Friday, July 26, 2019

#அமைதி வேண்டும்.. சிறிதுநேரம் .. சில்லென்று காற்றை.. நுகர்தல்..வேண்டும் உள்ளமும் உணர்வும்.. ஒரே நிலையில் வேண்டும் பகட்டாய் பாசம் பேசும்.. பச்சோந்திதனம் மாறவேண்டும் .. இரவின் நிழலில்.. இதமான பொழுதில்.. இன்பம் தரும்.. எல்லாம் வேண்டும் கண்ணின் பார்வை நேர்பட வேண்டும் கயமை மாறி #கதிரவன் ஒளிப்போல் நெஞ்சில் .. வெளிச்சம் வேண்டும்.. பகைவர் தன்னை நான் அறிதல் வேண்டும்.. நான் நெஞ்சில் பகை கொண்டு அழையும் நிலை.. முற்றிலுமாய்.. மாற வேண்டும்.. பொய் ,புரட்டு, பித்தலாட்டம், சூழ்ச்சி, சுயநலம், இல்லா நிலை இனியாவது வேண்டும்.. பசித்தவர் கண்டால் மனமிழகி.. ஈகும் நிலை.. எல்லா நாளும் வேண்டும்.. தினந்தோறும் புதிய அறிவை பெறும் புதிய..சிந்தனை.. பூக்க வேண்டும .. புதிது புதிதாய் பூக்க வேண்டும் என்னை நானே எடைபோட. இடையிடையே சின்னச்சின்ன தோல்வி ..வேண்டும். #நான் எனும் அகந்தை மாறி.. நற்குணம் வேண்டும்.. உள்ளமும் உணர்வும் .. ஒரே நிலையெனும்... மன.. அமைதி வேண்டும்.. இவையெல்லாம் . #இனியாவது.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment