Monday, July 1, 2019
வைகோ இனி நாடாளுமன்றத்தில்
23 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கிறார் எங்கள் போர்வாள் வைகோ
நிறைய தடுமாற்றங்கள் வந்த வாய்ப்பை வேண்டாமென வைத்தது சரியான அணுகுமுறையில்லாமல் தடம்புரண்டு.. கடைசியில் ஒருவழியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை திமுக தலைவர் உணர்த்தி
மாநிலங்களவையில் நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை தருவதாக வாக்குறுதி அளித்து சொன்னதை செய்திருக்கிறார்
"சொன்னதை செய்வோம் " என்றவரின் பிள்ளை ..
..
இக்கட்டான காலகட்டத்தில் பாசிசத்தின் கைகளில் இந்திய ஒருமைபாடு நசுக்கபடுகிறவேளையில் சமத்துத்துவத்தை சகோதரத்தை சமநீதியை சமூகநீதியை கடித்து குதறும் செயல்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க நீண்ட அனுபவமுள்ள வைகோ செல்வது சரியானதொரு தேர்வாகவேபடுகிறது .. ஆழ்ந்த அரசியல் அனுபவமும் எதிரிகளை குலைநடுங்கவைக்கும் ஆற்றலும் சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர் கலைஞரின் வார்ப்பாய் .. செதுக்கப்பட்டவர் தைரியமாக முகத்திற்கு நேரே ஆணியடிக்க இவரால் முடியும் சபையின் மூத்த உறுப்பினரும் கூட இவரின் அணுகுமுறையும் திறமையும் நல்லதொரு நட்புவட்டமும் பல்வேறு சமூக இன மக்களின் பிரதிநிதிகளிடத்தில் நட்புறவும் கொண்ட நல்லதொரு ஆளுமை வைகோ..
..
இன்றைய தமிழகம் கேடுகெட்ட கயவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாய் .. ஊழல் செய்து அதிலிருந்து தப்பிக்க பாசிசத்தின் அடிமைகளாய் கிடக்கிறார்கள் .. யார் ஆட்சி செய்கிறார்களென தெரியாமல் பொம்மையாய் ஒருவரை நிறுத்திவிட்டு பாஜக தன் பரிவாரங்களை அதிகாரத்தில் அமர்த்தி தங்கள் நலன் காக்க அரசை செலுத்துகிறது மடையர்கள் தலையாட்டி பொம்மைகளாய் கிடக்கிறார்கள் .. தமிழகம் மெல்ல தன் முகமிழக்கிற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. காவிரிக்கரைகள் பொலிவிழக்கிறது கடைமடை பகுதிகள்ோ வறண்டு .. அதில் மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்து பாலவனமாக்க நினைக்கிறார்கள் .. விவசாய நிலம் அழித்து சாலைகள் என்ற பெயரில் ..எரிவாயுவை இறக்குமதி விலைக்கே அதானியிடம் வாங்கலாமாம் ..அதற்தெற்கு எம் நிலத்தை மலடாக்கவேண்டும் இறக்குமதி செய்தால் போதுமே .. ஆட்சியாளர்கள் கோழைகளாய் தொடை நடுங்கிகளாய் இருப்பதால் .. பிற மாநிலங்கள் எங்கள் நிலத்தை தரமுடியாதென்ற பிறகு அணுகழிவை இங்கே கொட்ட தீர்மானிக்கிறது .. மருத்துவம் எம் பிள்ளைகளுக்கு எட்டாகனியாக்கி வசதியுள்ளவன் படிக்கலாமென்ற நிலையில் ..ஒரே நாடு ஒரே ரேஷன் .. என எல்லாநிலையிலும் எதிர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு ..மக்களவையில் திரு.ஆண்டிமுத்து ராசா இன்று இடஒதுக்கீடு குறித்து வகுப்பெடுக்கிறார்..எமது இளம்படையோ வீரியத்தோடு பாய்கிறது ..திமுக மாநிலங்களையிலும் வழக்கறிஞர் வில்சன், தோழர் சண்முகம் போன்றோரை அனுப்புகிறது .. சட்டத்தையும் போதிக்க .. இவர்களையெல்லாம் அனுபவத்தின் அடிப்படையில் வழிநடத்த வைகோ போன்ற ஆளுமை மாநிலங்களைவில் நுழைவது பாசிச சக்திகளுக்கு "பேதி" வரும் ..
..
வைகோவை நிறைய விமர்சனம் செய்திருக்கிறோம்
சரியான பிழையாக கூட சிலநேரம் உரக்க கூறியிருக்கிறோம் .. ஆனாலும் அவரின் நேர்மையும் தன்னலமற்ற சேவையும் கூரிய அறிவு திறமையையும் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை இன்றைய சூழலில் வைகோ மிக சரியான சிறப்பான தேர்வு ..
வாழ்த்துகள் வைகோ
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment