Sunday, February 17, 2019
பாசிசத்தின் குழந்தை
நான் அரசியலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் ..
நிறைய பொருள் பொதிந்த வார்த்தை..
அரசியல்வாதிகளோடு பேசலாம் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறமால்..எந்தவொரு தேர்தலிலும் நிற்காமல், வெட்டிபேச்சு பேசிதிரிவோரோடு என்ன வேண்டிகிடக்கிறது .. தேர்தலில் நின்று முதலில் (டெபாசிட்) கட்டிவச்ச காசை திரும்ப பெற முடியுமா என்று பாருங்கள் எத்தனை விழுக்காடு வாக்குவரும் ஒரு விழுக்காட்டை கூட பெற முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா .. படத்தை திரையிட முடியாமல் போனதற்கு நாட்டை விட்டு ஓட நினைத்தவரெல்லாம் நாட்டை காக்க வந்த தெய்வம்..? போல் பேசிகிறார்கள் .. தூய்மையான கையாம் ஒழுங்கான அச்சிட்ட டிக்கெட் வசூலிக்காமல் எவ்வளவு வசூலெனதென கணக்கை காட்டாமல் கறுப்புபணத்தில் புழங்குகிறவர் யோக்கியனை போல பேசிவருகிறார்.
..
வேடிக்கை மனிதருக்கு இங்கென்ன வேலை
யாரை எங்கே எப்படி அடிப்பதென்று எமக்கு தெரியும்
அரசியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தவர்கள் கலைஞரெனும் அரசியலின் வழிதோன்றல்கள் அறுபதாண்டு காலமாய் ஆலமாய் தமிழர் நெஞ்சில் நின்றவர்கள் .. இங்கே அரசியல் அநாதைகளின் அழுகை சத்தங்கள் எங்கள் படையோட்டத்தில் கேட்பதில்லை ..
..
திராவிடத்தின் நான்காம் தலைமுறை நாசுக்காவும் பேசும் புறடியில் பளிச்சென்று அடியும் கொடுக்கும்,
ஐம்பதாண்டுகால அரசியல் அனுபவமும் நீண்டநாள் பயிற்சியும் தலைவரின் வழிநடத்தலை நேரில் கண்டு படித்தவரிடம்.. திடீரென சினிமா வாய்ப்பிழந்தவர்கள் வந்து கதைக்க நினைப்பது அறியாமை .. எதிர்த்தவர்கள் இருக்குமிடமே தெரியாமல் போவதுதானே வாடிக்கை .. இந்த வேடிக்கை மனிதரும் காலப்போக்கில் காணாமல் போவார் .. சினிமாவில் வாய்ப்பு போனபிறகு யாரும் படத்தை வாங்க மறுத்த சூழலில் பிழைப்பிற்காக வந்தவர் .. இந்த விடயத்தில் ரஜினி சிறந்த வியாபாரி இன்னமும் அவரது படங்கள் வியாபாரம் ஆகின்றன பெருந்தொகை கொடுத்து திரையரங்களை ஏற்பாடு செய்கிறார்கள் .. கமலுக்கு விஸ்வரூபம் 2 ..வாங்க ஆளில்லை வந்த விலைக்கு தள்ளியும் பெரும் இழப்பை தந்ததால் .. வேறு வழியின்றி அரசியலை கையிலெடுக்கிறார் .. அவர் இன்னும் நிறைய அடி வாங்க வேண்டியிருக்கிறது அரசியலில் ஆழபுதைக்கபடுவார் .. முன்னெச்சரிக்கையாக ரஜினி தப்பித்துகொள்ளபார்க்கிறார் ரஜினி வியாபாரி தனது படங்களுக்கு இருக்கும் கிராக்கியை உணர்ந்து .. காற்றுள்ளவரை தூற்றுக்கொள்ளும் வழிதெரிந்தவர்
..
ரஜினி வரமறுத்த சூழலில் பார்பன பாசிசம்
ஆட்டுகுட்டியை நிறுத்துகிறது ..
அரசியலில் கேனத்தனமாக பேசினால் சொல்லும் போகும் பல்லும் போகும்.. சேர்த்துகுழைத்து தேய்த்த சாந்து கரைந்து போகும் முகம் விளறிபோகும் .. அரசியலில் பாவம் பலியாடு சிக்கிகொள்ளும்,.. கமல் காங்கிரஸோடு பேச.. அவர்கள் திமுகவை கைகாட்டிவிட்டார்கள் அவர்களுக்கே ஒற்றை இலக்கமே கிடைக்குமென்கிற நிலையில் யாரோடு சேர முடியாத யாருக்கும் வேண்டாத நிலையில் திமுகவை குதற நினைக்கிறார் .. கிராமசபை கூட்டம் அவர் நடத்தினாராம் .. ஏற்கனவே நமக்கு நாமே நடத்தியவர்கள் .. உள்ளாட்சி தோறும் நல்லாட்சியை தந்தவர்கள் வெற்றி தோல்வி இரண்டிலும் மக்களோடு பயணிப்பவர்கள் அரசியலில் தவழும் குழந்தை நீர்..இன்னும் அரிச்சுவடியை கூட அறிந்திராத நிலை நாங்கள் அரசியல் பல்கலை கழகத்திடமே நேரடியாக பயின்றவர்கள் ..
..
முதலில் அரசியல் கற்றுக்கொண்டு வரவும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment