Sunday, February 10, 2019
உள்ளே வராதே
மூன்று முறையம் உலகளவில் டிரண்ட் ஆகிறது #gobackmodi .. ஏன் இந்தளவிற்கு விரட்ட்விரட்டி அடிக்கிறார்கள் இதுவரை எத்தனையோ பிரதமர்கள் வந்ததில்லையா வேண்டாதவராக இருந்தாலும் பரமவைரியாக கருதினாலும் மௌனமாய் கறுப்புக்கொடிகாட்டியிருக்கிறார்களே தவிர இப்படி உலகளவிற்கு அசிங்கபடுத்தியதில்லை .. காரணம் தமிழகத்தில் நேரடியாக களமிறங்க முடியாதென்று அறிந்து மறைமுகமாக ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதும்.. தமிழக மக்களின் நலன்களை புறக்கணித்து தமிழக மக்கள் விரும்பாதவற்றை திணிப்பதும் தமிழக மாணவர்களின் உயர்கல்வியை கேள்விக்குறியாக்கியதும் .. தமிழகத்தில் மதவெறியை கலவரத்தை தூண்ட எச்.ராசா போன்றவர்களை பயன்படுத்தி தொடர்ந்து
தமிழர்ளை தேசவிரோதியாக சித்தரிப்பதும் மக்கள் மனதில் வெறுப்பை அதிகரித்திருக்கிறது ..
தமிழகம் தொடங்கிவைத்த உள்ளே வராதே திரும்பி போ என்ற சொல் .. பிற மாநிலத்தினரும் மோடிக்கெதிராக திருப்பியிருக்கிறது .. கேரளம் அஸ்ஸாம் ஆந்திரா என .. பட்டியல் நீள்கிறது ..
..
பாஜக மீதான வெறுப்பு .. மோடி மீதான கோபம் மக்களிடம் எந்தளவிற்கு இருக்கிறதென்பதை தொடர்ந்து உலகில் முதலிடமாக்குவதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் .. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே இரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவரை .. ₹380 இருந்த எரிவாயுவை ₹1000த்தை தொடவைத்தவரை .. நான் வந்தால் டாலர் மதிப்பை நாற்பதாக்குவேன் என்று சொல்லி நான்கரையாண்டில் 70 தை தொடவைத்தவரை நீட் தேர்வை கொண்டுவந்து சாமானியர் வீட்டு குழந்தைகளின் மருத்துவகனவை தகர்த்தவரை ..கஜா புயலால் கடும்பாதிப்புக்குள்ளாகியும் கண்டுகொள்ளாதவரை.. தமிழகம் வேண்டாமென்கிற ஸ்டெர்லைட் மீத்தேன் திட்டங்களை இரும்புகரம் கொண்டு மக்கள் மீது திணிப்பவரை.. சிறு தொழில்களை நசுக்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வெண்சாமரம் வீசுபவரை .. வாய் திறந்தால் பொய் பொய் .. குஜராத்தைப்போல இந்தியாவை கொண்டுவருவதாக சொல்லி கடைசியில் குஜராத்தே வளர்ச்சியடையவில்லை என்ற உண்மை விளங்கியவுடன் .. போட்டேஷாப் செய்து ஏமாற்றியது தெரிந்தவுடன் மோடியை வா மோடி என்றா ..சொல்வார்கள் ...போ மோனே மோடி என்றும் NoEntry என்றும் தான் சொல்வார்கள் ..
..
திருப்பூரில் ப.சிதம்பரத்திற்கெதிராக பேசியிருக்கிறார் .. கருத்துவேறுபாடுகளிலிருந்தாலும் ப.சிதம்பரம் அறிவாளி என்பதிலோ சிறந்த நிர்வாகி என்பதிலோ மாற்று கருத்து இல்லை அவரோடு நேருக்குநேர் நின்று புரிதலோடு விவாதிக்க மோடிக்கு நிச்சயம் தைரியமில்லை அதற்கான தகுதியும் இல்லை கடைசியில் நான் ஏழைத்தாயின் மகன் என்று சொல்லி அனுதாபத்தை பெற முடியாதா என்று பார்க்கிறார்..
பொய்யில் பிறந்த பொய்யிலே வளர்ந்தவர் குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தபட்ட கொடூரதாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்து அன்றைய பிரதமர் வாஜ்பாயே அரச தர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என்றார்..
அதுவே தகுதியாய் ஆர்எஸ்எஸ் இவரை பிரதமராக்கியது .. தகுதியும் திறமையும் அற்றவரை நாடு திரும்பி போ என்கிறது ..
இன்று.. ஆம் இந்தியாவே மோடியை விரட்ட தொடங்கியிருக்கிறது .. இது இன்னும் இன்னும் தொடரும் ..
பாசிசபாஜகவை மோடியை ஆட்சியிலிருந்து இறக்குகிறவரை ஓயாது ..
..
உள்ளே வராதே
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment