Tuesday, July 16, 2019

திராவிடம்

பெரியாரும் , திராவிடமும் இன்று மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.. என்கிறார் மானமிகு கனிமொழி.. இந்து இந்தியா மற்றும் இந்தி இந்தியை என்ற நோக்கத்திற்காக மட்டுமே இன்று ஒரு அரசும் , அமைப்பும் செயல்படுகிறது. அவர்களுக்கு கருத்துக்களம் காணத் தெரியாது , விவாதத்தை முன்னெடுத்து செல்லவும் தெரியாது , முன்னால் வந்து பேசவும் தெளிவாக தெரியாது. ஏனெனில் அவர்களிடம் எதுவும் கிடையாது என்பதே உண்மையாகும். பத்திரிகையாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். நான் உனக்கு வேலை தருகிறேன். பணம் தருகிறேன். நான் கூறுவதை மட்டுமே நீங்கள் எழுத வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது ‌ஏமெர்ஜென்ஸியை( அவசரநிலை) விட இது பலமடங்கு ஆபத்தானது‌ . இவர்கள் இன்று அமல்படுத்த நினைக்கும் சித்தாந்தம் உயிருக்கு உலை வைத்து விடும். ஆகவே பெரியாரின் கருத்தியல் கண்டிப்பாக தேவைப்படுகிறது .. ஆம் விவாததிற்கு வந்தால் கத்தி கூச்சலிட்டு விவாதபொருளையே மாற்றிவிடுகிறார்கள்.. எந்தவிதமான ஆதாரமும் இன்றி பேசுகிறார்கள் காரணம் கேட்டால் பதில் இல்லை தொடர்ந்து பாஜகவிலிருந்தோ அல்லது சமூகஆர்வலரோ..? ஒருவர் இல்லாமல் எந்த விவாத மேடையும் இல்லை அறிவுகொண்டு நல்ல எதிர் கருத்தை கூற கூட அவர்களிடம் சரக்கில்லை.. மதம் பேசி திரிகிறவர்களிடம் சங்கிகளிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.. .. ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே மதமென்பது சாத்தியமில்லாத ஒன்றென்று அறிவார்கள் அவர்கள் நோக்கம் ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருந்தால் அவர்கள் செய்கிற தகிடுதித்தம் பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.. பாஜக ஆட்சிக்குவந்த பிறகு குறிப்பாக பார்பனர்கள் எல்லா முக்கிய பதவிகளுக்கும் சத்தமில்லாமல் வந்துவிட்டார்கள் அவர்களை கீழிறக்க ஐம்பதாண்டுகள் தேவைபடும்.. அவர்கள் எதிர்ப்பார்பது அதுதான் .. அவர்களை நக்கி பிழைக்கிற சூத்திரர்கள் இதையெல்லாம் உணர்வதற்குள் அவனின் ஒருதலைமுறை பழிவாங்கபட்டிருக்கும்.. மிக ஆபத்தானவர்கள் அவர்களிடமுள்ள இன உணர்வோ ஒற்றுமையோ நம்மவர்களிடம் இல்லை இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாகி இருப்பார்கள் .. .. கனிமொழி சொன்னதைப்போல இந்தியாவிற்கே இன்று திராவிட சித்தாந்தம் தேவைபடுகிறது .. சமூக ஒற்றுமை .. யாரும் தாழ்வென்று எண்ணாத நிலை.. சம நீதி அதுவும் சமூகநீதியாய் ஒடுக்கபட்ட மக்களுக்குரிய அங்கீகாரத்தோடு அவர்களும் இந்த தேசத்தின் எல்லோரையும் போல வாழ .. கல்வியில் வேலைவாய்ப்பில்லை, பெண்ணுரிமையில் .. தமிழகத்தைப்போல இந்தியா முழுவதும் பெற்றிட திராவிடம் தேவைபடுகிறது.. சுயமரியாதையோடு வாழ.. எதையும் அறிவுக்கொண்ட பார்வையில் .. ஏற்றதாழ்வற்ற சாதி சமயமற்ற மதவெறியற்ற நேரான பாதையில். நமக்கான உரிமையை பெற்றிட உயர்பதவிகளை ஒரு சில சமூகமே அனுபவிப்பதை மாற்றி அதிலும் எமக்கான இடஒதுக்கீடை பெற.. நீதிமன்றங்களில் மநுநீதியற்ற மனித நீதியை (இயற்கையான நீதி) பெற்றிட திராவிடம் தேவை .. .. திரு.சுப்ரமணிய சுவாமி வைகோ மாநிலங்களவைக்கு வருவதை ஆபத்தென்கிறார் அவரின் பதட்டம் உணர்த்துவது இதுதான் இதுவரை சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளைகளை .. தலையாட்டிகளை வைத்து பார்பன நலனுக்கெது தேவையோ அதை சாதித்தோம் இனி அது நடக்காதென்பதை தான் சுவாமியின் பேச்சு உணர்த்துகிறது .. நாடாளுமன்றத்தை திணறடிக்க முடிகிறது .. தபால் துறை தேர்வை ரத்து செய்யமுடிகிறது .. நிர்மலாவிற்கு பாடம் நடத்த முடிகிறது காரணம் பெரியாரியலை கொண்டு நடப்பவர்கள் அறிவின் ஒளியில் எதையும் அலசுபபவர்கள் .. அநீதி கண்டால் எம் மண்ணிற்கு தீங்கென்றால் ..மொழிக்கு இழிவென்றால் பெரும் பாய்ச்சலோடு வருவார்கள் .. பெரியாரின் பெயரன்கள் அண்ணாவின் தம்பிகள் கலைஞரின் உடன்பிறப்புகள் .. .. ஆபத்தான காலகட்டத்தில் அதிகாரம் இருக்கிறதென்ற தெம்பில் மனிதகறியை கேட்கிற மதவெறி கூட்டத்தை.. தாழ்த்தபட்டவரை.. நிர்வாணமாக்கிய தெருவில் நிறுத்துகிற கொடுஞ்செயலை... பணக்காரனுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிற, மக்களை சூழ்ச்சியால் பிரித்து பகையோடு நிறுத்தியிருக்க கேடுகெட்ட கயமையை , பொய் சொல்லி ஒரு அரசை நடத்தலாம் என்ற போக்கிரித்தனத்தை வீழ்த்திட மாட்டுக்கு தரும் முக்கியத்துவம் மனிதனுக்கில்லையென்ற ..பிஞ்சு உயிர்களை காவு கேட்கிற காவிகளை விரட்டிட மத,சமய சாதியற்ற நிலையை அடைய இன்றைய தேவை பெரியாரின் கருத்தியல் தான்.. .. இன்றைக்கு.. இந்தியா முழுவதும் பெரியாரை தேடுகிறார்கள் .. கிழவன் தொலைநோக்குபார்வை தமிழகத்தில் செய்துகாட்டிய பரிணாம வளர்ச்சி .. விழிப்புணர்வு, மதம் கடந்த மனிதநேயம்.. எப்போதெல்லாம் மதவெறியும் சாதிவெறியும் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் கிழவனின் #கைத்தடி பதில் சொல்கிறது.. இன்னமும் இங்கே ஈரமிருக்கிறதென்று பறைசாற்றுகிறது.. ஆம்.. இந்தியாவிற்கு இன்றைய தேவை #பெரியாரும்_திராவிடமும்தான் … .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment