Friday, February 8, 2019

தளபதிபடை தரணி ஆளும்

ஒரே மாதம் 12,167 கிராமங்கள் ஒன்னரை லட்சம் திமுகவினர் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் ..இல்லை கலந்துரையாடியிருக்கிறார்கள் .. மிக சிறந்த களப்பணியாக இதை கருதுகிறேன் ஜனநாயகத்தின் வேர்களை தேடிய இந்த பயணம் மிக சிறந்த மக்கள் எழுச்சியை தரும் .. மாநில அரசாலும் மத்தியில் ஆளும் பாசிச அரசின் கொடுங்கையாலும் ஏமாற்றபட்டு சொல்லண்ணா துயரத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் இறுதி நம்பிக்கையாக திமுக இருப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அதோடு முடிந்ததல்ல .. தேர்தல் களப்பணி என்பது வாக்குகளை ஒருங்கிணைத்து அதை சரியாக தேர்தல்நாளன்று திமுகவை நோக்கியதாக மாற்றும் பெரும்பணி நமக்கிருக்கிறது .. எதிரிகள் சிரமபட்டு வாக்குகள் திமுகவிற்கு செல்வதை தடுக்க பெரும்முயற்சி எடுப்பார்கள் .. ஜாதிய வன்முறை மதவெறியை தூண்டுவார்கள் பொய் பிரசாரங்களை நடிகர்களை கொண்டு புதியதொரு மாற்றத்தை தூய்மை தரபோவதாக கூட பேசிதிரிவார்கள் மக்களின் மனநிலையை துசை திருப்ப எதையெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் நெறியின்றி செய்ய துணிவார்கள் ..பொய்யும் பணமும் பேசுபொருளாக்கபடும் எப்படியேனும் திமுகவிற்கு செல்லும் வாக்குகளை மடைமாற்ற முடியாதா..? என செயல்படுவார்கள் அத்தனையையும் கடந்து வெற்றியொன்றே குறிக்கோளாய் செயல்பட வேண்டிய தருணம்,.. யார்யாரை கூட்டணியில் சேர்க்கலாமென்று சமூக வலைதளங்களில் விவாதிப்பதும் யாரை சேர்க்கலாமென பரிந்துரைப்பதும் தேவையில்லாதது தலைமைக்கும் கழக நிர்வாகிகளுக்கும் நம்மை விட துல்லியமாக கணிக்கும் ஆற்றல் உண்டு யாரோடு சேர்ந்து பயணிக்கவேண்டுமென்ற திறமைமிகு செயல்திட்டம் உண்டு கொள்கையில் பிறழாமல் கட்சியை வழிநடத்தும் பேராற்றல் தளபதிக்கு உண்டு .. இக்கட்டான காலகட்டத்தில் நாட்டை நல்லவர்களிடம் ஒப்படைக்க மக்கள் விரும்புகிறார்கள் ..மதவெறியை தூண்டி குளிரிகாய்கிற குள்ளநரிகளிடமிருந்து தேசத்தை மீட்க குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக ஒட்டுமொத்த மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய கேடுகெட்டவர்களை விரட்டிட இந்திய அரசை வழிநடத்தும் பேராற்றலை கண்டு அவர்களோடு இணைந்து நாட்டின் நாசசக்திகளை விரட்டிட தளபதியை கையில் பெரும் வெற்றியை சேர்த்திட உழைக்கவேண்டும் .. .. எங்கு திரும்பினாலும் திமுக கொடிகள், கூட்டங்கள் கிராமங்கள் தோறும் மக்களின் தன்னெழுச்சி.. இந்த பாசிசத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் மூடர்களை விரட்டவேண்டுமென்பதற்காக மக்களின் பேராதரவை திமுகவிற்கு வருவது கண்டு எதிரிகளுக்குப் பயம் வரத்தானே செய்யும்.. புலம்பத்தானே செய்வார்கள்.. அதையெல்லாம் கணக்கில் கொள்ள தேவையில்லை .. அதிமுக அணியில் நோட்டாவை தாண்ட முடியாத கட்சியான பாஜகவிற்கு இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்குவதிலிருந்தே அதிமுகவினர் எந்தவளவிற்கு அவர்கள் பிடியில் இருக்கிறார்களென தெரிகிறது வசமாக மாடிடிக்கொண்ட விழிபிதுங்கி நிற்கிற கோழைகளாய் அதிமுகவினர் நிற்பது கண்டு தமிழகமே சிரிக்கிறது .. மிகப்பெரிய தோல்வியை அதிமுக அணி சந்திக்கும் .. கீழ்வானம் சிவக்கும் இருள் விலகும் உதயசூரியன் மெல்லென சிரிப்பான் தளபதிபடை தரணி ஆளும் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment