Wednesday, February 13, 2019
பாஜக அரசியல்
"உச்சநீதிமன்ற" நீதிபதிகளையே அமித்ஷா, மோடியால் விலைக்கு வாங்க முடியும்" - கர்நாடக முன்னாள் பிஜேபி முதல்வர் எடியூரப்பா.. கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் வெளியிட்ட கேசட்டில்
எடியூரப்பா பேசியது அணி மாறி வந்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு 10 கோடி ரூபாயும் மந்திரி பதவியும் கொடுக்கப்படும் அதை
எனது மகன் பணம் பட்டுவாடா செய்வான்
உச்சநீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் மோடியும், அமித் ஷாவும் பார்த்து கொள்வார்கள்..
சபாநாயகருக்கு 50 கோடி கொடுத்துவிடலாம். மஹாராஷ்டிரா ஃபட்நாவிஸ் வந்து எல்லாம் பார்த்து கொள்வார்."..
..
பாஜகவின் ஆட்சி செய்கிற மாநிலங்களில் .. மக்கள் எதிராக வாக்களித்தும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் வெறும் இரண்டே எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தில் வந்த போதும் ஊடகங்களும் பொதுமக்களும் ஜனநாயகத்திற்கு தலைகுனிவு என கேள்வி எழுப்பாததால் இன்று அதே பாணியை கையாள்கிறார்கள் .. மக்கள் யாருக்கு வாக்களித்தால் என்ன நாங்கள் நினைத்தால் ஆட்சியமைப்போம் என்பது மிகபெரிய அநீதி மட்டுமல்ல ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதற்கு ஒப்பாகும்.. உச்சநீதிமன்றத்தையே வாங்கிவிட முடியுமென்பதலிருந்தே அவர்களின் மேலாதிக்கம் எந்தளவு அரசு நிர்வாகத்தில் இருக்கிறதென்பதும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற தொனி தெரிகிறது .. ஆர்எஸ்எஸ் நீதித்துறையின் கைகளை கட்டிபோட்டிருக்கிறது .. அரசியல் சாசன சட்டத்தையெல்லாம் மீறி மநுநீதியை மட்டுமே செயலாக்குவோம் முடிந்தால் பார்த்து கொள்ளுங்களென . சட்டமன்ற சபாநாயகருக்கு ₹50 கோடி விலை பேசபடுவதையும் எம்எல்ஏக்களுக்கு₹10 கோடி மற்றும் அமைச்சர் பதவி என்ற ஆசைகாட்டி எந்த வழியென்றாலும் பரவாயில்லை அதிகாரத்தை அடையவேண்டுமென்று கங்கணம் கட்டி செயல்படுகிறார்கள் ..
..
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தான் ஜனநாயக மரபுகள் மீறபடுவதும் எதற்கும் விலைபேசலும் சாதாரணமாக நடைபெறுகிறது .. தமிழகத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என்ற நிலையிலும் அதிமுக ஆட்சியை வைத்து நடத்தும் "சர்க்கார்" .. சட்டமன்ற உறுப்பினர்கள் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தாமல் தமிழ்நாட்டிற்கு செய்கிற அநீதியை .. நீதிமன்றங்களும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலிருந்தே நீதிமன்றங்கள் அவர்கள் பிடியில் சிக்கியிருப்பது புரிகிறது .. வாக்குபதிவு இயந்திரத்தை அதிகாரி துணையோடு மத்திய பிரதேசத்தில் ஹோட்டல் ரூமில் கண்டெடுத்தும் தேர்தல் ஆணையம் என்ன செய்தது .. வாக்கிற்கு வெளிப்படையாக டோக்கன் கொடுத்தது அறிந்தும்
இந்திய தேர்தல் ஆணையம் சுயமாக ஏதும் செய்ததா .. யாருக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேணிடும் ஆறுமாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென விதிகள் இருந்தும் ஆளும் அதிமுகவை காப்பாற்ற ..பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் வெகுமக்கள் சந்தேகம் கொள்கிறார்கள் .. நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எங்கள் பிடியில் என எடியூரப்பாவின் பேச்சு வெளிப்படையாகவே சொல்கிறது .. நேர்மையாக வெற்றி பெற முடியாதென்ற நிலையில் எதையாவது செய்து நெறிகெட்ட செயலானாலும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்ற குறிக்கோள் ஆபத்தானது இது வேரறுக்கபடவேண்டும்
..
இந்த பாசிச ஆட்சிக்கு மக்கள் எழுச்சி மூலமே முடிவுகட்டவேண்டும் .. மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸிக்கு தந்து .. இந்திய இறையாண்மையை.. ஜனநாயகத்தை வேற்றுமையில் ஒற்றுமையை காணும் பன்முக கலாச்சார பின்னணி கொண்ட இந்தியாவை காக்கவேண்டும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment