Thursday, February 14, 2019

பாசிச பாஜக

திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி.. .. 2ஜி தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது அமித்ஷா.. .. 2ஜி வழக்கை பிரதமர் மன்மோகன்சிங் சிபிஐ விசாரிக்கட்டுமென விட்டார் .. அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவை பதவி விலக சொல்லி விசாரணையை சந்திக்க செய்தார் .. அவரும் கைது விசாரணை என எதற்கும் அஞ்சாமல் எதிர்கொண்டு புடம்போட்ட தங்கமாய் வெளியே வந்தார் .. திமுகவை அழிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக எங்கே திமுகவை தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதித்தால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சமூகநீதியை நிலைநாட்டிவிடுவார்கள் .. தமிழகத்தை போல பாசிசத்தை எதிர்க்கிற நிலமாய் ஒருங்கிணைந்த இந்தியாவை மாற்றிவிடுவார்களென அஞ்சி நீண்டநாட்களாய் தமிழகத்தில் நிழல் கூட படமுடியாதவாறு துரத்தியடிக்கிற நிலையை மாற்றிவிட இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்று ஊக அடிப்படையிலான கணக்கை பெரிதாக்கி இழப்புபென்பதை ஊழலாய் மாற்றி ஊடகங்கள் துணையோடு சாட்டையை சுழற்றியபோதும் அறம் வெல்லும் என்ற திமிரோடு ..அறிவுகொண்டு வீழ்த்தி ..வீண்பழியாய் சுமத்தபட்ட களங்கத்தை கலைஞர் வாழ்நாளுக்குள்ளாகவே துடைந்தெறிந்த இயக்கம் திமுக.. .. இதோ ..ரஃபேல் ஊழலை சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கிறவர் ..ஊழல் ஒழிப்பு சரத்தையே நீக்கி அறிந்தே ₹30,000 கோடியை திவாலான கம்பெனிக்கு கொடுத்தவர் ஊழல்வாதி இல்லையாம் .. நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட குற்றவாளி ஜெயலலிதாவை தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சரை அனுப்பி சந்திக்க செய்தவர் .. யாரை நீதிபதியாக நியமிக்கலாமென்று குற்றவாளியிடமே கேட்டு யார் வழங்கிநிற்பாரென அறிந்து வழக்கை அவரிடம் தந்ததற்கு பெயர் ஊழலில்லையா .. நீதிபதிகளை மிரட்டி ..சொராபுதீன் கொலை வழக்கில் தீர்ப்பை சாதகமாக்கியதற்கு பெயர் என்ன..? மத கலவரத்தை தூண்டி குளிர்காய்கிற செயலை நாடெங்கும் நடத்திடும் முயற்சி தமிழகத்தில் ஈடேறவில்லை என்பதற்காக ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு .. அதிமுகவை மிரட்டி தங்களுக்கு சாதகமான செயலிகளை திட்டங்களை முன்னெடுப்பதற்கு என்ன பெயர் .. .. நாடெங்கும் பாஜகவின் முகத்தை கிழித்தெறிய தயாராகி வருகிறார்கள்.. உ.பி குஜராத் போன்ற வடமாநிலங்களில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதால் இங்கே தமிழகத்தில் அதிமுகவோடு சேர்ந்து சில இடங்களையாவது வெற்றிட வேண்டுமென்ற கனவில் முக்கிய தலைகள் அடிக்கடி உலாவருகின்றன .. ஒவ்வொரு முறையும் மக்கள் விரட்டியடிக்கிறார்கள் .. நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு எட்டு தொகுதி பத்து தொகுதி வேண்டுமாம் .. ஐந்து விழுக்காடு வாக்கு வங்கியுள்ள பாமகவிற்கு நான்காம் .. இதிலிருந்தே அடிமை திமுக எந்தளவிற்கு கொள்ளையடித்து இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்களென தெரிகிறது .. ஊழலுக்காக சிறைக்கு சென்றவரின் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அந்த ஊழலுக்கு உறுதுணையாய் நீதிமன்றத்தையே வளைத்தொடித்தவர்கள் ‍.. திமுகவை குறைகூற அருகதையில்லை .. திமுக மீது இதுவரை எந்த குற்றசாட்டும் நிரூபிக்கபட்டதாக வரலாறில்லை .. திமுகவை ஊழல் கட்சி என்று சொல்வதற்கு ஏதேனும் ஆதாரமிருந்தால் தரவேண்டும் .. ஏதோ வாய்புளித்ததென பேசி திரிவதால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை .. .. தமிழகத்தில் பாஜகவோடு சேர்ந்ததால் அதிமுகவிற்கும் சேர்த்து இறுதி அத்தியாயத்தை எழுதிவிடுவார்கள் மக்கள் ..எச்சரிக்கை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment