Monday, July 15, 2019

இந்துத்துவா..

#இந்துத்துவா.. கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் திட்டம் என்னவென்பது பிடிப்படும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் .. கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்.. அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்.. அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் .. இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலம் வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை இஸ்லாமியர் மீதான குரோதத்தை வெளிப்படையாகவே காட்டுயிருக்கிறார்கள்.. ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு இருப்பதும் அதை இயக்கும் பார்ப்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்.. எந்தவொரு விவாதமாக இருந்தாலும் பாப்பனன் / அல்லது பார்பன அடிவருடி இல்லாமல் நடத்தபடுவதில்லை.. பாஜக ஊடகத்தை புறக்கணிப்பதாக சொல்வது ஏமாற்றுவேலை.. .. உணவு உடை கலாச்சாரம் பண்பாடு கல்வி மீதான தாக்குதல்கள் மிக சரியாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள் எதை உண்பதென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வேறுயாருமல்ல .. ஒரே பாடதிட்டம் ஒற்றை குறிக்கோள் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதெல்லாம் நாட்டின் ஒற்றுமையை சிதைத்துவிடும் .. எம் மீது திணிக்கபடும் சுமையாக கல்வி இருக்க கூடாது கல்வி எல்லோருக்குமானதாக எளிதில் கிடைக்கவேண்டுமே தவிர பணமுள்ளவன் உயர்கல்வி பெறட்டுமென்ற வறட்டு சித்தாந்தம் மிகபெரிய தோல்வியை தரும் .. எல்லாவற்றையும் பார்பனமயமாக்குதல் என்ற ஒரே குறிக்கோளை இந்துத்துவா என்ற பெயரில் திரித்து செயல்பட வைப்பதை நாம் உணர்ந்தால் புரியும்.. திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பன எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது .. முழுமூச்சாக எதிர்ப்பை ..மிக சத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்.. .. இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்.. இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் .. அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் .. தலித்மீதான வன்மத்தை தன் சகோதரன் மீதே இவன் கொட்டிதீர்ப்பான்.. மதமோதல் இந்த தமிழ் மண்ணில் நிகழ்த்த முடியாதென்றறிந்து சாதி ரீதியான பிரிவினையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக சில ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.. .. திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்.. தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. அதுமட்டுமல்ல.. இன்றைக்கு தி.மு.கழகத்தை தூக்கிபிடிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கு ஏற்பட்டிருக்கிறது.. எல்லா வழிகளிலும் சூழ்ச்சி வலைப்பின்னி தமிழகத்தை சூறையாட பார்க்கிறார்கள் தமிழரிகளின் சிறு தொழில்களை மார்வாடிகளிடம் அடகுவைத்தாக வேண்டிய சூழல் .. இயற்கை வளங்களை நம் கண்முன்னே கார்பரேட்டுகளுக்கு வழங்குகிறார்கள்.. எதிர்கருத்தை பேசுகிறவர்கள் மிரட்டபடுகிறார்கள்.. சிறையில் அடைக்கபடுகிறார்கள் உதிரிக்கட்சிகள் விலைபேசபடுகின்றன.. இதையெல்லாம் மீறி மக்களின் ஆதரவு திமுகவை நோக்கி திரும்புவது கண்டு .. ஊடகங்கள் மூலம் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு நடிகனுக்கு ஆதரவு பெருகுவதைப்போல பேசி திரிகிறார்கள்.. இவனில்லையெனில் அவன் என்று தொடர்ந்து அழுத்தம் தர பார்க்கிறார்கள்.. ஆட்சி செய்கிறவன் வாய் திறப்பதே இல்லை அதைவிட பாசிசத்தின் குரலாய் இவனே ஓங்கி ஒலிக்கிறான்.. நாடாளுமன்ற வெற்றி இன்னமும் இந்த மண்ணில் பாசிச சித்தாந்தம் வேகாதென்பதை உணர்த்தினாலும் அரச நிர்வாகம் நம் கையில் வரும் வரை கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது .. எதிரியை இனங்கண்டோம் துரோகிகளையும் தூர்த்துவாரி நல்ல விதைகளை விதைப்போம்,.. தமிழ்தேசியமென்ற பெயரில் காவிகள் கைகளில் சிக்கி திரிவோரை புறக்கணிப்போம் .. எதிரிகள் பல்வேறு முனைகளில் தாக்குதலை தருகிறார்கள் .. இனம் மொழி கலை பண்பாடு என பல்வேறு தளங்களில் ஊடுறுவி நம்மை நிலைகுலைய செய்ய முயற்சிக்கிறார்கள் .. அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு பேராசான் தந்த அறிவெனும் ஆயுதம்கொண்டு பகை முடிப்போம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment