Thursday, February 21, 2019

மக்களுக்கான இயக்கம் திமுக

மக்கள் கருத்து அறிதல் சிறந்த ஜனநாயக பாதை மக்களுக்கான இயக்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி மக்களிடமே வெற்றி தோல்விகளில் இரண்டிலும் இரண்டற கலந்து பயணித்து வெற்றி நல்வாய்ப்பாகவும் தோல்வி இன்னும் உழைப்பதற்கானதாகவும் தம்மை தயார்படுத்திக்கொள்கிற கட்சி திமுக.. எது தேவை என அறிந்து எதுவெல்லாம் சரியோ அதை தேர்வுசெய்து கேட்காமலேயே தருகிற தலைவர் கலைஞர் எதை தடுத்துநிறுத்தவேண்டும் எதையெல்லாம் முதலில் செய்திட வேண்டுமென்ற ஆழ்ந்த அரசியல் அறிவின் செயல்வீராய் திகழ்ந்தார் அவரின் திட்டங்கள் காலங்கடந்தும் செயல்படுத்தபடுகின்றன எல்லைகளை கடந்து போற்றபடுகிறது பின்பற்றபடுகிறது தமிழகம் அடைந்த எல்லா நலனும் கலைஞர் பெருமகனின் அறிவில் சிந்தனையில் உதித்தவைகள் .. இன்றைக்கும் படும் துயரங்கள் எல்லாம் கலைஞரை அவசரபட்டு வேண்டாமென வைத்ததின் விளைவென்பதை மக்கள் உணருகிறார்கள் .. அந்த மாமனிதரின் இழப்பை எந்தவிதத்திலும் சரிகட்ட முடியாதென அறிவார்கள் .. .. கலைஞர் முழு அரசியல்வாதி என எதிர்முகாமில் இருந்த ராஜகோபாலச்சாரியார் சொன்னார் தன்னை அப்படிதான் செதுக்கிக்கொண்டார்.. முழுநேரமும் மக்களைப்பற்றி சிந்தித்த தலைவர் எந்தநிலையும் கொள்கைபிறழின்றி பெரியாரின் கனவுகளை நினைவாக்கியவர் .. அவர் தொடங்கிவைத்ததையெல்லாம் பாசிச அரசு மெல்ல அறுக்கபார்க்கிறது .. மழலைகளுக்கு கூட பொதுதேர்வை கொண்டுவரும் மாபாதக செயலை கொஞ்சமும்,கூச்சமின்றி செய்ய துணிகிறார்கள் மருத்துவகனவை எளிதாக்கி திறமையும் தகுதியும் இருந்தால் போதும் ஏழைகளும் மருத்துவராய் வரவேண்டுமென எண்ணி நுழைவுதேர்வை ரத்தாக்கியவர் விவாசயம் பொய்த்துபோய்விடகூடாதென்பதற்காக இலவசமின்சாரம் தந்து கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து செயல்படுத்தியவர் .. சொல்லிக்கொண்டே போகலாம் அந்த பேரருளாளரை இழந்து நிற்கும் தமிழகத்தில் தான் தோன்றிகளாய் .. மக்கள் நலனைவிட தங்களை காத்துக்கொள்ள அடிமைசாசனம் எழுதி கொடுத்து காவிகளுக்கு கொள்கை எதிரிகளுக்கு வெண்சாமரம் வீசும் பேடிகளால் தமிழகம் படும் இன்னல்களை களைய வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவிற்கு உண்டு .. .. அரசும் ஊடகங்களும் மதவெறி கும்பலும் சாதிவெறியர்களும் பாசிச பாஜகவோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகோர்த்து திமுகவை ஒரு படி கீழே வைக்க நினைக்கிறது தொடர் விமர்சனங்கள் களநிலவரத்தை மறைத்து திமுகவை பலவீனமான கட்சிப் போல காட்ட நினைக்கின்றன கள யதார்த்தத்தை யாரும் கணக்கில் கொள்வதில்லை .. அதிமுக பலவீனபட்டிருப்பதையும் பாமகவின் நிலை பரிதாபகரமாக இருப்பதையும் எழுத பேச மறுக்கின்றன .. திமுக எழுச்சி மக்களோடு தொடர்புடையது மக்களின் ஆதரவையும் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றது தளபதியின் உழைப்பும் அரசியல் நேர்மையும் தளராத தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் மிகப்பெரிய பலனை தரும் .. மக்களுக்கான தலைவர் மக்கள் விரும்புகிற தலைவர் நிச்சயமாக அங்கீகாரம் பெறுவார் .. திமுக மக்களிடமே கருத்து கேட்பது மக்களின் பங்களிப்பை பெறவேண்டும் என்பதற்காக.. மக்களின் தேவைகள் நாட்டின் நலன் சார்ந்த விடயங்கள் மண் இனம் மொழி கலாச்சாரம் சிதையாமல் காத்திட.. நல்லதொரு ஆட்சியை தர தளபதியின் கரங்களில் மாபெரும் வெற்றியை தருவோம்,.. .. மக்களுக்கான தலைவர் தளபதி.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment