Monday, February 25, 2019
பரிதாபம் நிலை பாமக
ஏன் இந்த இழிநிலை..
சொன்ன சொல் மாறியதாலா... அரசியலில் மாறி மாறி கூட்டணி என்பது அரசியல் நீதியாக பார்க்கபடுகிறது அந்தந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நாட்டின் நிலை கருதி கடுமையாக எதிர்த்தவர்கள் கூட ஆதரித்த வரலாறு உண்டு..
(எமர்ஜென்ஸி) அவசரகாலத்தில் கடுமையாக இந்திராவை
எதிர்த்தவர்கள் (ஊடகவியலாளர்கள் உட்பட) ஜனதா ஆட்சியின் அவலநிலை கண்டு நிலையான ஆட்சி வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக ஆதரித்திருக்கிறார்கள் .. ஏன் ஜெயலலிதா ஆட்சியின் கொடுமைகளை சகிக்க முடியாமல் சோ போன்ற திமுக எதிர்பாளர்கள் கூட ஜெயலலிதாவை வீழ்த்த வியூகம் அமைத்தார்கள் திமுகவே சரியான தேர்வென்று கருதினார்கள் .. எனவே கூட்டணி மாறுவதோ அந்தந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டதாக இருத்தல் வேண்டும்.. ஆனால் ஏன் பாமகவிற்கு மட்டும் இத்தகைய எதிர்ப்பு வந்தது
தமிழகத்தில் மற்ற எந்த கட்சியும் கூட்டணி மாறியதே இல்லையா ஏன் பாமகவை மட்டும் இத்தனை கேள்விகளுக்கு உள்ளாக்குகிறீர்கள் .. மற்ற கட்சிகள் தங்களின் நிலைபாட்டை உறுதியாக்கி அதில் நின்று அளவோடு கதைத்திருக்கிறார்கள் .. எல்லைமீறி அவசரகோலத்தில் தங்கள் தகுதியை மறந்ததில்லை .. இனி எப்போதும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லையென்றும் திராவிட கட்சிகளால் தான் நாடு சீரழிந்ததாகவும் தீண்டதகாத கட்சியைப்போல திராவிடத்தை எதிர்த்து பேசிவிட்டு அதற்காக பெற்றவளை இழுத்து கீழ்தரமான வார்த்தைகளால் பேசி மிக மோசமான செயல்களால் சொற்களால் அதிமுகவை பேசிவிட்டு ஏன் கூட்டணி என்று கேட்பது இயல்புதானே
..
திராவிட கட்சிகளோடு இனி எந்தகாலத்திலும் கூட்டணி இல்லை என்று அப்பனும் மகனும் சொல்லிவிட்டு நாங்கள் கடைவிரித்தோம் யாரும் கண்டுக்கொள்வாரில்லை ஆதனால் கூட்டணி சேர்ந்தோம் என்பதை எப்படி ஏற்கமுடியும் .. தேர்தல் வரும்போது மட்டும் தான் யாரும் கண்டுக்கொள்ளவில்லையென தெரியுமா .. தொடர்ந்து நான்கு தேர்தல்களை சந்தித்தும் யாரும் சீண்டவில்லை என்பது ஊரறிந்தது தானே அதற்கு பிறகு திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்ததென்று கூறிவிட்டு மீண்டும் நக்கிபிழைப்பதேன் என்ற கேள்வி எழத்தானே செய்யும் .. ஊழல் குற்றசாட்டை கவர்னரிடம் தந்துவிட்டு ஊழல்வாதிகளோடு கூட்டணி அமைப்பதை கேள்விகேட்க எல்லோருக்கும் உரிமையுண்டு ஏன் ஆத்திரம் வருகிறது விசாரித்து உண்மை வரும் வரை குற்றவாளி இல்லையென்றால் இதே அளவுகோலை ஆண்டிமுத்து ராசா மீது கடைபிடிக்கவில்லையே இவ்வளவிற்கும் வழக்கிலிருந்து விடுதலையான பின்பும் ராமதாஸ் விமர்சித்திருக்கிறாரே.. அப்போது எங்கே போனது உங்கள் அறம் .. சொந்த மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் (மாமனார் காங்கிரஸ் கட்சிகாரர்தானே) அவரே அதிமுக உறவை அரசியல் ரீதியாக கடுமையாக ஏற்கனவே (ராமதாஸும் அன்புமணியும் சொன்னதைதான்) விமர்சனம் செய்திருக்கிறார் இதில் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் விமர்சிப்பதாக சொல்வது எந்தவகை தர்மம் .. ஒருவேளை திமுககாரனாக இருந்திருந்து விமர்சனம் செய்திருந்தால் தளபதி ஸ்டாலினை குறை கூறலாம் ..
செய்த தவறை மறைக்க தப்பானபாதையை தெரிவு செய்ததை கேள்வி கேட்கும் போது பதிலில்லை
பாஜக ஆட்சிக்கு பூஜ்யத்திற்கு (சூழியம்) கீழே மதிப்பெண்கள் இல்லை இருந்தால் தரலாமென்ற ராமதாஸ் இப்போது என்ன சொல்லபோகிறார் .. பத்து கட்டளைகளோடு கூட்டணி என்கிறீர் .. இப்போது ஆட்சியில் இருக்கும் இருகட்சிகளோடு கூட்டணி வைக்கிறீர் மத்திய மாநில ஆட்சியில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நீட்தேர்வை இப்போதே ரத்து செய்ய சொல்லலாமே ரத்து செய்தால் தான் கூட்டணிக்கு வருவோமென நிபந்தனை விதிக்கலாமே அன்புமணி ..
..
நிர்வாகமென்றால் என்னவென்றால் டயர்நக்கிகளுக்கு தெரியுமா என்றீர் .. எந்த விலைக்கு வாங்கலாமென்ற நிர்வாகவியல் தெரிந்திருக்கிறது .. கழுதைக்கு என்ன விலை தரலாம் குதிரைக்கு என்ன தரலாமென்று அறிந்திருப்பதால் தான் எதை ஆசைகாட்டினால் ஒட்டுமொத்தமாக விற்றுவிடுவார்களென கணித்ததால் தான் பாமகவை வாங்கியிருக்கிறார்கள் .. ராஜ்யசபை சீட் மூலம் நிச்சயமாக ஒரு எம்பி சீட் உறுதி எப்படியும் தானோ அல்லது மனைவியோ பதவிக்கு வந்துவிடலாமென்ற எண்ணம் கட்சிகாரர்களை மடையர்களாக்க துணிந்திருக்கிறீர்.. பொதுவாழ்வில் செயல்பட வந்தவர்கள் கொஞ்சம் நாவடக்கத்தோடும் நாகரீகமாகவும் கதைக்க தெரிந்திருக்கவேண்டும் ..
தாம் மட்டுமே சிறந்த அறிவாளி போலவும் எனக்கு மட்டுமே திறமை இருக்கிறதென்றும் அகம்பாவத்தோடு பேச கூடாது முதலில் தங்களின் பலமென்ன என்பதை அறிந்திருத்தல் வேண்டும் அரசியல் ஏற்றதாழ்வுகளை ஏற்கிற ஜனநாயக பண்பு வேண்டும் என்னோடு விவாதிக்க தயாரா என கேட்டு திரிந்தவர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்லுடைந்து போனதேன் .. தவறை ஒப்புக்கொள்ளும் தைரியமில்லாமை அதைவிட தப்பை நியாயபடுத்த மேலும் மேலும் முயற்சிப்பது கடைசியில் கரிபூசிய நிலைக்கு ஆளாக நேரிடும் அதுதான் ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்தது ..செய்தியாளர்களை ஏன் உணர்ச்சிவய படுகிறீர்களென தண்ணீரை குடியுங்கள் .. தண்ணீர் கொடுங்கப்பா என்று சொன்ன அன்புமணி கடைசியில் தண்ணீர் குடிக்கவேண்டிய நிலைக்கு ஆளானார் ..
..
பிறர் நிலை மட்டுமன்றி தன்நிலையும் அறிபவனே சாணக்கியன்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment