Monday, July 22, 2019

அத்தி வரதர்

வரதர்.. அத்தி வரதர் பார்பனர்களின் இன்றைய மார்க்கெட்டிங் ஆனால் பாருங்கள் வேறு யாராலும் இந்தளவு அசிங்கபடுத்த முடியாது அத்திவரதர் என்னை மீண்டும் புதைக்காதீர்கள் என்று ஜீயரின் கனவில் வந்து சொன்னாராம் .. திருடர்களுக்கு பயந்து தான் புதைத்து வைத்திருந்தோம் என்று வேறு சொல்லி மொத்த வரதரின் இமேஜையும் டேமேஜ் பண்ணிட்டாங்க.. .. நாற்பதாண்டுகளுக்கு முன்பு அதாவது 1979 ல் பார்பனர்களின் செல்லபிள்ளை தான் ஆட்சிக்கு வந்தது இதிலிருந்து கடவுள்..? காணாமல் போகும் வழி நமக்கு பிடிபடும் தன்னை தானே காப்பாற்ற வக்கில்லாதவரிடம் ஏன் இறைஞ்சவேண்டும் .. தெய்வ நம்பிக்கை என்பது அவரவர் விரும்பம் ஏதோ ஒரு சக்தி நம்மை காக்கிறதென்று நம்புகிற பாமரனை அது இதுதான் என வியாபாரம் செய்யும் பார்பு கூட்டம் பிழைக்க தெரிந்தவர்களாய் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள் .. வரதரை காண விஐபி டிக்கெட் பலகோடிகளுக்கு அச்சடித்திருக்கிறார்கள் இதற்கெல்லாம் வருமானவரி GST ...கிடையாது பகிரங்க கொள்ளை நடக்கிறதென சில பத்திரிக்கைகள் எழுதியும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை .. சிலர் இன்னும் சிலகாலம் வைத்திருந்தால் காஞ்சி சுற்றியுள்ள ஊர்கள் வளம் பெறும் பொருளாதாரத்தில் மேம்படும் வணிகம் பெருகும் என சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. திருப்பதிக்கே சவாலாக வரலாமென்றெல்லாம் கதைக்க தொடங்கியிருக்கிறார்கள் .. அலைமோதும் கூட்டம் நல்ல வரவாக அவர்களுக்கு கிடைக்கிறது .. பாவம் சாதாரண பக்தன் வரிசையில் நின்று மூச்சிழக்கிறான் ..அதெல்லாம் தண்ணில் கிடந்த வரதருக்கு தெரியாது .. .. பார்பனர்கள் கையில் கோவில்கள் இருந்தால் சிலைகள் காணாமல் போகும் அறநிலையதுறையிடம் இருப்பதால் வரதர் திருட்டுபோகமாட்டார் எனவே புதைக்க தேவையில்லையென வரதரை வைத்து காசுபார்த்த கூட்டம் சொல்கிறது .. உண்மையில் பக்தியோ தெய்வமோ அல்ல மரகாச்சி பொம்மை .. அதை வைத்து பிழைக்கலாமென்ற எண்ணம் பாருங்கள் அதில் தான் பார்பனர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் .. திருகச்சி நம்பியோடு உரையாடிய வரதன் (கலைஞரின் ராமானுஜர்_மதத்தில் புரட்சி செய்த மகான்) ஏன் இன்று என்னை வைத்து பிழைப்பு நடத்தாதீர்களென சொல்லவில்லை .. தெய்வ நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல ஆனால் அதை வைத்து மக்களை ஏமாற்றுகிற செயல் அயோக்கியத்தனம்.. தன்னையே திருடர்களிடமிருந்து காத்துகொள்ள முடியாதவரென அவர்களே சொல்கிறார்கள் .. காஞ்சியில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்க்கும் போது .. #ஆசான்_கலைஞர் அப்போதே சொன்னது தான் ஞாபகம் வருகிறது "கோவில் கூடாதென்பதல்ல.. கோவில் கொடியவரின் கூடாரமாக மாற கூடாது என்பதுதான்" வரதர் வியாபாரம் நல்ல மவுசோடு இருக்கும் போதே புதைத்தால் நல்லது மீண்டும் தேவைபடும் போது தோண்டி எடுத்து கல்லா கட்டலாம் ..இல்லையெனில் யாரும் சீண்டாமல் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment