்த ஊழியர் மூலம் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. இவையெல்லாம் அவரின் வெற்றிக்கான படிகட்டுகள் ..
பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சியிருந்த சைவ உணவக தொழிலில் தன் மாபெரும் முயற்சியால் வெற்றிகண்டவர் .. பார்த்தாலே தீட்டென்று சொன்னவர்களை வீழ்த்தி தொழிலில் மாபெரும் வெற்றிகண்டார்
..
உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு எடுத்துகாட்டாக விழங்கியவரை .. பெண் பித்தில் சிக்கவைத்து
கடைசியில் குற்றவாளியாகவே மாண்டுபோனார் ..
ஜோதிடம் என்ற பொய்யும் ஜாதகமென்ற ஏமாற்றும்
பக்தி எனும் போலிதன்மையும் உழைப்பால் உயர்ந்த ஒருமனிதனை வீழ்த்தியது .. மூன்றாவதாய் ஒரு திருமணம் செய்தால் புகழ் உச்சிக்கு செல்லலாமென்றவன் சுகபோகமாய் வாழ்கிறான் .. பெண் மோகம் மட்டுமே அவரின் வாழ்வை சீரழித்தாக சொல்ல இயலாது ஏனெனில் அவரிடம் இருக்கும் செல்வம் அதை கொண்டுவந்திருக்கும் .. ஆனால் ஜோதிடத்தை நம்பியதன் விளைவு
மனிதனை மிருகமாக்கி கடைசியில் பழியோடு புதைக்குழியில் தள்ளியது ..
..
அண்ணாச்சியின் வாழ்க்கை ஒரு பாடம் ..
உழைப்பு உயர்வை தரும் நேர்மையும் இரக்கமும் எப்போதும் நன்மை தரும் .. ஆனால் பக்தி ஜோதிடம் மூடநம்பிக்கை என்பது பார்பு தொழில் செய்பவர்கள் பிழைக்க வழியே தவிர எந்த பயனும் இல்லை
அதெல்லாம் ஏமாற்றுவேலை .. புத்தி போனால் எல்லாம் போகும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment