Tuesday, February 19, 2019
பாஜக பாமக அதிமுக
எல்லோரும் ராமதாஸை திட்டுகிறார்கள்.. அவர் எப்போது நேர்மையாக நடந்துக்கொண்டிருக்கிறார் சொந்த சமூகத்திடமே துரோகம் வஞ்சனை செய்து உலா வருகிறவர் நாட்டுமக்கள் நலன் நாட்டைப்பற்றிய கவலை என்பதெல்லாம் அவர் அறியாதது தன் மகனுக்கு பதவி அதற்காக யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன் பணம் பதவி அதற்காக எந்த வேலையும் செய்வேன் இதுதான் மரு.ராமதாஸ் ..
..
மிக கேவலமாக பேசிவிட்டு தன் சமூக மக்களிடம் திரும்ப திரும்ப செல்ல முடிகிறதே .. தன் வாக்கு வங்கியை திராவிட கட்சிகளோடு சேர்ந்து நின்று குறிப்பிட்ட அளவில் .. தோல்வியை தழுவிய போதும்
வைத்திருப்பது திராவிட கட்சிகளின் தயவால் என்பதை அறிந்ததால் தான் திரும்ப திரும்ப மாறி மாறி சவாரி செய்கிறார் .. மாற்றம் முன்னேற்றமென்று மகன் ஆசை பட்டாலும் அது பேரடியாய் விழுந்தது யாருமே கண்டுக்கொள்ளவில்லையென்றவுடன் பழைய முறையை கையிலெடுத்து மக்கள் காறி உமிழ்ந்தாலும் காசு சேர்க்கும் மார்க்கம் அறிந்திருக்கிறார் மரு.ராமதாஸ்..
..
அதிமுகவிற்கு தெரியும் இந்த முறை பேரடி விழுமென்று ஆனால் மெச்சபட்ட தோல்வியை தழுவினால் தினகரனிடமிருந்து உள்ளதையும் பிடிங்கிக்கொள்ளலாம் என்று ஜெயலலிதாவே தராத எண்ணிக்கையை தந்திருக்கிறார்கள்.. சென்ற தேர்தலில் நிலை வேறு இப்போது நிலைமை தலைகீழாக இருப்பதறிந்தும் எடப்பாடி மெகா கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் அதன் பலன் எதிர்பார்த்த அளவு கிடைக்காதெனினும் அதிமுகவை சொந்த கொண்டாடும் தினகரன் வகையறாகளுக்கு செக் வைக்கலாம் ..
எழு, ஐந்து, பன்னிரண்டு தொகுதிகள் திமுகவிற்கு ஏறக்குறைய உறுதியானதைப்போலதான் .. வடமாவட்டத்தில் வாங்கி வங்கி பெருமளவில் சரிந்தநிலையில் பாஜகவோடான கூட்டு மக்களிடையே எதிர்மறையான தாக்குதலை தரும் .. மிச்சமுள்ள தொகுதிகளும் இதே நிலைதான் உருவாகும் எனினும் பன்னிரண்டு வெற்றி உறுதியாகிறநிலை தான் இப்போது .. வன்னியர்கள் மரு.ராமதாஸை அவரது முகநூல் பக்கத்திலேயே வறுத்தெடுக்கிறார்கள் உங்களை நம்பி இனி பயனில்லை .. மாற்றம் முன்னேற்றம் என்றது உங்கள் மகன் மருமகள் முன்னேற்றம்தானா ..? சமுதாய மக்களிடம் இனி எப்படி செல்வோமென்று ஒரே புலம்பல்கள் .. காரணம் தன் தகுதியை நினைக்காமல் அளவுக்குமீறி ஆசைபட்டு கடைசியில் அடிமைகளிடம் அடிமையானதுதான் மிச்சம் ..கடைசியில் மண்டியிட்ட மரு.ராமதாஸ்
..
திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் .. பாஜக அதிமுக அரசு மீதான கடும் எதிர்ப்பும் மாறி மாறி சென்று கேவலபட்டுநிற்கிற பாமகவின் செயல்பாடும் மிகப்பெரிய தோல்வியை அதிமுக அணிக்கு தரும் .. பாஜகவோடு சேர்ந்து போட்டியிடுவது
அதிமுகவினரிடம் கூட ஏமாற்றத்தை தந்திருக்கிறது ..
வெற்றி எளிதென்று அலட்சியமாக இருந்திடாமல் களப்பணியை கவனமாக செய்தால் திமுக மிகப்பெரிய சக்தியாக இந்திய அரசியலில் செல்வாக்கு பெறும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment