Wednesday, February 20, 2019

களம்..

நான்... .....எனது களம்.. சிலநேரம்.. சூடாவேன்.. சுடும் தனலாய் சுட்டெரிக்கும் கொடுங்காற்றாய் பேரிரச்சலாய்..வருவேன் இளஞ்சுடாய் கதகதப்பாய் காதல் செய்வேன் சுவை தருவேன். மழையாவேன்.கவி .. மழையாவேன்.. சுடர் ஆவேன். சுட்டெரிப்பேன். ஆர்ப்பரிப்பேன்.. அடங்கா.. திமிராவேன் அலை ஆவேன்.. சில நேரம்.. கலையாவேன்.. ஆடும் மயிலாவேன்.. தமிழ் பாடும் குயிலாவேன். எதிரியை..கண்டால்.. சிலம்பெடுப்பேன்.. தமிழ்..சிலம்பெடுப்பேன். எனை தாக்கினால்.. பொறுத்தருள்வேன் என் தமிழையெனில் .. தலை கேட்பேன்.. எல்லா கிளைகளிலும் வந்தமர்வேன்.. அறிவார்ந்த சபையெனில் அமைதியாய் காதோர்ப்பேன்.. சான்றோர் சொற்களை சேகரிப்பேன் .. அறிவமுதம் எவ்விடமோ அவ்விடம் நானிருப்பேன்.. கொள்கை பேச கொட்டும் முரசடித்து வேழமிதேறி.. வருவேன்.. திராவிட திமிரோடு வருவேன் #எனதுகளம் தமிழாய்..தேனாய்.. சுவைக்கும்.. சிலநேரம்.. துவர்க்கும்.. வேம்பாய்.. ஆனாலும்..மருந்தாய். ஆரிய எதிர்ப்பாய் அமைதி கடலாய். அலங்கார திமிராய்.. அடங்கும் அன்பாய் தமிழ் தேராய். தாலாட்டும்..இசையாய் கதை பேசும் . காமம் சொல்லும் கவி தரும். காவியம் சொல்லும் இயல்பாய் எதிரிகளை.. சூறையாடும் தமிழ் வேலாய்.. திராவிடம் பேசும் பகுத்தறிவு சுடராய் பெரியாரை.. பேரறிஞரை பேரருளாளரை புகழ்பாடும் குயிலாய் எனது களம்.. .. ஆம் எனது களம்.. தேடலின்..தொடர்.. முடிவில்லா நெடுந்தொடர் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment