Monday, July 29, 2019

பொருளாதார இடஒதுக்கீடு மோசடி

#10PercentFraudReservation .. இனி மெல்ல மெல்ல அழிந்துபோவோம்.. நம் உரிமைகள் நாமே காவுகொடுக்கிறோம் .. சில ஆயிரங்களுக்கு ஆசைபட்டு வாக்குகளை விற்ற நாம் .. பாட்டனும் அப்பனும் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளைகள் மீது திணிக்கிறோம்.. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் கட்டி காத்த சமூக நீதி கண் முன்னே சவக்குழியில் .. உயர்ஜாதி ஏழை என்ற தகுதியில் பார்பன கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போகிறது .. நாம் வேடிக்கை மனிதராய் நிற்கிறோம் .. நாம் தமிழ் தேசியம் பேசியும் .. சாதி பெருமை பேசியும் உரிமைகளை இழப்பதே அறியாமல் .. என்ன கொடுமை .. .. இனி ஐம்பதாண்டு பின்னோட்டு செல்வோம் பார்பன அடிமைகளாய் திரிவோம் பாஜக என்பதே பார்பன ஜனதாவிற்கானது .. அவர்கள் நலம் மட்டுமே முக்கியமாய் கொண்டு இயங்கும் .. தேசபக்தி ஜெய்ராம் மாட்டை புனிதமாக கருதும் மடத்தனம் இவையெல்லாம் சொல்லி நம்மை அடியாட்களாக வலம்வரவிட்டு அவர்கள் அமைதியாய் அரசு பதவிகளில் அமர்கிறார்கள் .. ஜெய்ராம் சொல்ல சொல்லி மனித ரத்தத்தை கையில் ஏந்தி ராம் ராம் என கொக்கரிப்போம் .. நம்மை விட தாழ்ந்தவனை அம்மணமாக்கி அடித்து உதைத்து.. நம் உரிமைகளை கல்வியை வேலைவாய்ப்பை இழந்து அம்மணமாவோம் ..உண்மையில் பார்பனர்களை பாராட்டதான் வேண்டும் நம்மில் ஏற்றதாழ்வை சொல்லி கலகம் செய்து அடியாட்களாக்கி மதவெறியை சாதிவெறியை தூண்டி நம் மக்களை ரௌடிகளாய் அடியாட்களாய் கலககாரனாய் செய்துவிட்டு. நோகாமல் குறைந்த மதிப்பெண் பெற்றாலே போதும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம் என்ற மிக அருமையாக திட்டம்தீட்டி அதை நம்மை கொண்டே செயல்படுத்தி வென்றிருக்கிறார்கள் .. .. பொருளாதார இடஒதுக்கீடென்பதே ஒருவகையில் ஏமாற்று.. அயோக்கியத்தனம் அதிலும் உயர்ஜாதி வருமான உச்சநரம்பு 8 லட்சம் ஐந்து ஏக்கர் மெட்ரோ நகரில் 1000 சதுர அடி .. இவையெல்லாம் வைத்திருப்பவர்கள் பாவம் ஏழைகள் .. ஆனால் மற்றவர்கள் ஐந்து லட்சம் வருமானமென்றால் பணக்காரர்கள் .. வீட்டில் ஏ.சி இருந்தால் ரேசன் கிடையாது எல்லாவற்றையும் கடந்து போவோம் .. நமக்கு அத்திவரதர் தரிசனம் கிடைத்தால் போதும்.. அதை கூட நம்மிடமிருப்பதை கொள்ளையடிக்க என்பதை கூட அறியவில்லை .. .. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை .. நமக்கு விழிப்புணர்வு வராவிட்டால் எதை சொன்னாலும் தலையாட்டுகிற எடப்பாடிகளே போதுமென்றால் ஏன் என்று கேள்வி எழுப்பி போராடாமல் போனால் நம் குழந்தைகள் கல் உடைக்கவும் மாடுமேய்க்கவும் அப்பன் தொழிலை செய்ய வேண்டிய நிலை தான் வரும் .. யாரை தேர்ந்தெடுப்பது என்று அறிந்திருக்கவேண்டும் அதை விட யாரை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டுமென்ற அறிவு வேண்டும் .. இல்லையெனில் அரும்பாடுபட்ட கட்டிகாத்த சமூகநீதி சவக்குழிக்குள் போகும் எச்சரிக்கை .. .. ஆலஞ்சியார்

Sunday, July 28, 2019

அரசியல் பிழைகள்

வாழும் காலத்திலேயே ராமதாஸை புரிந்துக்கொண்டு பெருமைபடுத்துங்கள் அன்புமணி ராமதாஸ் .. கூடவே பெரியார் இருந்த போது உதாசீன படுத்திவிட்டு பின்பு புகழ்கிறோமே அதுபோல் அல்லாமல் வாழ்கிற போதே போற்றுங்கள் என்கிறார் .. அப்பன் மீது மகனுக்கிருக்கும் அன்பு அக்கறை நமக்கு புரிகிறது ஆனால் பின் தொடரதக்கவரா ராமதாஸ் .. .. நெஞ்சம் முழுக்க சாதீய வெறியோடு தன் நம்பி வந்தவர்களை நடாற்றில் விட்டதைப்போல எல்லா பதவிகளும் தன் குடும்பத்தை தன் ஜாதி உறவையோ போய் சேரவேண்டுமென எண்ணுகிறவர் .. தன் சமூகத்து இளைஞர்களை, அடியாட்களைப்போல பயன்படுத்தி குடிசைகளை கொளுத்தும் செயலுக்கு பயன்படுத்தி வழிகேட்டில் நிறுத்தியிருக்கிறவரை பெரியாரோடு ஒப்பீடுடென்பதே ஒருவகையில் அயோக்கியத்தனம் யார் பெரியார் தெரியுமா .. எனக்கு மதபற்றோ சாதிப்பற்றோ மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடபற்றுதான் என்றவரோ சாதியத்தை சுமந்து திரியும் யோக்கியரை ஒப்பிட்டு பேசுவதே தவறானது .. .. ராமதாஸ் சொல் சுத்தம் இல்லாதவர் அரசியலில் ஒருவகையில் சாதீய தீயை பற்றவைத்தவர் .. தலித் அல்லாத சமுதாய மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டு தோல்வி கண்டவர் .. சமூக மக்களை இடஒதுக்கீட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென போராடியவர் கடைசியில் திமுக ஆட்சியில் அது நடைமுறையாக்கபட்டதும் .. வேறுவழியின்றி அரசியலில் தன் சாதி மக்களை மட்டுமே நம்பி வென்றுவிடலாமென எண்ணி கடைசியில் உள்ளதும் போய் நிர்கதியாய் நிற்பவரை "உதாரணபுருஷனாக " எடுத்துக்கொள்ள முடியுமா என்ன.? .. திராவிடத்தை வீழ்த்துவோமென சொல்லி கடைசியில் திராவிட பேர் சொல்லி திரிவோரிடம் நக்கி பிழைக்கிற நிலைக்கு வந்தது யாரால் .. தன் நிலை அறியாது தனது சக்தி புரியாது தானே எல்லாம் தெரிந்தவர் .. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் தமிழ்நாட்டில் நான் மட்டுமே ஒழுக்கசீலன் அனைத்தும் அறிந்த அறிவாளியென பேசி மற்றவர்களை எள்ளிநகையாடி கடைசியில் அவர்கள் காலடியில் அப்பனும் மகனும் விழுந்த கதை நாடறியும் .. சுயமரியாதை இழந்து மக்களால் வெறுத்து ஒதுக்கபட்டு கடைசியில் யாரை ஏசினோமோ அவர்கள் தயவில் காலத்தை கழிக்கலாமென்று மாநிலங்களவை உறுப்பினரானதை கேட்டு நாடு சிரிக்கிறது .. .. இவர்கள் பின்பற்றதக்கவர்கள் அல்ல அரசியல் பிணிகள் வருங்கால இளைஞர்கள் புறந்தள்ள வேண்டிய அரசியல் பிழைகள் .. சுயநலத்திற்காக சமூகத்தையே காவு கேட்பவர்கள் .. வெறுக்கதக்க செயல்பாடுகளால் தமிழக அரசியலில் தரந்தாழ்த்து போனவர்கள் .. தானெனும் அகந்தையும் தானே சிறந்தவனென்ற நினைப்பும்,தானே அனைத்திற்கும் தகுதியானவன் என்ற எண்ணமும்,கொண்டவர்கள் வீழ்ந்துபோவார்கள் என்பதற்கு இவர்களே சாட்சி.. .. புதிதாய் தமிழக அரசியலுக்கு வரும் இளைஞர்கள் எப்படி செயல்பட கூடாதென்பதற்கு இவர்களே சாட்சியம் வகிக்கிறார்கள் .. சுருங்க சொன்னால் பின்பற்ற கூடாத #அரசியல்_பிழைகள் .. ஆலஞ்சியார்

Saturday, July 27, 2019

கலைஞர்

#கலைஞர்_திமுகதலைவர்51…… ஒரு தனிமனிதனின் சாதனைகள். உலகில் எவருக்குமே கிட்டாத இனி கிடைக்காத சாதனைகள் கலைஞருக்கு மட்டும் எப்படி கைவந்தது.. பொதுவாழ்வில் வைரவிழா.. சட்டமன்ற உறுப்பினராய் மணிவிழா கட்சித்தலைவராய் பொன்விழா.. தொடர்ந்து தேர்ந்தெடுக்கபட்ட வரலாறு.. கலை இலக்கியம் பேச்சாற்றல் எழுத்து .. திரைக்கலை.. நாடகம் .. தொட்டதெல்லாம் தனிமுத்திரையோடு வெற்றி.. அரசியலில் ஆழ்ந்த தெளிந்த துணிவாக விரைவான முடிவுகள் ..செயல்படுத்திய திட்டங்கள் காலங்கடந்தும் இந்திய துணைக்கண்டத்திற்கே வழி காட்டுகிறதே .. எதிர்த்தவனும் .. இவரை கண்டால் இசைந்ததாய் தான் வரலாறு .. இவரை சுற்றியே தமிழக அரசியல் அறுபதாண்டாய் இயங்கியதே.. இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் இதுவரை எவரும் அரசியல் செய்ததில்லை.. இனியும் முடியாதே .. அப்பப்பா.. இவரை தாக்கியவர்கள் தளர்ந்துபோனதாக தான வரலாறு.. புதிதாய் அரசியலுக்கு வருகிறவர்கள் இவரின் அரசியலின் அரிச்சுவடியை தான் முதலில் கற்க வேண்டும் .. .. எப்படி சாத்தியமாயிற்று கடும் உழைப்பால் விடா முயற்சியால் வந்தது.. இனி முடிந்தது திமுக என கொட்டை எழுத்துக்களில் தலையங்கம் போட்டு முதல் நாள் மகிழ்வான் மறுநாள் மக்களுக்கான போராட்டம் உடன்பிறப்பிற்கு கடிதமென தட்டியெழுப்பி.. புதிய கரைவேட்டியை கட்டிக்கொண்டு கடைத்தெருவில் திமுககாரன் நிற்கவைத்துவிடுவார் .. அரசியலை அறிந்த ஞானி.. .. மரணம் அழகு.. அது எல்லோருக்கும் வரும் அதிலும் புகழோடு வழ்ந்தவனுக்கு .. பேரின்பத்தோடு அணைத்துக்கொள்ளும் .. அவன் இறப்பதில்லை மாறாய் காலமாய் நம்மோடு நிலைத்து நிற்பான்.. கோழைக்குதானடா மரணம்.. வீரனுக்கு விவேகிக்கு நாற்றமெடுத்த சமுதாயத்தை நன்னீராய் மாற்றியவனுக்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொன்றை நல்லதாய் அவன் வாழ்விற்கு விளக்கேற்ற செய்தவனுக்கு.. பசி போக்கியவனுக்கு.. எல்லோருக்கும் கல்வியென்ற இலட்சியவெற்றியை கண்டவனுக்கு.. இந்த சமுதாயத்தில் அழுக்கை அள்ளுகிறவனின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை தந்து உயர்த்திவிட்டவனுக்கு .. ஒவ்வொரு செய்கையையும் இந்த சமுதாயம் மட்டுமல்லாது.. உலகமே ஏற்கும் திட்டமாய் செய்த தொலைநோக்கிற்கு.. வரலாறாய் வாழ்ந்தவனுக்கு ...மரணமில்லை கோழைகளே.. காலம் எப்போதும் சொல்லும் கலைஞரே தமிழகத்தின் சுழற்சி.. அந்த சுழற்சியின் அச்சாணி.. ஒன்று தெரியுமா இவரை கண்டு படிக்காமல் இவரை தந்ததை சுவைக்காமல்.. இவரின் காலடிச்சுவட்டை பின்பற்றாமல்.. இவர் செய்துவிட்டு போன சொல்லிவிட்டு போனதை பின்பற்றாமல் யாருமே இயங்கவே முடியாதென்ற சூழலை உருவாக்கியவருக்கு மரணமில்லை.. கலைஞரே தமிழகத்தின் வரலாறு .. .. ஆனாலும் இவரின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது ..ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஸில் படித்தான் என கேட்டு அலறவிட முடிந்தது .. ஒரே வரியில் ஒற்றை கடிதத்தில் உடன்பிறப்பே என்ற விளியில்..இந்திய ஒன்றிய அரசையே அலறவிட முட்ந்தது.. எப்போது கலைஞர் மறைவாரென காத்திருந்த பகை .. ஒவ்வோன்றாய் கலைஞர் பெற்று தந்ததை சூறையாட வருகிறது கல்வியில் வேலைவாய்ப்பில் நம்மை வீழ்த்துகிறது இந்த ஒற்றை மனிதனின் இழப்பு நமக்கு நிறைய உணர்த்துகிறது .. வீணாய் போனவர்கள் அடிமடையர்களை முட்டாள்களின் அடிமைகளின் கையில் அரசை தந்துவிட்டு மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் தமிழகம் சொல்லண்ணாதுயரில் .. ஆனாலும் நம்பிக்கையாய் தளபதி .. அறிந்துக்கொள்ளுங்கள் மூடர்களே.. இந்தியாவின் வழிகாட்டி.. அரசியல் பல்கலைகழகம்.. வாழ்வியல் அற்புதம் தொண்டர்களின் மூச்சு.. கலைஞரின் வழியில் வென்றெடுப்போம் .. கலைஞர் தமிழனின் வரம். தமிழ் செய்த தவம்.. இனத்தின் முத்து மானமுள்ள தமிழரின் சொத்து.. #எம்இனத்தின்_பெருவுடைப்பெருவேந்தன் .. ஆலஞ்சியார்

Friday, July 26, 2019

#அமைதி வேண்டும்.. சிறிதுநேரம் .. சில்லென்று காற்றை.. நுகர்தல்..வேண்டும் உள்ளமும் உணர்வும்.. ஒரே நிலையில் வேண்டும் பகட்டாய் பாசம் பேசும்.. பச்சோந்திதனம் மாறவேண்டும் .. இரவின் நிழலில்.. இதமான பொழுதில்.. இன்பம் தரும்.. எல்லாம் வேண்டும் கண்ணின் பார்வை நேர்பட வேண்டும் கயமை மாறி #கதிரவன் ஒளிப்போல் நெஞ்சில் .. வெளிச்சம் வேண்டும்.. பகைவர் தன்னை நான் அறிதல் வேண்டும்.. நான் நெஞ்சில் பகை கொண்டு அழையும் நிலை.. முற்றிலுமாய்.. மாற வேண்டும்.. பொய் ,புரட்டு, பித்தலாட்டம், சூழ்ச்சி, சுயநலம், இல்லா நிலை இனியாவது வேண்டும்.. பசித்தவர் கண்டால் மனமிழகி.. ஈகும் நிலை.. எல்லா நாளும் வேண்டும்.. தினந்தோறும் புதிய அறிவை பெறும் புதிய..சிந்தனை.. பூக்க வேண்டும .. புதிது புதிதாய் பூக்க வேண்டும் என்னை நானே எடைபோட. இடையிடையே சின்னச்சின்ன தோல்வி ..வேண்டும். #நான் எனும் அகந்தை மாறி.. நற்குணம் வேண்டும்.. உள்ளமும் உணர்வும் .. ஒரே நிலையெனும்... மன.. அமைதி வேண்டும்.. இவையெல்லாம் . #இனியாவது.. .. ஆலஞ்சியார்

Thursday, July 25, 2019

திமுக..

சிலைத் திருட்டில் தொடர்புடையதாக இரு அமைச்சர்கள் பெயரை கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டு விவாதமாக்கியுள்ள சூழலில் எந்தவொரு #நடுநிலைஊடகங்களும் வாய் திறக்கவே இல்லை .. விசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு என அறிக்கை தாக்க செய்த நிலை ஊடகங்கள் என்ன செய்திருக்க வேண்டும் புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டிருக்கலாமே .. குறைந்தபட்ச செய்தியை மக்களிடையே வேகமாக கொண்டு சேர்த்திருக்கவேண்டாமா..? இதே திமுகவினரென்றால் விடிய விடிய கூவும் நடுநிலைகள் யாரும் வாய் திறக்கவே இல்லை இந்துக்களின் பாதுகாவலர்கள் இந்து தெய்வங்களின் உறவுகள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை குறைந்தபட்ச அறிக்கை கூட காணோமே.. ஏன் .. யாருக்காக வாய்மூடி மௌனிக்கிறார்கள்.. .. எதற்கெடுத்தாலும் திருட்டு திமுக என சொல்லி திரியும் அறிவிலிகள் எதற்காக எதுவும் பேசாமடைந்தையாக இருக்கிறார்கள் ..அரசியலில் எதிர்க்க முடியாமல் திமுகவை குறைச் சொல்ல வழியின்றி திருடர்கள் என பேசுவோர் இதுவரை திமுக ஏதேனும் வழக்கில் தண்டிக்கபட்டிருக்கிறதா .. ஆனால் உச்சநீதிமன்றத்தாலேயே இருமுறை தண்டிக்க/கண்டிக்கபட்ட ஜெயலலிதாவை தியாக உருவமாக சொல்லும் மனநிலையை பைத்தியகாரத்தனம் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது .. லோக்தள் அமைப்பு மக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஊழல்வாதி எடியூரப்பாவை எல்லாம் ஜனநாயகவாதியாக காட்டும் ஊடகங்கள் .. உண்மையில் வெளிப்படையாக சிறந்த ஜனநாயக மரபுகளை பேணி இயக்கம் நடத்தும் திமுகவை இன்னமும் சிலை குறைகூறி வருகின்றனர் .. ஊடகவியலாளர் போர்வையில் வன்மத்தை கக்குகின்றனர் .. திமுக பாஜக அரசிற்கு வெண்சாமரம் வீசுகிறதாம் .. அப்படி வீசவேண்டுமெனில் இந்நேரம் திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ..நாடாளுமன்றத்தில் பாஜகவை வெளிநடப்பு செய்து ஆதரிப்பதாக சிலர் பதறுகிறார்கள் .. நூற்றாண்டு கண்ட இயக்க கொள்கையில் தேர்தல் அரசியலில் அறுபதாண்டுகளை கடந்த இயக்கம் எதையும் வெளிப்படையாக (ஆதரித்தாலும் எதிர்த்தாலும்) ஜனநாயக நெறிமுறைகளோடு செய்யும் ‍.. இப்போது கூட பார்பனர் ஏழைகளின் இடஒதுக்கீட்டை விவாதிக்க நோட்டீஸ் அளித்திருக்கிறது .. ஸ்டேட்பாங்க் கட்ஆப் விவகாரத்தில் நிதியமைச்சர் பதிலளிக்க கோருகிறது வெளியுறவு விவகாரத்தில் பிரதமரை அவைக்கு வரவேண்டுமென உரக்க சொல்கிறது .. இவையெல்லாம் அரசு செவிமடுக்காமல் போகலாம் ஆனால் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் .. .. திமுக மீது வன்மத்தோடு பார்பன பத்திரிக்கைகள் கதை கட்டுகின்றன .. திருமதி துர்கா திமுகவின் முடிவுகளை எடுப்பதாக எழுதிய ஜூனியர் விகடன் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறார் 10கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு .. ஆம் இதை முன்பே செய்திருக்கவேண்டும் திமுக மீது கலைஞர் மீது அவதூறு பரப்புவோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இன்றைக்கு எவரும் திமுகவை திருட்டு திமுக என சொல்லிவிட்டு போய்விட முடியாது ..விமர்சிப்பதற்கு ஒரு அளவு உண்டு உண்மையான செய்தி எனில் அதை வெளியிடவோ கண்டனம் செய்யவோ விமர்ச்சிக்கவோ செய்வதில் தவறில்லை .. ஆனால் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது திராவிட சிந்தையாளர்கள் மீது திமுக மீது பொய் பரப்புரையை செய்யும் ஊடகங்களும் தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் கவனம் .. .. எல்லாவற்றையும் பொறுத்தருளும் பேரருளாளன் கலைஞர் இல்லை .. இது ஸ்டாலின் திருப்பி அடிக்கும் காலம் இது.. ஸ்டாலின் மிகவும் மென்மையானவர் கவனமாக கையாளுங்கள் இல்லையெனில் ... நிலைகுலைந்து போவீர் .. ஆலஞ்சியார்

Tuesday, July 23, 2019

நவநாகரீக வாழ்க்கை

இப்போதெல்லாம் நவீன நாகரீகம் என்ற பெயரில் நாசூக்காக பேசுவது பெருமையாகிவிட்டது சிரமபட்டு நல்ல சொற்களை தேடி கதைக்கிறோம் இயல்பாக பேசும் வழக்கம் நம்மிடையே காணமல் போய்விட்டது பேச்சில் நையாண்டி நக்கல் இதெல்லாம் இல்லை ஒருவித சோக்குத்தனம் சொற்களில் வந்து மெய்யிழந்து நிற்கிறோம் .. கேலி செய்வதில் கூட நாகரீகம் பார்க்கிறோம் எங்கே கோபித்து கொள்வாரோ என அஞ்சிகிறோம் உறவுமுறை சொல்லி அழைப்பதோ .. மண்ணின் மணமாறாமல் கதைப்பதோ இல்லை .. அதிகம் படித்துவிட்ட நினைப்பு அல்லது அதிகம் அறிந்தவராக நம்மை காட்டிக்கொள்ள பொய் முகமூடி தரிக்கிறோம் .... .. கிராமபுறங்களில் சிலநேரங்களில் மிகவும் கொச்சையாக திட்டுவார்கள். ஆனால்..அது புண்படுத்தாத செயலாகதான் இருக்கும். சில நேரம் நாகரீக சொல் நளினமாய் நடனமாடும்.. ஒருமுறை கீழவழுத்தூர் மளிகைகடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்த போது நடந்த உரையாடல்.. பெரியவர் மூப்பனார் அவர்களும் வேறொரு பெண்மணியும் தரையில் அமர்ந்து வெற்றிலை சீவல் போட்டுக்கொண்டிருந்தார்கள்..அப்போது ஒருவர் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் .. அவரை மூப்பனார் டேய் #வக்காலி இங்க வாடா என்றார் அவனும் கோபடாமல் வந்து அதான் ஒன்னுக்கு ரெண்டா அக்காள கொடுத்தோமில்ல வச்சு வாழ விதியில்ல மூணாவது ஒரு அக்கா வேணுமோ என்றார்.. அவன் சொல்லறதும் சரிதானே என்றார் அந்த பெண்மணி .. ஆம் அவருக்கு இரண்டுமுறை கல்யாணமாகி மனைவிகள் இருவருமே இறந்து விட்டார்கள் .. அவன் எவ்வளவு நாசுக்காக.. சொன்னான்.. தன்னை திட்டியவரையே சிரிக்க வைத்து சொன்ன சொல்லின் பொருளுணர்ந்து விசரமின்றி பதிலளித்து யதார்த்தமாய் கடந்து போனான் .. மற்றொரு சம்பவம்.. இருபெண்மணிகளுக்கு சண்டை வந்து வீதியிலே வந்து திட்டிக் கொண்டுயிருக்கிறார்கள். மாமியாரும் மருமகளும்.. வார்த்தை தடிக்கிறது.. என்மவன் தொடயிடுக்கில புகுந்து பிள்ளை பெத்த உனக்கு இவ்வளவு திமிருன்னா.. அவனையே இந்த தொட இடுக்கில இழுத்துப்போட்ட எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்டி.. என்கிறாள் தாய்.. நாசுக்கான வார்த்தையில் நடனமாடினாள்.. கிராமங்களில் சிலநேரம் மிகவும் மோசமாக வார்த்தை தடிமனாக கூட பேசுவார்கள் ஆனால்.. அதில் விரசமே வராது அல்லது தோன்றாது.. கொச்சையான வார்த்தைகளை கூட சொல்லும்வண்ணத்தில் தேன் தடவி சென்றுவிடுவார்கள் .. கோபத்தில் வரும் வார்த்தைகள் சில நேரம் அதிரவைக்கும் ஆனால் எல்லைமீறாது .. எசக்குபிசக்கா..பேசினாலும் யதார்த்தமானவர்கள் .. வெள்ளை உள்ளம் கொண்டவர்களாய் இருப்பார்கள் இப்போதெல்லாம் பக்கத்துவீட்டுகாரனையே தேவை திருநாளில் தான் பார்க்கிறோம் பேசுகிறோம் .. அந்தளவிற்கு வேகமேறிய வாழ்க்கை .. உண்மையில் மெய்யிழந்து வாழ்கிறோம் .. வாழ தெரியாமல் வாழ்கிறோம்.. .. ஆலஞ்சியார்

Monday, July 22, 2019

அத்தி வரதர்

வரதர்.. அத்தி வரதர் பார்பனர்களின் இன்றைய மார்க்கெட்டிங் ஆனால் பாருங்கள் வேறு யாராலும் இந்தளவு அசிங்கபடுத்த முடியாது அத்திவரதர் என்னை மீண்டும் புதைக்காதீர்கள் என்று ஜீயரின் கனவில் வந்து சொன்னாராம் .. திருடர்களுக்கு பயந்து தான் புதைத்து வைத்திருந்தோம் என்று வேறு சொல்லி மொத்த வரதரின் இமேஜையும் டேமேஜ் பண்ணிட்டாங்க.. .. நாற்பதாண்டுகளுக்கு முன்பு அதாவது 1979 ல் பார்பனர்களின் செல்லபிள்ளை தான் ஆட்சிக்கு வந்தது இதிலிருந்து கடவுள்..? காணாமல் போகும் வழி நமக்கு பிடிபடும் தன்னை தானே காப்பாற்ற வக்கில்லாதவரிடம் ஏன் இறைஞ்சவேண்டும் .. தெய்வ நம்பிக்கை என்பது அவரவர் விரும்பம் ஏதோ ஒரு சக்தி நம்மை காக்கிறதென்று நம்புகிற பாமரனை அது இதுதான் என வியாபாரம் செய்யும் பார்பு கூட்டம் பிழைக்க தெரிந்தவர்களாய் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள் .. வரதரை காண விஐபி டிக்கெட் பலகோடிகளுக்கு அச்சடித்திருக்கிறார்கள் இதற்கெல்லாம் வருமானவரி GST ...கிடையாது பகிரங்க கொள்ளை நடக்கிறதென சில பத்திரிக்கைகள் எழுதியும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை .. சிலர் இன்னும் சிலகாலம் வைத்திருந்தால் காஞ்சி சுற்றியுள்ள ஊர்கள் வளம் பெறும் பொருளாதாரத்தில் மேம்படும் வணிகம் பெருகும் என சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. திருப்பதிக்கே சவாலாக வரலாமென்றெல்லாம் கதைக்க தொடங்கியிருக்கிறார்கள் .. அலைமோதும் கூட்டம் நல்ல வரவாக அவர்களுக்கு கிடைக்கிறது .. பாவம் சாதாரண பக்தன் வரிசையில் நின்று மூச்சிழக்கிறான் ..அதெல்லாம் தண்ணில் கிடந்த வரதருக்கு தெரியாது .. .. பார்பனர்கள் கையில் கோவில்கள் இருந்தால் சிலைகள் காணாமல் போகும் அறநிலையதுறையிடம் இருப்பதால் வரதர் திருட்டுபோகமாட்டார் எனவே புதைக்க தேவையில்லையென வரதரை வைத்து காசுபார்த்த கூட்டம் சொல்கிறது .. உண்மையில் பக்தியோ தெய்வமோ அல்ல மரகாச்சி பொம்மை .. அதை வைத்து பிழைக்கலாமென்ற எண்ணம் பாருங்கள் அதில் தான் பார்பனர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் .. திருகச்சி நம்பியோடு உரையாடிய வரதன் (கலைஞரின் ராமானுஜர்_மதத்தில் புரட்சி செய்த மகான்) ஏன் இன்று என்னை வைத்து பிழைப்பு நடத்தாதீர்களென சொல்லவில்லை .. தெய்வ நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதல்ல ஆனால் அதை வைத்து மக்களை ஏமாற்றுகிற செயல் அயோக்கியத்தனம்.. தன்னையே திருடர்களிடமிருந்து காத்துகொள்ள முடியாதவரென அவர்களே சொல்கிறார்கள் .. காஞ்சியில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்க்கும் போது .. #ஆசான்_கலைஞர் அப்போதே சொன்னது தான் ஞாபகம் வருகிறது "கோவில் கூடாதென்பதல்ல.. கோவில் கொடியவரின் கூடாரமாக மாற கூடாது என்பதுதான்" வரதர் வியாபாரம் நல்ல மவுசோடு இருக்கும் போதே புதைத்தால் நல்லது மீண்டும் தேவைபடும் போது தோண்டி எடுத்து கல்லா கட்டலாம் ..இல்லையெனில் யாரும் சீண்டாமல் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும் .. .. ஆலஞ்சியார்

Sunday, July 21, 2019

காலம் கனியும்

நான் ஏற்கனவே சொன்னதுதான் கனிமொழி கருணாநிதி திராவிட கொள்கையில் கொஞ்சமும் சமசரம் செய்துக்கொள்ளாத விட்டுகொடுக்காதவர் தன் செயல்பாடுகளை மிக நேர்த்தியாக வடிவமைக்கிறார் .. எந்த காலத்திலும் கொள்கை பிறழ் வந்துவிட கூடாதென்பதில் எச்சரிக்கையோடு இருப்பவர் .. சிறந்த நாடாளுமன்றவாதியாக செயல்படுகிறவர்களில் ஒருவர் .. .. கலைஞர் இவரை முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியபோது நிறைய விமர்சனங்கள் .. திரு.ஸ்டாலினுக்கு இடைஞ்சலாக இருக்ககூடாதென்பதற்காக மாறனை வெற்றியிடத்தை நிரப்புவதற்காகவும் அனுப்புவதாக மிக பிரபலமான பத்திரிக்கையாளர்கள் கூட விமர்சனம் செய்தார்கள் உண்மையில் மாறனின் இடம் இப்போதும் காலியாக தான் இருக்கிறது காரணம் மாறனை விட கனிமொழியின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கபடுகிறது கொஞ்சமும் சமரசம் செய்துக்கொள்ளாத போராளி கனிமொழி ..தனக்கென்று புதியதொரு இடத்தை உருவாக்கும் வல்லமை பெற்றவர் .. இவரின் பேச்சில் நிதானம் சொல்லவந்ததை தெளிவோடு எடுத்தியம்பும் வித்தை .. சரியான அறிவியல்பூர்வமான எடுத்துகாட்டுகள் சொல்லவேண்டிய கருத்தை சரியான நேரத்தில் கொஞ்சமும் அச்சமின்றி எடுத்துரைத்தல் .. கொள்கைக்கொரு தீங்கெனில் தீப்பொறியாய் கிளம்பிவந்து சுட்டெரிக்கும் பாங்கு ..தலைமைக்கு கட்டுபட்டு செயல்படும் அறிவாற்றல் .. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் .. இன்னும் உயரங்கள் காத்திருக்கிறது .. .. கலைஞரின் "இலக்கிய வாரிசாக" அறியபட்ட கவிஞர் கனிமொழி தன் பன்முகதன்மையால் மிளிர்கிறார் .. கலைஞரே என் வீட்டில் எல்லோரும் திமுகவினர் ஆனால் கனிமொழி மட்டும் ஆசிரியரின் மாணவி என்று அவர் Atheist நாத்திகர் என தனித்து சொன்னார் .. வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தன்னை பகிரங்கபடுத்த தயங்கியதில்லை .. ஒருமுறை திடலில் பேசும் போது சங்கீத அகடமியில் நடந்த பிராமணர்கள் விழாவிற்கு சென்றதையும் .. கதவோரம் நின்று கொண்டிருந்த என்னை கண்டு அழைத்து போய் முன் வரிசையில் அமரவைத்தார்கள் .. கனிமொழி கூட தெய்வ புகழ்பாடும் சபைக்கு வந்திருக்கிறாரென மகிழ்ந்தார்கள் நமக்குதானே தெரியும் எதற்காக சென்றோம் என்று ..என்றபோது அரங்கமே அதிர்ந்தது .. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் "ரிஷிகளுக்குப் பிறந்தவர்கள் இல்லை நாங்கள். அறிவியல் கண்டுபிடிப்பின் படி ஹோமோசெப்பியன்ஸ் வழி வந்தவர்கள் நாங்கள். எங்கள் பெற்றோர்கள் சூத்திரர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். உங்கள் வழக்கப்படி உங்கள் கடவுளிடம் இருந்தோ கடவுளின் பாகங்களில் இருந்தோ நாங்கள் பிறக்கவில்லை. உங்கள் நம்பிக்கைகளுக்கு வெளிப்புறம் பிறந்தவர்கள்.. நானும் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்திருப்பவர்களும் சமூக நீதியால் வந்திருக்கிறோம், மனித உரிமையால் இங்கு வந்திருக்கிறோம். இவைகளுக்காகவே இன்று வரை நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்திலும் இவைகளுக்காக போராடுவோம்." .. உண்மையில் திராவிடம் மிக சரியானவர்களை தான் தயார் செய்திருக்கிறது .. எதையும் அறிவுகொண்டு பார்க்கும் தொலைநோக்கு பார்வை சமூகநீதியில் நின்று எதிர்ப்போரை இனங்கண்டு ..அவர்கள் சபையிலேயே அவர்களுக்கு ஆணியடிக்கும் திறன் பெற்றவர்கள் .. ஒவ்வொருவரையும் திமுக செதுக்கி அனுப்பியிருக்கிறது .. மடையர்களை அடிமைகளை கண்டவர்களுக்கு..அறிவில் சிறந்தோரை ஆற்றல்மிகுந்தோரை.. தெளிவானவர்களை கண்டதும் திணறுகிறார்கள் பழமைவாதிகள்/பாசிசவாதிகள்.. இன்னமும் காத்திருக்கிறது திறன்கொண்ட திராவிடப் படை .. ஆம் நேற்று கனிமொழியில் பேச்சில் "கலைஞரை கண்டேன்" .. காலம் கனியும் .. .. ஆலஞ்சியார்

Saturday, July 20, 2019

திமுக இளைஞரணி..

#ஜூலை20_1980 திமுக இளைஞர் அணி துவக்கப்பட்டநாள்.. மதுரையில் மிக பிரமாண்ட கூட்டம் தலைவர் கலைஞர் துவக்கிவைத்தார்.. அப்போது இளைஞர் அணி அமைப்பாளர்கள் என ஐந்து பேரை தேர்வு செய்து மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் திராவிட கொள்கைகளை எடுத்துச்செல்லவேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.. .. பாபநாச கிளை கழகம் சார்பில் சிலர் ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள் நானும் கூட பயணித்தேன்..திரு.வைகோ ஸ்டாலின் வந்து கொடியேற்ற வேண்டுமென்றால் கட்சிக்கு ₹1000 கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டமென்றால்₹5000 தரவேண்டுமென்றார்.. நந்தனத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை இளைஞர் அணிக்கு தருவதாக கலைஞர் சொல்லியிருக்கிறார் அதற்கு ₹10லட்சம் கட்சி நிதி தரவேண்டும் அதற்காகதான் இந்த தொகையென்றார்.. 11 லட்சத்தை திரட்டி பேராசிரியரிடம் கொடுத்தார் தளபதி.ஸ்டாலின்.. மாநிலம் முழுவதுமிருந்து கிளை கழகத்தை சேர்ந்தவர் குறிப்பாக இளைஞர்கள் ஸ்டாலினிடம் தேதி கேட்டு நச்சரித்தனர்.. 1980 இந்தியாவிலேயே முதல்முதலாக கட்சிக்கென்று இளைஞர் அணியை உருவாக்கியது திமுகதான் ஸ்டாலின் 81 ல் நடந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதார அமைப்பாளராக தேர்தெடுக்கப்பட்டார்.. தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் நல போராட்டமென திமுக அறிவித்த போராட்டங்களில் பெருமளவில் இளைஞர்களை பங்கு பெற செய்தார் மாவட்டம் தோறும் சென்று கிராமகிராமாக கட்சியினரை சந்தித்தார் ஸ்டாலின்.. .. இலக்கியம் புதுக்கிடு ஈனரை ஒதுக்கிடு பகைவர்க்கு வளையேல் மாயைக்கு மயங்கேல் 'ழ' கரமாய் சிறப்புறு என்ற கலைஞர் சொல்லிற்கிணங்க செயல்பட்டு வந்தார் ..இன்றைக்கு கட்சியின் தலைவராய் நிமிர்ந்து நிற்கிறார் என்றால் இவையாவும் நட்டதும் பூத்ததல்ல.. .. 1989 வரை ஊர்வலம் என்ற சொல்லைதான் கேட்டிருந்த தமிழகம் .. ஸ்டாலின் தலைமையேற்று நடத்திய போது தான் அது #பேரணி என்றழைக்கப்பட்டது.. திரு.ஸ்டாலின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்குவகித்தவர் வைகோ என்பதும் பின் அதிகார மோகம் பிரள வைத்ததும் அறிந்தது தான்.. .. இயக்கம் தலைவனை தானே தேர்வு செய்கிறது நிறைய பேர் வந்தார்கள் அழகிரி உட்பட ஆனால் உழைப்பவரை தொடர்ந்து மக்களோடும் கட்சியினரோடும் கொள்கையோடும் உடன்படுகிறவரைதான் தலைவனாக தேர்வு செய்யும்.. இதோ திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்திருக்கும் ஸ்டாலின் 1980 முதல் பயிற்றுவிக்கப்பட்டார் என்பது தான் உண்மை.. .. ஏன் இதை எழுதுகிறேன் எனில் இன்றைக்கு இளைஞரணியின் பொறுப்பை ஏற்றிருக்கும் உதயநிதி நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களென இளம் இரத்தத்தை கட்சிக்கு கொண்டுவந்து பயிற்சி தரவேண்டியிருக்கிறது .. பெரியாரை அண்ணாவை கலைஞரை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து திராவிடம் மட்டுமே எப்போதும் நம்மை காக்குமென உரக்க சொல்லவேண்டும் திராவிட இயக்கம் சட்டென்று யாரையும் உயர்த்தி பிடித்துவிடாது .. கடும் உழைப்பை தரவேண்டும் திராவிட சித்தாந்தத்தை விட்டு விலகாமல் மக்களிடம் நன்மதிப்பை பெற்றால் மட்டுமே வரும் காலம் புன்னகைக்கும் .. நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம் .. பேசிக்கொண்டே இருப்போம் உழைத்துக்கொண்டே இருப்போம் ஏனெனில் நாங்கள் ஆழமான கொள்கைக்கு சொந்தகாரர்கள் என்ற கலைஞரின் வரிகளை ஞாபகபடுத்திகொண்டு செயல்படவேண்டும் .. உழைப்பு தானே அங்கீகாரத்தை பெற்று தரும்.. .. ஆலஞ்சியார்

Thursday, July 18, 2019

சரவணபவன் அண்ணாச்சி

ராஜகோபால் உழைப்பு மட்டுமே உயர்வை தரும் என்ற உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார் அவரது மரணம் மூடநம்பிக்கை எதிரான கருத்தை நிலைபெற செய்திருக்கிறது .. தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி எனும் சிறு கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். அந்தக் கிராமத்துக்கு பஸ் வசதி கூட இல்லை. வறுமை காரணமாக ஏழாம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்த அவர், இரவில் தரையிலேயே உறங்குவார்.. பிறகு ஒரு மளிகை கடையில் பணி.. மளிகை கடை பணிக்கிடையே தோன்றிய எண்ணம் நல்ல சுவையான உணவகத்தை உருவாக்க வேண்டுமென்பது .. 1981-ல் உதயமானது சரவண பவன். சுவையைக் காட்டிலும் பசி தீர்ப்பதே அத்தியாவசியம் என்ற போக்கு நிலவிய காலகட்டத்தில் தேவை அதிகமானதால் தொழிலில் பேரெழுச்சி ஏற்பட்டது.. ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் மலிவு விலையில் பொருள் வாங்கலாம் தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவாக தரலாம் என்ற தன் அதிகாரியை வீட்டு அனுப்பியவர் உணவின் தரம் மட்டுமே பெயரை நிலைக்க வைக்குமென்று நம்பியவர் இலை போடுவதில் கூட ஒழுங்கை கடைபிடிக்க சொன்னவர். வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த காலத்திலும் உணவின் தரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த குறையும் வைக்கக் கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தினார் ராஜகோபால்.. நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஊழியர்களின் பணிச் சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதே சரவண பவனின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது ஊழியர்களை மாதம்தோறும் தலைமுடியைத் திருத்த வேண்டும் இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற கட்டுபாடுகள் ஊழியர்களுக்கு முதலில் வேலை உறுதித்தன்மையை ராஜகோபால் தருகிறார். இருப்பிடத்தையும் நிர்வாகமே வழங்குகிறது. சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தங்கள் குடும்பம் ஊரில் வசித்தால், அவர்களைப் பார்த்து வருவதற்கும் ஆண்டுதோறும் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரின் முதல் இரண்டு குழந்தைகளுக்கான கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்கிறார். ஓர் ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவரைப் பார்த்துக்கொள்ள நிர்வாகத்தில் இரண்டு பேரை நியமிக்கிறார். ஓர் ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக்கொள்ள வழிவகுத்துவிட்டாலே அந்த ஊழியர் மூலம் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. இவையெல்லாம் அவரின் வெற்றிக்கான படிகட்டுகள் .. பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சியிருந்த சைவ உணவக தொழிலில் தன் மாபெரும் முயற்சியால் வெற்றிகண்டவர் .. பார்த்தாலே தீட்டென்று சொன்னவர்களை வீழ்த்தி தொழிலில் மாபெரும் வெற்றிகண்டார் .. உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு எடுத்துகாட்டாக விழங்கியவரை .. பெண் பித்தில் சிக்கவைத்து கடைசியில் குற்றவாளியாகவே மாண்டுபோனார் .. ஜோதிடம் என்ற பொய்யும் ஜாதகமென்ற ஏமாற்றும் பக்தி எனும் போலிதன்மையும் உழைப்பால் உயர்ந்த ஒருமனிதனை வீழ்த்தியது .. மூன்றாவதாய் ஒரு திருமணம் செய்தால் புகழ் உச்சிக்கு செல்லலாமென்றவன் சுகபோகமாய் வாழ்கிறான் .. பெண் மோகம் மட்டுமே அவரின் வாழ்வை சீரழித்தாக சொல்ல இயலாது ஏனெனில் அவரிடம் இருக்கும் செல்வம் அதை கொண்டுவந்திருக்கும் .. ஆனால் ஜோதிடத்தை நம்பியதன் விளைவு மனிதனை மிருகமாக்கி கடைசியில் பழியோடு புதைக்குழியில் தள்ளியது .. .. அண்ணாச்சியின் வாழ்க்கை ஒரு பாடம் .. உழைப்பு உயர்வை தரும் நேர்மையும் இரக்கமும் எப்போதும் நன்மை தரும் .. ஆனால் பக்தி ஜோதிடம் மூடநம்பிக்கை என்பது பார்பு தொழில் செய்பவர்கள் பிழைக்க வழியே தவிர எந்த பயனும் இல்லை அதெல்லாம் ஏமாற்றுவேலை .. புத்தி போனால் எல்லாம் போகும் .. .. ஆலஞ்சியார்

Wednesday, July 17, 2019

நாடோடி..

#புளியமரத்தடி.. .. வாழ்வில் எல்லாகாலகட்டத்திலும் நிறைய மனிதர்கள் நம்மை கடந்துச்சென்றிருப்பார்கள்.. வித்தியாசமான கொஞ்சம் விவகாரமான நபர்கள் நம்மையும் அறியாமல் நம்மை உலுக்கி விட்டு சென்றிருப்பார்கள்.. .. பாபநாசம் மேலவீதியின் முனையில் சைக்கிள் கடை அந்தி நேர பொழுதுபோக்கு அங்குதான்.. நான் காந்தி.ஜீவா வீரமணி ஆரிப் ..என நண்பர்கள் சேர்ந்தால் அரட்டைதான்.. ஒருநாள் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுக்கு உடை.. முறுக்கிய மீசையோடு வந்து ஹலோ பிரண்ட்ஸ் ஒரு டீ சொல்லுங்க என்றார் எங்கள் யாருக்குமே அவரை தெரியாது சுத்துவட்டாரத்தில் பார்த்ததாகவோ அறிவில்லை.. ஜீவா உடனே டீ சொன்னார்.. டீயை குடித்துக்கொண்டே சமகால அரசியலை பேசத்தொடங்கினார்.. அடிப்படை அறிவில்லாதவன் எல்லாம் அரசியலுக்கு வந்துட்டான்.. யாருக்கு போடுறோம் என்பதே தெரியாம போடுறான்.. கண்டவனையும் கும்பிடுறான் ஜமீன்தார்காலமெல்லாம் முடிஞ்சு போச்சுடா இன்னும் பெரியய்யா சின்னய்யா என்று கும்பிடு போட்டுக்கிட்டே பின்னாலேயே ஓடுறான்.. நான்சென்ஸ் மூப்பனார் வந்தான்னு வைய்யி சுத்தி நிற்கிறவன் பூரா மிராசுதாரும் பணம் பேசுறவனும் தான்.. சுத்தி 100 கோடி நிற்கும் .. சாணம் தீட்டுறவன் போட்டு அடிச்சுருக்காங்க என்னய்யா பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்க .. திராவிட கொள்கையெல்லாம் பெரிசா பேசுறீங்க ஆனா அங்கபோய் சரிங்கய்யா அப்படின்னு பம்புறீங்க.. என்னை காட்டி இந்த பையன்தான் கொஞ்சம் பேசுனான் மாவட்டம்( தி.க)தலைய ஆட்டிகிட்டே வந்துடுச்சு.. ஜீவாவை பார்த்து..பிரதர் டீக்கு காசை கொடுங்க ஒரே மாதிரியிருங்கப்பா.. பெரியார் சொன்னதை ஒழுங்கா செய்யுங்க .. பிரதர் மறக்காம டீக்கு காசை கொடுத்துடுங்க ..#லால்சலாம் .. போயே விட்டார் அடைமழைப்போல் பொழிந்து விட்டுப்போனார்.. ஒருவார்த்தை கூட பேசியதில் தவறில்லை நியாயமான பேச்சாய் சாமானியனின் உள்ளக்குமறலாய் இருந்தது.. .. சிலநேரம் யோசிப்பதுண்டு நமக்கு வேண்டியவர்கள் என்றால்.. இவரால் நமக்கு பிறகேனும் காரியம் ஆகுமென்றால்.. பாதிக்கப்பட்டவனை சமாதானப்படுத்தி..சமரசம் செய்து வைக்கிற முயற்சியில் தான் இறங்குகிறோமே தவிர நியாயத்தின் பக்கம் நிற்பதே இல்லை.. .. பேசிவிட்டுப்போனவர் தெளிவானவர் நாம் தான் தெளிவில்லாமல்.. அவர் அழுக்குமனிதர் இல்லை உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் நாம் தான் அழுக்கானவர்கள்.. நிஜத்தில் நாமெல்லாம் ஏதோவொரு வகையில் சமசரம் செய்துக்கொள்கிறோம் .. இனம் மொழி சாதி மதம் நட்பு, தெரிந்தவன், பணக்காரன் என ஏதோ ஒன்றுக்காக சமாதானம் செய்து கொள்கிறோம் அல்லது நழுவுகிறோம் .. அரசியல் கொள்கை கோட்பாடு எல்லாம் சிலநேரம் அடிபட்டுபோய்விடுகிறது .. நேர்மையானவர்கள் எப்போதும் எதற்கும் அஞ்சுவதில்லை பின்மாறுவதில்லை .. நம்மைவிட தூய்மையானவராய் தெரிந்தார் அந்த நாடோடி .. .. #மனிதர்கள் .. ஆலஞ்சியார்

Tuesday, July 16, 2019

திராவிடம்

பெரியாரும் , திராவிடமும் இன்று மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.. என்கிறார் மானமிகு கனிமொழி.. இந்து இந்தியா மற்றும் இந்தி இந்தியை என்ற நோக்கத்திற்காக மட்டுமே இன்று ஒரு அரசும் , அமைப்பும் செயல்படுகிறது. அவர்களுக்கு கருத்துக்களம் காணத் தெரியாது , விவாதத்தை முன்னெடுத்து செல்லவும் தெரியாது , முன்னால் வந்து பேசவும் தெளிவாக தெரியாது. ஏனெனில் அவர்களிடம் எதுவும் கிடையாது என்பதே உண்மையாகும். பத்திரிகையாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். நான் உனக்கு வேலை தருகிறேன். பணம் தருகிறேன். நான் கூறுவதை மட்டுமே நீங்கள் எழுத வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது ‌ஏமெர்ஜென்ஸியை( அவசரநிலை) விட இது பலமடங்கு ஆபத்தானது‌ . இவர்கள் இன்று அமல்படுத்த நினைக்கும் சித்தாந்தம் உயிருக்கு உலை வைத்து விடும். ஆகவே பெரியாரின் கருத்தியல் கண்டிப்பாக தேவைப்படுகிறது .. ஆம் விவாததிற்கு வந்தால் கத்தி கூச்சலிட்டு விவாதபொருளையே மாற்றிவிடுகிறார்கள்.. எந்தவிதமான ஆதாரமும் இன்றி பேசுகிறார்கள் காரணம் கேட்டால் பதில் இல்லை தொடர்ந்து பாஜகவிலிருந்தோ அல்லது சமூகஆர்வலரோ..? ஒருவர் இல்லாமல் எந்த விவாத மேடையும் இல்லை அறிவுகொண்டு நல்ல எதிர் கருத்தை கூற கூட அவர்களிடம் சரக்கில்லை.. மதம் பேசி திரிகிறவர்களிடம் சங்கிகளிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.. .. ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே மதமென்பது சாத்தியமில்லாத ஒன்றென்று அறிவார்கள் அவர்கள் நோக்கம் ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருந்தால் அவர்கள் செய்கிற தகிடுதித்தம் பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.. பாஜக ஆட்சிக்குவந்த பிறகு குறிப்பாக பார்பனர்கள் எல்லா முக்கிய பதவிகளுக்கும் சத்தமில்லாமல் வந்துவிட்டார்கள் அவர்களை கீழிறக்க ஐம்பதாண்டுகள் தேவைபடும்.. அவர்கள் எதிர்ப்பார்பது அதுதான் .. அவர்களை நக்கி பிழைக்கிற சூத்திரர்கள் இதையெல்லாம் உணர்வதற்குள் அவனின் ஒருதலைமுறை பழிவாங்கபட்டிருக்கும்.. மிக ஆபத்தானவர்கள் அவர்களிடமுள்ள இன உணர்வோ ஒற்றுமையோ நம்மவர்களிடம் இல்லை இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அமைதியாகி இருப்பார்கள் .. .. கனிமொழி சொன்னதைப்போல இந்தியாவிற்கே இன்று திராவிட சித்தாந்தம் தேவைபடுகிறது .. சமூக ஒற்றுமை .. யாரும் தாழ்வென்று எண்ணாத நிலை.. சம நீதி அதுவும் சமூகநீதியாய் ஒடுக்கபட்ட மக்களுக்குரிய அங்கீகாரத்தோடு அவர்களும் இந்த தேசத்தின் எல்லோரையும் போல வாழ .. கல்வியில் வேலைவாய்ப்பில்லை, பெண்ணுரிமையில் .. தமிழகத்தைப்போல இந்தியா முழுவதும் பெற்றிட திராவிடம் தேவைபடுகிறது.. சுயமரியாதையோடு வாழ.. எதையும் அறிவுக்கொண்ட பார்வையில் .. ஏற்றதாழ்வற்ற சாதி சமயமற்ற மதவெறியற்ற நேரான பாதையில். நமக்கான உரிமையை பெற்றிட உயர்பதவிகளை ஒரு சில சமூகமே அனுபவிப்பதை மாற்றி அதிலும் எமக்கான இடஒதுக்கீடை பெற.. நீதிமன்றங்களில் மநுநீதியற்ற மனித நீதியை (இயற்கையான நீதி) பெற்றிட திராவிடம் தேவை .. .. திரு.சுப்ரமணிய சுவாமி வைகோ மாநிலங்களவைக்கு வருவதை ஆபத்தென்கிறார் அவரின் பதட்டம் உணர்த்துவது இதுதான் இதுவரை சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளைகளை .. தலையாட்டிகளை வைத்து பார்பன நலனுக்கெது தேவையோ அதை சாதித்தோம் இனி அது நடக்காதென்பதை தான் சுவாமியின் பேச்சு உணர்த்துகிறது .. நாடாளுமன்றத்தை திணறடிக்க முடிகிறது .. தபால் துறை தேர்வை ரத்து செய்யமுடிகிறது .. நிர்மலாவிற்கு பாடம் நடத்த முடிகிறது காரணம் பெரியாரியலை கொண்டு நடப்பவர்கள் அறிவின் ஒளியில் எதையும் அலசுபபவர்கள் .. அநீதி கண்டால் எம் மண்ணிற்கு தீங்கென்றால் ..மொழிக்கு இழிவென்றால் பெரும் பாய்ச்சலோடு வருவார்கள் .. பெரியாரின் பெயரன்கள் அண்ணாவின் தம்பிகள் கலைஞரின் உடன்பிறப்புகள் .. .. ஆபத்தான காலகட்டத்தில் அதிகாரம் இருக்கிறதென்ற தெம்பில் மனிதகறியை கேட்கிற மதவெறி கூட்டத்தை.. தாழ்த்தபட்டவரை.. நிர்வாணமாக்கிய தெருவில் நிறுத்துகிற கொடுஞ்செயலை... பணக்காரனுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிற, மக்களை சூழ்ச்சியால் பிரித்து பகையோடு நிறுத்தியிருக்க கேடுகெட்ட கயமையை , பொய் சொல்லி ஒரு அரசை நடத்தலாம் என்ற போக்கிரித்தனத்தை வீழ்த்திட மாட்டுக்கு தரும் முக்கியத்துவம் மனிதனுக்கில்லையென்ற ..பிஞ்சு உயிர்களை காவு கேட்கிற காவிகளை விரட்டிட மத,சமய சாதியற்ற நிலையை அடைய இன்றைய தேவை பெரியாரின் கருத்தியல் தான்.. .. இன்றைக்கு.. இந்தியா முழுவதும் பெரியாரை தேடுகிறார்கள் .. கிழவன் தொலைநோக்குபார்வை தமிழகத்தில் செய்துகாட்டிய பரிணாம வளர்ச்சி .. விழிப்புணர்வு, மதம் கடந்த மனிதநேயம்.. எப்போதெல்லாம் மதவெறியும் சாதிவெறியும் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் கிழவனின் #கைத்தடி பதில் சொல்கிறது.. இன்னமும் இங்கே ஈரமிருக்கிறதென்று பறைசாற்றுகிறது.. ஆம்.. இந்தியாவிற்கு இன்றைய தேவை #பெரியாரும்_திராவிடமும்தான் … .. ஆலஞ்சியார்

Monday, July 15, 2019

இந்துத்துவா..

#இந்துத்துவா.. கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் திட்டம் என்னவென்பது பிடிப்படும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் .. கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்.. அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்.. அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் .. இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலம் வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை இஸ்லாமியர் மீதான குரோதத்தை வெளிப்படையாகவே காட்டுயிருக்கிறார்கள்.. ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு இருப்பதும் அதை இயக்கும் பார்ப்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்.. எந்தவொரு விவாதமாக இருந்தாலும் பாப்பனன் / அல்லது பார்பன அடிவருடி இல்லாமல் நடத்தபடுவதில்லை.. பாஜக ஊடகத்தை புறக்கணிப்பதாக சொல்வது ஏமாற்றுவேலை.. .. உணவு உடை கலாச்சாரம் பண்பாடு கல்வி மீதான தாக்குதல்கள் மிக சரியாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள் எதை உண்பதென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வேறுயாருமல்ல .. ஒரே பாடதிட்டம் ஒற்றை குறிக்கோள் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதெல்லாம் நாட்டின் ஒற்றுமையை சிதைத்துவிடும் .. எம் மீது திணிக்கபடும் சுமையாக கல்வி இருக்க கூடாது கல்வி எல்லோருக்குமானதாக எளிதில் கிடைக்கவேண்டுமே தவிர பணமுள்ளவன் உயர்கல்வி பெறட்டுமென்ற வறட்டு சித்தாந்தம் மிகபெரிய தோல்வியை தரும் .. எல்லாவற்றையும் பார்பனமயமாக்குதல் என்ற ஒரே குறிக்கோளை இந்துத்துவா என்ற பெயரில் திரித்து செயல்பட வைப்பதை நாம் உணர்ந்தால் புரியும்.. திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பன எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது .. முழுமூச்சாக எதிர்ப்பை ..மிக சத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்.. .. இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்.. இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் .. அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் .. தலித்மீதான வன்மத்தை தன் சகோதரன் மீதே இவன் கொட்டிதீர்ப்பான்.. மதமோதல் இந்த தமிழ் மண்ணில் நிகழ்த்த முடியாதென்றறிந்து சாதி ரீதியான பிரிவினையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக சில ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.. .. திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்.. தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. அதுமட்டுமல்ல.. இன்றைக்கு தி.மு.கழகத்தை தூக்கிபிடிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கு ஏற்பட்டிருக்கிறது.. எல்லா வழிகளிலும் சூழ்ச்சி வலைப்பின்னி தமிழகத்தை சூறையாட பார்க்கிறார்கள் தமிழரிகளின் சிறு தொழில்களை மார்வாடிகளிடம் அடகுவைத்தாக வேண்டிய சூழல் .. இயற்கை வளங்களை நம் கண்முன்னே கார்பரேட்டுகளுக்கு வழங்குகிறார்கள்.. எதிர்கருத்தை பேசுகிறவர்கள் மிரட்டபடுகிறார்கள்.. சிறையில் அடைக்கபடுகிறார்கள் உதிரிக்கட்சிகள் விலைபேசபடுகின்றன.. இதையெல்லாம் மீறி மக்களின் ஆதரவு திமுகவை நோக்கி திரும்புவது கண்டு .. ஊடகங்கள் மூலம் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு நடிகனுக்கு ஆதரவு பெருகுவதைப்போல பேசி திரிகிறார்கள்.. இவனில்லையெனில் அவன் என்று தொடர்ந்து அழுத்தம் தர பார்க்கிறார்கள்.. ஆட்சி செய்கிறவன் வாய் திறப்பதே இல்லை அதைவிட பாசிசத்தின் குரலாய் இவனே ஓங்கி ஒலிக்கிறான்.. நாடாளுமன்ற வெற்றி இன்னமும் இந்த மண்ணில் பாசிச சித்தாந்தம் வேகாதென்பதை உணர்த்தினாலும் அரச நிர்வாகம் நம் கையில் வரும் வரை கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது .. எதிரியை இனங்கண்டோம் துரோகிகளையும் தூர்த்துவாரி நல்ல விதைகளை விதைப்போம்,.. தமிழ்தேசியமென்ற பெயரில் காவிகள் கைகளில் சிக்கி திரிவோரை புறக்கணிப்போம் .. எதிரிகள் பல்வேறு முனைகளில் தாக்குதலை தருகிறார்கள் .. இனம் மொழி கலை பண்பாடு என பல்வேறு தளங்களில் ஊடுறுவி நம்மை நிலைகுலைய செய்ய முயற்சிக்கிறார்கள் .. அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு பேராசான் தந்த அறிவெனும் ஆயுதம்கொண்டு பகை முடிப்போம்.. .. ஆலஞ்சியார்

Sunday, July 14, 2019

காமராஜர் பிறந்தார்

#காமராஜர் காமராஜரை எல்லோரும் காங்கிரஸ்காரர் என்று தான் அறிந்திருப்பார்கள் .. ஆனால் திராவிட கருத்தியலை சார்ந்தவர் அவரென்பது அவரின் அரசியல் வாழ்வியல் உணர்த்தும்.. .. தேசிய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார் King maker of India ..என்று அவரை சொன்ன காலமும் உண்டு.. திரு.சத்தியமூர்த்தியின் சீடராக அரசியலில் நுழைந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை ராஜாஜியின் ஆதிக்கத்தின்/ஆளுமையின் முன்பு அறியபடாதவராக அல்லது அதிகம் பேசபடாதவராகவே இருந்தார்.. ராஜாஜியின் வரலாற்றுப்பிழை இவருக்கு பிரகாசமான அரசியல் வாழ்வை தந்தது .. குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி அறிமுகபடுத்திய போது வெகுண்டெழுந்த பெரியார் .. கிரேசின் தீப்பெட்டியுமாக காத்திருங்கள் ..எப்போது நான் சொல்கிறோனே அப்போது அக்ரஹாரத்தை கொளுத்தலாம் என்றார் பெரியார் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டதில்லை.. சூழிநிலை மிக மோசமாவது கண்டு ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. .. ராஜாஜியை மாற்றிய தீரவேண்டும் அந்த இடத்திற்கு மீணிடும் பார்பனன் வந்துவிட கூடாது என்பதிலே பெரியார் மிக எச்சரிக்கையாக காய் நகர்த்தினார்.. காமராஜரை முன்னிலைப் படுத்தினார் ஆதரிப்பதாக அறிக்கை வந்தது.. காமராஜரை குடியாத்ததில் நிற்க சொன்னார்.. அப்போது காமராஜர் நான் மிகவும் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன் குடியாத்ததில் முதலியார்களும் முஸ்லீமான்களுமே அதிகம் வசிக்கிறார்கள் என்ற போது உன்னை எப்படி ஜெயிக்கவைப்பதென்று எனக்கு தெரியும் எனகூறி பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை தமிழர்கள் எல்லோரும் ஆதரிக்கவேண்டுமென்றார்... தி.கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணாவும்.. காமராஜரை அந்த தேர்தலில் ஆதரித்தார்.. குணாளா மணாளா குலக்கொழுந்தே ..சென்றுவா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தும் ஆதரித்தார்.. காமராஜர் வென்றார்.. .. காமராஜர் முதல்வரான போது அப்போதைய காங்.தலைவர் U.N. தேவரை சந்திக்கவில்லை நேராக பெரியாரை சந்தித்து என்ன செய்யவேண்டுமென்ற போது .. ராஜாஜி 6000 பள்ளியை மூடிட்டார் அதை திறந்து நம்ம பிள்ளைங்களை படிக்க வைங்க .. என்றார்.. பள்ளிகளை திறந்தும் குழந்தைகளை படிக்கவைக்க பெற்றோர்கள் அனுப்ப மறுத்ததை அறிந்து குழந்தைகளும் வேலை செய்தால் தான் அரை வயிறாவது கிட்டுமென சொன்னார்கள் சோறு போட்டா அனுப்பிவைப்பாய்ங்க.. என்றறிந்து .. அதற்கான போதிய நிதி அரசிடமில்லை என்றவுடன் செல்வந்தர்கள் தொழில் அதிபர்களிடம் நன்கொடை வசூலித்து மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார் காமராஜர்.. பணம் போதவில்லை என்றவுடன் விவசாயிகளிடம் முதல் மரக்காய் சாமிக்கும் இரண்டாவது மரக்காய் ஊர்கோவிலுக்கு கொடுக்குறீங்க மூணாவது மரக்காய் எனக்கு கொடுங்க நான் பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்று எம் பிள்ளைகளின் பசியை போக்கியவர் பெருந்தலைவர்.. .. இரட்டைமலை சீனிவாசன் பேரன் பரமேஸ்வரனை அறநிலையதுறை அமைச்சராக்க பெரியார் கோரினார் அதையும் ஏற்று சமூகநலத்துறை (அப்போது சமூகநலத்தில் தான் அறநிலையம் இருந்தது) அமைச்சராக்கினார்.. அண்ணல் அம்பேத்கர் .. குளத்தில் குளிக்கவும் குனிந்து அள்ளி தண்ணீர் குடிக்கவும் மறுக்கிறான் ஆனால் தமிழகத்தில் என் இனத்தை சேர்ந்தவன் கோவிலுக்குள் நுழையும் அதிகாரம் பெற்றான் என்றார்.. பரமேஸ்வரன் வருகை கண்டு தில்லை நடராஜரும் ஸ்ரீரங்கத்து ரங்கநாதரும் பதறும் காட்சி கண்டேன் அந்த மாட்சி கண்டேன் என்றார் பேரறிஞர் அண்ணா.. .. காமராஜர் மிக சிறந்த நாத்திகர்.. எதுவும் உழைப்பால் வரவேண்டுமென்றும் மூடநம்பிக்கையால் எந்த பலனுமில்லை என்றார்.. ஆர்எஸ்எஸ் அவரை கொலை செய்ய முயற்சித்த போதும் என்னை கொல்லலாம் ஆனால் என் கருத்தை செயலை இதனால் தடுத்துவிட முடியாது என்றார்.. பெரியார் மிகவும் மதித்த தலைவர்.. பெரியார் கருத்துகளுக்கு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தந்த சிற்பி.. நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் காமராஜரின் ஆட்சியை .. திராவிட சிந்தாந்ததின் அல்லது திராவிட கருத்தியல் ஆட்சியின் தொடக்கமாகவே கருதவேண்டும் .. நல்ல தலைவராக திமுக அவரை மதித்து கொண்டாடி இருக்கிறது.. அவசரநிலையின் போது ஆட்சியே போனாலும் காமராஜரை கைது செய்யமுடியாதென்று உறுதியோடி இருந்தவர் கலைஞர்.. தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாய் கோபாலபுரத்திலே கலைஞர் வருவதற்குமுன் வந்து நின்றவர் அதே போல காமராஜரின் மறைவின் போது சகோதரனைப்போல முன்னின்று எல்லா காரியங்களையும் கலைஞர் செய்தார்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் அவரை கோபம் கொண்டதும் கொண்டாடியதும் உயரபிடித்ததும் திராவிடம் தான் முன்பு எழுதிய கவிதையொன்று ஞாபகம் வந்தது.. .. என்ன.. சொல்லிவிட போகிறேன் எளிமை.. எப்போதும்.. சொல்லில் இனிமை.. துணிவு.. செயல்திறன்.. அஞ்சாமை ஆளுமை, இரக்கம்.. நேர்மை. பொதுவாழ்வில் தூய்மை.. கல்வி #எல்லோருக்கும்_கல்வி .. .. எங்கள் அறிவாசான் #பெரியார் பள்ளியில் கடவுள் வாழ்த்துக்கு பதில் காமராஜர் வாழ்த்தை பாடவேண்டுமென்றார் இதைவிடவா சொல்லி விட போகிறோம்.. .. காமராஜர் பிறந்தநாள் ஜூலை15 .. ஆலஞ்சியார்

Saturday, July 13, 2019

திராவிடப் படை

தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி... யார் ஆள்கிறார்களென இப்போது புரியும் எதையும் சாதிக்க வக்கற்றவர்களிடம் தமிழகம் சிக்கி சின்னபின்னமாகி கொண்டிருக்கிறது மத்தியில் ஆள்வோரிடம் கேட்க கூட அஞ்சுகிறவர்கள் கையில் தமிழகம் .. அன்று மக்கள் செய்த தவற்றின் சொச்சம் இப்போதும் நம் உரிமையை பறித்துக்கொண்டிருக்கிறது .. .. என்ன செய்துவிட முடியும் இந்த 37 பேரால் என கேட்டவர்கள் தான் இப்போது நம்மை வாங்கி தர சொல்கிறார்கள் .. சுங்கவரி சாலை மேம்பாட்டிற்காக செலவிட்டபட்ட தொகையை சிறுக சிறுக திரும்ப பெறுவது திரு.வாஜ்பாய் காலத்தில் தொடங்கபட்ட திட்டம் பின்பு மன்மோகன் காலத்தில் விரைந்து டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது விரிவாக்கம் செய்யபட்டது குறிப்பிட்ட காலம் வரை வசூலிப்பதென்பதை .. பணம் கொட்ட தொடங்கியதும் வரியை உயர்த்துவதும் காலஅளவை நீட்டுவதுமாக தொடர்கிறது .. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும் .. திமுக எம்பிக்கள் இதை கவன ஈர்ப்பாக கொண்டு வந்து விவாதிக்கலாம் .. .. மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தவுடன் பார்பன நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதும் அதை சில புல்லுறுவிகள் மல்லுகட்டி ஆதரிப்பதும் தமிழகத்தில் தொடர்கிறது தமிழிசை பார்பனர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு 8 லட்சம் அல்ல 20 லட்சம் சம்பாதித்தாலும் அவர்கள் ஏழைகள் தான் அவர்களுக்கு 10% விழுக்காடு இடஒதுக்கீடு செய்யலாம் என்கிறார் .. பார்பனர்கள் மாதம் அறுபதாயிரம் சம்பாதித்தாலும் ஏழைகளாம் .. ஆனால் மற்றவர்கள் நாற்பதை தாண்டினால் வரிகட்டவேண்டும் அரசின் சலுகைகள் கிடைக்காது இந்த நாடு பார்பனர்களுக்கானது மட்டுமா சட்டம் யாவர்க்கும் சமமாக வேண்டாமா கிரிமிலேயர் அளவுகோல் எது .. எதற்காக பிற பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டதென்பதை தமிழிசை அறிவாரா.. நிர்மலா பொறுப்பு வகிக்கும் நிதித்துறை அதிகாரிகள் 1040 பேரில் 920 பேர் அதாவது 90% விழுக்காடு பார்பனரென்பதை அறிவாரா .. உயர்பதவி என்றில்லை இடைநிலை பதவியிலும் ஆதிக்கம் அதிகம் இருப்பது தமிழிசைக்கு தெரியுமா .. இத்தனை இடங்கள் IIT IMM ல் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவர்கள் இடங்கள் நிரப்பபடாமல் இதெல்லாம் உயர்வகுப்பினர்களுக்கு தாரை வார்ப்பது தெரியாதா .. யாருமே போராடாத போது உயர்வகுப்பினருக்கு வலிய சென்று 10% இடஒதுக்கீடு ஏன்.. தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பாஜக சேர்ந்து ஆதரிப்பதன் நோக்கம் என்ன ..தமிழக அரசு உறுதியான நிலைபாட்டை எடுத்து மத்திய அரசிற்கு அனுப்பவேண்டும் .. நீட் தேர்வு மசோதா போல காலங்கடத்தாமல் 37 பேர் இருந்தும் நாடாளுமன்றத்தில் வாய் திறக்காமல் கள்ளமௌனம் காத்து கோட்டைவிட்டதை போல் அல்லாமல் விரைந்து நடவடிக்கை தேவை .. .. திமுக பலம் பொருந்திய கட்சியாக நாடாளுமன்றத்தில் திகழ்கிறது சொல்வன்மையும், செயல்திறனும் போர்குணமும் கொண்ட திராவிட படை இருக்கிறது அதனால் தான் முதல்வர் திமுகவிடம் கேட்கிறார் .. போராளிகளை கொண்ட கட்சி எதையும் அடைந்தே தீருவதென்ற ஒற்றை நோக்கோடு தமிழர் நலன் சமூகநீதி மொழி இன கலாச்சார காவல் என சிறந்த கோட்பாடோடு திறம்பட செயல்படும் திமுக .. அதனால் தான் எடப்பாடி அடிமைகளால் சாதிக்க முடியாது ஆளுமைகளால் தான் முடியுமென நம்புகிறார் .. நல்லது .. திராவிடப் படை வெல்லும் .. ஆலஞ்சியார்

Tuesday, July 9, 2019

ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்ட்

சிகப்பு கூட ஒரு நாள் தேய்ந்து காவியாக போகும்.. ஆனால் கருப்பு ஒருபோதும் காவியாகாது என்ற கவிஞர் தோழர் #இன்குலாப் வரிகள் ஞாபகம் வந்தது .. .. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் என்பதே பார்பனீயரின் "புதிய ஏற்பாடு" ..எதுவரை இழுத்துச் செல்லவேண்டுமென அறிந்து அதுவரை கொண்டு சுமந்தவர்கள் .. தொடர்ந்து காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி ஐந்தாண்டுக்கொருமுறை ஞானோதயம் வந்து .. தேர்தல் நேரத்தில் மூன்றாம் அணி என பேசி திசை திருப்பி .. மாநில கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ஆசையை வளர்ந்து காங்கிரஸை ஒற்றைபடுத்த பார்பனீயத்திற்கு பயன்பட்ட இயக்கம் இடது கம்யூனிஸ்ட் கட்சி .. .. பாஜக வளர துணைபோனது அல்லது உறுதுணையாக நின்றது 1989 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போர்பஸ் ஊழல் பூதாகாரமாக பேசபட்டபோது மூன்றாவது அணி பாஜகவோடு ஒரு புரிந்துணர்வை செய்துக்கொண்டது சில இடங்களில் போட்டியிடுவதில்லை சில இடங்களில் பாஜகவும் போட்டியிட கூடாது அதற்கு அவர்கள் சொன்ன காரணம் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் இதற்கு பெரும் துணையாக இடதுசாரிகள் துணைபோனார்கள் .. 89 முன்பு இரண்டு இடங்களை பெற்ற பாஜக அப்போதுதான் 80 இடங்களை பிடித்து தன்நிலையை உறுதி செய்தது.. அதன் பிறகு காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே போல பார்ப்பதாக கூறி பாஜக வளர்ச்சிக்கு துணைபோய் கடைசியில் வங்கத்தில் கூட கரைய தொடங்கியது .. வங்கத்தில் கம்யூனிஸிட் கரையதொடங்கியதும் மெல்ல படர தொடங்கியது பாஜக .. .. பொலிட் பீரோ உச்சபட்ச அதிகார பீடமாக அறியபடுகிற மத்திய குழுவில் பார்பனர்கள் தங்கள் பிடியை முறுக்கிவைத்துக்கொண்டனர் சகல அதிகாரமும் கொண்ட பீரோ .. தொடர்ந்து பார்பன ஆதிக்கத்தில் தான் இருக்கிறது கம்யூனிஸ்ட் பிரிவதற்கு கூட காரணியாக இருந்தது .. கம்யூனிஸ்ட் ஆர்எஸ்எஸின் முற்போக்கு பேசும் அல்லது பேசுவதாக சொல்லும் ஒரு அமைப்பு அவ்வளவுதான் .. பொதுவுடமை சித்தாந்தத்திற்கும் இந்திய மார்க்.கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்பந்தமே இல்லையென சொல்லலாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்றாலே அது திராவிடம் தான் திராவிட சிந்தாந்ததம் தான் விளிம்புநிலை மக்களுக்காக ஒடுக்கபட்டவர்களுக்காக தொழிலாளி பாட்டாளி வர்க்கத்திற்காக உழைப்பதும் செயல்படுவதும் வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னதை நடப்பிலாக்குவதும் திராவிடம் தான் .. உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் இடது கம்யூ. கட்சிகளின் கருத்து பாஜகவோடு சேர்ந்தே இசைத்ததை நாடாளுமன்றத்தில் நாம் கண்டதுதான்.. 5% விழுக்காடு உயர்ஜாதியினருக்காக 10% விழுக்காடுதென்பது அயோக்கியத்தனம் பிற பொது சமுகத்திற்கு செய்கிற அநீதி .. இவர்களை அடையாளம் கண்டோம் இனி.. புறக்கணிப்போம்.. .. ஆலஞ்சியார்

Monday, July 8, 2019

இஸ்லாமிய கிராமங்கள் மணமில்லை.. .. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முகல்லாக்களில்.. மெல்ல மெல்ல இஸ்லாமிய கலாச்சாரங்களை மக்கள் மறக்க தொடங்கியிருக்கிறார்கள்.. அதற்கவர்கள் தரும் காரணங்கள் இஸ்லாத்தில் அது இல்லை.. .. முன்பெல்லாம் நோன்பு காலங்களில் பக்கீர்மார்கள்..தப்ஸ் அடித்துக்கொண்டு தெருக்களில் நள்ளிரவில் வலம் வருவார்கள்.. இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது.. வெயில் காலங்களில்.. மார்க்க பிரசங்கம் ..தெருமுனை பிரசாரமாகவே நடக்கும்..நோன்பு கால இரவு நேரங்கள்.. பக்தியின்..? பரவசவமாய்.. இளம் சிறார்கள் கூட கண்விழித்த காலம் காணாமல் போய் கொண்டிருக்கிறது.. அரபியை..ஒத மதரஸாக்கள் எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக இருந்தது காலையில் கண் விழித்தவுடன் குர்ஆனை தோளில் சுமந்து மதரஸாக்களுக்கு ஓடியதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.. .. பக்கீர்மார்கள்.. தலைமுறை தலைமுறையாக இணைக்கமாக வாழ்ந்தார்கள் .. பக்கீர்களின் மகிமை மறந்து போனதாகவே கருதுகிறேன் .. சட்டென்று பக்கீராகிவிட முடியாது அதற்கென்று நிறைய சடங்குகள் உண்டு .. மரணித்தவரை போல கபனிட்டு அடக்கம் செய்வார்கள் சில நிமிடங்களுக்கு பிறகு அவரை வெளியே எடுத்து பிராத்தனைகள் செய்து தஸ்பிக் மாலை அணிவித்து அவரை பக்கீராக அறிவிப்பார்கள் இப்போதெல்லாம் நடைமுறை மாறி மெல்ல பொலிந்துபோனகதையானது. பக்கீர்கள் சேவை இந்த தலைமுறையோடு முடிவு வந்துவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது.. அதிவேக வாழ்வியல் முறைகள்.. கொஞ்சம் பழமையை..மறந்து போகிறது.... நம்பிக்கை சார்ந்த விடயத்தை மீறி.. வாழ்வியல் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளாக,.. தொன்றுதொட்டு வந்த நடைமுறைகளாக எண்ணாததும் காரணமாக இருக்கலாம்.. .. பக்கீர்மார்கள்.. அவர்கள் வழிமுறையை எதிர்ப்போர் சொல்லும் விடயம் இதெல்லாம் இஸ்லாம் சொல்லாதது.. அவர்களிடத்தில் நான் வைக்கும் ஒரே ஒரு கேள்வி.. நீங்கள் #சம்பூரணஇஸ்லாத்தில் இருக்கிறீர்களா.. இஸ்லாம் சொன்ன எதையும் மீறாமல்.. எதையும் விட்டுகொடுக்காமல் பரிபூரண இஸ்லாமியனாக வாழ்வதாக சொல்கிறீர்களா.. .. இஸ்லாம்.. தனக்கு விரும்புகிற ஒன்றை தன் சகோதரருக்கும் தன் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை முஸ்லிம் ஆக முடியாது.. .. நல்ல விடயங்கள்.. வாழ்வின் அர்த்தம் பொதிந்த வாழ்வியல் முறைகள்.. நல்லது கெட்டதை பிரித்துணரும் பெரும் சேதிகள் நிறைய உண்டு.. .. எல்லாருக்கும் பொருந்தும்.. தனிப்பட்ட மத,இன, மொழியினருக்காக இல்லாமல் ஒட்டுமொத்த மனித குல மேம்பாட்டிற்கான வழிமுறைகளை.. செதுக்கி தந்திருக்கிறது.. .. வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ..நிறைய பொதிந்து கிடக்கிறது.. மதம் தாண்டி..இறைநம்பிக்கை அடுத்து மனித வாழ்வியல் சித்தாந்தங்களை, ஒழுக்கமான..உன்னதமான வழிகாட்டுதல்களை..வழிநெடுக விதைத்திருக்கிறது..இஸ்லாம்.. .. ஆனால்.. இஸ்லாத்தை மதமாக்கி...அதை வெறிகொண்டலையும் வீணர்கள் தவறாக பொருள் கொண்டதால்.. மார்க்கமிழந்து மதமானது.. .. நல்ல விடயங்களின்..பொற்குவியல் நாசகாரர்களின் கையில் என்றாகிவிட்டது.. ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. #இஸ்லாம் எத்தனை பிரிவுகள்..எத்தனை வேறுபாடுகள்.. யார் பெரியவன் என்பதில் தொடங்கி.. மற்றவரின் உரிமையை தரமறுத்து ஏன் பிடிவாதமாய் அவன் உரிமையை பிடுங்கும் அவலநிலை.. .. ஏற்கனவே சொன்னது போலவே முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமில்லை.. .. இஸ்லாம் மார்க்கம் நல்ல பாதை.. சிறந்த வழி.. எல்லாம் சரி.. ஆனால்... இங்கே மதமாய் காட்சியளிக்கிறது .. நிறைய விடயங்கள் விடைகாண முடியாமல்... படம்.. பக்கீர் லியாகத் அலி மற்றும் பக்கீர்மார்களோடு எடுத்துக்கொண்டது எல்லா கிளைகளிலும் வந்தமருவேன் நான்.. .. ஆலஞ்சியார்

Monday, July 1, 2019

வைகோ இனி நாடாளுமன்றத்தில்

23 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு செல்ல இருக்கிறார் எங்கள் போர்வாள் வைகோ நிறைய தடுமாற்றங்கள் வந்த வாய்ப்பை வேண்டாமென வைத்தது சரியான அணுகுமுறையில்லாமல் தடம்புரண்டு.. கடைசியில் ஒருவழியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை திமுக தலைவர் உணர்த்தி மாநிலங்களவையில் நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை தருவதாக வாக்குறுதி அளித்து சொன்னதை செய்திருக்கிறார் "சொன்னதை செய்வோம் " என்றவரின் பிள்ளை .. .. இக்கட்டான காலகட்டத்தில் பாசிசத்தின் கைகளில் இந்திய ஒருமைபாடு நசுக்கபடுகிறவேளையில் சமத்துத்துவத்தை சகோதரத்தை சமநீதியை சமூகநீதியை கடித்து குதறும் செயல்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க நீண்ட அனுபவமுள்ள வைகோ செல்வது சரியானதொரு தேர்வாகவேபடுகிறது .. ஆழ்ந்த அரசியல் அனுபவமும் எதிரிகளை குலைநடுங்கவைக்கும் ஆற்றலும் சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர் கலைஞரின் வார்ப்பாய் .. செதுக்கப்பட்டவர் தைரியமாக முகத்திற்கு நேரே ஆணியடிக்க இவரால் முடியும் சபையின் மூத்த உறுப்பினரும் கூட இவரின் அணுகுமுறையும் திறமையும் நல்லதொரு நட்புவட்டமும் பல்வேறு சமூக இன மக்களின் பிரதிநிதிகளிடத்தில் நட்புறவும் கொண்ட நல்லதொரு ஆளுமை வைகோ.. .. இன்றைய தமிழகம் கேடுகெட்ட கயவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாய் .. ஊழல் செய்து அதிலிருந்து தப்பிக்க பாசிசத்தின் அடிமைகளாய் கிடக்கிறார்கள் .. யார் ஆட்சி செய்கிறார்களென தெரியாமல் பொம்மையாய் ஒருவரை நிறுத்திவிட்டு பாஜக தன் பரிவாரங்களை அதிகாரத்தில் அமர்த்தி தங்கள் நலன் காக்க அரசை செலுத்துகிறது மடையர்கள் தலையாட்டி பொம்மைகளாய் கிடக்கிறார்கள் .. தமிழகம் மெல்ல தன் முகமிழக்கிற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. காவிரிக்கரைகள் பொலிவிழக்கிறது கடைமடை பகுதிகள்ோ வறண்டு .. அதில் மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்து பாலவனமாக்க நினைக்கிறார்கள் .. விவசாய நிலம் அழித்து சாலைகள் என்ற பெயரில் ..எரிவாயுவை இறக்குமதி விலைக்கே அதானியிடம் வாங்கலாமாம் ..அதற்தெற்கு எம் நிலத்தை மலடாக்கவேண்டும் இறக்குமதி செய்தால் போதுமே .. ஆட்சியாளர்கள் கோழைகளாய் தொடை நடுங்கிகளாய் இருப்பதால் .. பிற மாநிலங்கள் எங்கள் நிலத்தை தரமுடியாதென்ற பிறகு அணுகழிவை இங்கே கொட்ட தீர்மானிக்கிறது .. மருத்துவம் எம் பிள்ளைகளுக்கு எட்டாகனியாக்கி வசதியுள்ளவன் படிக்கலாமென்ற நிலையில் ..ஒரே நாடு ஒரே ரேஷன் .. என எல்லாநிலையிலும் எதிர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு ..மக்களவையில் திரு.ஆண்டிமுத்து ராசா இன்று இடஒதுக்கீடு குறித்து வகுப்பெடுக்கிறார்..எமது இளம்படையோ வீரியத்தோடு பாய்கிறது ..திமுக மாநிலங்களையிலும் வழக்கறிஞர் வில்சன், தோழர் சண்முகம் போன்றோரை அனுப்புகிறது .. சட்டத்தையும் போதிக்க .. இவர்களையெல்லாம் அனுபவத்தின் அடிப்படையில் வழிநடத்த வைகோ போன்ற ஆளுமை மாநிலங்களைவில் நுழைவது பாசிச சக்திகளுக்கு "பேதி" வரும் .. .. வைகோவை நிறைய விமர்சனம் செய்திருக்கிறோம் சரியான பிழையாக கூட சிலநேரம் உரக்க கூறியிருக்கிறோம் .. ஆனாலும் அவரின் நேர்மையும் தன்னலமற்ற சேவையும் கூரிய அறிவு திறமையையும் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை இன்றைய சூழலில் வைகோ மிக சரியான சிறப்பான தேர்வு .. வாழ்த்துகள் வைகோ .. ஆலஞ்சியார்