Sunday, March 31, 2019

பெண் ஆளுமைகள்

பெண் ஆளுமைகள் பொதுவாழ்விற்கு வருவதற்கு மிகவும் தடையாக இருக்கிற சமூகசூழலிலும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னி கொண்டுதானியிருக்கிறார்கள் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களில் கூட பெண்களை தங்களோடு சேர்ந்து பயணிக்கவோ அல்லது தனித்து செயல்படவோ விடுவதில்லை பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு நிறைய தடைகற்களை சமூகம் குடும்பம் நட்புவட்டம் என எல்லாபக்கங்களிலிருந்தும் கூர்தீட்டிய ஈட்டியை புன்னகையோடு எறிவார்கள் .. நமக்கெல்லாம் செட்டாகாது .. ஆண்கள் நிறைந்த அரசியலில் ஒரு எல்லைவரைதான் பயணிக்க முடியும் என தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள் அவர்களின் அசௌகரியங்களை சுட்டிகாட்டுவார்கள் பெண்களை குலசாமி என்ற புகழ்ந்து அழுத்திவைக்கவே இந்த சமூகம் விரும்பும் அரசியல் என்றில்லை இலக்கியங்களில் கூட புகழ்ந்தே உயர எழ முடியாமல் செய்வார்கள் மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றெல்லாம் பிதற்றி .. வாய்ப்பை தரமறுத்து மங்கையரை அவர்கள் விரும்புகிற விடயங்களில் பிரகாசிக்க விடுவதேயில்லை .. .. 33% விழுக்காடு கேட்டுகேட்டு தளர்ந்து போனதுதான் மிச்சம் இந்திய ஜனநாயகம் உலகில் பேசபடுகிற சிறந்துவிளங்கிற நிலையில் கூட பெண்களுக்கான உரிமையை தர மறுக்கிறோம் அத்திபூத்தாற்ப்போல சிலர் வருகிறார்கள் அப்படி வருகிறவர்களை நாம் கொண்டாட வேண்டும் அரசியலில் சில பெண்களின் வரவால் இந்த நாடும் சமூகமும் பின்னடைவை சந்தித்தபோதும் சில பெண் ஆளுமைகளை நாம் கொண்டாட மறுத்ததாலேயே பிரேமலதா போன்றவர்களில் வியாபார உக்தியை கையிலெடுத்து திரிகிறார்கள் .. ஒரு சிலரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லையென்பதால் பெண்களின் வரவில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை மாறாக கடுமையான விமர்சனங்கள் எழுகிறது இது பாலியனத்தால் வருவதல்ல என்பதை உணரவேண்டும் நிறைய தடைகள் இருந்தபோதும் மிகசிறந்த ஆளுமைகளாக இந்திரா பிரியதர்ஷினி போன்ற பிரமாண்ட ஆளுமைகளை நாடு கண்டிருக்கிறது .. .. இந்த தேர்தலில் சில பெண் ஆளுமைகள் பளிச்சென்று தெரிவது மகிழ்வை தருகிறது .. கனிமொழி கருணாநிதி ஜோதிமணி தமிழச்சி .. போன்றவர்கள் தமிழகத்தின் ஒளியாய் பிரகாசிக்க வருகிறார்கள் இவர்கள் சிறந்த பண்பாளர்களாய் பேராளிகளாய் கொள்கையில் தெளிவும் சுயமரியாதையும் கொண்டவர்களாய் இருப்பது பெருமைக்குரிய விடயம் இவர்களின் வெற்றி என்பது தமிழகம் எப்போதும் சுயமரியாதைக்கும் பெண்ணுரிமைக்கும் போராடும் களம் என்பதை உறுதிபடுத்துவதாக அமையும் .. நிறைய பெண்கள் களத்தில் உண்டென்றாலும் திறமையானவர்களாக தெளிவான சிந்தனையுடையவர்களாக .. இந்த மண்ணின் பெருமையறிந்தவர்களாக.. பாசிசத்திற்கெதிரானவர்களாக.. மண்சார்ந்த பண்பாட்டை மதிக்கிறவர்களாக இவர்கள் இருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது .. இவர்கள் வெற்றி பெற வைப்பது நமது கடமையாகும் .. நம் இனத்தின் சுருதிபிழைகள் சில வந்து நிற்கும் ஆனால் வெறுக்கதக்க கோட்பாட்டோடு பேரிறிச்சலை தருவார்கள் அவர்கள் பேராப்பத்துகள் .. பிரேமலதாவை போல சில ஆபத்துகள் இசை வடிவிலும் வரும் அவர்கள் புறக்கணிக்கபடவேண்டியவர்கள் .. .. நம்மோடு பயணிக்கிற.. நல்லதொரு சமூகபார்வையும் அரசியல் நெறிசார்ந்த அறமும் கொண்டவர்களை வெற்றிபெற வைப்போம் அதுவே நாட்டிற்கும் இனத்திற்கும் நல்லது .. ஆலஞ்சியார்

Friday, March 29, 2019

வாக்கு விற்பனைக்கு அல்ல

வெளிப்படையாக வாக்குகளை விலைபேசுகிறார்கள் தேனியில் ஒரு பள்ளியில் பேரம் பேசபட்டு மொத்தமாக விலைபேசி பணம் தரபட்டிருக்கிறது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நிலை இதுவல்ல எனினும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது .. இவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அல்லது அந்த ஜமாத்தின் நிலைபாட்டை உறுதி செய்பவர்களா ..இவர்களுக்கு முஸ்லிம்களை விலைபேசி விற்கும் அதிகாரத்தை யார் தந்தது .. வாக்குகளை ஒட்டுமொத்தமாக வாங்க நினைப்பவர்களையும் .. விற்க துணிபவர்களையும் கைது செய்ய வேண்டும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தபடவேண்டும் .. ஒபிஎஸ் மகனுக்காக இந்த விலைபேசல் நடந்திருக்கிறது ஏற்கனவே தபால் வாக்குகளுக்காக துணை முதல்வரே விலைபேசும் விடியோ வெளியாகி இருந்தது அதன் உண்மைதன்மையை ஆராய வேண்டும் உண்மையெனில் வேட்பாளர் தகுதி நீக்க செய்யவேண்டும் .. தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிய செயல்பாடுகளால் ஜனநாயகம் கேலிகூத்தாகவே பார்க்கபடுகிறது நம்பிக்கையின்மை தேசத்தின் குரல்வளையை நெறித்துவிடும்,.. .. தேர்தல் இன்னமும் நேர்மையாக நடப்பதாக நம்பிக்கொண்டிருப்பது வாக்குகளை விலைபேசுவோருக்கு வெற்றியை வாங்கும் சக்தி உள்ளவனோடு சமானியன் எதிர்த்துநிற்கவே முடியாத சூழல் சமீபகாலமாக தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது .. பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க ₹5 ஐந்துரூபாய் கொடுத்து காமராஜர் தொடங்கி வைத்தது இன்று ஆயிரம்கணக்கில் என உயர்ந்து நிற்கிறது தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது .. மிகவும் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் பிகாரில் கூட இவ்வளவு அநியாயம் இல்லை பக்கத்து மாநிலத்தில் கேரளம் பணம் கொடுத்தால் கொசுத்தவன் கைது செய்து சிறையில் அடைக்கிற வரை போராடுவார்கள் .. எனது வாக்கு எனது உரிமை என்று போர்கொடி உயர்த்துவார்கள் .. ஆனால் தமிழகத்தில் எல்லா மக்களுமே குறிப்பிட்ட சமூகம் சமுதாயம் ஏழை பணக்காரன் என்றில்லை எவ்வளவு தருவீர்கள் என கேட்கும் கேவலமான மனநிலைக்கு வந்திருக்கிறார்கள் இது மாற வேண்டும் .. .. யாருக்கு வாக்களித்தால் இந்த நாடு நல்லநிலையில் வரும்.. அனைத்து தரப்பு மக்களின் உரிமைகள் பாதுகாக்கபடும் .. ஒடுக்கபட்ட விளும்புநிலை மக்களின் உயர்வுக்கு வழிவகை செய்யும் .. அனைவருக்கும் சமமான நீதியை நிலைநாட்டும் சமூகநீதியை காத்திடும் பல்வேறு இன கலாச்சாரம் கொண்ட நாட்டில் அவரவர் பண்பாட்டை காத்திட.. மாட்டிற்காக மனிதனை கொல்லும் கொடூரத்தை தடுத்திடவும் .. நாட்டின் வளத்தை பணமுதலைகளுக்கு தாரைவார்க்கும் பாசிச சிந்தனையை வீழ்த்தவும் யாரால் முடியுமென ஆராய்ந்து .. இந்த நாடு இனியும் இந்த பாசிச கோமாளிகளை விவரகேடுகளை பொய்யர்களை .. மதகலவரத்தையும் சாதிய மோதலும் தூண்டி குளிர்காயும் பிற்போக்குவாதிகளை ஆட்சியில் தொடரவிட்டோமானால் நாடு சுடுகாடாகும் என்பதை உணர்ந்து .. ஜனநாயத்தின் மூலம் இழந்த பெருமையை மீட்க நல்லதொரு விடியலை தர வல்லவர்களுக்கு வாக்களிப்போம்.. .. வாக்கு விற்பனைக்கல்ல .. ஆலஞ்சியார்

Tuesday, March 26, 2019

விழலுக்கு இறைத்த நீர்

பொதுவான சின்னம் தினகரன் அணிக்கு தரலாம் என சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றம் .. அது மட்டுமா சொல்லியது வென்றாலும் அவர்கள் இனி சுயேச்சைகள் தான்.. ஏன் இப்படியொரு தீர்ப்பு இதன் பொருள் ..கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்கள் வரமாட்டார்கள் இவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் கட்சிதாவல் சட்டம் பொருந்தாது என்பதால் பதவி வெறியில் பணத்தின் பாசத்தில் மாபோ பாண்டியராஜன் பண்ரூட்டி ராமசந்திரன் போல இனி ஜாலியா கட்சி தாவலாம் .. தினகரனுக்கு எந்த வகையிலும் நன்மை தராத தீர்ப்பிது உயர்நீதிமன்றம்,சில கேள்விகளை எழுப்பியது இரட்டை இலை குக்கர் இரண்டுக்கும் உரிமை கோருவதை எப்படி ஏற்பது .. இதுவரை பதிவு செய்யாத கட்சிக்கு எப்படி ஒதுக்கமுடியும் .. உண்மையில் இதுவரை அமுமுக வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை அவர் தன் கட்சியை பதிவு செய்து அதிமுகவை விட ஒரு ஒட்டு அதிகம் வாங்கி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் ..இப்போது தினகரன் கட்சிக்கு வாக்களிப்பது என்பது .. ஒருவேளை வென்றால் கூட விலைக்கு வாங்கிட ஏதுவாக இருக்கும்.. அதைதான் பாசிச பாஜக செய்கிறது .. தினகரனும் பாஜகவோடு செல்வதற்கு தயக்கம் காட்டுபவர் அல்ல ..அழைத்தால் ஓடோடி சென்று ஆதரவு தருபவர்தான் அழைக்காமலேயே ஆதரவு தந்த வரலாறெல்லாம் உண்டு இவரை நம்பி போய் நிற்கிற சில சில்லரை பார்ட்டிகளும் கூட வந்தவர்களின் நிலைதான் அந்தோ பரிதாபம் .. வேட்புமனு முடிந்தது இரு தினங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வந்துவிடும் திமுக கூட்டணியை தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் .. பாசிசத்தின் கைக்கூலிகளாய் இனத்தின் மொழியின் மதத்தின் பேரை சொல்லி சில உதிரிகட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிகின்றன.. திடீரென்ற அரசியல்வாதியாவரெல்லாம் கருணாநிதியின் மகன் என்பதிலிருந்து அரசியல் அரிச்சுவடியை கூட அறிந்திருக்கவில்லை ... தளபதி மிசா கொடுமையை சிறையில் அனுபவித்த போது .. திரையில் டூயிட் பாடிக்கொண்டிருந்தவருக்கு என்ன தெரியும் .. இஸ்லாமிய மதத்தின் காவலரைப்போல எண்ணிக்கொண்டு இளைஞர்களை வழிகெடுக்கும் " பாகவிகளும் .. இனத்தை,மொழியைச் சொல்லி வயிறுபிழைப்பவர்களும் .. உண்மையில் நாட்டிற்கு தீங்குவிளைவிப்பவர்கள் வாக்குகளை பிரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யபட்டவர்கள் .. இவர்கள் பாசிசத்தின் பெயர்சொல்லாத குழந்தைகள் .. நோக்கம் பாசிச பாஜகவின் அதை பின் துணைப்பவர்களின் வெற்றிக்கு சிறிய அளவிலேனும் உதவுவதுதான் இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி .. .. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மொத்த உயர்பதவிகளும் பார்பனர்களுக்கென்று எழுதபடாத விதியாகி போகும் இப்போதே இணைச் செயலர் பதவிகளில் 260 பேர் ஐஏஸ் முடிக்காதவர்களை நியமித்திருக்கிறது ஆர்எஸ்எஸ்காரர்கள் அரசு பணியில் நியமனம் மிக எளிதாக வரம்புகளை மீறி நடைபெறுகிறது .. இந்திய நாட்டின் இறுதி தேர்தலாக போகும் வாய்ப்பை உருவாக்குகிறார்கள் .. நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் ஆதிக்கம் வெளிப்படையாக எந்த வித கூச்சமுமின்றி ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் செயல் செய்கிறார்கள் .. எங்கெல்லாம் வெற்றிபெற முடியவில்லையோ மக்கள் ஆதரவில்லையோ அங்கெல்லாம் கைக்கூலிகளை கொண்டு ஜனநாயகத்தை நரம்பை அறுக்கிறார்கள் .. சனாதன திமிர் .. நாங்கள் பார்பனர்கள் ..காவலாளியாக முடியாது எங்கள் சொல்பேச்சை கேட்பதுதான் காவலாளிகள் வேலை அதுதான் நீதி என பேசும் துணிச்சலை இந்த அரசு தந்திருக்கிறது .. இவர்களை விரட்டுவது மட்டுமல்ல இவர்களுக்கு துணைபோகும் அடிமைகளை, திரைமறைவில் உதவும் கைக்கூலிகளை உதிரிகளை இனங்கண்டு தோற்கடிப்போம்,.. .. நாடும் நலம்பெற .. நாட்டின் நலிவு நீங்கிட ஜனநாயகம் மலர்ந்திட .. தேசத்தை பாதுகாத்திட திமுக காங் கூட்டணியை வெற்றிபெற செய்வோம் .. திமுக கூட்டணிக்கு மாற்றாக யாருக்கு வாக்களித்தாலும் அது வீண்.. விழலுக்கு இறைத்த நீர்.. .. ஆலஞ்சியார்

Monday, March 25, 2019

இருள் அகலட்டும்

தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதை நம்பிதான் ஆகவேண்டும்.. சமீபகாலமாக அதன் நடவடிக்கைகளை நீதிமன்றமே கவலைகொள்கிற வகையில் இருப்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழகத்தில் ஆளும்கட்சியின் தோழைமைக்கு கேட்கிற சின்னம் ஒதுக்கபடுவதும், எதிரணிகளுக்கு மறுக்கபடுவதும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை சந்தேகம் கொள்ளவைக்கிறது .. தினகரனுக்கு கேட்ட சின்னம் வழங்கமுடியாதென கடைசி நேரத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்வது கடைந்தெடுத்த ஒருசார நிலைப்பாடு .. .. தேர்தல் களைக்கட்டியிருக்கிறது ஏறக்குறைய முக்கிய கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள் ஜோதிமணிக்கு கூடிய கூட்டம் கரூருக்கு புதியது.. கனிமொழி தமிழிசை திருமா இளங்கோவன் பழநிமாணிக்கம் ராசா என இந்த முறை பிரமிக்க வைக்கும் ஆளுமைகள் திமுகவின் தேர்வு சிறந்த நாடாளுமன்ற வாதங்களை இனி கேட்கலாம் தென்றாலாய் புயலாய் சீறிவரும் சொற்களால் அறிவாயுதம் ஏந்தி வருவார்கள் .. டெல்லியில் தமிழகத்தின் புகழ் மீண்டும் மிளிரும் .. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் ரகத்தை சேர்ந்தவர்களை அனுப்பி அவமானபட்டது போதும் இனியேனும் அண்ணாவும்,இரா.செழியனும் நாஞ்சிலாரும் மாறனும் சிவாவும் ராசாவும் தந்த ஆளுமையை காண்போம் .. பெயருக்கு சிலரை அனுப்பி மேசையை தட்டியும் தூங்கிவழிந்தும் பாசிசத்தின் பிடியில் கிடந்து தவிக்கும் சிறகொடிந்த குருவியைப்போல தவித்து நிற்கும் பேதைகளை அனுப்பாமல் கொண்ட கொள்கையில் சமரசம் செய்துக்கொள்ளாமல் ஆணித்தரமாய் பேசும் ஆற்றலுடையோரை .. தமிழகத்தின் மானம் காப்போரை .. வடக்கின் போக்கை மாற்றி தெற்கின் திசை நோக்க செய்யும் ஆளுமைகளை பாசிச்திற்கு முடிவுகட்டும் போராளிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்வோம்,.. .. ஜெயலலிதாவால் அனுப்பட்ட விவரகேடுகளால் தமிழகம் சந்தித்த இழிநிலையை போக்கி நாடுபோற்றும் திறமையாளர்களை தேர்வு செய்து அனுப்பி இழந்த பெருமைகளை மீட்போம் .. பாசிச அடிமைகளை அவர்களுக்கு துணைபோகும் மத வெறியர்களை ..சாதிய உணர்வை தூண்டி குளிர்காய நினைக்கும் ராமதாசன்களை, மக்களை மதம் கொண்டும் பிரிக்கும் பாசிசவாதிகளை இனங்கண்டு விரட்டுவோம்,.. பன்முகம் கொண்ட இந்திய ஒன்றியத்தின் மாண்பை காண்போம் .. ஒரே மதம்,ஒரே இனம் ஒரே கலாச்சாரமென்ற பார்பனீய பாசிச பிற்போக்குதனத்தை வீழ்த்தி பன்முக கலாச்சாரத்தை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம் .. ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாட்டில் தேர்தலால் மட்டுமே கொடூரமான ஆட்சியை வீழ்த்த முடியும் கொலையும் கொள்ளையும் சர்வசாதாரமானமார நடத்தும் அவலம் .. முற்போக்கு சிந்தனையாளர்களை கொலை செய்யும் போக்கு .. எதை உண்ண வேண்டுமென மக்களை நிர்பந்திக்கும் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தபட வேண்டும் மக்கள் தன்னெழுச்சியாய் திரள்கிறார்கள் மாநிலத்தின் அடிமை ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் இந்த தேர்தல் பயன்படட்டும் நல்லதொரு விடியலை நாடு காணட்டும் .. உதயசூரியன் ஒளி பரவட்டும் .. காரிருள் அகலட்டும், .. ஆலஞ்சியார்

Sunday, March 24, 2019

தீதும் நன்றும் பிறர்தரவாரா

ஏன் இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்தமுறை வாய்ப்பளிக்கவில்லை காரணம் என்ன என்பதை இஸ்லாமிய சமூகம் உணர்ந்ததாக தெரியவில்லை .. 5.86% விழுக்காடு (4,229,479) மக்கள் தொகை கொண்ட சமூகம் முற்றிலுமாக புறக்கணிக்கபட்டிருக்கிறது .. அதேபோல சிறுபான்மையினராக இருக்கும் கிருஸ்துவ சமுதாயத்திற்கு (6.26%) எல்லாகட்சிகளிலுமே வாய்ப்பு வழங்கபட்டிருக்கிறது .. மிக குறைவான விழுக்காடு வேறுபாடுதான் ஆனால் அவர்களால் எல்லாகட்சிகளிலும் தங்களின் உரிமையை பெற முடிகிறது ஆதிக்கம் செலுத்த முடிகிறது .. ஏன் இஸ்லாமிய சமூகத்தால் இயலவில்லை..? ஒற்றுமையின்மை .. திமுக தன் தோழமைக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியதோடு நிறுத்திக்கொண்டது அதிமுக அதுவும் இல்லை.. இதற்கெல்லாம் என்ன காரணம் .. ஒற்றுமை இல்லாமல் 42லட்சம் மக்களுக்கு 42 கட்சிகள் அமைப்புகளாய் பிரிந்து கிடப்பதும், ஒருவரையொருவர் காலைவாருவதும் யாருக்கு தலைமையென்பதில் தொடங்கி .. யார் பெரியவர் .. ஏன் தனக்கு உரிய மரியாதையில்லை பதவி சுகம் என காரணங்களால் மாபெரும் தலைவர்களை தந்த சமுதாயம் இன்று யாருக்கும்,வேண்டாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. இஸ்லாமிய இளைஞர்களை வழிகெடுத்ததில் பெரும்பங்கு மத போதகராய் வந்து காமகளியாட்ட புகழ் பி.ஜே வையே சாரும்.. தனக்கு எல்லாம் தெரியும் தான் சொல்வதே சரி என நம்பவைத்து மூளைச்சலவை செய்தது சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி உறவின் முறைகளை பகைமையாக்கி ... அமைதி மார்க்கமென்று அறியபட்ட இஸ்லாத்தை வேறொரு கோணத்தில் பொது சமூகம் அறிய காரணமானதில் பெரும்பங்குண்டு .. அதிலிருந்து தொடங்கிய பிரிவினைகள் ஆன்மீகம் அரசியல் என மக்களை வேறுபடுத்தி .. எந்த மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்தியதோ அதை மறந்து பிரிந்துகிடக்கிறார்கள் வலுவில்லாத எதுவும் வென்றிட முடியாதென்ற யதார்த்தத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத சமூகம் ஒன்றுபட்டால் மட்டுமே உயர்வென்பதை அறியாமல் போனது வேதனை .. இஸ்லாமிய சமூகத்திற்கு.. அவர்களின் நலனுக்கு ,பாதுகாப்பிற்கு யார் விரோதமானவர்கள் என்பது கூட விளங்காமல் கூப்பாடு போடுகிறார்கள் .. தங்களின் சட்டைபை நிரம்பினால் போதும் என்கிற தலைவர்களை வைத்துக்கொண்டு இந்த சமுதாயம் இனி எக்காலத்திலும் எதையும் சாதித்துவிட முடியாது .. .. பல்வேறு அமைப்புகள் பல கட்சிகளோடு பயணிப்பதில் தாங்களே இஸ்லாமிய சமுக மக்களின் நலனுக்காக செயல்படுகிறவரென பேசி திரிவதில் காட்டுகிற அக்கறை .. இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி பொருளாதார வளர்ச்சியில் காட்டியிருக்கவேண்டும் .. யார் சரியானவர் என தெரிந்து அவர்களை ஒருங்கிணைந்து பின்துணைக்க வேண்டும் .. இன்றைக்கும் சிறையில் வாடும் முஸ்லிம்களின் நிலையென்ன யாரால் இந்த நிலைக்கு ஆளானார்கள் யார் தூண்டுதலின் பேரில் செயல்பட்டார்கள் .. அவர்களுக்கு ஏன் தொடர்ந்து வக்காலத்து வழங்கபடாததன் நோக்கம் என்ன நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து செலவு செய்து நடத்ததாது ஏன் .. பல்வேறு கட்டங்களாக நிதி திரட்டியும் வழக்கை சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு நடத்ததாது ஏன் .. இப்படி நிறைய கேள்விகள் .. பி.ஜே வோடு கூடவே இருந்த ஷம்சுதீன் காஸிமியின் வாக்குமூலம் சுயரூபத்தை காட்டுவதாக இருக்கிறதே .. .. தேர்தல் அரசியலில் தொடர்ந்து பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் செயலை சில அமைப்புகள் தொடர்ந்து செய்துவருகின்றன .. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன .. கேரள மலப்புரத்தில் கூட இதே செயலை sdpi செய்கிறது .. தமிழகத்தில் பாஜகவின் கைக்கூலிகளோடு மறைமுகமாக / வெளிப்படையாக உதவுகிறார்கள் .. இவர்கள் இஸ்லாமிய சமுகத்தின் புரையோடிய புற்றுகள் .. இவர்களை புறக்கணிக்காதவரை இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் உரிமைகள் மறுக்கபடும் என்பதே நிதர்சனம் .. தீதும் நன்றும் பிறர்தரவாரா.. .. ஆலஞ்சியார்

Saturday, March 23, 2019

கைநாட்டு

கைநாட்டு.. ஒருவரின் அடையாளமாய் அவரின் கையெழுத்தும் கைநாட்டும் உறுதிபடுத்த பயன்பட்டது ஆனால் இப்போதெல்லாம் கைநாட்டில் கூட போலிகள் உலவுகிறது .. ஜெயலலிதாவின் கைநாட்டு போலியானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பெழுதி .. திருபரங்குன்றம் போஸின் வெற்றியை செல்லாதென்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது .. எம்எல்ஏ மறைந்து சிலகாலம் ஆனபின் தீர்ப்பு வந்து யாருக்கு பயன் என்றெல்லாம் கேட்டால் அவமதிப்பாய் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் .. கைநாட்டு போலியானதா இல்லையா என்பதை விசாரிப்பதற்கு கூட வருடங்கள் தேவைபடுகிறது .. ஜெயலலிதா சிறை சென்ற போது அவரிடம் சிறை அதிகாரிகளால் பெறபட்ட கைநாட்டையும் வேட்புமனு தாக்கலின் போது பரிந்துரைத்த கடிதத்தில் உள்ள கைநாட்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதும் ...இருவாரங்களில் தீர்ப்பே தந்துவிடலாம் ஆனாலும் நாம் இந்திய நீதிமன்றங்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதானிருக்கிறோம் .. சரி தீர்ப்பில் சில சுவாரஸியமான தகவல்களை நீதிபதி சொல்கிறார் .. ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்பதற்கு சாட்சியம் இல்லை .. பாலாஜி செல்வதற்கு முன்பே கைநாட்டு பெற பட்டிருக்கிறது .. தேர்தல் படிவத்தில் கைநாட்டை ஒரே கடிதத்தின் மூலம் ஏற்றது சட்டவிரோதம் .. தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டிருக்கிறார் .. தேர்தல் அதிகாரிக்கு அழுத்தம் தரபட்டிருக்கிறது .. கூடவே ஆளுநரே சந்திக்க முடியாத போது டாக்டர் பாலாஜி பார்த்தார் என்பதை ஏற்க முடியாது .. இதுதான் தீர்ப்பின் முக்கிய விடயங்கள் .. அப்படியெனில் டாக்டர் பாலாஜி தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மீது ஏன் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க கூடாது .. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலிகூத்தாக்கியிருக்கிறார்கள் யாருக்காக எவர் நிர்பந்தத்தின் பேரின் செய்தார்கள் .. ஜெயலலிதா அப்போதைய நிலை என்ன..? இவர்களை எல்லாம் உயர் அதிகார வர்க்கத்தையே ஆட்ட்வைத்தது யார் .. தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீதான குற்றசாட்டிற்கு பதில் என்ன.. ? .. ஜெயலலிதாவின் கைநாட்டு போலி என்பதை கண்டுபிடிக்க இத்தனை வருடம் காத்திருந்ததில் யாருக்கு பயன் .. ஏற்கனவே டான்சி வழக்கில் இதேபோல் ஜெயலலிதா தான் சுயநினைவோடு இட்ட கையெழுத்தையே இல்லை என்ற கூறியவர்தான் .. கடைசியில் எங்கே மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்று விடுவோமோ என அஞ்சி .. டான்சி சொத்தை திருப்பி அரசுக்கே தந்துவிடுகிறேன் என உச்சநீதிமன்றத்தில் சொன்னவர்தான் .. ஜெயலலிதாவிற்காக இந்திய நீதிமன்றங்கள் வழங்கிநின்றதும் .. வாயிதாக்களுக்கு மேல் வாயிதா போட அனுமதித்ததும் .. விசாரணை முடிந்து தீர்ப்பை காலதாமபடுத்தி .. அவர் மரணிக்கும் வரை காத்திருந்து பிறகு தீர்ப்பு வழங்கியதும் .. அதனால் திருடி ஜெயலலிதா உத்தமர் போல சித்தரிக்கபட்டு .. சட்டமன்றத்தில் படதிறப்பு அரச மரியாதையோடு அடக்கம் .. அரசு செலவில் குற்றவாளிக்கு மணிமண்டபம்.. கடைசி பாரதரத்னா விருதுக்கு பரிந்துரை .. இவ்வளவிற்கும் காலதாமதமான நீதியே காரணம் .. .. ஜெயலலிதாவிற்காக நீதித்துறை வழங்கிய சலுகைகள் நீதித்துறை வரலாற்றில் கருப்பான பக்கங்களாகவே வரலாறு பேசும் நாட்டின் இன்றைய அவநிலைக்கெல்லாம் தாமதமான நீதியே முக்கிய காரணம் கலைஞரின் மொழியில் சொல்லவேண்டுமெனில் .. நல்லவனுக்கானதா நீதி.. இங்கே வல்லவனுக்கானதே நீதி.. .. ஆலஞ்சியார்

Friday, March 22, 2019

தீதும் நன்றும் பிறர்தரவாரா..

இந்த தேர்தலுக்கு பிறகு சில கட்சிகளை தங்கள் அடையாளத்தை இழக்கும் ..சில கரைந்து காணாமல் போகும் .. ஒஹோ என புகழ்ந்து ஊடகங்கள் எல்லாம் பின்னால் சென்ற தினகரன் .. பணத்திற்காக எதையும் இழக்க தயாராகி நிற்கிற ராமதாஸ் .. தன் மனைவியாலேயே கெட்டு குட்டுசுவராகி போன விஜயகாந்த்..ௌ தன் நிலையறியாது போன மாளிகை மலர்ந்த வாசன் ..இவர்களெல்லாம் ஒதுக்கபட வேண்டியவர்கள் மட்டுமல்ல அரசியலிலிருந்தே அகற்றபட வேண்டியவர்கள் .. .. தன் சொந்த குடும்பத்தை சேர்ந்த மூவர் ஊழலுக்காக தண்டனைப் பெற்று சிறையில் வாழ்வை கழிக்கும் போதும் .. ஏதோ தியாகம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போனதைப் போல பேசி திரிந்து அதிமுகவை கைக்குள் கொண்டுவர திட்டம் தீட்டி கடைசியில் .. ஸ்லிப்பர் செல் என்று யாருமில்லை தன்னோடு இருப்பவர்கள் தான் ஸ்லிப்பர் செல் என்பதை அறியாமல் .. ஒவ்வொருவராய் தினகரனை விட்டு பிரிகிறார்கள் .. செந்தில் பாலாஜி தொடங்கி இப்போது ஒரத்தநாடு வி.பி.கலைராஜன் .. அதிலும்,கலைராஜன் உறவின் முறை கூட.. பணத்தை வீசி விலைபேசி வென்றுவிட்ட திமிரில் ஆடியது கடைசியில் ஒவ்வொருவராக இழக்க நேரிடுகிறது திருவண்ணாமலைக்கு ஆளே கிடைக்காதது தான் மிச்சம் ..யாரும் நிற்கவே அஞ்சுகிற சூழல் .. தோல்வி உறுதியென்றவுடன் ஏன் நிற்பானேன் செலவு செய்வானேன் என்று ஓடியொளிகிறார்கள் .. எதையும் விலைபேசி விடலாமென்ற திமிர் ஒடுக்கபடவேண்டும் .. ராமதாஸ் தன் சுயநலத்திற்காக சொந்த சாதியினரையே ஏமாற்றி விலைபேசி விற்க துணிந்தவர் .. நேற்றுவரை எடப்பாடியை அந்த ஆளெல்லாம் ...என வாய்க்குவந்தபடி பேசு திரிந்தவர்கள் .. தமிழகத்திலேயே தாங்கள் தான் அறிவாளிகள்போல எடப்பாடிக்கெல்லாம் நிர்வாகம் என்றால் என்னென்ன தெரியுமா என எகத்தாளம் பேசியவர்கள் டயர் நக்கியென கிண்டல் செய்தவர்கள் காசுக்கு காலை நக்குகிற இழிசெயலை செய்கிறார்கள் இந்த கேடுகெட்டவர்களை அந்த சமுதாய மக்களே ஓட..ஓட விரட்டவேண்டும்.. காசு கொடுத்தால் பெற்ற தாயை கூட விலைபேசிவிடுவார்கள் இந்த மகாபாதகர்கள் இதுவரை இப்படியொரு மோசமான கேவலமான கேடுகெட்ட அரசியல் வாதியை நாடு கண்டதில்லை மாறி மாறி சவாரி செய்து பிழைத்துக்கொண்டிருந்தவர்கள் முகமூடி கழன்று விழுந்துவிட்டது வன்னிய சமூக மக்களே இவர்களை வெறுக்க தொடங்கிவிட்டார்கள் சொந்த நலனுக்காக தங்களின் அபரிதானமான வளர்ச்சிக்காக எதையும் செய்ய துணிவார்களென சமுதாய மக்கள் அறிந்து விரட்டிட தயாராகிவிட்டார்கள் .. இந்த தேர்தலோடு இறுதி அத்தியாயம் தொடங்கும் முடிவுரையை எட்டும் .. விஜயகாந்த் .. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டியவர் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து வரலாற்றுப் பிழையை செய்தார் .. இவரை வழிகெடுத்ததில் பெரும்பங்கு சோ.ராமசாமி அய்யருக்கு உண்டு தொடர்ந்து தனித்து களம் கண்டிருந்தால் மெச்சபட்டநிலையை அடைந்திருக்கலாம் .. தேமுதிகவை உடைத்து 10 பேரை ஆர்எஸ்எஸ் கைக்கூலி மாபியா பாண்டியராஜன் உள்பட ஜெயலலிதா தனியாக இயங்க அனுமதித்தபோதே கட்சி உடைய தொடங்கியதை கவனிக்க மறந்தார் .. பழம் நழுவி பாலில் விழவேண்டியது .. தன் மனைவியின் பேராசையால் சாக்கடையில் விழுந்து விஜயகாந்தே கட்டிவச்சகாசு(டெபாசிட்) இழக்க வேண்டியிருந்தது .. உடல் நலியுற்றவுடன் தன் மனைவியின் கட்டுபாட்டில் கட்சியை கொண்டுபோய் .. அணி மாறி மாறி வியாபாரம் பேச கடைசியில் அழிவின் விளிம்பில் நிற்கிறது .. .. வாசன் மூப்பனாரின் மகன் என்ற ஒற்றை தகுதி மட்டுமே அவரை மத்திய மந்திரியாக்கியது திறமையின்மையும் கட்சியை வளர்ப்பதில் பண்ணையார் மனப்பான்மையும் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து கேவலபட்டு நிற்கிறார் சொந்த தொகுதியில் பத்தாயிரம் வாக்குகள் கூட பெற முடியாத நிலைதான் சொந்த செல்வாக்கும் கைவிட்டநிலையில் கட்சியை நடத்துவதென்பது அறிவிலித்தனமாகவே போகும் காங்கிரஸிலேயே இருந்திருந்தால் சில இடங்களில் கூட ஆதரவாளர்களை நிறுத்தியிருக்கலாம்.. தீதும் நன்றும் பிறர்தரவாரா.. கடைசியில் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் .. தமிழக அரசியலிலிருந்தே ஒதுக்கபடவேண்டியவர்கள் இவர்களுக்கு அளிக்கும் வாக்கு தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் .. தமிழகத்தையே அடகுவைக்க தயங்காதவர்கள் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை இனங்கண்டு .. புறக்கணிப்போம் அரசியலை விட்டே விரட்டியடிப்போம் .. .. நாற்பதும் நமதே உதயசூரியன் உதிக்கட்டும் .. ஆலஞ்சியார்

Wednesday, March 20, 2019

உதிக்கட்டும் சூரியன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் அதிமுக கூட்டணியை கதிகலங்க செய்திருக்கிறது அன்புமணி ராமதாஸ் தனக்கு நெருக்கமான கட்சி பிரமுகர்கள் இடம் பொள்ளாச்சி பாலியல் ரீதியான செய்திகள் குறித்து ரெம்பவே புலம்புகிறாராம் அதோடு மட்டுமில்லாமல் #பேசியது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை என்பதால் புலம்பல் அதிகமாம் .. நீங்கள் களத்திற்கு போங்க வந்து சேரும் என்று பதில் வந்ததை கேட்டு மீண்டும் அப்செட் என்பதாகவும் தெரியவருகிறது. இவருக்கு மட்டுமல்ல பிரேமலதாவிற்கும் இன்னும் வரவில்லையாம் .. தேர்தல் நேரத்தில் நக்கீரன் வெளியிட்டு கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கபடுகிறது.. வேட்பாளர் தேர்வில் பன்னீரோடு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தன் மகனுக்கு மட்டும் தேனியை ஒதுக்கியது சலசலப்பை தந்திருக்கிறது .. .. பாஜக வேட்பாளர் பட்டியல் தமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்க்கிறார்கள் .. பாஜகவின் வெற்றிகரமான தோல்வி உறுதிசெய்யபட்டுவிட்டது .. திமுக இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் .. இனி வரும் காலங்களில் திமுகவின் வெற்றி கல்வெட்டில் செதுக்கிவைத்ததைப்போல நீண்டநாட்கள் நிலைபெற்று நிற்கும்.. பலவீனமான ஆளும்கட்சி .. நிறம் மாறும் பச்சோந்தியாய் பாமக .. நிற்கவே வலுவில்லாமல் தேமுதிக.. இவர்களோடு தமிழகத்தில் முகவரி தேடும் பாஜக இவர்களை மக்கள் வெறுக்கிறார்கள் ... முழுவதுமாக புறக்கணிக்கபடவேண்டியவர்களென மக்கள் அறிந்திருக்கிறார்கள் .. நாம் தமிழர் .. மக்கள் நீதிமய்யம் என்பனவெல்லாம் களைந்து போகும் கனவை போன்றவர்கள் அரசியலின் இலக்கணமே அறியாதவர்கள் .. மய்யம் அரசியல் தெளிவின்றி சொல்கிறது குறைந்தபட்ச பட்டபடிப்பு தகுதியாம் .. பாமரர்களுக்கு படிப்பறிவில்லாதவர்களுக்கு வாக்குறிமை தர கூடாதென்ற சர்ச்சில் சொன்னபோது .. அவர்களை சேர்ப்பது தான் உண்மையான ஜனநாயகம் என்றார் பண்டிட் ஜவகர்லால் நேரு.. .. திமுகவின் களப்பணி மிக சரியாக இருக்குமேயானால் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை தரகூடியவகையில் வெற்றி அமையும் .. முழுவதுமாக தோற்றுப்போய் நிற்கிற மாநில அதிமுக அரசும் மக்கள் விரோத பாசிச பாஜக அரசையும் வீழ்த்த .. அதே வேளை மிக சரியான மாற்றாக காங்கிரஸ் திமுகவை வெற்றிபெற வைக்க மக்கள் தயார் என்பதை தான் தஞ்சை திலகர் திடலில் மக்கள் எழுச்சி நமக்கு காட்டுகிறது .. முப்பது நாட்கள் தொய்வின்றி உழைத்தால் நாடு முன்னேறும் .. தளபதி சொன்னதைப்போல கலைஞர் பிறந்த ஜூன் 3 .. மத்தியில் ஆட்சி மாற்றத்தை செய்து ... நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் தானைதலைவருக்கு .. பேரருளாளன் கலைஞருக்கு பிறந்தநாள் பரிசளிப்போம் .. .. உதயசூரியன் உதிக்கட்டும் இருள் அகலட்டும் .. .. ஆலஞ்சியார்

Tuesday, March 19, 2019

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை .. விடுதலை இந்தியாவில் முதன் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதே திமுக தான் .. இன்றைக்கு உதரிகள் .. தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்காத கட்சிகள் எல்லாம் தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது .. வெற்றிபெற போவதில்லை .. என்ற தைரியத்தில் அளந்துவிடுகிறார்கள் .. திமுக வென்றால் தேர்தல் அறிக்கை சட்டமாகும் .. தோற்றால் போராடியேனும் சட்டமாக்க முயலும்,..இதுதான் திமுக ஏற்கனவே சொன்னதைப்போல திமுகவிற்கு அரசியல் சொல்லி தருவது பல்கலை கழகத்திற்கே அரிச்சுவடியை சொல்லி தருவதைப்போல.. பிரபலமான மருத்துவருக்கே வைத்தியம் சொல்லிதருவதைப்போல..ே .. திமுக தேர்தல் அறிக்கையில்.. நீட் தேர்வு ரத்து .. எழுவர் விடுதலை ..தென்னக நதிகள் இணைப்பு .. வேளாண்மை மண்டலம், கல்வி மாநில பட்டியலில்.. கீழடி ஆய்வு தொடரும் ..என சமூகம் சார்ந்த நலன் ..மாநில நலன் மக்கள் நலன் மற்றும் உரிமைகளை மீட்க உறுதி அளிக்கிறது .. கிராமபுற பெண்களுக்கு ₹50,000 வரை நிதி உதவி... மாணவர் கல்விகடன் ரத்து .. வரிவசூலில் 60% மாநிலங்களுக்கு வழங்கல் மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ் என ..அனைத்துதரப்பையும் கவர்ந்த அறிக்கை .. திமுக தனியாக குழு அமைத்து அதில் விவாததித்து எதையெல்லாம் சேர்க்கவேண்டும் என ஆய்ந்து எது முடியும் எது தவிர்ககவேண்டும் என எது நம்மால் முடியாது வெற்று வாக்குறுதிகளை தராமல் முடியும் .. போராடி பெற முடியும் என்ற நம்பிக்கையில் தயாரிக்கபட்டது .. .. நாட்டிற்கே தேர்தல் அறிக்கையை தந்தவர்கள் .. சின்னபையன் எல்லாம் காப்பியடிப்பதாக புலம்பிவைக்கிறார்.. நேற்றொரு பேச்சும் இன்றைக்கொரு பேச்சு பேசி திரிகிறவர்கள் மாறி மாறி வீராப்பு பேசிவிட்டு மண்டியிட்டவர்கள் உளறிவைக்கிறார்கள் ..வெற்றிபெற போவதில்லை ..அதனால் யாரும் கேள்விகேட்கமாடடார்களென்று அறிக்கையில் அளந்துவிடுகிறார்கள் .. இந்தியாவில் கொடுத்த வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றிய கட்சியும் திமுகதான் ..திமுக தேர்தல் அறிக்கை எப்போதுமே,தொலைநோக்கோடு சமூகநீதியை காத்து மக்கள் நலன் மாநில நலன்காப்பதாகவே இருக்கும்,.. .. வலியுறுத்துவோம் எல்லாம் இல்லை நிச்சயம் நிறைவேற்றுவோம் ..இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் வேறுபாடு.. தேர்தல் அறிக்கை தலைவர் சொன்னதைப்போல கதாநாயகன் கதாநாயகி.. நிச்சயமாக வில்லனாக இல்லை.. .. ஆலஞ்சியார்

Monday, March 18, 2019

திமுக ..

வாரிசு அரசியல் என கூப்பாடு போடுகிறீர்... கடவுள் தூதர்கள் என.. வந்தவர்கள்..? எல்லாம் வாரிசுள் தான் வாரிசு நமக்கு புதிதான என்ன..? ஆனாலும் கடவுளின் வாரிசையும் தான் கொண்டாடி தீர்க்கிறோம் .. அரசியலில் வாரிசு தவிர்க்கமுடியாதது எல்லா கட்சிகளுமே வாரிசு அரசியலை செய்கிறது தான் ஆனால் திமுகவை மட்டுமே பேசுகிறோம்,விமர்சிக்கிறோம்.. தேர்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு பின்புலம் தொகுதிக்கு அறிந்த முகம் அன்றைய சூழலில் வெற்றிபெற இலக்கு இவையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும் .. திமுகவிற்கு அரசியலை சொல்லி தராதீர்கள் பிரபல மருத்துவருக்கே வைத்தியம் சொல்லி தருவதை போல அது .. திமுகவிலும் உடனே எல்லாம் கிடைத்துவிடாது .. தஞ்சை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆறு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர் இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .. ஏன் தமிழச்சி.. நான்குமுறைக்கு மேல் விருப்பமனு தாக்கல் செய்தவர்தான் .. ஏன் என் தம்பி பிரசன்னா இரண்டுமுறைக்கு மேல் கேட்டும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை .. அவர்களுக்கு புரியும் அந்தந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐம்பதாண்டுகள் அரசியல் பயின்ற தலைவர் யாரை நிறுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும் .. யாரால் இப்போதைய வெற்றி மிகப்பெரிய வெற்றியாகுமென அறிவார் .. .. இந்த முறை வேட்பாளர் தேர்வில் பெரியளவில் அதிருப்தி இல்லை சின்ன சலசலப்பு கூட கட்சியினரிடம் தென்படவில்லை மாறாக அனைத்துதரபினரையும் திருப்தி செய்திருக்கிறது வேட்பாளர் தேர்வு .. சிலர் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தபடவில்லையென்று கேட்கின்றனர் .. ராமநாதபுரம் மயிலாடுதுறை தவிர மீதமுள்ள தொகுதிகளில் பெரியளவில் இஸ்லாமிய சமூகமக்கள் இல்லை .. ராமநாதபுரம் முஸ்லிம்லீக் ஒதுக்கபட்டிருக்கிறது மற்ற தொகுதிகளில் கணிசமான வாக்கு இருப்பதை ஒப்புகொண்டாலும் சட்டமன்ற தொகுதி எனில் வெற்றி வாய்ப்பு இலகுவாகும் .. தேனியில் காங்கிரஸ் சார்பில் இஸ்லாமியர் நிறுத்தபடுகிறார் .. அதோடு விரும்பமனுவை தரவில்லையென்பதும் காரணம் ஆனாலும் இஸ்லாமியர்களின் மனகுறையை கவனத்தில் கொள்வோம்,.. தமிழகத்தில் 5.86 % விழுக்காடு அதாவது 4,229 ,479 பேர் முஸ்லீம்கள் .. ஆனால் இருபதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்திற்காக (பணம் புகழ் பதவி) சிதறி கிடக்கிறார்கள் இதை எழுதி முடிப்பதற்குள் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம் .. என்னசெய்ய. ? தேர்தல் அரசியலில் வெற்றிக்கு ஒற்றுமை வேண்டுமென்ற பொதுநியதி கூட அறியாத சமூகமாய் போனதுதான் கவலைதரும் விடயம்.. இப்போதைக்கு எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது கட்டாயம் பாஜகவின் கைக்கூலியாய் சில இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரஸ் திமுகவின் வெற்றியை தடுக்க வாக்குகளை பிரிக்க முயற்சிக்கின்றன உ.பி.யில் கர்நாடகவில் நடந்ததைப்போல வெற்றியை தடுத்து அதன் மூலம் பாஜகவிற்கு உதவுவது என்பதே அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செவ்வனே செய்து வருகிறார்கள் .. ஆனால் தமிழகத்தில் அவர்களை புறக்கணிக்கபட்டவர்களாக ‍.. மத மோதலை செய்கிற அல்லது தூண்டுகிறவர்களாக மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் .. அவர்கள் எண்ணம் இந்த தமிழ் மண்ணில் ஈடேறாது .. .. திமுகவின் எதிர் அணி வேட்பாளர்கள் பலவீனமானவர்களாக மட்டுமல்ல அதிகம் அறியபடாதவர்களாக மக்கள் வெறுப்பிற்கு ஆளானவர்களாக இருப்பது திமுகவிற்கு சாதகம் .. ஆனாலும் திமுக எச்சரிக்கையோடு களப்பணி ஆற்றிட வேண்டும் பாசிச பாஜகவை விரட்டிட அடிமை அதிமுகவை ஆட்சியிலிருந்து கீழிறக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் .. நம் மனகுறைகளை எல்லாம் மறந்து திமுக நிற்கிறது உதயசூரியன் நிற்கிறது தோழமை கட்சிகளின் சின்னம் அதுதான் நமக்கு தேவை வெற்றி ஒன்றே இலக்கு .. .. ஆலஞ்சியார்

Wednesday, March 13, 2019

உதயசூரியன்

தஞ்சாவூர்.. எங்க மண்ணில விளைச்ச நெல்ல அளக்கும் போது முதல் மரக்காயை லாபம் என்று தான் அளப்போம் .. அதே போல தஞ்சாவூரை வாசனுக்கு தந்து திமுகவிற்கு லாபத்தை வரவு வைத்திருக்கிறார்கள் இந்த முறை திமுகவின் வெற்றியை எதிரிகளே வசப்படுத்துவார்கள் .. .. பொய்யும் புரட்டும் சூதும் வஞ்சனையும் கொள்ளையும், சேர்ந்து வருகிறது சிரித்துக்கொண்டே.. கொஞ்சமும் கூச்சமின்றி நேற்றுவரை ஒருவரை ஒருவர் திட்டியும் பழித்தும் குறைகூறியும் வந்தவர்கள் பணமொன்றே பிரதானமாய் கொண்டு ஒன்று சேர்ந்து பொய்யாய் சிரித்து நம்மை கேலியாக்குகிறார்கள் .. எதையும் வாங்கிவிடலாமென்ற திமிரும் ஆளும் நாட்டை ஆளும் பாசிச அரசின் தயவும் இருப்பதால் தங்கள் தலைக்குமேலே தொங்கும் ஊழல்வழக்குகள் குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து விடலாமென்ற ஆணவத்தில் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் அவர்களோடு வாசன் ..ஏற்கனவே சொந்த ஊரில் கட்டிவச்ச காசை இழந்த தமாகா .. இப்போது இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறது இந்நிலையில் தஞ்சையில் போட்டியிட்டு கட்டிவச்சதும் போகபோகிறது கூடவே மூப்பனாரின் பெயரும் புகழும் மானமும்.. .. தமிழகத்திலிருந்து சென்றவர்களால் மதிப்பிழந்து மரியாதை போய் தமிழர்களென்ற கர்வத்தோடு திரிந்ததெல்லாம் பழங்கதையாய் போனது கடந்த முறை தேர்வாகி சென்றவர்களால் .. அதை மீட்கவேண்டும் இம்முறை அறிவுடையோரை ஆக்கபூர்வமாய் செயல்படுவோரை தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டோரை அனுப்பிவைப்போம்.. தமிழர்களுக்கெதிராய் செயல்படும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட இம்முறை உதயசூரியனின் ஒளியில் மிளிரும் தோழமைகளை வெற்றி பெற செய்வோம் .. #ராகுல் நம்பிக்கைக்குரியவராய் வருகிறார் எதையும் துணிவோடு எதிர்க்கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே பெற்றிருக்கிறார் ..பகட்டில்லா எளிமை பொய்யில்லா தூய்மை அறநெறியோடு அரசியல் எதையும் உள்வாங்கும் தெளிவு குறிப்பாக புதிய வாக்காளர்களிடையே நன்மதிப்பு .. அரசியலில் இவரை போன்ற இளைஞர்கள் கையில் நாடு இருந்தால் எதையும் வெல்லலாம் ..புதிய இந்தியாவை உருவாக்குவதாக கூறி நம்மை பின்னோக்கி இழுத்து சென்றவர்கள் .. மதமோதலையும் சாதியவெறியையும் புராணம் புரட்டு மநுநீதி என நம்மை இழிநிலைக்கு ஆளாக்கி நிறுத்தியிருக்கிறார்கள் .. தூய்மையான இந்தியா என்று சொல்லி நம்மை ஒன்றுமில்லாமல் துடைத்ததுதான் மிச்சம் .. ராகுலை ஏன் வேண்டுமென்கிறோம் ”நீட்” தேர்வை பற்றி ராகுல் காந்தி : எங்களுக்கு பிரச்னை புரிகிறது. அது இந்த மாநில இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. நாங்கள் திறந்த மனம் உள்ளவர்கள், இது கண்டிப்பாக சரிசெய்ய முடியும். இதற்கு தீர்வு எட்டப்படும் 😍 ❤ Rahul Gandhi on NEET : We understand the issue, its discriminatory against youngsters in this state. we are flexible people, we can work it out. It's resolvable. 😍 .. வெறுப்போடு இருப்பவர்கள் மீது அன்போடு இருங்கள் எல்லா மதங்களும் அன்பைதான் போதிக்கின்றன, அன்புதான் அடிப்படை அன்பு மூலமாகத்தான் கோபத்தை குறைக்கமுடியும். நமக்கு கற்றுக்கொடுப்பவர்களை நாம் வெறுக்கமுடியுமா? அதனால் அவரை (மோடியை) அணைத்துக்கொண்டேன். நரேந்திர மோடியின் மீது அன்பு செலுத்த நபர்கள் இல்லாததால்தான் அவர் வெறுப்போடு இருக்கிறார்என்று எண்ணுகிறேன். உங்களை தாக்குபவர்கள்தான் உங்களின் ஆசிரியர்கள் என்று நீங்கள் கருதவேண்டும். வெறுப்போடு இருப்பவர்கள் மீது அன்போடு இருங்கள். இதுதான் இந்திய நாட்டின் குணம், குறிப்பாக #தமிழ்மக்களின் குணம்,'' உயர்ந்த பேச்சு மிக சரியான நபராக மிளிர்கிறார் ராகுல் .. ராகுலை பிரதமராக்க தமிழகத்திலிருந்து பெருவாரியான தொகுதிகளை திமுக கூட்டணி வெற்றிபெறுவது அவசியம் நிச்சயம் நடக்கும் தெளிவோடு ஒருமுறை சிந்தித்து திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வோம் .. .. #உதயசூரியன் .. ஆலஞ்சியார்

Tuesday, March 12, 2019

பொள்ளாச்சி

பொள்ளாச்சி .. தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்கும் கொங்குவின் இன்றைய நிலை மிக பரிதாபம்.. கொங்கு மக்களின் வாழ்வாதாரத்தில் கைரளியரின் பங்கு குறிப்பிடதக்கவகையில் உண்டு கைரளியரான மகோராவின் மீதான இனம்புரியாத பாசம் அதிமுகவிற்கு தொடர்ந்து கைக்கொடுத்தது .. இடையில் பாசிசத்தின் கரம் மெல்ல ஊடுருவியதும் மத சாதிய வெறி தாண்டவமாடியது .. சாதிய திமிர் என்று கூட சொல்லலாம் வளமான வாழ்வும் செழிப்பும் அரசியல் கட்சிகளை மீறி ஊர்கட்டுபாடு என்ற பெயரில் சாதிய அடக்குமுறைகள் நடந்ததுண்டு பெண்களுக்கெதிரான தாக்குதல் தொந்தரவுகள் பெரியளவில் பேசபடாமல் அடைக்கபடும்.. ஊர் கட்டுபாடென்ற பெயரில் அல்லது சாதி குல பெருமையை காப்பதாக சொல்லி நிறைய தவறுகளை மூடி மறைப்பதும் சர்வசாதாரணமாக நடப்பதுதான் .. இப்போது நக்கீரனால் வெளிவந்திருக்கிற பாலியல் குற்றங்கள் மிரட்டல்கள் ஏறக்குறைய ஆறாண்டுகளாக நடந்துவந்திருக்கிறது ஆனால் யாருமே மானத்திற்கு அஞ்சி அல்லது குலபெருமையை காக்க மிரட்டலுக்கு பயந்து மூடி மறைத்திருக்கிறார்கள் .. கடைசியில் வேறுவழியின்றி புகார் அளிக்க ...கடைசியில் பூதாகாரமாய் விசயம் வெளிவந்திருக்கிறது .. ஆனால் இதை ஊடகங்கள் கள்ளமௌனம் காத்ததும் ...எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளும் அரசின் மூடிமறைக்க பார்ப்பதாக சொல்ல விஸ்வரூபம் எடுத்தது .. சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவியதும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பில்லை என பேட்டி தந்து அதிமுககாரர்கள் இதில் சம்பந்தபடவில்லையென சொன்னதும் ஏன் பூனைக்குட்டி வெளியே வருகிறதென சந்தேகம் வர தொடங்கியது .. .. பெண்குழந்தையின் கதறல் நம் செவிகளை கிழிக்கிறது காம கொடூரன்கள் ..மிரட்டி பணம் பறிப்பதும் தர வசதியற்றவர்களை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவமாக மிக கேவலமாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள் .. இவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கபடவேண்டுமென்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது ஆனால் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க ஆளும்தரப்பு முயற்சிக்க கூடாது .. இன்றைக்கு தோழர்.கனிமொழி ஆர்ப்பார்ட்டம் நடத்தி கைதானார் .. ஏன் அரசியலாக்குகிறீர்கள் என கேட்கிறார்கள் .. அரசியலாக்க மனமில்லை தான் ஆனால் அரசியலாக்கினால்தான் தீர்வு கிடைக்குமெனில் அரசாங்கம் கவனிக்குமெனில் செய்வதில் தவறில்லை .. பாதிக்கபட்ட பெண் பற்றிய தகவலை தர கூடாதென்கிறது சட்டம் ஆனால் காவல்துறையே பாதிக்கபட்ட பெண் பற்றி தகவலை தந்தது ஏன் .. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதென்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் .. விசாரித்தது யாரென்று பார்த்தால் பெண்களை நடுரோட்டில் அறைந்தவர் .. இவர்களை எப்படி நம்புவது .. எழாண்டுகளாக நடந்த கொடூரமான செயலில் நான்கு பேருக்குதான் தொடர்பென்றல் நம்புவதாக இருக்கிறதா.. அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என காவல்துறை அதிகாரி .. அரசியல்கட்சி கொள்கைபரப்பு செயலாளர் போல அவசர அவசரமாக பேசியது யாரை காப்பாற்ற.. என கனிமொழி அரசிற்கெதிராக ஆணியடித்தார்.. .. நக்கீரன் ஆசிரியர் கோபால் .. வெளிப்படையாகவே பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை குற்றம்சாட்டுகிறார் .. இதெற்கெல்லாம் தீர்வு கிடைக்கவேண்டுமெனில் .. இதை அரசியலாக்கினால் தான் உண்மை வெளிவரும் .. தேர்தல் நேரத்தில் அரசியலாக்காதீர்களென தமிழிசை புலம்புகிறது .. ஏன் கலக்கம் சம்பந்தபட்டவர்கள் அதிமுகவினர்கள் என்பதாலா அது மிகப்பெரிய சரிவை தருமென்பதாலா.. இந்துக்களுக்கென்றால் காவி புரட்சி வெடிக்குமென்றவர்தானே .. இதோ இப்போது வாய்மூடி மௌனிப்பதேன் .. அரசியலுக்காக சொல்லவில்லை விரட்டபடவேண்டியவர்கள் சங்கிகள் .. .. திமுகவிற்கு அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது பாதிக்கபட்ட பெண்களுக்காக மட்டுமல்ல இனிமேல் யாரும் பாதிக்ககூடாதென்ற அக்கறை இருக்கிறது .. இந்த கேவலமான காமகொடூரன்களை பெண்களை மிரட்டி சீரழித்த கயவர்களை சட்டத்தின் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பு திமுகவிற்கு உண்டு அதைநிச்சயம் செய்யும் .. ஆலஞ்சியார்

Monday, March 11, 2019

ஆட்சி மாற்றம்

தேர்தல் ஜனநாயக நாட்டில் நம்பிக்கையோடு காத்திருந்து நாம் விரும்புகிறவரை அல்லது கட்சியை ஆட்சியில் அமர்த்த நடக்கிற திருவிழா .. .. அனைத்து மரபுகளையும் தூக்கிபோட்டு மிதிக்க சர்வாதிகார சிந்தனையுடய ஆட்சியை கீழிறக்க .. பாசிச சிந்தனையை பரவலாக மக்கள் மீது திணிக்க துணிகிற .. பல்வேறு மொழி இன கலாச்சாரத்தை அழித்து பார்பனீய கலாச்சாரத்தை திணிக்க முயல்கிற ..சாமானிய மக்களை சுரண்டி .. பண முதலாளிகளுக்கு வெண்சாமரசம் வீசுகிற .. சிறுதொழில்களை நசுக்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழிவகை செய்கிற .. எல்லாவற்றிலும் பொய் பேசி திரியும் மூடர்கள் கூட்டத்தை அஞ்சாமல் ஆவணங்கள் திருட்டு போவதாக உச்சநீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தருகிற .. பாதுகாப்புத்துறைக்கே பாதுகாப்பில்லாத நிர்வாகத்தை தந்து இந்தியாவை தலைகுனிவை ஏற்படுத்திய கல்வியை பணமுள்ளவனுக்கென்று மாற்றி ஏழைகளின் உயர்கல்விக்கு வேட்டுவைத்த நாட்டுமக்கள் எதிர்ப்பை மீறி கனிமவளத்தை கொள்ளையடித்த .. எதிர்த்த மக்களை சுட்டுகொன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிற .. ஒரே நாளில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி பணமதிப்பிழப்பென்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க துணைநின்ற .. மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கோடிக்கணிக்கை மக்களிடம் பிடித்த பணத்தை பணமுதலைகளிடம் கொடுத்து அவர்களை வழியனுப்பிவைத்த.. மாட்டுக்காக மனிதனை கொன்று ருத்ரதாண்டவமாடிய .. மாட்டுக்கு தரும் மதிப்பை பச்சிளங்குழந்தைக்கு தராமல் ஆகிஜிஸன் இல்லாமல் கொன்று குவித்த .. பாசிச ஆட்சியை விரட்டிட தேர்தல் திருவிழா வருகிறது .. .. தமிழகத்தில் அடிமைகளாய் இனமானமற்று .. கண்டவனுக்கும் விலைபோகிற அடிமைகள் .. சொந்தமார நிற்க முடியாதவனை தூக்கிபிடிக்கிற அவலம் நோட்டோவோடு போட்டிபோடுகிறவர்களுக்கு விசிறி வீசும் கேடுகெட்ட கயவர்களை மத்திய அரசு செய்ய நினைக்கிறதை எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் .. தமிழக நலனுக்கெதிரானதென்றாலும் உடனே தலையாட்டி சம்மதம் தெரிவித்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிற .. எங்கே தாங்கள் செய்த ஊழல்களால் கொள்ளைகளால் ..சிறை செல்ல நேரிடுமோ என அஞ்சி பாசிச கூட்டத்திற்கு அடிமையாய் .. மானமிழந்து நிற்கும் மடையர்களின் ஆட்சியை வீழ்த்த இடைத்தேர்தல் வருகிறது தமிழினத்தை வீழ்த்த நினைக்கிற தமிழர்களை அடக்கி ஆள நினைக்கிற .. தமிழர் நலனுக்கெதிராக செயல்படுகிற .. மிக சிறந்த தலைவர்களை தந்த தமிழகத்தின் அழியாத பழியை தந்து நம்மை கேவலபடுத்திய ஆட்சியை.. கொலை கொள்ளை என்ற பட்டியலில் .. இதோ பெண்குழந்தைகளின் கதறல் .. இனியும் இந்த அதிமுக ஆட்சி தொடரவேண்டுமா தமிழகம் இழந்த பெருமைகளை மீட்க அதிமுகவை வீட்டுக்கும் அனுப்ப தேர்தல் வந்திருக்கிறது .. .. நாட்டின் நலன் கருதி .. பேயாட்டம் ஆடும் பாசிச ஆட்சியை வீழ்த்தி .. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் .. தமிழகத்தில் திமுக ஆட்சியை நேர்மையான ஜனநாயக முறையில் அமைத்திட 18 தொகுதிகளிலும் வெற்றியை தருவோம்,.. நாடாளுமன்றத்திலும் 40 தொகுதிகளில் வெற்றியை தந்து அமைதி புரட்சியை செய்வோம்,.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் கொலை கொள்ளை ஊழலுக்கெதிராக மட்டுமல்ல பொள்ளாச்சி பெண்களை சீரழித்த குற்றவாளிகளையும் தண்டிக்கமுடியும் .. ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு .. ஆலஞ்சியார்

Friday, March 8, 2019

கடைசியில் நிஜ முகம் தெரிந்தது இயலாமையும் வெறுப்பும் கோபமும் வார்த்தை விழுந்தது .. துரைமுருகனின் ஒரே வார்த்தையில் மொத்தத்தையும் உருவிவிட்டு விரட்டிய கதையாகிப்போனது .. துரைமுருகனின் ஒற்றை சொல் தேமுதிகவையே இல்லாதாக்கிவிட்டது தேமுதிகவினர் வந்து பேசியதை தலைவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசரமில்லை அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்ற சொல் தேமுதிகவின் பிம்பத்தையே தகர்த்துவிட்டது .. அவ்வளவு வொர்த் இல்லையென்பதை அவர்களுக்கே புரியவைத்த தருணம் .. .. பிரமேலதா .. விஜயகாந்த் மனைவி என்பதை தாண்டி அவர் முக்கியத்துவம் இல்லை தேமுதிக இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பேராடியிருக்கிறது குறைந்தபட்சம் கண்டன ஆர்ப்பார்ட்டமாவது நடத்தியிருக்கிறதா ..? தேர்தல் நேரத்தில் நல்ல விலைபேசலாம் என்ற வியாபார நோக்கோடு மருத்துவசிகிச்சையில் இருந்தவரை அழைத்து வந்து களைப்புமிகுதியால் விமானநிலையத்திலேயே ஓய்வெடுக்கவேண்டிய நிலை இருப்பவரை முன்னிறுத்தி பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு பெயர் அரசியலா .. 37 எம்பிகள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு என்ன பயனென்கிறார் ..உண்மை பிறகு ஏன் அவர்களிடத்தில் தொகுதிக்கு பேரம் பேசவேண்டும் தகுதியற்றவர்களை கொண்ட கட்சியென்றபிறகு திரும்ப திரும்ப ஏன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் தேமுதிகவால் தமிழகத்திற்கு ஏதாவது நன்மை உண்டா மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா .. நீட் போன்ற திணிப்புகளை கண்டித்து தெருவில் இறங்கி கண்டனத்தை பதிவு செய்ததுண்டா.. .. மணப்பெண் என்றால் 10 பேர் பார்க்கதான் வருவார்கள் என்கிறார் சரி.. ஆனால் ஒரே இரண்டு இடத்தில் தட்டுமாத்த முடியுமா என பார்ப்பது எவ்வளவு கேவலம் .. துரைமுருகன் திமுக தலைமை பற்றி இவர்களோடு பேசினாராம் துரையை அறிந்தவர்களுக்கு அவரின் செயல்பாடுகள் தெரியும் கலைஞரே துரையின் மனசு கண்ணாடி பெட்டியை போன்றதென்றார் .. தேமுதிக அழிவதற்கு யாரும் காரணமல்ல பிரேமலதாவை தவிர.. கட்சியை கம்பெனி லெவலுக்கு நகர்த்தியது இவர்தான் உடல்நலியுற்று கணவர் இருக்கும்போது .. அவரை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமென முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது .. ஆனால் இவர்களின் பேராசையும் தன்னிலையறியாத செயலும் தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது .. ஐம்பதுவருட அரசியல் அனுபவம் தளபதியாரின் இன்றைய நக்கலில் தெரிந்தது .. இனியாரும் பேச்சுவார்த்தைக்கு வந்துவிடுவார்களோ என பாதுகாப்பு போட்டிருப்பார்கள் .. மக்கள் செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார் மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து பேசாத போராடாத கட்சி.. விஜயகாந்த் உடல்நல குறைவிற்கு பிறகு மொத்தமாக அக்காவும் தம்பியும் ஆக்கரமித்தவுடன் கூட இருந்தவர்கள்கூட ஒவ்வொருவராக ஓடிவிட்டநிலையில் மக்கள் ஆதரவு இருப்பதென்பது நல்ல நகைச்சுவை.. கடைசியாக ஒரேயொரு கேள்வி.. கேப்டன் விஜயகாந்தை பேசவிடுங்கள் .. பத்திரிக்கையாளர்கள் முன்பு சிரமபட்டேனும் சிலவார்த்தைகள் பேசட்டும் .. அப்போது தெரியும் உண்மைநிலை.. பிரேமலதாவும் சுதிஷும் விஜயகாந்தை வைத்து பிழைக்க பார்க்கிறார்கள் அது இந்த தேர்தலோடு முடிந்து போகும் .. தேமுதிகவின் இறுதி எழுதப்படுகிறது .. ஆலஞ்சியார்

Tuesday, March 5, 2019

நேர்கொண்ட பார்வை

மிக திறமையான கையாண்டு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறார் தலைவர் ..வாழ்த்துகள் சலசலப்பின்றி நிதானமாக சரியான முறையில் எத்தனை தொகுதிகள் என்று அறிவித்து தேர்தல்களத்தில் படையோட்டம் நடத்தி எதிரிகளுக்கும் திமுகவை சதா விமர்சிப்போருக்கும் பதிலை தந்து தலைவராய் உயர்ந்துநிற்கிறார் .. "நேர்கொண்ட பார்வை" .. .. இன்னமும் சிலர் குறை சொல்லவேண்டுமென்பதற்காக மதிமுகவிற்கு ஒரு தொகுதி தானா ... மமகவை ஏன் சேர்க்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள் .. வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்பவேண்டும் .. போர்குணம் கொண்ட சிம்மகுரல் மாநிலங்களவையில் ஒலிக்கவேண்டுமென தலைவர் விரும்புகிறார் .. மதிமுகவிற்கு ஒரு தொகுதி மாநிலங்களவைக்கு ஒதுக்கியதுமே.. உண்மையில் எனக்கு கலைஞர்தான் நியாபகம் வந்தார் யாரை எங்கே அனுப்பவேண்டுமென அறிந்து செயல்படுதல் கலைஞரின் குணம் .. அதேபோல் செயல்படுகிறார் தலைவர் .. நீண்டகாலமாய் நம்மோடு இணைந்து செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட்டுகள் .. எப்போதும் நம்மோடே பயணிக்கும் முஸ்லிம்லீக் என அனைவரையும் அரவணைத்து அதேவேளை உதயசூரியனின் சின்னத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதாரவை பெற தலைவர் வகுத்த திட்டம் திமுகவை மிக சிறப்பாக வழிநடத்துகிறவர் மட்டுமல்லாமல் கூட்டணிக்கும் தலைமையேற்கும் பண்பை பெற்றவராய் தலைவர் மிளிர்கிறார்.. .. ஏன் மமகவிற்கு தொகுதியை ஒதுக்கவில்லையென சிலர் கவலைபடுகிறார்கள் குறிப்பாக முஸ்லிம்கள் .. முதலில் கட்சிக்குள் யார் பெரியவரென்ற போட்டியையெல்லாம் கலைந்துவிட்டு வந்திருக்கவேண்டும் எனக்கு 29 மாவட்டம் ஆதரிக்கிறதென்ற உட்கட்சி பூசலையெல்லாம் கொண்டுவந்து தேர்தல் நேரத்தில் பேசி திரிந்தால் எப்படி இடம் கிடைக்கும் .. உண்மையில் இஸ்லாமிய இயக்கங்கள் தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் இத்தனை எண்ணிக்கையில் இல்லை .. பிரிந்துகிடந்தால் எப்படி நமக்கான விகிதத்தை பெறமுடியுமென்ற அடிப்படை தெளிவுகூட இல்லாமல் அதிகார பகிர்வில்/போட்டியில் மொத்த சமுதாயத்தையும் கேவலபடுத்தி நிறுத்தியிருக்கிற சூழல் கவலைக்குரியது .. (IUML) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இயக்கத்தோடு பிற அமைப்புகள் இணைந்து ஒரே குடையின் கீழ் செயல்பட்டிருந்தால் ஏறத்குறைய நான்கு தொகுதிகளை கூட கேட்க முடியும் ஆனால் பதவி ஆசையும் யார் பெரியவரென்ற போட்டியும் தானென்ற அகந்தையும் தாங்கள்தான் எல்லாம் அறிந்தவர்களென்ற இறுமாப்பும், ஒரு சமுதாயத்தையே மிகவும் பின்னோட்டு செலுத்தியிருக்கிறது .. .. இப்போதைய பொது எதிரி யாரென்று அறிந்தால் .. இந்த நாடு பாசிசத்தின் கையில் சிக்கி ..சின்னாபின்னமாகி கிடப்பதறிந்தால் மதவெறியும் சாதிய வெறியும் பித்தலாட்டமும் கைகோர்த்து மக்களை பணத்தால், விலைபேசலாமென்ற நினைப்பில் மக்களை ஏமாற்ற வருவதறிந்தால் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்று புரிந்திருக்கும் .. நாட்டின் நலனில் சமூகநலனில் அக்கறைகொண்டோர் இந்த பாசிச பாஜக ஆட்சியை விரட்டிட அணிவகுப்பர் .. பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் கரத்தை வலுபடுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை .. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற வைப்பதில் தான் நம் "நேர் கொண்ட பார்வை" இருக்கிறது .. .. வெற்றி ஒன்றே நமது இலக்கு வெல்வோம்.. நாற்பதையும் வெல்வோம் .. ஆலஞ்சியார்

Monday, March 4, 2019

திராவிட அடலேறுகள்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தெளிய தொடங்கியிருக்கிறது .. நாட்டின் நலன் விரும்பிகளோடு தன்மான படையாய் தமிழர்கள் விரும்புகிற கூட்டணியாய் எப்போதும் சமூகநலன் சமூகநீதி சமநீதியை தாங்கிப்பிடிக்கும் காவலர்களால் உருவாகியிருக்கிறது .. நாற்பதையும் வென்றெடுக்கவேண்டுமென்ற வேட்கையோடு தளபதி அவர்கள் மிக சாதூர்யமாய் பலவீனமானவர்களை மக்களால் வெறுக்கபட்டவர்களை ஆசைகாட்டி பேரம்பேசி கடைசியில் கதைமுடிக்கும் ராஜதந்திரத்தை .. காட்டி ஒதுக்கியிருக்கிறார் ..மதவெறியையும் சாதிவெறியையும் கூடவே ஊழல்வாதிகளின் கையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் .. தெளிவாக கொள்கையற்ற பணமொன்றே பிரதானமாய் வாய்பிருக்கிறபோதே தேற்றிவிடமென்ற பேராசைபிடித்தவர்களையும் கோர்த்துவிட்டு .. கொள்கை கூட்டணியையும் கொள்ளை கூட்டணியையும் நேரெதிரே நிறுத்திய ஆளுமையை பாராட்டியே ஆகவேண்டும்.. இவர் கலைஞரின் பிள்ளையென்பதில் இப்போது கர்வம் கொள்கிறேன் .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமையேற்று நடத்த தகுதியானவராய் திகழ்கிறார்.. .. காயிதெ மில்லத் பேரறிஞர் அண்ணா இரா.செழியன் நாஞ்சிலார் முரசொலிமாறன்.. வைகோ திருச்சி சிவா என எண்ணற்ற திறமையாளர்களை மிகச்சிறந்த ஆளுமைகளை அனுப்பிய தமிழகம் .. இன்று லாயக்கற்றவர்களை அனுப்பி அவமானப்பட்டு நிற்கிறது திமுகவின் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளால் இடையிடையே மெச்சதகுந்த நிலை ஏற்பட்டாலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அனுப்பபட்டவர்கள் அறிவிலிகளாக மட்டும் இல்லாமல் கேளிக்கை மனிதரைப்போல நடந்துக்கொண்டார்கள் .. கடைசியில் வெறும் அடிமைகளாகி மொத்த தமிழகத்தையும் தலைகுனிய வைத்தார்கள் .. தனியொரு ஆளாய் திணறடித்த காலமெல்லாம் போய் .. கிறுக்கர்களை அனுப்பியதன் விளைவு மாநில நலன்களும் மொழி கலாச்சாரத்தின் மீதான ஊடுறுவலும் தாக்குதலும் சமீபகாலமாக அதிகரித்தது .. எல்லாவற்றிக்கும் மௌனமாய் தலையாட்டும் பொம்மைகளால் தமிழகம் இழந்தது ஏராளம் .. இனியும் கோமாளிகளை கிறுக்கர்களை அடிமைகளை அனுப்பாமல் அறிவுடையாளர்கள் பகுத்தறிவும் சிந்தனையாளர்கள் தேர்வு செய்வோம்.. .. திரு.வைகோ, கவிஞர் கனிமொழி, தொல் திருமா தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா என வரிசையாய் வருகிறார் திராவிட தீப்பொறிகள் .. பாசிசத்தை சுட்டெரிக்க சுயமரியாதை போராளிகள் வருகிறார்கள் சமூகநீதியை நிலைநாட்ட எதிரிகளின் வாயடைக்க வைக்கும் வல்லமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழனின் பெருமைகளை மீட்டெடுக்க வருகிறார்கள் கலைஞரின் அடலேறுகள் .. பாழாய்போன பகட்டுக்காரர்களால் ஏற்பட்ட இழிநிலையை போக்க .. தமிழகத்தின் மானம்காக்க வருகிறார்கள் அறிவாசானின் அடிச்சுவட்டை பின்பற்றும் பண்பாளர்கள் .. இனி தான் இருக்கிறது .. எதிரிகளே இனி திணறபோகிறீர்கள் .. வார்த்தை சித்தர்களின் அறிவாற்றலால் செய்வதெறியாது புலம்ப போகிறீர் .. தமிழ் இனம்காக்க தமிழர் நலன்காக்க வருகிறார்கள் .. பேராசான் பெரியாரின் பிள்ளைகள் பேரறிஞரின் தம்பிகள் பேரருளாளர் கலைஞரின் உடன்பிறப்புகள்.. .. இழந்த பெருமைகளை மீட்டெடுப்போம்.. இனமான உணர்வுகொள்வோம் .. புறக்கணிக்கபட்ட தமிழர் நலன் தமிழர்களின் வாழ்வாதாரம் கிடைக்க போராடும் வல்லமை கொண்டவர்களை வெற்றிபெற செய்வோம்,.. நாடு நலம் பெற நல்லவர்களை வல்லவர்களை நாணயமிக்க நா நயமிக்க சொல்லாற்றலும் .. செயலாற்றலுமிக்க சிறந்த தகுதியானவர்களை திமுக தலைமையிலான கூட்டணி தருகிறது .. மக்கள் பெருவாரியான வெற்றியை தந்து .. தமிழகம் இழந்தவற்றை திரும்ப பெறுவோம்,.. .. எதிரிகளே எச்சரிக்கை .. வருகிறார்கள் திராவிடப் போராளிகள் தமிழகத்தின் மானம் காக்க வருகிறது தளபதியாரின் தீரர்படை.. வெல்லும்.. நிச்சயம் வெல்லும் தளபதியாரின் பெரும்படை .. .. ஆலஞ்சியார்

Sunday, March 3, 2019

ரபேல்...இருந்திருந்தால்

ரபேல் விமானம் இல்லாததால் தான் இந்த நிலை என்கிறார் பிரதமர் மோடி.. நாட்டின் ராணுவ அமைப்பையே பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை அவரே அறியாமலேயே சொல்லியிருக்கிறார் உண்மையில் "தகுதியுள்ள ஒரு தலைவன்" பிரதமராக இல்லாததே இந்த நிலைக்கு காரணம் .. எதை அரசியலாக்க வேண்டுமென அறிந்திருக்கவில்லை மலிவான வாக்கு அரசியலுக்காக ராணுவ நடவடிக்கைகளை வெளியே சொல்லி புகழ்பாட நினைத்து கடைசியில் கேவலபட்டு நிற்கிறார் .. மிக புத்திசாலித்தனமாக செய்யவேண்டிய நடவடிக்கைகளை அரசியல் லாபகணக்கில் சேர்க்க கடைசியில் அது நஷ்டகணக்காக போனது .. .. இந்திரா காந்தி காலத்திலேயே யுத்தத்தை பார்த்தது தான் ஆனால் அவரின் நடவடிக்கைகளில் இந்திய திமிர் இருந்தது வெற்றி ஒன்றே இலக்கு அதை விளம்பரபடுத்தி கட்சியை வளர்க்கவோ.. பதவியை தக்கவைக்கவோ முயற்சிக்கவில்லை கட்சிக்கும் தனக்கும் பலம்சேர்க்கும் நடவடிக்கையாக பார்க்காமல் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு மட்டுமே கருத்தில் கொண்டு வீரமங்கையாய் செயல்பட்டார் .. எந்த நிலையிலும் ராணுவ நடவடிக்கைகளை வெளியே கசியவிட்டதில்லை.. ஆனால் மோடி அடுத்த நொடியே ராணுவ தாக்குதலை பாஜகவின் செயல்பாடாக மாற்ற முயற்சிப்பதும் அதை மக்கள் புறக்கணிப்பதுமாகவே இருக்கிறது .. .. யுத்தசூழலில் கூட நாட்டின் பிரதமரோடு மக்கள் கைகோர்க்க தயாராக இல்லாதது ஏனென்று புரியவில்லையா.. இதுவரை எந்த பிரதமருக்கு இல்லாத அளவு எதிர்ப்பு நாடெங்கும் தன்னெழுச்சியாய் கிளம்பியிருப்பது பிரதமருக்கு தெரியவில்லையா.. ஏன்,..இத்தனை கசப்பு ..ஆரம்பம் முதலே பொய்யை மட்டுமே ஆயுதமாக கொண்டு அரசியலில் வலம் வந்தவர் படிப்பு பொய் செய்த தொழில் பொய் .. கல்வி சான்றிதழ் பொய் என அரசியலின் அடிப்படை நேர்மை கூட இல்லாமல் நடந்துக்கொண்டவர்.. குஜராத்தில் முதல்வராக இருந்த நடந்த கலவரமும் வன்முறையும் உயிரிழப்பும் இவரை பிரதமர் வேட்பாளராக்க ஆர்எஸ்எஸ் துணிந்தது .. அப்போது வாஜ்பாய் சொன்ன வாசகம் பிரசித்தம் .. குஜராத் கலவரத்தை பார்வையிட்ட பின் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் "அரச தர்மத்தோடு" நெறியோடு நடந்துக்கொள்ளுங்கள் என்றார் .. அந்த அரசநெறி அப்போதுமில்லை இப்போதுமில்லை .. இந்தியா கண்ட பலவீனமான பிரதமர் மோடி .. எல்லாவற்றை அரசியலாக்கும் இழிநிலை யாருக்கும் வந்ததில்லை சொந்த நாட்டுமக்களே இவரின் நடவடிக்கையை பார்த்து எதிரிநாட்டு பிரதமரை புகழ்கிறார்களென்றால் இவர் அரசின் செயல்பாடு எவ்வளவு கீழ்தரமானதென்று விளங்கும்.. .. ராணுவ வீரனின் புகைப்படைத்து வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறது பாஜக இதிலிருந்தே இவர்களின் பலவீனமான ஆட்சியை மக்கள் எந்தளவு வெறுக்கிறார்களென்று தெரிகிறது .. சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வக்கில்லை .. செய்ததெல்லாம் மக்களுக்கெதிரானது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த இந்தியருக்கு எதிரான செயலை கொஞ்சமும் அச்சமின்றி செய்துவிட்டு வாக்குகேட்க வருகிறார் செய்துமுடித்த சாதனைபட்டியலின் உண்மையறிய தகவல் உரிமையிடம் கேட்டால் இவர்களின் பொய் அம்மலமாகிறது இதுதான் பாஜகவின் நிலை .. மறந்தும் இவர்களை நம்பி வாக்களித்தால் நாட்டை வன்முறையால் தாண்டவமாடி சிதறடித்துவிடுவார்கள் .. பாசிசவாதிகளை விரட்டிட வேண்டும் .. இன்றைய நிலையில் காங்கிரஸை .. ராகுலை பிரதமராக்க ஒரணியில் திரளவேண்டும்.. .. ஆலஞ்சியார்

Saturday, March 2, 2019

சமுதாயத்தின் புல்லுருவிகள்

பாஜக எதிர்ப்பில் திமுகவைவிட தினகரன் பெட்டர் .. SDPI. தலைவர் நெல்லை முபாரக் எந்தவொரு கட்சியும் தங்களுக்கான இடங்களை பெற வேண்டுமென்பதில் தாங்களும் அங்கரீக்கபட வேண்டுமென்பதில் சிரத்தை காட்டுவது இயல்பு .. எல்லாகட்சிகளுக்கும் இடம் தர இயலாமல் போவதும் அணி மாறி செயல்படுவதை கூட தேர்தல் ஜனநாயகத்தில் இயல்பாக எடுத்துக்கொள்ளலாம்,.. சிலர் வியாபார நோக்கோடு யார் அதிகம் தருகிறராரோ அவரோ சேர வேண்டுமென நினைப்பது கொள்கைகளை தாண்டி தங்கள் நிலைநிறுப்பை உறுதிசெய்ய பயணிக்கிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் .. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை .. ஆனால் அதற்காக சொல்லபடும் காரணங்களில் நியாயம் இருக்க வேண்டும் .. திமுகவை விட தினகரன் பாஜக எதிர்ப்பாளராம் .. கேட்காமலேயே நாடாளுமன்றத்தில் ஆதரிப்பதும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதும் பாசிச எதிர்ப்பில் வராதா..? அதற்கு அதிமுகவிற்கு ஆதரவு தந்துவிட்டு தனியரசை போல நான் பாஜகவிற்கு வாக்கு கேட்கமாட்டேனென சொல்லியிருக்கலாம் .. .. sdpi எங்கெல்லாம் முஸ்லிம் வாக்குகள் அதிகமிருக்கிறதோ சமுதாய மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே நின்று வாக்குகளை சிதற செய்து பாசிசத்திற்கு துணைபோவதுதான் அவர்களுக்கு கொடுக்கபட்ட பணி இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்காமல் பிரித்து பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் பெரும்பணி மிக சிரத்தையோடு செய்துவருகிறார்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் மத்தியில் விரோதபோக்கை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுவதில் முன்னணி கட்சியாக திகழ்கிறார்கள் .. உவைஸியின் AIMIMம் SDPI ம் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு உலைவைக்கிற கட்சியாக திகழ்கிறார்கள் .. எதிரிக்கு வேலையை சுலபமாக்கும் செயல் .. .. யாரோடும் கூட்டு இல்லை என்றவர்கள்தான் பிறகு வாக்குவங்கியை சிதறடிக்க .. பாசிச ஏற்பாட்டின் செயல்வடிவமாய் தமிழகத்தில் முஸ்லிம்லீக் மற்றும் திமுக ஆதரவு முஸ்லிம் அமைப்புகளின் வாக்குகளை பிரிக்க அதன் மூலம் திமுக வெற்றியை தடுக்க முயலுமா என்ற நோக்கோடு செயல்படுவதை அந்த சமூக மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் .. தினகரனால் பாஜகவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த முடியாது ஆனால் திமுகவால் அது முடியும் அதைவிட தெளிவாக தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பாசிச பாஜகவோடு எந்த தருணத்திலும் கூட்டணி இல்லையென்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எதிர்த்தும் மோடியை திரும்பி போ என புகழ்பெற்ற வாசகத்தை மோடி வரும்போதெல்லாம் டிரண்டாக்கியும் பாஜகவிற்கு எதிர்ப்பை வெளிப்படையாக சொல்லி பாஜகவை வீழ்த்த காங்கிரஸால் தான் முடியுமென தீர்க்கமாக அறிந்து அதை இந்தியளவில் பேசவைத்து இந்த பாசிச ஆட்சி அகற்றபடவேண்டுமென்ற ஒற்றை நோக்கோடு செயல்படுகிறார் அவரை பின்துணைப்பது இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்ல பொது சமூகத்திற்கும் செய்கிற நற்செயல் .. தமிழகத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்டதென்றாலும் எதிரிகளின் தோல்வி வரலாறு காணாதாக இருக்க வேண்டும்.. அதை நோக்கிய பயணம் அந்த சமூகத்திற்கு செய்கிற தொண்டு .. மாறாக பாஜகவின் ஊதுகுழலாக இலைமறைவில் ஆதரவை தருவதற்கு பதில் நேரடியாக அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவோமென சொன்னால் கூட அது நேர்மையான செயல்பாடாக கருதலாம் .. சொந்த சமுதாயத்தை சூழ்ச்சியால் பிரித்து முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றியை தடுக்க நினைப்பதற்கு பெயர் துரோகம் .. அதைதான் sdpi உவைஸியின் (AIMIM) All India Majilis -e-Ittehadul Muslimeen போன்ற கட்சிகள் செய்கின்றன.. முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இடம்பெற வேண்டுமென்றால் SDPI போன்ற கட்சிகளை சமுதாய மக்கள் புறக்கணிக்க வேண்டும் அது சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் செய்கிற மிகப்பெரிய நன்மை .. .. ஆலஞ்சியார்

Friday, March 1, 2019

விழித்தெழுவோம்

அத்தனை ராஜதந்திரங்களும் வீணாய் போனதே.. பாவம் அபிநந்தன் உயிரோடு திரும்புவாரென பாசிசவாதிகள் எதிர்பார்க்கவில்லை எத்தனை அழகாய் திட்டம் தீட்டினாலும் மக்களின் விழிப்புணர்வு கதற வைக்கிறது .. தேர்தலுக்காக நாட்டு மக்களின் மீது ஒரு யுத்தத்தை திணிக்க நினைத்ததும் அதை எதிரி மிக லாவகமாக திசை திருப்பி உலகநாடுகளின் பார்வையில் உயர்ந்து நிற்பதும் எத்தனை அவமானம் இந்த மோடி அரசிற்கு .. இதுவரை இந்தியாவில் இந்தளவு எதிரிநாட்டின் பிரதமரை புகழ்ந்ததாய் வரலாறில்லை அதேவேளை இவ்வளவு இளக்காரமாய் தன் நாட்டு பிரதமரை வெறுத்து பேசியதும் இல்லை .. என்ன காரணம் வேறொன்றும் இல்லை தங்களின சுயநலத்திற்காக எதையும் செய்ய துணியும் கொடுஞ்செயல் .. பொய்யும் புரளியும் துணைக்கொண்டு நாட்டுமக்களை தொடர்ந்து ஏமாற்றியதும் .. கையிருப்பில்லாதவன் கனவுகண்டதைப்போல சொல்லும் செயலும் தொடர்பில்லாதநிலையும் .. மக்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி சில பணக்கார முதலாளிகளுக்காக பயன்பட்டதும் திடீரென ஒருநாள் நள்ளிரவில் நடுத்தெருவில் நிறுத்தியதும், மனத உயிரைவிட மாட்டிறைச்சியை புனிதமென கருதியதும், நடுதட்டு மக்களின் கல்வி கனவில் மண் அள்ளிபோட்டதும் .. சிறுதொழிலை நாசம் செய்து கார்ப்பரேட்டுகளின் நிழலாய் அரசு செயல்பட்டதும் மதத்தை அரசில் புகுத்தி கொலைப்பசி தீர்த்ததும் நாடகநடிகனைப்போல தினமொரு அவதாரமெடுத்தாடியதும் .. மோடியை மக்கள் வெறுக்க காரணம் .. நடிகை ரோகினி "தயை கூர்ந்து தேர்தலில் போட்டியிடாதீர்கள் மோடி" என்கிறார் .. இனியும் இந்த நாடு இழப்பதற்கு தயாரில்லையென்கிறார்.. இந்துத்துவாவிற்கெதிரா பேசுகிறவர்கள் மிரட்டியும் கொலைசெய்தும் கொடூர தாண்டமாடுகிற ஆட்சி தேவையில்லை.. .. முற்போக்காளர்களை கொலை செய்வதும் .. கொலைசெய்தவனை அமைச்சரே நேர்சென்று சிறையில் மாலையோடு வரவேற்பதும் .. தேசபிதாவின் உருவபொம்மையை துப்பாக்கியால் துளைத்து பாரத்மாதாக்கி ஜே போட்டவர்கள் கையில் தேசத்தை நிறுத்தியதும் கொடுமை .. எதில் அரசியல் செய்யலாமென்று கட்சிகள் நினைப்பது இயல்பாக நடப்பதுதான் தாங்கள் தோற்றுபோவோமென அறிந்தவுடன் நாட்டையே யுத்தமுனையில் நிறுத்த துணியும் கேடுகெட்டவர்களை நாடு இனங்கண்டு கொண்டது எதற்கும் துணிந்த மகாபாவிகளாய் பாசிச கூட்டம் மக்கள் முன் வேசம்கலைந்து நிற்கிறார்கள் .. ஒட்டுமொத்த திட்டத்தையும் வெளிகொணர்ந்து எதிரிநாடு நம் தேசத்திற்கு துணைபுரிந்திருக்கிறது .. முன்பெல்லாம் கழுத்தறுத்தும், கயமைகள் புரிந்தும் வெறிக்கொண்டு அலைந்தவர்கள் .. இப்போது சமாதான பேசுகிறார்கள் அகிம்சையை போதித்த அண்ணலின் வழிவந்தவர்கள் ஆயுதமெந்தியனின் அறிவுரையை கேட்கிற நிலையில் நிற்கிறோம் .. குஜராத் தான் காந்தியையும் தந்தது மோடியையும் தந்தது .. மண்ணில் நெற்கதிர்களுக்கு நடுவே களையைப்போல.. நல்ல செடிகளை விளைவிக்கும் மண்ணில் தான் சில விஷசெடியும் வளரும் .. .. பாஜக நாட்டிற்கு கேடு.. குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கான கட்சி மதமும் சாதியும் சனாதனமும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு கேடுவிளைவிக்கும் .. முற்றிலுமாக துடைத்தெறியபடவேண்டியவர்கள் .. இனியும் இவர்களை அனுமதித்தால் எண்ணிபார்க்கவே பயங்கரமாக இருக்கிறது .. நாடெங்கும் கலவரமும் கொலையும் மதவெறியாட்டமும் சாதியமோதலும் சர்வசாதாராணமாக நடக்கும் .. இந்த பாசிசபாஜகவின் ஐந்தாண்டு ஆட்சி ஐம்பதாண்டுகள் நம்மை பின்னோக்கி இட்டுசென்றிருக்கிறது .. இனியேனும் விழித்தெழுவோம்.. பாசிசத்தை துடைத்தெரிவோம் .. .. ஆலஞ்சியார்