Sunday, July 21, 2019
காலம் கனியும்
நான் ஏற்கனவே சொன்னதுதான்
கனிமொழி கருணாநிதி திராவிட கொள்கையில் கொஞ்சமும் சமசரம் செய்துக்கொள்ளாத விட்டுகொடுக்காதவர் தன் செயல்பாடுகளை மிக நேர்த்தியாக வடிவமைக்கிறார் .. எந்த காலத்திலும் கொள்கை பிறழ் வந்துவிட கூடாதென்பதில் எச்சரிக்கையோடு இருப்பவர் .. சிறந்த நாடாளுமன்றவாதியாக செயல்படுகிறவர்களில் ஒருவர் ..
..
கலைஞர் இவரை முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியபோது நிறைய விமர்சனங்கள் .. திரு.ஸ்டாலினுக்கு இடைஞ்சலாக இருக்ககூடாதென்பதற்காக மாறனை வெற்றியிடத்தை நிரப்புவதற்காகவும் அனுப்புவதாக மிக பிரபலமான பத்திரிக்கையாளர்கள் கூட விமர்சனம் செய்தார்கள் உண்மையில் மாறனின் இடம் இப்போதும் காலியாக தான் இருக்கிறது காரணம் மாறனை விட கனிமொழியின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கபடுகிறது கொஞ்சமும் சமரசம் செய்துக்கொள்ளாத போராளி கனிமொழி ..தனக்கென்று புதியதொரு இடத்தை உருவாக்கும் வல்லமை பெற்றவர் .. இவரின் பேச்சில் நிதானம் சொல்லவந்ததை தெளிவோடு எடுத்தியம்பும் வித்தை .. சரியான அறிவியல்பூர்வமான எடுத்துகாட்டுகள் சொல்லவேண்டிய கருத்தை சரியான நேரத்தில் கொஞ்சமும் அச்சமின்றி எடுத்துரைத்தல் .. கொள்கைக்கொரு தீங்கெனில் தீப்பொறியாய் கிளம்பிவந்து சுட்டெரிக்கும் பாங்கு ..தலைமைக்கு கட்டுபட்டு செயல்படும் அறிவாற்றல் ..
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் .. இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது ..
..
கலைஞரின் "இலக்கிய வாரிசாக" அறியபட்ட கவிஞர் கனிமொழி தன் பன்முகதன்மையால் மிளிர்கிறார் .. கலைஞரே என் வீட்டில் எல்லோரும் திமுகவினர் ஆனால் கனிமொழி மட்டும் ஆசிரியரின் மாணவி என்று அவர் Atheist நாத்திகர் என தனித்து சொன்னார் .. வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தன்னை பகிரங்கபடுத்த தயங்கியதில்லை .. ஒருமுறை திடலில் பேசும் போது
சங்கீத அகடமியில் நடந்த பிராமணர்கள் விழாவிற்கு சென்றதையும் .. கதவோரம் நின்று கொண்டிருந்த என்னை கண்டு அழைத்து போய் முன் வரிசையில் அமரவைத்தார்கள் .. கனிமொழி கூட தெய்வ புகழ்பாடும் சபைக்கு வந்திருக்கிறாரென மகிழ்ந்தார்கள் நமக்குதானே தெரியும் எதற்காக சென்றோம் என்று ..என்றபோது அரங்கமே அதிர்ந்தது ..
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்
"ரிஷிகளுக்குப் பிறந்தவர்கள் இல்லை நாங்கள். அறிவியல் கண்டுபிடிப்பின் படி ஹோமோசெப்பியன்ஸ் வழி வந்தவர்கள் நாங்கள். எங்கள் பெற்றோர்கள் சூத்திரர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். உங்கள் வழக்கப்படி உங்கள் கடவுளிடம் இருந்தோ கடவுளின் பாகங்களில் இருந்தோ நாங்கள் பிறக்கவில்லை. உங்கள் நம்பிக்கைகளுக்கு வெளிப்புறம் பிறந்தவர்கள்..
நானும் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்திருப்பவர்களும் சமூக நீதியால் வந்திருக்கிறோம், மனித உரிமையால் இங்கு வந்திருக்கிறோம். இவைகளுக்காகவே இன்று வரை நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இவைகளுக்காக போராடுவோம்."
..
உண்மையில் திராவிடம் மிக சரியானவர்களை தான் தயார் செய்திருக்கிறது .. எதையும் அறிவுகொண்டு பார்க்கும் தொலைநோக்கு பார்வை
சமூகநீதியில் நின்று எதிர்ப்போரை இனங்கண்டு ..அவர்கள் சபையிலேயே அவர்களுக்கு ஆணியடிக்கும் திறன் பெற்றவர்கள் .. ஒவ்வொருவரையும் திமுக செதுக்கி அனுப்பியிருக்கிறது .. மடையர்களை அடிமைகளை கண்டவர்களுக்கு..அறிவில் சிறந்தோரை ஆற்றல்மிகுந்தோரை.. தெளிவானவர்களை கண்டதும் திணறுகிறார்கள்
பழமைவாதிகள்/பாசிசவாதிகள்..
இன்னமும் காத்திருக்கிறது
திறன்கொண்ட திராவிடப் படை
..
ஆம்
நேற்று கனிமொழியில் பேச்சில்
"கலைஞரை கண்டேன்"
..
காலம் கனியும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment