Wednesday, July 17, 2019
நாடோடி..
#புளியமரத்தடி..
..
வாழ்வில் எல்லாகாலகட்டத்திலும்
நிறைய மனிதர்கள் நம்மை கடந்துச்சென்றிருப்பார்கள்..
வித்தியாசமான கொஞ்சம் விவகாரமான நபர்கள் நம்மையும் அறியாமல் நம்மை உலுக்கி விட்டு சென்றிருப்பார்கள்..
..
பாபநாசம்
மேலவீதியின் முனையில் சைக்கிள் கடை
அந்தி நேர பொழுதுபோக்கு அங்குதான்..
நான் காந்தி.ஜீவா வீரமணி ஆரிப் ..என
நண்பர்கள் சேர்ந்தால் அரட்டைதான்..
ஒருநாள் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுக்கு உடை..
முறுக்கிய மீசையோடு வந்து ஹலோ பிரண்ட்ஸ் ஒரு டீ சொல்லுங்க என்றார்
எங்கள் யாருக்குமே அவரை தெரியாது சுத்துவட்டாரத்தில் பார்த்ததாகவோ அறிவில்லை..
ஜீவா உடனே டீ சொன்னார்..
டீயை குடித்துக்கொண்டே
சமகால அரசியலை பேசத்தொடங்கினார்..
அடிப்படை அறிவில்லாதவன் எல்லாம் அரசியலுக்கு வந்துட்டான்..
யாருக்கு போடுறோம் என்பதே தெரியாம போடுறான்.. கண்டவனையும் கும்பிடுறான்
ஜமீன்தார்காலமெல்லாம் முடிஞ்சு போச்சுடா
இன்னும் பெரியய்யா சின்னய்யா என்று
கும்பிடு போட்டுக்கிட்டே பின்னாலேயே ஓடுறான்.. நான்சென்ஸ்
மூப்பனார் வந்தான்னு வைய்யி சுத்தி நிற்கிறவன் பூரா மிராசுதாரும் பணம் பேசுறவனும் தான்..
சுத்தி 100 கோடி நிற்கும் ..
சாணம் தீட்டுறவன் போட்டு அடிச்சுருக்காங்க என்னய்யா பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்க ..
திராவிட கொள்கையெல்லாம் பெரிசா பேசுறீங்க ஆனா அங்கபோய் சரிங்கய்யா அப்படின்னு பம்புறீங்க..
என்னை காட்டி
இந்த பையன்தான் கொஞ்சம் பேசுனான்
மாவட்டம்( தி.க)தலைய ஆட்டிகிட்டே வந்துடுச்சு.. ஜீவாவை பார்த்து..பிரதர் டீக்கு காசை கொடுங்க
ஒரே மாதிரியிருங்கப்பா..
பெரியார் சொன்னதை ஒழுங்கா செய்யுங்க ..
பிரதர் மறக்காம டீக்கு காசை கொடுத்துடுங்க ..#லால்சலாம்
..
போயே விட்டார் அடைமழைப்போல் பொழிந்து விட்டுப்போனார்..
ஒருவார்த்தை கூட பேசியதில் தவறில்லை
நியாயமான பேச்சாய் சாமானியனின் உள்ளக்குமறலாய் இருந்தது..
..
சிலநேரம் யோசிப்பதுண்டு
நமக்கு வேண்டியவர்கள் என்றால்..
இவரால் நமக்கு பிறகேனும் காரியம் ஆகுமென்றால்..
பாதிக்கப்பட்டவனை சமாதானப்படுத்தி..சமரசம் செய்து வைக்கிற முயற்சியில் தான் இறங்குகிறோமே தவிர நியாயத்தின் பக்கம் நிற்பதே இல்லை..
..
பேசிவிட்டுப்போனவர் தெளிவானவர்
நாம் தான் தெளிவில்லாமல்..
அவர் அழுக்குமனிதர் இல்லை
உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் நாம் தான் அழுக்கானவர்கள்.. நிஜத்தில் நாமெல்லாம் ஏதோவொரு வகையில் சமசரம் செய்துக்கொள்கிறோம் .. இனம் மொழி சாதி மதம் நட்பு, தெரிந்தவன், பணக்காரன் என ஏதோ ஒன்றுக்காக சமாதானம் செய்து கொள்கிறோம் அல்லது நழுவுகிறோம் .. அரசியல் கொள்கை கோட்பாடு எல்லாம் சிலநேரம் அடிபட்டுபோய்விடுகிறது .. நேர்மையானவர்கள் எப்போதும் எதற்கும் அஞ்சுவதில்லை பின்மாறுவதில்லை ..
நம்மைவிட
தூய்மையானவராய் தெரிந்தார் அந்த நாடோடி ..
..
#மனிதர்கள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment