Monday, February 18, 2019

பாமகவை அப்புறபடுத்த வேண்டும்

எங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்..? குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் .. சபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்று பிடிபடாமல் தப்பிக்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாமென பா ஜ க தரப்பில் அட்வைஸ் செய்யப்பட்டு உள்ளதாம் இந்த நிலையில் எங்கே போனால் என்ன கிடைக்கும் என்று ராமதாஸூம் அன்புமணியும் தடுமாறி நிற்கிறார்களாம் .. .. உண்மையில் விதைத்ததுதான் கிடைக்கிறது மாறி மாறி சவாரி செய்து எங்கே கூடுதல் இடங்கள் கிடைக்கிறதோ அங்கே கடை விரிக்கும் செயல் .. தான் செய்துதந்த உறுதிமொழியை மீறி சொந்த சமூகத்திடமே வினையை விதைத்தவர் சொன்ன வாக்குறுதிக்காக அன்புமணிக்கு மந்திரி பதவியை பெற்று தந்தது திமுக ஆனாலும் நன்றி என்ற சொல் இருப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டவர்கள் .. திராவிட கட்சிகளின் தயவிலேயே இன்றைய எல்லாம் கிடைத்தபோதும் (பதவி அங்கீகாரம்) திராவிட கட்சியால் தமிழகம் சீரழிந்து போய்விட்டதாக ஊர்தோறும் மேடைபோட்டு கத்தி .. மாற்றம் முன்னேற்றமென சொல்லி திரிந்து யாரும் கண்டுக்கொள்ளாமல் போனதுதான் மிச்சம் .. நேருக்குநேர் விவாதிக்க தயாரா .. அதற்கு தைரியமிருக்கிறதா என கேட்டு தமிழகத்திலேயே அரசியல் அறிந்த அறிஞரைப்போல பேசி.. கடைசியில் யாரும் கேட்பாரற்று பாமகவின் அங்கீகாரம் போனது தான் மிச்சம் .. எழு தருவாயா என கேட்ட வாய் கொடுப்பதை கொடுங்கள் என கெஞ்சுகிற நிலைக்கு வந்து நிற்கிற நிலைவரும் .. திராவிட கட்சிகளே வேண்டாமென வைத்தவர் .. அந்த கட்சிகளிடையே மாறி மாறி பேச வருகிறார் .. தனித்து நின்றால் பாமகவில் யாருமே இருக்கமாட்டார்கள் .. இனி திராவிடத்தில் தயவில் தான் காலம்தள்ளவேண்டும் .. .. இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை 101% சதவிகிதம் கிடையாது வேண்டுமென்றால் எழுதி தருகிறேன் என்றெல்லாம் இனி மேல் பேசமாட்டேன் என இனியொரு சத்தியம் செய்துவிட்டால் போகிறது ..யாராவது சாதிகாரன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவா போகிறான் .. படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே என கேள்வி எழுப்பவா போகிறான் .. பெற்ற தாயையே அசிங்கமா பேசியதை மறந்தவர்கள் தானே.. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்ற நாடாளுமன்றத்தை மிதிக்கமாட்டோமென சத்தியம் செய்ததை ஏன் மகனுக்கு மகுடம் சூட்டினாய் என கேட்டார்களா என்ன..? .. மிக மோசமான நிலைக்கு பாமக தள்ளபட்டதற்கு ராமதாஸின் மகனுக்கு பதவி பெற்று தரவேண்டுமென்ற ஆசைதான் காரணம் .. பாமக தனித்து நின்றால் இருக்கிற இடமே தெரியாமல் போகும் திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்து மீண்டும் துளிர்விட காரணமாக கூடாது .. திராவிட சித்தாந்தத்தை கொள்கைகளை ஏளனமாக பேசி திரிந்துவிட்டு ..உலக உத்தமன் போல அறிவாளியை போல மற்றவர்களை எள்ளிநகையாடியவர்களை யாருமே கண்டுக்கொள்ளாமல் விட்டால் அரசியலில் இருந்து மக்கள் அப்புறபடுத்திவிடுவார்கள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment