Thursday, July 25, 2019

திமுக..

சிலைத் திருட்டில் தொடர்புடையதாக இரு அமைச்சர்கள் பெயரை கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டு விவாதமாக்கியுள்ள சூழலில் எந்தவொரு #நடுநிலைஊடகங்களும் வாய் திறக்கவே இல்லை .. விசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு என அறிக்கை தாக்க செய்த நிலை ஊடகங்கள் என்ன செய்திருக்க வேண்டும் புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டிருக்கலாமே .. குறைந்தபட்ச செய்தியை மக்களிடையே வேகமாக கொண்டு சேர்த்திருக்கவேண்டாமா..? இதே திமுகவினரென்றால் விடிய விடிய கூவும் நடுநிலைகள் யாரும் வாய் திறக்கவே இல்லை இந்துக்களின் பாதுகாவலர்கள் இந்து தெய்வங்களின் உறவுகள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை குறைந்தபட்ச அறிக்கை கூட காணோமே.. ஏன் .. யாருக்காக வாய்மூடி மௌனிக்கிறார்கள்.. .. எதற்கெடுத்தாலும் திருட்டு திமுக என சொல்லி திரியும் அறிவிலிகள் எதற்காக எதுவும் பேசாமடைந்தையாக இருக்கிறார்கள் ..அரசியலில் எதிர்க்க முடியாமல் திமுகவை குறைச் சொல்ல வழியின்றி திருடர்கள் என பேசுவோர் இதுவரை திமுக ஏதேனும் வழக்கில் தண்டிக்கபட்டிருக்கிறதா .. ஆனால் உச்சநீதிமன்றத்தாலேயே இருமுறை தண்டிக்க/கண்டிக்கபட்ட ஜெயலலிதாவை தியாக உருவமாக சொல்லும் மனநிலையை பைத்தியகாரத்தனம் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது .. லோக்தள் அமைப்பு மக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஊழல்வாதி எடியூரப்பாவை எல்லாம் ஜனநாயகவாதியாக காட்டும் ஊடகங்கள் .. உண்மையில் வெளிப்படையாக சிறந்த ஜனநாயக மரபுகளை பேணி இயக்கம் நடத்தும் திமுகவை இன்னமும் சிலை குறைகூறி வருகின்றனர் .. ஊடகவியலாளர் போர்வையில் வன்மத்தை கக்குகின்றனர் .. திமுக பாஜக அரசிற்கு வெண்சாமரம் வீசுகிறதாம் .. அப்படி வீசவேண்டுமெனில் இந்நேரம் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ..நாடாளுமன்றத்தில் பாஜகவை வெளிநடப்பு செய்து ஆதரிப்பதாக சிலர் பதறுகிறார்கள் .. நூற்றாண்டு கண்ட இயக்க கொள்கையில் தேர்தல் அரசியலில் அறுபதாண்டுகளை கடந்த இயக்கம் எதையும் வெளிப்படையாக (ஆதரித்தாலும் எதிர்த்தாலும்) ஜனநாயக நெறிமுறைகளோடு செய்யும் ‍.. இப்போது கூட பார்பனர் ஏழைகளின் இடஒதுக்கீட்டை விவாதிக்க நோட்டீஸ் அளித்திருக்கிறது .. ஸ்டேட்பாங்க் கட்ஆப் விவகாரத்தில் நிதியமைச்சர் பதிலளிக்க கோருகிறது வெளியுறவு விவகாரத்தில் பிரதமரை அவைக்கு வரவேண்டுமென உரக்க சொல்கிறது .. இவையெல்லாம் அரசு செவிமடுக்காமல் போகலாம் ஆனால் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் .. .. திமுக மீது வன்மத்தோடு பார்பன பத்திரிக்கைகள் கதை கட்டுகின்றன .. திருமதி துர்கா திமுகவின் முடிவுகளை எடுப்பதாக எழுதிய ஜூனியர் விகடன் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறார் 10கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு .. ஆம் இதை முன்பே செய்திருக்கவேண்டும் திமுக மீது கலைஞர் மீது அவதூறு பரப்புவோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இன்றைக்கு எவரும் திமுகவை திருட்டு திமுக என சொல்லிவிட்டு போய்விட முடியாது ..விமர்சிப்பதற்கு ஒரு அளவு உண்டு உண்மையான செய்தி எனில் அதை வெளியிடவோ கண்டனம் செய்யவோ விமர்ச்சிக்கவோ செய்வதில் தவறில்லை .. ஆனால் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது திராவிட சிந்தையாளர்கள் மீது திமுக மீது பொய் பரப்புரையை செய்யும் ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் கவனம் .. .. எல்லாவற்றையும் பொறுத்தருளும் பேரருளாளன் கலைஞர் இல்லை .. இது ஸ்டாலின் திருப்பி அடிக்கும் காலம் இது.. ஸ்டாலின் மிகவும் மென்மையானவர் கவனமாக கையாளுங்கள் இல்லையெனில் ... நிலைகுலைந்து போவீர் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment