Monday, July 8, 2019

இஸ்லாமிய கிராமங்கள் மணமில்லை.. .. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முகல்லாக்களில்.. மெல்ல மெல்ல இஸ்லாமிய கலாச்சாரங்களை மக்கள் மறக்க தொடங்கியிருக்கிறார்கள்.. அதற்கவர்கள் தரும் காரணங்கள் இஸ்லாத்தில் அது இல்லை.. .. முன்பெல்லாம் நோன்பு காலங்களில் பக்கீர்மார்கள்..தப்ஸ் அடித்துக்கொண்டு தெருக்களில் நள்ளிரவில் வலம் வருவார்கள்.. இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது.. வெயில் காலங்களில்.. மார்க்க பிரசங்கம் ..தெருமுனை பிரசாரமாகவே நடக்கும்..நோன்பு கால இரவு நேரங்கள்.. பக்தியின்..? பரவசவமாய்.. இளம் சிறார்கள் கூட கண்விழித்த காலம் காணாமல் போய் கொண்டிருக்கிறது.. அரபியை..ஒத மதரஸாக்கள் எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக இருந்தது காலையில் கண் விழித்தவுடன் குர்ஆனை தோளில் சுமந்து மதரஸாக்களுக்கு ஓடியதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.. .. பக்கீர்மார்கள்.. தலைமுறை தலைமுறையாக இணைக்கமாக வாழ்ந்தார்கள் .. பக்கீர்களின் மகிமை மறந்து போனதாகவே கருதுகிறேன் .. சட்டென்று பக்கீராகிவிட முடியாது அதற்கென்று நிறைய சடங்குகள் உண்டு .. மரணித்தவரை போல கபனிட்டு அடக்கம் செய்வார்கள் சில நிமிடங்களுக்கு பிறகு அவரை வெளியே எடுத்து பிராத்தனைகள் செய்து தஸ்பிக் மாலை அணிவித்து அவரை பக்கீராக அறிவிப்பார்கள் இப்போதெல்லாம் நடைமுறை மாறி மெல்ல பொலிந்துபோனகதையானது. பக்கீர்கள் சேவை இந்த தலைமுறையோடு முடிவு வந்துவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது.. அதிவேக வாழ்வியல் முறைகள்.. கொஞ்சம் பழமையை..மறந்து போகிறது.... நம்பிக்கை சார்ந்த விடயத்தை மீறி.. வாழ்வியல் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளாக,.. தொன்றுதொட்டு வந்த நடைமுறைகளாக எண்ணாததும் காரணமாக இருக்கலாம்.. .. பக்கீர்மார்கள்.. அவர்கள் வழிமுறையை எதிர்ப்போர் சொல்லும் விடயம் இதெல்லாம் இஸ்லாம் சொல்லாதது.. அவர்களிடத்தில் நான் வைக்கும் ஒரே ஒரு கேள்வி.. நீங்கள் #சம்பூரணஇஸ்லாத்தில் இருக்கிறீர்களா.. இஸ்லாம் சொன்ன எதையும் மீறாமல்.. எதையும் விட்டுகொடுக்காமல் பரிபூரண இஸ்லாமியனாக வாழ்வதாக சொல்கிறீர்களா.. .. இஸ்லாம்.. தனக்கு விரும்புகிற ஒன்றை தன் சகோதரருக்கும் தன் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை முஸ்லிம் ஆக முடியாது.. .. நல்ல விடயங்கள்.. வாழ்வின் அர்த்தம் பொதிந்த வாழ்வியல் முறைகள்.. நல்லது கெட்டதை பிரித்துணரும் பெரும் சேதிகள் நிறைய உண்டு.. .. எல்லாருக்கும் பொருந்தும்.. தனிப்பட்ட மத,இன, மொழியினருக்காக இல்லாமல் ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டிற்கான வழிமுறைகளை.. செதுக்கி தந்திருக்கிறது.. .. வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ..நிறைய பொதிந்து கிடக்கிறது.. மதம் தாண்டி..இறைநம்பிக்கை அடுத்து மனித வாழ்வியல் சித்தாந்தங்களை, ஒழுக்கமான..உன்னதமான வழிகாட்டுதல்களை..வழிநெடுக விதைத்திருக்கிறது..இஸ்லாம்.. .. ஆனால்.. இஸ்லாத்தை மதமாக்கி...அதை வெறிகொண்டலையும் வீணர்கள் தவறாக பொருள் கொண்டதால்.. மார்க்கமிழந்து மதமானது.. .. நல்ல விடயங்களின்..பொற்குவியல் நாசகாரர்களின் கையில் என்றாகிவிட்டது.. ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. #இஸ்லாம் எத்தனை பிரிவுகள்..எத்தனை வேறுபாடுகள்.. யார் பெரியவன் என்பதில் தொடங்கி.. மற்றவரின் உரிமையை தரமறுத்து ஏன் பிடிவாதமாய் அவன் உரிமையை பிடுங்கும் அவலநிலை.. .. ஏற்கனவே சொன்னது போலவே முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமில்லை.. .. இஸ்லாம் மார்க்கம் நல்ல பாதை.. சிறந்த வழி.. எல்லாம் சரி.. ஆனால்... இங்கே மதமாய் காட்சியளிக்கிறது .. நிறைய விடயங்கள் விடைகாண முடியாமல்... படம்.. பக்கீர் லியாகத் அலி மற்றும் பக்கீர்மார்களோடு எடுத்துக்கொண்டது எல்லா கிளைகளிலும் வந்தமருவேன் நான்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment