Saturday, July 20, 2019
திமுக இளைஞரணி..
#ஜூலை20_1980
திமுக இளைஞர் அணி துவக்கப்பட்டநாள்..
மதுரையில் மிக பிரமாண்ட கூட்டம் தலைவர் கலைஞர் துவக்கிவைத்தார்.. அப்போது இளைஞர் அணி அமைப்பாளர்கள் என ஐந்து பேரை தேர்வு செய்து மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் திராவிட கொள்கைகளை எடுத்துச்செல்லவேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்..
..
பாபநாச கிளை கழகம் சார்பில் சிலர் ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள் நானும் கூட பயணித்தேன்..திரு.வைகோ ஸ்டாலின் வந்து கொடியேற்ற வேண்டுமென்றால் கட்சிக்கு ₹1000 கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டமென்றால்₹5000 தரவேண்டுமென்றார்.. நந்தனத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை இளைஞர் அணிக்கு தருவதாக கலைஞர் சொல்லியிருக்கிறார் அதற்கு ₹10லட்சம் கட்சி நிதி தரவேண்டும் அதற்காகதான் இந்த தொகையென்றார்.. 11 லட்சத்தை திரட்டி பேராசிரியரிடம் கொடுத்தார் தளபதி.ஸ்டாலின்..
மாநிலம் முழுவதுமிருந்து கிளை கழகத்தை சேர்ந்தவர் குறிப்பாக இளைஞர்கள் ஸ்டாலினிடம் தேதி கேட்டு நச்சரித்தனர்..
1980 இந்தியாவிலேயே முதல்முதலாக கட்சிக்கென்று இளைஞர் அணியை உருவாக்கியது திமுகதான் ஸ்டாலின் 81 ல் நடந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதார அமைப்பாளராக தேர்தெடுக்கப்பட்டார்.. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் நல போராட்டமென திமுக அறிவித்த போராட்டங்களில் பெருமளவில் இளைஞர்களை பங்கு பெற செய்தார் மாவட்டம் தோறும் சென்று கிராமகிராமாக கட்சியினரை சந்தித்தார் ஸ்டாலின்..
..
இலக்கியம் புதுக்கிடு ஈனரை ஒதுக்கிடு
பகைவர்க்கு வளையேல்
மாயைக்கு மயங்கேல்
'ழ' கரமாய் சிறப்புறு என்ற கலைஞர் சொல்லிற்கிணங்க செயல்பட்டு வந்தார் ..இன்றைக்கு கட்சியின் தலைவராய் நிமிர்ந்து நிற்கிறார் என்றால் இவையாவும் நட்டதும் பூத்ததல்ல..
..
1989 வரை ஊர்வலம் என்ற சொல்லைதான் கேட்டிருந்த தமிழகம் .. ஸ்டாலின் தலைமையேற்று நடத்திய போது தான் அது #பேரணி என்றழைக்கப்பட்டது..
திரு.ஸ்டாலின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குவகித்தவர் வைகோ என்பதும் பின் அதிகார மோகம் பிரள வைத்ததும் அறிந்தது தான்..
..
இயக்கம் தலைவனை தானே தேர்வு செய்கிறது நிறைய பேர் வந்தார்கள் அழகிரி உட்பட ஆனால் உழைப்பவரை தொடர்ந்து மக்களோடும் கட்சியினரோடும் கொள்கையோடும் உடன்படுகிறவரைதான் தலைவனாக தேர்வு செய்யும்.. இதோ திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்திருக்கும் ஸ்டாலின் 1980 முதல் பயிற்றுவிக்கப்பட்டார் என்பது தான் உண்மை..
..
ஏன் இதை எழுதுகிறேன் எனில் இன்றைக்கு இளைஞரணியின் பொறுப்பை ஏற்றிருக்கும் உதயநிதி நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களென இளம் இரத்தத்தை கட்சிக்கு கொண்டுவந்து பயிற்சி தரவேண்டியிருக்கிறது .. பெரியாரை அண்ணாவை கலைஞரை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து திராவிடம் மட்டுமே எப்போதும் நம்மை காக்குமென உரக்க சொல்லவேண்டும் திராவிட இயக்கம் சட்டென்று யாரையும் உயர்த்தி பிடித்துவிடாது .. கடும் உழைப்பை தரவேண்டும் திராவிட சித்தாந்தத்தை விட்டு விலகாமல் மக்களிடம் நன்மதிப்பை பெற்றால் மட்டுமே வரும் காலம் புன்னகைக்கும் ..
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம் .. பேசிக்கொண்டே இருப்போம் உழைத்துக்கொண்டே இருப்போம் ஏனெனில் நாங்கள் ஆழமான கொள்கைக்கு சொந்தகாரர்கள் என்ற கலைஞரின் வரிகளை ஞாபகபடுத்திகொண்டு செயல்படவேண்டும்
..
உழைப்பு தானே அங்கீகாரத்தை பெற்று தரும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment