Saturday, February 16, 2019
அறம் வெல்லும்
தம்பிதுரை ..
தப்பான இடத்தில் சரியான நபர் என்று கனிமொழி சொன்னபோதே சொன்னேன் .. இவன் காரியகாரன்
தப்பான இடத்தில் சரியான நபர் இருக்கமுடியாது
..
கொள்கை பிழைகள் இவர்கள் தன்மானமில்லாதவர்கள் திராவிடத்தை திராவிட சிந்தாத்தை பேசினால் தான் தங்கள் அடையாளத்தோடு இருப்பதாக நம்பவைக்க முடியும் ஆனால் செயல்கள் எப்படி இருந்தாலென்ன.. அதிமுக தொடங்கபட்டதே திராவிடத்தை தொடர் செயல்பாட்டிற்காக அல்ல திராவிடத்தை செயலிழக்க அல்லது அதன் வேகத்தை மட்டுபடுத்த இதுதான் பார்பனீய சித்தாந்திகளின் நோக்கமாக இருந்தது அது ஒரளவு வெற்றியும் பெற்றார்கள் .. சமயம்பார்த்து எம்ஜிஆரை கொண்டு திமுகவை உடைத்து மிக நல்லவரைப்போல ஊடகத் துணையோடு செய்தும் காட்டினர் எந்த சினிமாவெனும் மாஸ் மீடியா திமுகவிற்கு துணைநின்றதோ அதை வைத்தே திமுகவை அழிக்க தீட்டிய திட்டம் அது கவர்ச்சியிலும் சினிமா மோத்திலும் தமிழனை அடிமையாக்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரெனும் மாய மானை கொண்டு வீழ்த்தினார்கள் .. இக்கட்ட காலகட்டத்திலும் கொள்கையில் உறுதியும் , மக்களுக்காக உழைப்போம் என்ற தெளிவும்
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் கலைஞரிடம் இருந்தது எந்த சூழ்நிலையிலும் நிதானமாக மக்களை சந்திக்கிற நேர்மை மிகு பேராற்றல் அரசியல் தெளிவு எக்காரணத்திற்காக திராவிட இயக்கம் தோன்றியதோ அதில் இம்மியளவும் மாறாது சமூக சார்ந்த சிந்தனையோடு சமூகநீதியை நிலைநாட்டிட தொடர்ந்து களைப்பின்றி உழைப்போம் என கலைஞர் பெருமகன் பெரும் அரணாய் கழகத்தை காத்து நின்றார் .. நோக்கம் கொள்கை தெளிவின்றி தொடங்கபட்ட கட்சி கடைசியில் நோட்டாவிடம் தோற்கிற கட்சியிடம் மண்டியிடுகிற நிலை .. தமிழகத்தில் 2% விழுக்காடு வாக்குவங்கி இல்லாத பாஜகவோடு கேட்கிற தொகுதிகளை ஒதுக்க ஒப்புக் கொள்கிற அவலத்திற்கு வந்து நிற்கிறது ..
..
தம்பிதுரை எங்கே தனக்கு தொகுதியே கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சுகிற சூழல் இவர்கள் செய்த தில்லுமுல்லுகளை காட்டி பாஜக மிரட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது 11 பேர் தகுதி நீக்க வழக்கை தாமதபடுத்துவதும் ..21 தொகுதி இடைத்தேர்தலை நடத்தாமல் காலங்தாழ்த்துவதற்கு பாஜகவின் தயவு தேவை என்பதால் இவர்கள் அடித்த கொள்ளையிலிருந்து காப்பாற்ற வழக்கு சிறையென்ற மிரட்டி அதிமுக பணியவைக்குகிறது .. அதனால் வீர வசனம் பேசி பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசுவதுபோல் பேசிவிட்டு வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறி மக்களை ஏமாற்றுகிற நாடகம் ஜெயலலிதா காலத்திலேயே பார்த்ததுதான் ..
..
இவர்கள் மக்கள் முன் தோற்று போவார்கள் மக்களை மடையர்களாக எண்ணும் பாசிச சிந்தனையும் அதற்கு துணை போகிறவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் .. பொருளாதார நிபுணர்
அமர்த்தியா சென் சொன்னதைப்போல..
"வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதன் மூலம் நாடு தன்னிகரற்ற வளர்ச்சி அடையும். நான் நம்பிக்கை அற்றவன் அல்ல .. நான் ஜனநாயகத்தை உறுதியாக நம்புகிறேன்"
..
ஜனநாயகம் வெல்லும் இந்த கொள்ளையர்கள் கூட்டமும் கொலைக்கார கூட்டமும் விரட்டபடுவார்கள்
அறம் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment