Thursday, September 29, 2022

அரசியல் செய்வது எங்களுக்கு பழகிப்போன செயல் .. நீங்கள் ஆரம்பபள்ளியில் எழுத்துகூட்டி படிக்க தொடங்குகிறீர் .. நாங்கள் பேரறிஞரிடம் பாடம் பயின்று, முத்தமிழறிஞரின் கைப்பிடித்து வளர்ந்தவர்கள் ..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கூடவே விசிக அமைதி பேரணிக்கும் .. எச்.ராசா சொன்னது தான்  #StalinIsMoreDangerous 🔥..
இப்போது அல்ல முன்பும் இப்படிதான் பதறினார்கள் .. கருணாநிதியிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் பார்பனர்கள் ராஜதந்திரி என கொண்டாடிய ராஜகோபால் ..
ஆனால் அரசியல் தெளிவற்ற "சமுதாய" அலப்பறைகள் ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி விமர்சித்து அரிப்பை தீர்த்துக்கொண்டார்கள் .. உண்மையில் இவர்களிடம் (முஸ்லீம்லீக் தவிர்த்து எல்லா அமைப்புகளிடம்) சமுதாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ,புகழ் போதையும் பணமும்,அதிகார ஆசையும் சமூகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க காரணமானவர்கள் .. இஸ்லாமிய நெறிகளின் படியும் இல்லை கோட்பாடும் புரியவில்லை 
ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் .. யாருக்கோ சொல்லபட்டது போல நகர்கிறார்கள் ..
..
மற்றொரு விடயம் CNN NDWS18 
ஊடகங்களின் சார்பில் சென்னை – டவுன் ஹாலில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் நேற்று 'திராவிட மாடல் என்றால் என்ன என்பதை மிக தெளிவாக விளக்கினார்  மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

நூறு ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக மக்களும் கல்வி – வேலைவாய்ப்பில் பெற்றிருந்த நிலையையும், இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட மாடல் சிந்தனையின் வெற்றி தெரியவரும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிட சிந்தனைகளின் வெற்றி!..

ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்களின் ஏற்றத்துக்கு வித்திடுவது திராவிட மாடல்!
இறக்குமதியை கணக்கிடுவது வேறு மாடல்; இரக்கச் சிந்தனையோடு திட்டங்கள் தீட்டுவது திராவிட மாடல்!
ஒற்றை சிந்தனைக் கொண்டது வேறு மாடல்; பரந்த ஒருமைச் சிந்தனையைக் கொண்டது திராவிட மாடல்! என்றார் 
..
இது சிறப்பென்னவென்றால்
இந்தியஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன காரணம் என்பதை இங்கு பிறந்தவர் என்ற உணர்வுடனும், #மனசாட்சியோடும் கூறுங்கள்”, என நெறியாளர் கேள்வி எழுப்பினார்..
 தமிழ்நாடு 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வியறிவு – தொழில்சார் கொள்கை - ஆங்கில மொழியறிவு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, தொழில்நுட்பத் துறை மற்றும் சேவைத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், விவசாயமும் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
என்று தெரிவித்தார்..
..
எல்லா நேரமும் பொய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என நிர்மலா அறிவார் .. ஏனெனில் அங்கே கேள்வியை எழுப்புகிறர் அனைத்து தரவுகளையும் கையில் வைத்திருக்கிறார் ஒட்டுமொத்தமாக மானம் கப்பலேறிவிடும் என்பதை அறிந்து 60 என துவங்குகிறார் .. 
..
 தளபதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததற்கு பிறகு நிறைய இடையூறுகள், கவர்னர் முதல் தேடபடும் "நல்லவர்கள்" வரை எதையாவது உளறுவதும் அதை ஊடகங்கள் பெரிதாக ஊதி பெருக்குவதும் கடைசியில் ஊசியில் மாட்டிய பலூன் போல ஆவதும் வாடிக்கையாகிவிட்டது ..
பாஜக தலைவர் நட்டா அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறார்.. PFI தடை செய்தாகிவிட்டது இனி டாலர் மதிப்பு உயருமாம் .. முன்பெல்லாம் விபரம் தெரிந்த "முரளிமனோகர் ஜோஷி" அத்வானி வாஜ்பாய் போன்றவர்கள் பாஜகவில் இருந்தார்கள் அவர்கள் மதத்தை பிடித்துக்கொண்டு உயர எழும்ப நினைத்தார்கள் .. சில நேரமெங்கிலும் விபரமாக பேசினார்கள் இப்போது  எந்த கல்லூரியில் படித்தார் என தெரியாதவர் முதன்மை அமைச்சர் 
வரலாறு முழுக்க பொய்களால் கட்டமைக்கபடும் மாயை .. அதிகாரத்தை  கைப்பற்ற எந்தநிலைக்கும் போவோம் .. நீதிமன்றங்களும்  தனிஅதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்புகளும், தேர்தல் ஆணையமும் போதும் நாடு எக்கேடு கெட்டால் என்ன என்கிற நிலை .. 
..
எல்லா அமைப்புகளுக்கும் தடை என்பதலிருந்து சட்டத்தின்/நீதிமன்றத்தின் மூலம் ஊர்வலம் நடத்தலாம் என திட்டமிட்ட பாசிச சூழ்ச்சியை "திருமா" எனும் காயை வைத்து மிக சரியாக தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார் ..சர்வதேச செஸ் ஆட்டத்தை நடத்திகாட்டியவர் .. மீண்டும் குறுக்குவழியில் யோசித்தால் "முன் எச்சரிக்கை" நடவடிக்கை வரும் ..
நாங்கள் இந்திய ஒன்றியத்திற்கு எப்படி கட்சி நடத்தவேண்டும் என சொல்லி தந்தவர்கள் .. கரை வேட்டி, தேர்தல் அறிக்கை, என இந்தியா அதுவரை அறிந்திராதவைகளை அறிமுகம் செய்தவர்கள் .. ஜனநாயகத்தோடு கட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சி உட்கட்சி தேர்தல் முதல் தலைவர் தேர்தல் வரை ஜனநாயகமாய் திகழ்பவர்கள் .. முன்பு தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இந்திய ஒன்றியத்தில் தேர்தலை சந்திக்க தகுதியுடைய ஒரே கட்சி திமுக தான் என்றார் காரணம் நியமனங்களில் கட்சி நடத்துவது கூட தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது ..
..
திமுக எதை செய்தாலும் அதில் பொருள் பொதிந்திருக்கும் அவசரகாரர்களுக்கு இது புரியாது..
..
ஆலஞ்சியார்

Wednesday, September 28, 2022

 சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் ..
முதலில் பெட்ரோல் குண்டு வீசியது பாஜகவினராக தான் இருக்குமென பெரும்பாலானோர் நம்பினர் .. அவர்கள் வேலைதான் இதற்கு நிறைய சம்பவங்களில் தங்கள் உடமைகளை எரித்து நாடகமாடியவர்கள் என்பதால் பொது சமூகம் பாஜகவின் செயலாக இருக்குமென நம்பியது .. வரும் செய்திகளும் கைதும் SDPI சார்ந்த  முஸ்லிம் இளைஞர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது  சும்மாவே முஸ்லிம் மீது "தீவிர"மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் இப்போது இதோ பார் என கேள்வி எழுப்புகிறார்கள் 
..
திமுக வந்தாலே முஸ்லிம்கள் ஆயுதம் எடுப்பார்கள் குண்டு வீசுவார்கள், ஜெயா இருந்தபோது  ஒன்பது துவாரங்களையும் பொத்திக்கொண்டிருப்பார்களென பேச தொடங்கியிருக்கிறார்கள் .. திமுக யாருக்கும் அணுசரனையாக இல்லை என்பதும் சட்டத்தின் நிழலில் நின்று எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் என தன் கடமையை செய்கிறது .. ஆனால் 
பாஜக வந்துவிடும் என பயமுறுத்தி எங்களை திமுகவிற்கு வாக்களிக்க வைத்தீர்களென சிலர் அறியாமையில் உளறுவதும் கேட்க முடிகிறது ..
..
இஸ்லாமிய இயக்கங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும் .. பல பிரிவுகளாக இருப்பதும் எல்லாவற்றிக்கும் வன்முறை தீர்வாகும் என முட்டாள்தனமாக நம்புவதும் சங்கடத்தை தரும்..  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் ..யாரோடு சேர்கிறார்கள் எங்கே சுற்றுகிறார்கள் .. யாரோடு சகவாசம் என அறிந்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் .. 
இல்லையெனில் பிள்ளைகள் சிறையிலும் குடும்பம் நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்கவேண்டி வரும் .. நான்கு பேரின் செயல் மொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயரை பெற்று தரும் ..
அரசியல் வேண்டாம் என்பதல்ல.. அரசியலை அறிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையோடு சரியான வழியில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையாக அரசை எதிர்த்தோ ஆதரித்தோ அரசியல் செய்ய பழகுங்கள் .. அரசியல் தெளிவு .. நம் சமுதாயம் எதில் பின்தங்கியிருக்கிறது.. கல்வியின் அவசியம்  இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தவேண்டும் ..
..
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மற்றும் பஸ்கண்ணாடி உடைத்த வழக்கு என ஆறு வழக்குகளில் இரண்டில் "இருவர்" எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கைதாகியிருக்கிறார்கள் .. பெட்ரோல் குண்டுதானே அதிக சேதாரமில்லை என நினைக்கவேண்டாம் .. சேதாரம் என்னவோ ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு .. இரண்டு முட்டாள்களின் செயல் .. இது தொடர்ந்தால் சமுதாயமே "குற்றப் பரம்பரை" கூட்டில் நிறுத்தப்படும்
..
அரசியல் தேவை அது ஒன்றுபட்ட சமூகநலன் சார்ந்ததாக இருந்தல் வேண்டும் ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்ல..  எப்போது எப்படி பகைவரை வீழ்த்துவதென அறிந்து யார் வந்தால் நன்மை பயக்குமென அறிந்து யார் வரகூடாதென தெளிவாக உணர்ந்து ஜனநாயக முறையில் " வாக்கு"  எனும் பெரும் ஆயுதம் கொண்டு வீழ்த்தவேண்டுமே தவிர .. வன்முறையில் அல்ல..
..
புரிந்தால் நல்லது 
..
ஆலஞ்சியார்

Sunday, September 25, 2022

தங்களுக்கு  உடனே நீதி கிடைக்கவேண்டும் ..நாங்கள் சொல்வதை உடனே கேட்கவேண்டும்,.. பார்த்தாயா இவர் மெல்ல பாசிசத்திற்கு செவி சாய்கிறார்.. ஆர்எஸ்எஸ் பிடியில் திமுக அரசு.. விடிந்தும் விடியவில்லை என்றெல்லாம் சமுதாய அலப்பறைகள் .. இஸ்லாத்தின் நவீன பாசறை தம்பிகள் முனகுவதும் முழங்குவதும் முழுவதும் அறிந்தாற்போல் சமூக வலைதளங்கள் தீர்ப்பெல்லாம் எழுதுகிறார்கள் .. 
..
திமுக துரோகம் செய்துவிட்டது திமுக நமக்கான பாதுகாப்பை தரவில்லை திமுக நம்பி பலனில்லை என "தீர்க்கதரிசிகள்" வாய்மொழி தீர்ப்பளிக்கிறார்கள் ..
உண்மையில் பரிதாபகரமாக இருக்கிறது விடுதலைக்கு முன்பு தீர்மானிக்கும் இடத்திலிருந்த சமூகம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணமென இப்போதும் சிந்திக்க நேரமில்லாமல் பழி சொல்வதிலேயே பகுதி வாழ்வை இழக்கிறார்கள் ..
இப்போதும் சொல்கிறோம் திமுகவை நம்பவேண்டும் என யாரும் சொல்லவில்லை.. உங்களுக்கு சௌகரியமான இடத்தில் சேர்ந்து  பயணிக்கலாம் அதற்கு முன்பு இப்போதிருக்கும் 
நிலையை நினைவில் கொள்ளுதல் நலம்..
..
சமுதாயம் ஏன் பிரிந்து கிடக்கிறது 
யார் காரணம், எதனால் இந்த பின்னடைவு, என சிந்திப்பதே இல்லை .. எது நம்மை தடுக்கிறது 
குற்ப்பாக இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை மூளைச்சலவை செய்து வழிகேட்டில் நிறுத்துவது யார் ..
எதை எப்படி அணுகுவதென்று கூட தெரியாது போனதா .. சமுதாய ஒருங்கிணைப்பு ஏன் சாத்தியமாகாமல் போனது ..  மண்ணெண்ணெய் பாட்டில் வீசினால் வீரனென யார் சொன்னார்கள்..  உணர்வை வெளிபடுத்த ஆயுதம் தூக்க சொல்லி யார் கற்றுதந்தது ..
உண்மையில் பரிதாபகரமாக நிலையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது ..
..
பாசிசம் விரும்புவது அதுதான்.. உம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தி  வளர வேண்டும்.. இதோ பார் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், ஜிதாதிகள், அவர்கள் இரத்தத்திலேயே ஊறிபோன விடயம் .. இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்ய இது போதும் .. பகைவர்கள் கையில் இஸ்மாயில் என பச்சைகுத்திக்கொண்டு காந்தி கொலையையும் அதன் தொடர் கலவரத்தையும்  மதத்தின் பேரில் எழுதிவைக்க நினைத்ததும்  பெரியார் கூட அப்போது காந்தியை கொன்றது பார்ப்பான் என பகிரங்கமாக வானொலியில் பேசியதும் .. உத்தமர்காந்தியை கொன்றது ஊதாரி பார்ப்பான்  என கலைஞர் முரசொலியில் எழுதியதும் நினைவிற்கு வருகிறது இது அவர்களின் வரலாறு பழிகளை சுமத்த இஸ்லாமியன் வேண்டும் அதைச் சொல்லி கலவரம் நடத்த சூத்திரன் வேண்டும் கலவரத்தின் குளிர்காய வேண்டும் இதுதானே காலங்காலமாய் நடக்கிறது .. இப்போதும் அதே கட்டத்தில் தான் ..
எச்சரிக்கை..
..
மிக சாதூர்யமாக செயல்படவேண்டிய காலகட்டம் யார் பகைவர் என்பதை உணர்ந்து 
என்னவெல்லாம் சூழ்ச்சிவலை பின்னுகிறார்கள் .. இந்நாட்டில் தற்போதைய அவஸ்தை என்ன.. நெடுங்காலம் தீட்டிய திட்டத்தை நம் கைகளை கொண்டே நிறைவேற்றிட நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் .. தொப்புள்கொடி உறவுகளை கூர்தீட்டுகிறார்கள் .. ஒவ்வொரு பாஜகவினரும் வாய்திறந்தாலே மதம்,வாய்கூசும் சொல், இஸ்லாமிய  வெறுப்பு .. பிற மதத்தை இப்படி பேசிவிட்டு உயிரோடு இருக்கமுடியுமா என தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல் 
இந்நாடு அறபாதையிலிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது..
இப்போது வாழவே தகுதியற்றதாகி கொண்டிருக்கும் வேளையில் .. நல்வாய்ப்பாய் தென்னகத்தில் காலூன்ற முடியாதவாறு திராவிட சித்தாந்திகள் அறிவுக்கண்ணை திறந்து எதையும் யோசித்து செய் என அறிவூட்டியதால் இன்று கொஞ்சமேனும்  நிம்மதி பெருமூச்சு விடுகிறோம் ..அதையும் கெடுக்கதான் "பலி ஆடுகளை" கொண்டு பேயாட்டமாட நினைக்கிறார்கள் .. எரிகிற நெருப்பை அணைக்காவிட்டாலும் எண்ணெய்யாய் இல்லாமல் இருந்தால் போதும் 
..
தமிழ்நாட்டில் மிக பெரிய கலவரத்தை நடத்திட முயல்கிறார்கள் 
திமுக அரசு கவனத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நம்பிக்கையில்லாதோர் மாற்றுபாதையில் செல்லவும்..
ஜனநாயகத்தின் கண்கள் கூர்மையானது 
எல்லாவற்றையும் உள்வாங்கும் .. சரி செய்கிற நேரத்தில் சரி செய்யும் ஏனெனில் இங்கே வெகு மக்கள் விரும்புவது 
சமூக நல்லிணக்கம் .. சகோதரத்துவம், சமூகநீதி .. இவையாவும் தான் மனித சமூக மேன்மைக்கு வழிவகுக்கும் ..
தோக்கு தூக்க எம்மை பழக்கவில்லை 
அறிவு கொண்டு எதையும் வெல்  என்று தான் திராவிடம் சொல்லி தந்திருக்கிறது ..
நம் முதல்வர் 
நமக்கானவர் 
நன்மை நிறைந்தவர் ..இங்கே பாசிசத்திறேகும் பாசாங்கிற்கும் இடமில்லை கலவரம்  செய்வோர் மீது கருணைகாட்ட முடியாது  கடுமையான நடவடிக்கைதான் தேவை.. கசடுகளை களைவோம் ..  நல்லதை விதைப்போம்
..
இங்கே சாதி மத பிணி நீங்கி 
நல்லதொரு சமுதாயம் படைப்போம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, September 20, 2022

நாராயணகுரு 
உயர்ஜாதியினருக்கான குளத்தில் குளித்துக்கொண்டிருந்தததை அறிந்து அவரை அடிக்க "சிலர்" வந்தனர் .. என்னை தொட்டு அடிப்பதால் தீட்டுபடாதா என கேட்டார் .. பொருள் விளங்க கொஞ்சம் நேரம் பிடித்தது அதே போல் இன்று ராசாவை திட்டுகிற 
கேவலமாக பேசுகிற சில மூத்திரம்குடிகளுக்கு புரிய சில காலம் தேவைபடும் ..
..
அடி தடி கலவரம் இவைகளை சொல்லி தமிழ் சமூகத்தை வளர்த்தெடுக்கவில்லை ..படி படி என எம்மை தலையில் கொட்டி புரிகிறமாதிரி பெரியாரும் பேரறிஞரும் பேரறிவாளனும் சொன்னதால் தான் இன்று கம்பெடுத்துவரும் காலி குடங்களை கண்டு கண் சிமிட்டி சிரிக்கிறோம் 
முதலில் மநுநீதியை படியுங்கள் ஏன் அப்படி எழுதினான் .. காலகாலமாக நம்மை சூத்திரனாக எப்படி அடிமைபடுத்தியிருந்தான் என விளங்கும். உடனே பெரியாரை தேடுவாய் அப்போது எப்படி அரணாய் நம்மை காத்து நின்றார் பார்பன கும்பலின் சதிராட்டத்திலிருந்து எப்படி மீட்டார் என புரியும் ..
..
படி என்றது திராவிடம் 
சிந்தி என்றது திராவிடம் 
எவன் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றது திராவிடம் ..
எம் இனிய எதிரிகளே..
இடையில் வந்தவன் பணத்தாசையும் பதவி ஆசையும் காட்டி வழிகெடுக்கிறான் 
சிந்தி ..
நாளை நடுத்தெருவில் நிற்கும் போதும் உனக்கு திராவிடமே துணை நிற்கும் ..
..
ஆலஞ்சியார்

Saturday, September 17, 2022

எல்லோரும் பெண்களை 
"அழகு" பொருளாக்கி கவிதைபடித்து கொண்டிருந்தபோது 
இந்த "கிழவன் " மட்டும் 
உரிமை குறித்து பேசிக்கொண்டிருந்தான் 
"நீங்கள் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா .." 

எல்லோரும் 
பெண்களை சம்பளமில்லா வேலைக்காரியாக 
நினைத்த போது 
இந்த கிழவன் மட்டும் 
கரண்டியை பிடிங்கிக் கொண்டு 
புத்தகத்தை கொடு என்றான் 
..
இந்திய தர்மம் குற்றங்களால் ஆனது மநுநீதி உள்ளவரை ஒழுக்கம்  நியாயம் நேர்மை நீதி பெற முடியாது..  தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றார் இந்து லாவில் 
பிராமணா சூத்திரா இரண்டுதான் உண்டு ..
நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 
வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 
..
ராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது  ராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதியிருந்தார்கள் அதற்கவர்
இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். என்றார் .. பெரியார் எதைப்பற்றியும் கவலைபடாதவர் மனிதபற்றை தவிர வேறொன்றும் அறியார் எம் பெரியார்
..
பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்..  இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று "மகாபெருசுகள்" உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட  எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே "எல்லா மதமும்" சொன்னது ..
பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக தெய்வ செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும்  தங்களின் குல வாரிசை சுமைக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் 
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று ஜகத்குருக்கள் சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் ..ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் 
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு  மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண்கள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் 
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி எண்ணம் எல்லாம் 
திராவிட ஆட்சியால் நடந்தது ..
..
 இன்னமும் பெரியாரின் சிந்தனைகள் கருத்துகள் அவர் தந்த தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு மானுட சமுதாயம் மேம்பட சமதர்மசமுதாயம் அமைந்திட சமூகநீதியை நிலைநாட்டிட  தொடர்ந்து 
திராவிட மாடல் ஆட்சி செயல்படும் என உறுதி ஏற்போம் ..
வாழ்க! பெரியார் 
..
பெரியார்
The LEADER OF DRAVIDIAN SOIL
..
ஆலஞ்சியார்

Friday, September 16, 2022

ஜூன்3 ..
கொள்கைக்காரன் ..
பிடிவாதபோக்கு, சமசரமற்ற நோக்கு,
எவருக்கும் அஞ்சாத கொள்கை உணர்வு,
கட்சி,தலைவர் கொடி இவைதான் முக்கியம்
யாராக இருந்தாலும் சேர்ந்து பணியாற்றுவேன் என்ற உணர்வோடு  கட்டிதங்கமாய் மிளிரும் 
இயக்கத்தின் முன்னோடி 
கலைஞரின் 
#பயமறியாத_தம்பி
அன்பு உடன்பிறப்பு
பாப்பா தியாகராஜன் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.   
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள் 
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு பேசியது 
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் .. 
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் ..
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. இங்கே எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் .. 
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான  அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள்  இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என  அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள் 
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
.. 
விடியும் ..
வைகறையில்
மெல்லிய ஒளிகீற்று
சிறிதாய்
இருள் கறை நீக்கி
பனி நகர்த்தி 
புகைமூட்டம் விலக்கி
மெல்லிதாய் ஒளிவீசும்
கதிரவனின்
காலைப்பணி...
எப்போதும் போல்
இயல்பாய் இயங்குகிறது
இயற்கை ..
..
நாம் தான் 
போர்வை விலக்காமல்
கதகதச்சூட்டில்
இன்னும் சிறிது மணித்துளி ..
தொடக்கத்தை தள்ளிவைக்கிறோம்
எல்லாம் பின்னூட்டம் ..
..
நமக்காக அல்ல
விடியல் அது
இயற்கையின்
இயல்பான செயல்பாடு
நாம் தான் விடியலைநோக்கி
நம்மை நகர்த்த வேண்டும்..
..

விடியல்
நமக்காக
காத்திருக்காது..
..
விடியல்
விடியும்..
நமக்கு விடியாத போதும்.
..

விடியல் எப்போது..
விடியம்...
#விடியல் நோக்கு
எல்லாம் விடியும்..
..//
மன்சூர்.பக்கம்..
..

பசித்தவனுக்கு..
ஒரு பேரிச்சம்பழம்..
தந்தாயா .
நீயும் நானும் 
ஒரே மதம்

தடுமாறுகிறவனை.
கட்டியணைத்து..
விழாமல் 
தாங்கிப்பிடித்தாயா..
நீயும் நானும் 
ஒரே ஜாதி..

ஒடுக்கப்பட்டவனுக்காக
உன் குரல் 
ஒங்கி ஒலிக்கிறதா
நீயும் நானும்..
தோழர்கள் ..

அறியாமை எனும் 
நோயை போக்க.
ஆற்றல் தரும்..
பங்களித்தாயா
நீயும் நானும்..
ஒரே வர்க்கம்..

இயலாதவனை 
கண்டால்..உன்
இதயம் இளகுகிறதா..
நீயும் நானும்..
மானுடகுலம்..

தாயையும்
தாய்மொழியையும்,
ஒருப்போல்
நேசிக்கிறாயா..
எனில்..
நீயும் நானும்..
ஒரே #இனம்...

அடுத்தவனில் 
உரிமையில்
தலையிடாமல்,
அடுத்த வீட்டுக்காரனிடம்
அன்பை தருகிறயா..
நீயும் நானும்..
மனிதபிறவி..

இல்லையெனியில்     
பிரிந்துவிடுவோம்..
இனி..
பரம வைரிகள்.

உலகு..
உனக்கோ
எனக்கோ..
அல்ல..
நமக்கானது..
புரிகிறதா..
புரிந்தால் வா..
புன்னகை
பூக்கலாம்..

ஆலஞ்சி.மு.மன்சூர்
..
#மீள்
திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறேன் என சிலர் எண்ண கூடும்.. ஆம்.. சிலர் தங்கள் தகுதியை மறந்து ஏதோ தாங்கள் தான் காப்பாத்த வந்த ரட்சகன் போல பேசி திரிகிறார்கள்..  அரசியலில் சிலர் மிக திறமையாளர்களாக தன்னை எண்ணி படுகுழியில் விழுந்த கதைகள் ஏராளம்..
ம.பொ.சி.. சி.பா.ஆதித்தன் .. சம்பத்..
ஏன் நாவலர்.என பட்டியல் நீளும்.. ...இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் தங்கள் திறமைகளை பறைசாற்றினார்கள்.. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை .. மிக சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற முடியாததுமட்டுமல்ல வெகுமக்களின் ஆதரவில்லாமல் போனார்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களில் சிலர் கொண்டாடபட்டாலும் தொடர்ந்து தங்களின் திறமையை நிலைநாட்ட அவர்களால் இயலவில்லை..சிலர் அடிபணிந்து போனார்கள் .. உதிர்ந்த ரோமங்களாய் போனவர்களும் உண்டு.. உருப்படாமல் போனவர்களும் உண்டு.. இதை ஏன் இப்போது சொல்கிறேனெனில்.. இன்றைக்கு திடீர் திடீரென முளைக்கும் போராளிகள் முதல்நாள் சமூகசேவை செய்துவிட்டு மறுநாள் கட்சி தொடங்கும் தலைவர்கள்..? 
தங்களால் மட்டுமே முடியுமென சொல்லி திரிவதை பார்க்கிற போது நமக்கு நகைக்க தோன்றுகிறது.. உடனே ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம் என கேள்வி எழும்.. வரவேண்டும் அதற்குமுன் மக்களோடு மக்களாக இணைந்து போராட கலந்து காரியமாற்றவேண்டும்.. 
..
சிலர் தனக்கே  தகுதியென கருதி எதைவேண்டுமானாலும் பேசலாம் என எண்ணுவது .. தூரத்தில் இருந்து சூரியன் ஒளிபட்டு இலையில் தங்கிவிட்ட நீர் மின்னும்.. அது தன்னால்தான் ஒளி பிறந்ததென நினைப்பதைப் போல சிலர் தங்களால் தான் என எண்ணுகிறார்கள் ஏதோ தாங்கள் மட்டுமே சிறந்த தலைமையை தருவோமென உளறுகிறார்கள்.. சீமான் அன்புமணி .. தமிழிசை எடப்பாடி தினகரன்..ரஜினி கமல் என.. இந்த கூட்டம் எண்ணிக்கையில் அதிகம் எதற்கும் உதவாதவர்கள் .. இவர்களின் பலம் சாதி மதம் மொழி.. கவர்ச்சி சினிமா.. இதைதாண்டி இவர்கள் பூஜ்யம் ஒரு குறிப்பிட்ட சமூகமோ ..மதமோ.. கவர்ந்தழுக்கும் கலையோ.. இவர்களை பின்துணைக்கலாம் அது நீடிக்காது காரணம் அந்தந்த சமூகமே அவர்களை தூக்கியெறிந்துவிடும் காரணம்.. அந்த சமூகத்திற்கு கூட அவர்களால் கெடுதியே இவர்களால் வந்து சேர்ந்திருக்கும் .. தலைவர்கள் உருவாக வேண்டும் காலம் ஒவ்வொருமுறையும் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறது மக்கள் நலன்.. ஓயாத உழைப்பு  சமூக சிந்தனை நற்செயல் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற நேர்மை.. சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதாபிமானம் .. சமூகநீதியில் உரத்து நின்று அதை சமன் செய்கிற வல்லமை.. எள்ளளவும் ஜனநாயக மரபுகளை மீறாமை.. 
எதிர்கருத்தையும் உள்வாங்கும்  அரசியல் 
தான் ஏற்ற கொள்கையை .. நிமர்ந்துநின்று பறையும் பேராற்றல் ..துணிந்து செயல்படுதல் ..வேகத்தோடு கூடிய விவேகம் 
அனைவரையும் இணைத்து/இணைந்து செல்லும் தலைமை ...இவையெல்லாம் கணக்கில் கொண்டு நல்ல தலைவனை காலம் தேர்வு செய்து தரும்.. தற்குறிகளை அரைகுறைகளை தான்தோன்றித்தனமாய் பேசிதிரியும் அபத்தங்களை தானெனும் மமதையோடு திரியும் வெத்துவேட்டுக்களை காலம் கைவிட்டுவிடும் மட்டுமல்ல மறந்துபோகும்.. ஆழ குழிதோண்டி புதைத்துவிடும்..
சிலர் எண்ண கூடும் எம்ஜிஆர் ஜெயலலிதா எல்லாம் தலைவராக இல்லையா .. ஆம் சில பிழைகளை காலம் தந்து நமக்கு சரியான தலைமை யார் என்பதை உணர வைக்கும்.. 
..
ஆம்..
காலம் தந்த தலைவர்களாய்.. காலம் செதுக்கியவர்கள் .. பெரியார் பேரறிஞர் அண்ணா ..கலைஞர்...அந்த வரிசையில்
காலம் தனித்துவத்தோடு மெல்ல மெல்ல செதுக்கி தருகிறது.. தங்கமாய் தனிநிகர் தளபதியாய் காலம் தந்த கொடையாய் நிமிர்ந்து நிற்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. நான் சொல்வது இன்றைக்கு இது மிகையாக தோன்றும் .. ஆனால் காலம் நமக்கு உணர்ந்தும் ..அரசியலில் நேர்மையும்.. கொண்ட கொள்கையில் உறுதியும் அரவணைத்து செல்லும் தலைமையும்.. நிதானமும் எதையும் நேர்வழியில் பெறவேண்டும் மக்கள் தரவேண்டுமென என எண்ணுகிற உயர்குணமும் .. அதையெல்லாம் மக்களின் நம்பிக்கையும் சொல்லும் .. காலம் செதுக்கிய தலைவன் என்று .தளபதி தமிழகத்தின் தலைவன்..
..
ஆலஞ்சியார்

சின்னவர்

தஞ்சையில் #சின்னவர் ..
..
சின்னவர் என்ற அடைமொழி சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது .. மக்கள் திலகத்தை தானே அப்படி அழைத்தார்களென சிலர்.. சில நெடிய பயணத்திற்கான முன்னுரையென சிலர் .. வாரிசு™ ஆக நிலைநிறுத்த முயற்சி என சிலர் .. ஒன்றும் மட்டும் உறுதி ..
எதுவும் எளிதில் கிடைக்காது அப்படி கிடைத்தால் நிலைக்காது ..
உழைப்பு ,கடும் உழைப்பு வேண்டும்
மக்கள் நம்பிக்கையை பெறவேண்டும் இவன் இதை செய்து முடிப்பானென மக்கள் நம்பவேண்டும் .. சரியானவன் இவனென மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் ..அப்போதுதான் பெயருக்கும் பெருமை பெற்றோர்க்கும் பெருமை ..
..
தஞ்சை சில இடங்களில் கொடியேற்றியும் சில கூட்டங்களில் பங்கெடுத்தும் வரும்வேளையில் சின்னவர் சத்தம் கேட்கிறது.. தஞ்சை வரலாறு கலைஞரின் அரசியல் பாதையில் மிக முக்கியமானது .. தஞ்சை தேர்தல் மிகப்பெரிய சாதனைக்கு இட்டு சென்றது .. தஞ்சை மிராசுகளின் (நிலக்கிழார்) கட்டுபாட்டில் பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருந்ததை ஒற்றை மனிதனாக திமுக பக்கம் கொண்டுவந்து சரியான அடித்தளம் அமைத்து தந்தவர் கலைஞர் .. அன்றைய மாவட்ட செயலாளர் நீலமேகம் இங்கே எல்லாரும் "ஆண்ட" சொன்னதான் கேட்பார்கள் இங்கே கட்சியை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்றபோது மக்களிடத்தில் சென்றவர் கலைஞர் .. ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டும் தெருமுனை பிரச்சாரம் அந்திவேளையில் கடைவீதிகளில் பரப்புரை என கட்டியமைத்தார் கலைஞர் ..
..
1962 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .. 57 ல் 15 பேர் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்ற போது இந்த 15 பேரையும் தோற்கடித்து காட்டுகிறேன் என "பெருந்தலைவர்" சொன்னார் ஆனால் கலைஞரை தஞ்சையில் தோற்கடிக்க முடியவில்லை .. கலைஞரை எதிர்த்து யாரை நிறுத்துகிறீர்கள் என கேட்டு பரிசுத்தநாடாரை பரிந்துரைத்து பெரியாரே காமராஜரை ஆதரித்து பிரசாரம் செய்யவந்தும் கலைஞரின் வெற்றி கலைஞரின் மகுடத்தில் சாதனையானது ..
பெரியார் பிரச்சாரம் செய்கிறார் .. கருணாநிதி கடும் உழைப்பாளி ஒரு வேலையை ஏற்றுக்கொண்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டான் என் நேரடி சீடன் என முதல் பத்துநிமிடம் புகழ்ந்து பேசினார் .. அருகில் இருந்த தேர்தல் பனிமனையில் அமர்ந்து கேட்டுக்கொண்டே குறிப்பெடுத்து பெரியார் தன் சீடனுக்கு பாராட்டு என துண்டு சீட்டை அச்சடித்து கூட்டம் முடிவதற்குள் அதை விநியோகம் செய்தார் .. பெரியார் மேடையில் அமர்ந்திருக்கும் போதே துண்டு பிரசுரம் அவரது கைக்கு போகிறது படித்துவிட்டு சிரித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றவர் ..மீண்டும் அதை எடுத்து படித்துவிட்டு கருணாநிதியை தோற்கடிக்க முடியாதென்றார் ..
..
கலைஞரிடத்தில் இருந்த உழைப்பு எதையும் முடித்துக்காட்டவேண்டுமென்ற வேட்கை,.கொண்ட கொள்கையில் உறுதியோடு மக்கள் பணியில் தொய்வின்றி பேராசான்கள் பெரியார் பேரறிஞர் பாதையில் வெற்றிகண்டவர், பகையறிந்து படையோட்டம் நடத்தியவர், எதிரிகள் துரோகிகள் வழிநெடுக நேர்நின்றும் புறம்நின்றும் தாக்கியபோதும் தளராது மக்களோடு இணைந்து ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காய் திகழ்கிறார் ..
..
திராவிடப் பேராசான்களில் கரம்பிடித்து அறம் நின்று உழைப்பு உயர்வு தரும் நேர்மையும் நன்னெறியும் நிலைத்துநிற்கும் மக்கள் தொண்டில் எந்த வீழ்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து உழைத்தால் உயரத்தை எட்டலாம் அது நிலையானதென நமக்கு உணர்த்தி உயர்ந்து நிற்கிறார் தளபதியார் @Mkstalin
.. எதிரிகளே இல்லையென்றவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அழிவை நோக்கி நகர்கிறார்கள் ..இதோ தெளிவான கொள்கை தன்னலமற்ற சேவை ஓயாத உழைப்பு உயரத்தில் நிறுத்தியிருக்கிறது ..
..
மக்களிடம் செல்
மக்களோடு உறவாடு
மக்களோடு கலந்திரு ..
மக்களுக்காக உழை 
உயரம் வசம் படும் ..
..
ஆலஞ்சியார்


Wednesday, September 14, 2022

அண்ணா ..
எங்கள் அறிவு சுடரே
உன் ஒளியில் தான் 
நாங்கள் பயணிக்கிறோம் ..
எங்கள் 
கலங்கரை விளக்கே 
திசை தெரியாது நின்ற 
தமிழினத்தை கரை சேர்த்தது நீ
தம்பி படிக்கவா என்றாய் 
ஆளவே வந்துவிட்டோம் ..
ஒன்றியமே நம்மை எதிர்நோக்கிறது 
..
அண்ணா 
நீ..
எங்களுக்கு சுயமரியாதையை மட்டுமல்ல 
சுயமாய் எழவும் கற்றுதந்ததாய் 
உன் தமிழ் 
வீணை மீட்டிய இசை 
உன் சொற்களால் ஆடிய தாண்டவம்
ஆரியத்தை அதிரவைத்தது
திராவிட தருவே 
உன் நிழலில் தான் 
தமிழகம் இப்போதும் 
நிம்மதியாய்  நிற்கிறது 
..
"கடவுள் இல்லையென்றோ 
இருக்கிறாரென்றோ 
நான் சொல்லவில்லை அறிவோடு ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லென்று தான் கூறுகிறேன்",
எவ்வளவு தெளிவு..
ஆயுதம் கொண்டு இன்று சிலர் கலவரம் செய்ய துணியும் போதும் 
நீ கற்று தந்த அறிவாயுதம் கொண்டே வெல்கிறோம் ..
..
தமிழ்படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றாார் பெரியார்.. எதைதான் எமக்கு
மாசுமறுவற்ற மதமில்லை, நமக்கு
இனப்பற்று மிக்க இலக்கியமில்லை நமக்கு 
அன்பு தரும்,அறிவூட்டும்
சமுதாயம் இ்ல்லை நமக்கு  மனிதர்கள் மனிததன்மையோடு வாழ சுதந்திரமில்லை என விளக்கம் தந்தாய்.. ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் 
தமிழ்நாடு தந்தாய் ..
நாடு கேட்கிறார் ஜாக்கிரதை என ராஜகோபால் டெல்லிக்கு சொன்னபோது 
இந்தியா நாடே அல்ல அதுவொரு துணைகண்டம் என புரியவைத்தாய் .. சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென உச்சநீதிமன்றம் சொன்னபோது 
அதை சட்டமாக்கி சரித்திரம் படைத்தாய் ..
..
உன் வழியில் தான் தமிழகம் செல்கிறது..திராவிட மாடல் நீ தந்தது தான் ..
திராவிட போர்வையில் ஒளிந்திருந்த மகோரா(எம்ஜிஆர்) கூட உன் நாமத்தை சொல்லிதான் பிழைக்க முடிந்தது .. உன் தமிழ் கேட்டு தமிழகம் சொக்கிநின்றது .. உன் தம்பிமார்கள் படைகஞ்சா போர்வீரர்கள் .. நீ மாபெரும் ஜனநாயக வாதி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்
..
தமிழ் தேசியம் பேசி திரியும் சின்ன தம்பிகளே .. திராவிடம் என்றால்  கசக்கிறதா ..
இதோ எம் அண்ணா சொல்கிறார்

"திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல,கனவுலக கண்டுபிடிப்பும் அல்ல.
காவியத்தில் உள்ள சொல்..
வரலாற்றில் வருகிற பெயர்.
ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம்.அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம்.
இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல? எவ்வளவு தீர்க்கமான விளக்கம்..
..
இன்றைக்கு பாசிசத்தின் செயல்பாடுகளும், அவர்களின் தத்துபிள்ளைகளின் கூச்சல்களும் எமக்கு துருக்கிய பழமொழிதான் ஞாபகம் வருகிறது
"நரியிடமிருந்து மதத்தைக் கற்றுக் கொண்டவனுக்கு கோழியைத் திருடுவது தொண்டாகத் தோன்றும்".. ஆம் மதத்தை கையிலெடுத்து கலவரம் செய்ய முடியாத அமைதியாய் வாழும் தமிழகத்தை இரத்தபூமியாக்கி முடியாதா ..கலவர செய்து குளிர்காய முடியாதா என நினைக்கிறார்கள்  ஆனால் நாமோ அண்ணாவின் தம்பிகள் 
கலைஞரின் உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்
ஆம்
எம் அண்ணா எம்மை அறிவுக்கொண்டு வளர்த்தெடுத்தார் இப்போதும் 
சில கழிசடைகள் செய்யும் கீழ்தரமான செயல்கள் கண்டும் அமைதியாய் அறிவின் துணைக்கொண்டு வீழ்த்த நினைக்கிறோமே இதில் தான் அண்ணா வாழ்கிறார் ..
..
அண்ணா என்றால் 
தமிழ் 
அண்ணா என்றால் 
தமிழகம் 
அண்ணா என்றால் 
சுயமரியாதை
அண்ணா என்றால் 
வாசிப்பு 
அண்ணா தமிழர்களின் நாளம் 
..
வாழ்க! அண்ணாவின் புகழ் 
..
ஆலஞ்சியார்

Monday, September 12, 2022

அய்யா கோ.சி.மணி..
93 வது பிறந்தநாள் ..
..
தன்மான தளகர்த்தர் 
சோழ மண்டலத்தின் மாவீரன் 
ஒவ்வொரு ஊரிலும் அவர் பெயர் பொறிக்கபட்டிருக்கிறது ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டத்தில் அவர் பாதம் படாத இடமில்லை .. ஒவ்வொரு தொண்டரின் கிளைகழகத்தை சேர்ந்த நிர்வாகிகளின் பெயர் அறிவார் ..தோளில் கைபோட்டு  அவர்கள் குறைகளை கேட்பார் .. ஒவ்வொரு நிகழ்வையும் வரலாறாய் மாற்றும் வித்தைகாரர் ..
..
ஒரு மக்கள் பணியாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரை கண்டு படிக்கவேண்டும் 
இவரது துணைவியார் மரணம் அடைகிறார் .. அன்றைக்கு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தளபதியாய் விரைந்து அவரது இல்லம் செல்கிறார்,.. மனைவி உடல் கிடத்தபட்டிருக்கிறது அந்த சூழலில் கூட தளபதியை தனியாக அழைத்து குடந்தையில் கோவில் தேரோட்டம் .. விளக்குகள்  சரிசெய்யபடாமல் இருக்கிறது வழிகளை சரிசெய்ய வேண்டும் திருவிழாவிற்கு வருபவர்களுக்கு வசதி வேண்டும் இவையெல்லாம் உனது துறையின் கீழ்தான் வருகிறது விரைந்து செய்து கொடு என்கிறார் .. தளபதிக்கு அழுகையே வந்துவிட்டது என்ன மனுஷனய்யா 
மனைவியின் இறுதி ஊர்வலம் புறப்பட தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் கூட தொகுதிக்கு அது  வேண்டும் இது வேண்டும் என கேட்கிறார் .. அது தான் மணி அண்ணன் 
..
இன்றைக்கு "மாமனிதன்" என கொண்டாடபடுகிற வை.கோபால்சாமி கழகத்திலிருந்து நீக்கபட்ட போது இக்கட்டான சூழ்நிலையில் கழகத்திற்கு உரிமை கோருகிறார் எங்கே பொதுக்குழுவை கூட்டுவதென கலைஞர் ஆலோசித்த போது தஞ்சைதான் சரியான இடம் மணி பார்த்துக்கொள்வான் என நம்பி வந்தார் ..  பொதுக்குழு முடிந்து திலகர் திடலில் கூட்டம் எப்படி நடக்கிறதென பார்ப்போமென சில "மனிதர்கள்" கலவரம் செய்ய முற்பட்ட போது அது கலைஞரின் கவனதிற்கு வர  என்ன மணி உன்னை நம்பிதானே வந்திருக்கோம் என்றபோது இங்கே இரு வரேன் என தொம்பன் குடிசை பகுதியில் ஒளிந்திருக்கிறார்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யபட்டவர்கள்  என அறிந்து அங்கு சென்று எவன்டா கூட்டத்தில கலவரபண்ணுவேன்னு சொன்னது என வேட்டியை மடித்துகட்டி நின்றார் பாருங்கள் அதை பார்த்த நாங்களெல்லாம் வாய்பிளந்து நின்றோம் .. திரும்பிவந்து கலைஞரிடம் இப்ப போ பொதுகூட்டத்திற்கு என்றாரே கலைஞர் முகத்தை பார்க்கவேண்டுமே .. குழந்தையின் சிரிப்பை போல கள்ளமில்லாதிருந்தது ..
..
கட்சியின் தொண்டன் எப்படி செயலாற்ற வேண்டுமென்பதற்கு ..மாவட்ட செயலாளர்கள் எப்படி சுழன்று பணியாற்ற வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்..
..
கட்சியின் இக்கட்டான நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக இருந்தவர் பொதுக்குழுவில் தலைமைக்கெதிராக சிலர் பேசுவார்கள் இவர் கூட பேசுவார் அது சரியான நடைமுறையில்லையென்று பேசுவார் .. ஒருகட்டத்தில் நிலைமையை சரிச்செய்ய வேண்டுமெனில் கலைஞரின் கண்கள் மணியை தான் தேடும் .. கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மணியை கலைஞர் பார்ப்பார்.. புரிந்துக்கொண்டு மேலே வந்து கலைஞர் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது நமது கருத்துகளை சொல்லிவிட்டோம்,.. தலைவரின் முடிவே இறுதியானதென்று முடித்துவிடுவார்..
..
 அவர் மந்திரியாக இருந்த போதுதான் அழுக்கு நகரம் என்ற அவப்பெயரை மாற்றி கும்பகோணத்திற்கு புதிய முகம் தந்தார் 
கும்பேஸ்வரன் கோவிலைச் சுற்றி சாக்கடைகள் மழைக்காலம் வந்தால் அவ்வளவுதான் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும் யானைக்கால் நோயால் கும்பகோணத்தை சுற்றி உள்ளவர்கள் அதிகம் பாதிக்கபட்டார்கள் .. பாதாள சாக்கடையை கொண்டுவந்து கும்பகோணத்தையே சிங்காரித்தவர் .. 
..
விவசாயிகள் பிரச்சனைப்பற்றி துள்ளியமாய் அறிந்தவர் பேரறிஞர் அண்ணா கூட காவிரி கடைமடை பிரச்சனையென்றால் மணியை கூப்பிடு அவனுக்குதான் எல்லாம் தெரியும் என்பார் .. கலைஞரும் காவிரி பிரச்சனையில் மணியிடம் தான் கேட்பார்..கட்சி விடயத்தில் விட்டுகொடுப்பதென்பதே இவரிடமில்லை..
கட்சிப்பணியில் தொண்டர்களோடு
இரண்டற கலந்திருந்தார் 
ஓயாத உழைப்பாளி.. கட்சிக்கெதிராக யார் வந்தாலும் முகம் பார்க்க மாட்டார்..
..
"மேக்கிரி மங்கலத்து போக்கிரி" என அண்ணாவே அழைத்தார்.. 
மணி அண்ணன் மரணித்த போது கலைஞர் இரங்கலில் இப்படிதான் சொன்னார்..
"மணி இல்லாத தஞ்சையை" நினைத்து பார்க்க என் குலைநடுங்குகிறதே என்றார் ..
உடல்நலியுற்றிருந்த நிலையிலும் தன் தலைவரின் பிறந்தாளுக்கு காண வரிசையில் வருகிறார் .. அவரது கையைப் பற்றிபிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் கலைஞர் இருந்தார் அது பல  விடயங்களை சொன்னது.. தொண்டனுக்கும் தலைவனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை சொன்னது..
..
மணி அண்ணன் போன்றோர்களால் தான் திராவிடம் இயக்கம் இன்றைக்கும் அசைக்கமுடியாததாக .. வலுவோடு இருக்கிறது இந்த பிறந்தநாளின் வீரவணக்கத்தை செலுத்துவோம்..
புகழ்வணக்கம் 
..
ஆலஞ்சியார்
மகிழ்கிறேன்..
..
குவைத் அயலக திமுகவின் முப்பெரும் விழா வருகிற #28_அக்டோபரில் நடக்கிறது 
மாண்பிமை அமைச்சர் 
செஞ்சிமஸ்தான்  MLA .., அவர்கள் 
(சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை) கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார்கள்..
தி.மு.கழகஅயலக அணியின் செயலாளர் மானமிகு
புதுக்கோட்டை M.M.அப்துல்லா MP
அவர்களும் 
திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு .
துரைசந்திரசேகரன் அவர்களும்
கலந்துக்கொள்கிறார்,..
..
இப் முப்பெரும் நிகழ்வில்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இனமான பேராசிரியர்  விருதுகள்  வழங்கப்படவுள்ளது..

#பேராசிரியர்_விருது 

 #செம்மொழிசையத்முஸ்தபா

சமரசமற்ற போராளி எதையும் எதிர்த்தும் ஆதரித்தும் பேசுவதில் தயக்கம் காட்டியதில்லை மிக சிறந்த ஜனநாயகதன்மையை கொண்டவர், கழகத்தின் மீதும் தலைவர் மீதும் பற்றுக்கொண்டவர் சமூக ஆர்வலர் தவறென்பதை சுட்டிகாட்ட தயங்காத நேர்மை பாசாங்கு தெரியாதவர் பழகுவதற்கினிய நண்பர் 
..
#கலைஞர்_விருது 
உரத்தநாடு பாப்பா. கோ.தியாகராஜன் 
Thiyagarajan Pappa 
கொள்கை பிடிவாதகாரன் ..
கலைஞரின் முரட்டுபக்தன்  
கழகம் கண்ட போராட்டங்களில் எல்லாம் களம் கண்டவர் .. தலைவர் கலைஞர் இவரின் உயிர்மூச்சு சோதனையான காலகட்டங்களிலும் கழகத்தை விட்டு பிரியாத தங்கம் ..கழகம் கொடி இரண்டுதான் இவருக்கு தெரியும் எதையும் துணிவோடு பேசும் வெள்ளையுள்ளம் கொண்டவர்..
..
#அண்ணாவிருது 

சிதம்பரம் ந.தியாகராஜன் 
கொள்கை உறுதியோடு பயணிப்பவர் ..கடும் உழைப்பாளி..
குவைதில் இரண்டு முப்பெரும்விழாக்களை நடத்திகாட்டி திமுகவை பேசுபொருளாக்கியதில் பெரும்பங்கு இவருக்குண்டு.. கடினமான காலகட்டத்தில் கூட இயல்பாக கடந்து வென்றுகாட்டியவர் ..
இப்படியொருவரை காண்பது அரிது .. சமரசமற்ற போக்கு தலைமைப்பண்பு, நிர்வாகதிறமை அனைவரையும் அனுசரித்து குவைத்தில் திமுகவை வழிநடத்தும் ஆற்றல் .. பல்வேறு இன்னல்களிலும் தளராது களம்கண்டு செயல்படும் போராளி 
கலைஞரின் மீதும் கழகத்தின் பாசம் கொண்ட நன்மதிப்பாளர்.. 
சமூக ஆர்வலர், உள்ளொன்றும் புறமொன்றும் பேசாத
பாசம் நிறைந்த தம்பி ..
..
இவர்களோடு எனக்கும் 
விருது தருகிறார்கள் 
"#பெரியார்_விருது" 
இன்னமும் திராவிட மாணவனாய் கற்றுக்கொண்டிருக்கிறேன் 
திராவிடத்தை அருமையை, அது சமூகத்தில் செய்த தாக்கத்தை, 
அதன் அவசியத்தை, முத்தான தலைவர்களான பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா  பேரருளாளன் கலைஞர், இனமான பேராசிரியர், இவர்களெல்லாம்
இந்த இயக்கத்திற்காக  உழைத்ததை, கட்டிகாத்ததை, இயக்கத்தை வழிநடத்தியதை, .. திராவிட முன்னோடிகள் செய்த தியாகத்தை  வளரும் தலைமுறை கொண்டு சேர்க்கும் சிறிய பணியை செய்கிறேன் அதற்கு அங்கீகாரமாய் விருது தருகிறார்கள் என நினைக்கிறேன் .. 
இன்னும் கூடுதலாய் இயங்க என்னை ஊக்குவிக்கும் என நம்புகிறேன் 
..
என் இனிய நண்பர்களோடு இணைந்து விருது பெறுவதில் மகிழ்ச்சி 

வெல்க! திராவிடம் 
..
ஆலஞ்சியார் 
வழுத்தூர்
(ஆலஞ்சி மு மன்சூர்)

Sunday, September 11, 2022

சாஸ்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநன் நெறிகளில் ஆசாரம் பெற்றாலும்
பாத்திரமேந்திப் புறத்திலலைந்தாலும்
பாவனையாலுடல் நொந்து மெலிந்தாலும்
மாத்திரைப்போதில் எமன் வருமப்போது
மற்றொன்றுதவாதுதவாதுதவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன் 
சுக்கானை நேர்பிடி இக்கணமே சொன்னேன்

சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன்
சூட்சக் கயிற்றினைப் பாரடா
ஆதி சூட்சக் கயிற்றினைப் பாரடா

#குணங்குடி_மஸ்தான்சாகிபு_அப்பா
அயலக திமுக 
குவைத் 
நடத்தும் 
முப்பெரும் விழாவில் 
விருது பெரும் 
கழக கண்மணிகள் 
..
பெரியார் விருது 
ஆலஞ்சியார் 
..
அண்ணா விருது 
சிதம்பரம். ந.தியாகராஜன் 
..
கலைஞர் விருது 
ஒரத்தநாடு பாப்பா.கோ.தியாகராஜன் 
..
பேராசிரியர் விருது 
செம்மொழி சையத் முஸ்தபா 
..
விருது பெறுவோர்க்கு
இனிய வாழ்த்துகள் 
..
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக..

Friday, September 9, 2022

இருவரும் 96 வயதில் மறைந்த ஆளுமைகள்  என இணையத்தில் கருத்து பேசபடுகிறது .. கருத்திற்கு மதிப்பளிக்கிறேன் .. 
ஆனால் 
இருவரையும் ஒப்பிடுவதே தவறு ..
..
#மகாராணிஎலிசபெத்
அரச குடும்பத்தில் பிறந்து  70 ஆண்டுகள் மகாராணியாக இருப்பதென்பது சதாரணவிடயமல்ல பல்வேறு நிகழ்வுகள், அவரின் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் அவரை அலட்டியிருக்கிறது .. ஜனநாயக பரவல் அதிகரித்தபோதும் குடும்ப உறவுகளின் சதிராட்டமும் அவரை மேலும் பலம் பொருந்தியவராக மாற்றியதும் அவர் வந்த வழி எளிதானதால் முடிந்தது .. அதற்காக அவரின் ஆளுமையை அவரின் ஜனநாயகத்தின் நம்பிக்கையை மறுக்கவியலாது ..
..
அரசர்கள் மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு அரச குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார்  அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டார் உலகமே வியந்தது 
வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கினார் எல்லோரையும்/எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறை  உலகம் வியந்து பாராட்டியது ..
..
#கலைஞர் சுயம்பு ..
மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து , போக்குவரத்து வசதிகூட சரியாக இல்லாத கிராமத்திலிருந்து கிளம்பிய வந்த சூரியன் .. மிகப்பெரிய பின்னணியோ பலமோ, உயர்சாதி பெருமையோ இல்லாமல், எதுவும் எளிதில் கிடைக்காத சூழலில் தானே சுயம்புவாய் வெளிவந்த மாமனிதர் .. தன் வாழ்நாளில் என்பதாண்டுகள் வெற்றி தோல்வி எல்லாம் தானே தேடியது .. எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், புதிய பாதையை சமைத்தது.. தான் சார்ந்த சமூகமும் தன் இனமும் தன் மக்களுக்கும் உயரத்தில் ஏற்றிய ஏணி..
..
சுற்றி இனப்பகைவரின் சூழ்ச்சியும் தொடர்ந்து வேட்டையாடபட்ட போதும் தமிழினத்தை காத்து நின்ற சாமி .. ஒவ்வொரு ஊரும் இவரின் 
பாதம் பட்டிருக்கிறது .. எந்த ஊரில் எப்படிபட்ட வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இவரின் பங்கு அதில் உண்டு .. துரோகத்தால் தாழே கிடந்த தமிழ்சமூகத்தை பகுத்தறிவு கொண்டு நவீன கட்டமைப்பை உருவாக்கி உயரத்தில் நிறுத்திய பெருமைக்குரியவர் .. இந்திய அரசியலில் பெருமைக்குரிய தகுதிக்குரிய நம்பிக்கையான மக்கள் பணியாளர் ..
..
துயரங்களும், சோதனைகளும், துரோகங்களும், தொடர் இன்னல்களை தந்த போதும்  
நெருப்பில் மின்னும் பொன்னாய் திகழ்ந்த பெருமகன் .. வாழ்நாள் முழுதும் "மக்கள் தொண்டு" எனும் கடமையாற்றிய பேரருளாளன் ..
விழும்பில் நின்று தவித்தோரை கரை சேர்த்தவன் .. 
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாய் " வாழ்ந்த ஞானி ..
இனம் மொழி பண்பாட்டிற்கு கேடுவந்தால் சுழன்றடித்த போர்வீரன் ..  
..
கலைஞர் ஆகசிறந்த ஜனநாயகவாதி .. 
ஆசிரியர் வீரமணி நம்மை விமர்சித்து விடுதலையில் எழுதியிருக்கிறாரே என்ற போது .. விமர்சித்தால் தான் அவர் வீரமணி இல்லையென்றால் அவர் ஈரமணி என்றார் .. கலைஞர் ..
ஆக சிறந்த அரசியல்வாதி எதிர்கருத்துகளுக்கு செவிமடுப்பவனாக இருக்கவேண்டும் .. 
சிறந்த தலைவனுக்கு அழகு தொண்டர்களின் உள்ளத்தை அறிந்தவனாக இருக்கவேண்டும் ..
சிறந்த ஆட்சியாளனுக்கு அழகு 
வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே சிந்திப்பவனாக செயல்படுபவனாக இருக்கவேண்டும் ..
கலைஞர் 
ஜனநாயகத்தின் இலக்கணம் 
கலைஞர் 
தலைமையின் இலக்கணம் 
கலைஞர் 
அரசியலின் இலக்கணம் 
..
ஆலஞ்சியார்

Tuesday, September 6, 2022

பெரியார் ..பெண்கள் கையில் புத்தகத்தை கொடுங்கள் என்றார்..
பெண் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த திராவிட மாடல் அரசு "புதுமைப் பெண்" என்ற திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெண்களின் கல்வியை உறுதி செய்தியிருக்கிறது ..
..
பெண்கள் உயர்கல்விக்கு நுழைய இந்த சமூகத்தில் நிறைய தடங்கல்கள் இருந்தாலும் "வருவாய்" குறைவான குடும்ப நிலை மிகப்பெரியளவில் தடுத்துநிறுத்தும் ..  பொருளாதாரத்தை காரணம் காட்டி ஆண் குழந்தைகள் படித்தால் போதும் என்கிற மனப்பான்மை நிறைய நடுத்தரக் குடும்பங்களில் இப்போதும் உண்டு .. பேராசான் #பெரியார் உங்கள் ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்களுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார் .. எந்தளவிற்கு பெண்கல்வி முக்கியம் என்பதற்கு இதைவிட எப்படி சொல்லமுடியும் ..
..
அடும்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் பேசுவோர் கூட பெண்களை உயர்கல்விக்கு அனுப்ப வேண்டும் என அதுவே அவளுக்கு துணை நிற்கும் என்பதை உணர்கிறார்கள் .. பொருளாதார நெருக்கடி சமூக சூழல் அவர்கள் ஒரு கணம் யோசிக்க செய்தால் கல்வி கனவு தகரும் .. பெண்கல்விக்கு உதவி தொகை என்பது மிகப்பெரிய சமூகநீதி திட்டம் .. உண்மையில் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் கரங்களை பற்றிக்கொள்கிறேன்..
..
#பரகத்நிஷா நன்றி தெரிவிக்கும் போது ஒன்றை சொன்னார் .. கல்யாணம் கைவிடும் கல்வி கைவிடாது என்றார் .. கைதட்டிவிட்டு கடந்து போகிற விடயமல்ல.. உண்மை, இளம் விவாகரத்துகள் பல்வேறு காரணங்கள் சொல்லபட்டாலும் அதன் பாதிப்பு "பெண்களுக்கு " தான் அதிகம் ..சுயம் எழ முடியாதவாறு சமூக அழுத்தும் மனதளவில் சிதைக்கும் .. ஆனால் கல்வி எல்லாநேரங்களிலும் கைகொடுக்கும் சுயமரியாதையோடு வாழ .. யாரையும் சேர்ந்து கூனிகுறுகிநிற்க வேண்டிய நிலையிலிருந்து காக்கும் .. கல்வி பெருங்துணையாய் வாழ்நாள் முழுவதும் வரும்.. தன் குடும்பத்தை நல்லநிலையில் நிறுத்த குழந்தைகளை நற்சிந்தனையாளராக, கல்வியாளராக, சமூக பொறுப்புணர்வு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க கல்வியால் மட்டுமே முடியும்
..
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
சிங்கப்பெண்களாய் 
தமிழக மாணவிகள் 
மிளிரும் காலம் வருகிறது ..

"அன்புள்ள அத்தான்  வணக்கம் இந்த "ஆயிழை" கொண்டால் மயக்கமென 
நம் புத்தியில் ஏற்றிவைத்த சிரங்குகளுக்கு மருந்தாய்" 
உலகத்தையே ஆள 
நம் குழந்தைகளை தயார் செய்வோம் ..
தந்தை பெரியார் 
நீங்களெல்லாம் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா .. சந்திரமண்டலத்தில குடியேற வேண்டாமா என 1940களிலேயே பேசினார் .. பெண்களுக்கு
தன்னம்பிக்கையை சுயமரியாதையை கல்வி தரும் என்றார் ..
..
உண்மையில் தமிழ்நாடு அரசு சரியான திசையில் பயணிக்கிறது .. சில தம்பிகள் விமர்சனம் என்ற பெயரில் விசத்தை கக்குகிறார்கள் பிச்சை எடுக்கும் செயல் என்பது உழைக்காமல் ஊர்காசில் சோறுதிங்கும் தம்பிகள் உல்லாச வாழ்விற்கு பொருள் ஏது என்றால் வெட்கமே இல்லாமல் தம்பிகள் தந்தார்கள்.. மளிகை கடைகாரர்  "மளிகை சாமான்" தந்தார்  என சொல்பவர்களுக்கு கல்விக்காக பெண்களின் மேம்பாட்டிற்காக செலவு செய்வது இலவசமாகதான் தெரியும் ..
..
புரிந்துக்கொள்ளுங்கள் இலவசமல்ல, உரிமை ..
இந்த அரசு செய்யும் உயர்கடமை.. 
உயரத்தை தொட பொருளாதாரம் சுமையாக கூடாதென கடமை உணர்வோடு தகப்பன் சாமி"யாய் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் காத்துநிற்கிறார் ..
வீணர்கள்,விலைபோகாதவர்கள், செல்லாகாசுகள் மண்ணை நாசாமாக்கும் கழிவுகள்  உளறுவதை கண்டுக்கொள்ள தேவையில்லை 
"அங்கலாய்ப்புகள் முழுமை பெறும்போது உருவாகும் பொருளே "எழுச்சி" என்பார் #பேரறிஞர்அண்ணா..  நம் இலக்கை நோக்கி வீறுக்கொண்டு எழுவோம்
..
உயர்சாதி ஆண்களும் பணக்காரர்களும் படிக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி இடஒதுக்கீட்டை கொண்டுவந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சியாய்  பாலின வேறுபாடின்றி அனைவரும் படிக்கலாம் என்ற நிலையை எட்டி .. குறிப்பாக பெண்கள் தடையின்றி படிக்க வேண்டுமென்கிறது திராவிட மாடல் .. தொடர்ந்து 
கல்வி ஒன்றே நமக்கான விடுதலையை தரும் ,கல்வி ஒன்றே சுயமரியாதையோடு வாழ வழிவகுக்கும், கல்வி ஒன்றே வேறுபாடுகளை களையும், கல்வி ஒன்றே மூடபழக்கத்திலிருந்து நம்மை மீட்கும்.. நாம் சாதிக்க பிறந்தவர்கள் .. அரசும், அதன் தலைவரும்
திராவிடமும் தொடர்ந்து கைதூக்கி விடும் .. உயர உயர செல்வோம்
வானம் வசப்படும் 
..
ஆலஞ்சியார்

Sunday, September 4, 2022

நிர்மலா சீதாராமன் ..
தெலுங்கானாவில் ரேசன் கடையில் செய்த அலப்பறை ..
அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? 
மோடி படம் ஏன் இல்லை என்ற கேள்வி அவர் தன் விசுவாசத்தை காட்ட நினைத்ததன் வெளிபாடே தவிர நடந்துக்கொண்ட விதம் அவருக்கே உரிய அகம்பாவத்தை காட்டுகிறது .. ஒருவரின் மனதை அவர் குணத்தை முகம் காட்டும் என்பார்கள் 
..
என்ன செய்திருக்கவேண்டும் 
மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பவதை கூட தனியாக இருக்கும் போது கேட்டிருக்கலாம்
முறைபடி துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கவேண்டும் 
அதை தலைமை செயலாளர் எழுத்துபூர்வமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார் ‍.. அதுதானே நடைமுறை .. ஆனால்
இவையாவும் செய்யமாட்டார்கள் செய்ய முடியாது ..மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியாது தலையிட்டால் வேறுமாதிரி அது அரசியலாகும் அதனால் மாவட்ட ஆட்சியரை மிரட்டி ஸ்டண்ட் செய்கிறார் ..
..
மாநில அரசின் நிதி வசூல்தான் வருவாய்தான் ஒன்றிய அரசின் சக்கரம் சுழல முக்கிய அச்சாணி என்பதை அவர் அறிவார் .. மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் "குரங்கு" வேலைதான் இப்போது நடக்கிறது .. தமிழகம் போன்ற வரி வருவாய் மாநிலங்களின் பலத்தில் தான் பெரியமாநிலங்களில் நிதி நெருக்கடி சமாளிக்கபடுகிறது 
..
இங்கே எதுவும் இலவசமில்லை
மக்களின் வரிப்பணம் அவர்களுக்காக செலவு செய்ய நியமிக்கபட்ட ஊழியர் அவ்வளவுதான் ..  இது முடியாட்சி அல்ல குடியாட்சி .. பொதுவாழ்வில் அடிப்படைதன்மையே இன்முகம் தான் .. எளியவர்களுக்கு இயலாதவர்களுக்கு உழைக்க வந்திருக்கிறோம் என்ற நினைப்பு வேண்டும் .. தன் தகுதிக்கு மீறி
ஆடியவர்கள் இருந்த இடம் தெரியவில்லை  என்பதுதான் வரலாற்றில் நெடுக காணலாம் 
..
"கடுமொழி" வலிமையை தேய்க்கும்  என்றான் வள்ளுவன்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கொள்கையாய்,செயலால் எதிர்த்தாலும், நாட்டின் நிதியமைச்சர் நீங்கள் ..
உங்கள் உடல்மொழியும்,சொல்லும் முகம் சுழிக்க வைக்கிறது.. இன்முகத்தோடு கதையுங்கள் .. எதிர்கருத்தையும் உள்வாங்குங்கள் .. ஜனநாயகத்தின் மிகப்பெரிய  செயல் "செவிமடுத்தல்" .. 
..
உங்கள் அரசை பார்த்தால்
கோமாளி அரண்மனைக்கு சென்றால் அரசனாகிவிடுவதில்லை அரண்மனை
சர்க்கஸ் கூடாரமாகிவிடும் என்ற துருக்கியபழமொழிதான் ஞாபகம்  வருகிறது நிர்வாக சீர்கேடு அதைமறைக்க மதத்தை கையிலெடுக்கும் பாதை 
எதிர்த்தால் அகங்கார பதில் 
..
"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று"..
என்றான் வள்ளவன் 
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது..
ஆம் 
இந்தியா கண்ட பலவீனமான நிதியமைச்சர் ..
..
ஆலஞ்சியார்

Friday, September 2, 2022

செருப்பு ..
கருத்து குறைபாடு உள்ளவர்கள் 
எதையும் எதிர்க்கொள்ள திராணியற்றவர்கள், தோல்வியின்  விளிம்பில் நிற்பவர்கள், பலவீனமானவர்களின் கடைசி ஆயுதம் .. 
..
நடிகவேள் காரில் ஒரு முறை நாய் ஒண்ணுக்கு போய்விட்டது  அதை பார்த்துக்கொண்டிருந்தார் 
அவரது உதவியாளர்கள் நாயை விரட்டியிருக்கலாமே என்ற போது நாய்க்கு தெரியுமாய்யா காரின் மதிப்பு நாய்க்கு காரும் ஒன்னுதான், சுவரும் ஒன்னுதான் என்றார் ..  அது பாஜக தலைவருக்கு பொருந்தும் ..
..
பொய்யும் புரட்டும் அதிகார திமிரும் சிலருக்கு புத்தி பேதலித்து போகும் .. தெருநாயை வீட்டில் கொண்டுவந்து கட்டினாலும் அது பீ திங்கதான் போகும் அது அதன் இயல்பு ..
நாம் அறிவுடையவர்கள், எதையும் ஆய்ந்து பார்ப்பவர்கள் 
உண்மையின் பக்கம் நிற்பவர்கள் நமக்கான அரசியல் நாகரீகமானது ..  கடும் எதிர்ப்பாளரென்றாலும் கொள்கை மறுப்பாளரென்றாலும் நாம் நம் அரசியலை சரியாக செய்திருக்குறோம் செய்வோம் ..
அதே நேரம் 
அண்ணா சொன்னது போல் கிளறாத சோறு வேகாது சீவாத தலை படியாது என்பதும் அறிவோம்..
..
ஆயிரம் அறிவாளிகளோடு விவாதிக்கலாம் ஆனால் ஒரு மடையனோடு விவாதிப்பது கூட வீண் என்ற பேராசானின் வழிவந்தவர்கள் நாங்கள் ..
தன்னை அறுத்து பலியிட வேண்டுமென ஆடு நினைக்கிறது .. அதுவே அவர்கள் விரும்புவது அடிவிழுந்தால் அதைவைத்து அரசியல்பிழைப்பை  உறுதிசெய்யலாம் என நினைக்கிறது..
நம்மை ஆயுதத்தை தூக்கவைக்க பெரும் முயற்சி நடக்கிறது .. நாம் அறிவாயுதம் கொண்டு போரிடுபவர்கள்  .. நம் தகுதிக்குரியவனோடு, நம் பலத்திற்கு இணையானவர்களோடு தான் சண்டை செய்வோம் .. தரங்கெட்டவர்களோடு நமக்கென்ன வேலை..
..
நமக்கு நிறைய பணிகள் இருக்கிறது, கழுதைகளோடு கதைப்பது நமக்கு இழுக்கு..
"வெற்றிபெற வேண்டுமென்றால் 
சிலநேரம் நாம் முட்டாள்கள் போலவும் அதே நேரம் அறிவோடும் இருக்கவேண்டும் 
என்றார் பிரஞ்ச் தத்துவியலாளர்
மாண்டெஸ்க்யூ .. நாம் அமைதியாக போவதால் சிலதுகள் துள்ளுகின்றன ..  எல்லாநேரமும் அது அவர்களுக்கு கை கொடுக்காதென்பதை உணருவது நல்லது ..
..
இவர்கள் அரசியல் என்பது மதம், சாதி, கலவரம், பிற மத எதிர்ப்பு, பார்ப்பனீயம், சனாதனம் இதையொட்டியே  தான் நடக்கும்.  
ஆனால் நாமோ எல்லோருக்கும் கல்வி  சுயமரியாதை சமூகநீதி, சமதர்மம், அறிவுசார்ந்து இயங்கல், விளிம்புநிலையை உயர்த்தி அனைவரையும் சமநிலைக்கு கொண்டுவருதல் என திராவிடக் கொள்கையில் இயங்குபவர்கள் ..  அறிஞர் அண்ணாவை இழிவாக சித்தரித்து போஸ்டர் அடித்தபோதும் இருட்டில் வைத்திருக்கிறார்கள் பெட்ரிமாஸ் வைக்க சொன்ன  வரலாறுக்குரியவர்கள் .. 
நம் இலக்கை நோக்கி வேகமாக பயணிப்பதை தடுக்க நம்மை திசை திருப்ப "ஆடு"கிறார்கள் 
குன்னங்குடி மஸ்தான் வரிகளில் 
சொல்வோம் .. இவனெல்லாம் 
"கடைமயிர் தான் "
..
ஆலஞ்சியார் 
Pc: 
மானமிகு 
Palanivel Thiaga Rajan அவர்களுடன் 🖤❤️

Thursday, September 1, 2022

கலைஞர் ..
தமிழக அரசியலில் தன்னைச் சுற்றியே சுழலவைத்த பேரதிசியம்.. இத்தனை திறமையாளன் இதுவரை கண்டதில்லையென
இந்திய ஒன்றியம் வியப்போடு பார்த்தது .. 
..
உண்மையில் ஒரு நல்ல ஜனநாயகவாதியாய் .. இடர்வரும் போதெல்லாம் வீறுகொண்டெழுந்து ஜனநாயகத்தை காத்த பெருந்தலைவன் .. பேருக்கு அரசியல் செய்யாமல் பேரெடுப்பதற்கும் செய்யாமல் 
பலபேர் பயனடைய வேண்டும் பட்டினி கிடப்போர் வயிறு நிறையவேண்டும் ..ஏழ்மையால் அறிவு தடைபடகூடாது .. காலங்காலமாய் அழுத்தபட்ட சமூகமக்கள் ஏறிவர வேண்டும் என பொதுவுடைமை பேசிய தோழனவன் ..
..
சமூகநீதி சமநீதியாக வேண்டுமென பாடுபட்டு .. அதற்கெதிராய் மநுநீதி இருப்பதையும் பூணூல் தடுப்பதையும் உணர்ந்து மிக சிரத்தையோடு காய் நகர்த்தி கதறவிட்டவன் .. எப்பாடுபட்டாகினும் படி .. அதற்கு அரசு துணைநிற்கும் .. தடைபோடுவர் தடுப்பமைத்து தகராறு செய்வர்.. அஞ்சாதே .. எவன் ஸ்வாமி என அழைக்க சொன்னானோ அவனையே கையெடுத்து கும்பிட வைக்க உனக்கு கல்வி அவசியமென சொல்லி அதற்கான  கட்டமைப்பை செய்து இன்று இன்ஜினியர் இல்லாத தெரு இல்லை மருத்துவர் இல்லாத ஊரில்லை என தமிழனை உயரத்தில் நிறுத்தி அழகுபார்த்தவன் ..
..
இதோ, ஒழிந்தது திராவிடம்.. இல்லாதாக்கிவிட்டோம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், முடிந்தது பார் திமுக வரலாறு என்றவனெல்லாம் காணாமல் போய்விட்டான் .. ஆனால் கருத்தாளன் கருணாநிதி அரணாய் நின்று .. விழுந்தபோதெல்லாம் வீறுக்கொண்டு எழுந்து எப்போதுமில்லாத திமிரோடு ஓடி எதிரிகளை கலங்கடித்தார்..
கருணாநிதியோடு முடிந்தது திமுக என்றவன் கதறுவதை கேட்கதான் கலைஞரில்லை .. நான்காம் தலைமுறையை மிக அருமையாக செதுக்கி பண்படுத்தி செல்லும்பாதை எது எப்படி எங்கணம் கையாளவேண்டும் .. எதை சொன்னால் பகைவன் அலறுவான் .. எங்கே அடித்தால் வலிக்கும் என கற்றுதந்து சரியானவரை அடையாளபடுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்.. என்பதாண்டுகாலம் செப்பனிட்டபாதை தான் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது ..
..
கலைஞர் கருணாநிதி
பெயரை கேட்டாலே பதறுவதும் 
அவரை நினைத்தாலே எதிரிகள் குலைநடுங்குவதுமாக மறைந்து நான்காண்டாகியும் பகைவர்களை கதறவைக்கிறார் எம் தலைவர் ..
..
தலைமைக்கு இலக்கணமாய், அரசியல்வாதிக்கு பொது பாடமாய், எதிரியை வீழித்த எங்கணம் எப்படி எதைக்கொண்டு வீழ்த்த வேண்டுமென வழிகாட்டிய ஆசானாய், எளியவரை கண்டு இரக்கம் கொள் அவருக்காக ஆளும் காலமெல்லாம் வழி செய் என அரச இலக்கியம் சொன்ன மன்னனாய், வீழும் போதெல்லாம் வீறுக்கொண்டு எழு.. நீ கலங்குவதை கூட பகைவர் கொண்டாடுவர் ஆதலால் தோல்வியின் போதும் புன்சிரி என வாழ்ந்துகாட்டி புதியபாதை சொன்ன பெருந்தலைவன் ..
..
நான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தலைவன் .. அறத்தோடும் அன்போடும் அறியணையேறிய போதெல்லாம் தமிழ் நிலத்தை வளமாக்கிய பெரும்மழையாய் ..
பகைவரை அறிந்து அவர்தம் சூழ்ச்சியை உன் விவேகத்தால் வீழ்த்தி கடைசிவரை கதறவிட்ட போராளி ..நீ..
உன் ஒவ்வொரு சொல்லும் எதிரியை சுட்டது 
எதிர்க்க நிற்க அஞ்சி தலைமறைவானவர்கள் .. 
இப்போது கண்விழிக்க தொடங்கியதும் .. நீ வார்த்து வைத்த "திராவிட மாடல் " சூரியன் சுட்டெரிக்கிறது .. காலமெல்லாம் தமிழர் நெஞ்சில் நீ வாழ்வாய் ..
இனம் மொழி பண்பாடு காத்த 
பெருவீரனே!..
ஆரியத்தை அலறவிட்டு 
பேரரசனே!!..
நீ..
பெருஞ்சுவர் 
உனை மீறி எதுவும் அண்டாது 
 காலமானதாக சொல்கிறார்கள் 
ஆம் 
"காலமாயே" காத்துநிற்கிறார் 
என்றும் உன் புகழ் நிலைத்திருக்கும் 
..
ஆலஞ்சியார்

பெரியாரின் பெருந்தொண்டர்

மானமிகு.ச.செல்லபெருமாள் அய்யா ..
உலகத்தத்துவஞானி தந்தை பெரியார் நூலகத்தை குவைத்தில் திறம்பட நடத்தி
திராவிட சித்தாந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து, கற்றோரை கல்வியாளர்களை
கொள்கையாளர்களை தேடி,தேடி
கொண்டாடிய மகத்தான மாமனிதர் ..
..
சிலர் கொள்கை பேசுவர், நான் கொள்கைப் பற்றாளன் என்பர்,
தன்னை முன்னிலைபடுத்தி கொள்கை சாயம் அடிப்பர் ஆனால் அய்யா கொண்ட கொள்கையில் உறுதியோடு
தன் வாழ்நாளையே அர்ப்பணிப்போடு
dedication கொள்கை பிறழாமல் வாழ்ந்துகாட்டிய மாவீரன் ..
சமசரம் என்ற வார்த்தையே அவரது அகராதியில் இருந்து நீக்கபட்டது .. ஒவ்வொரு நொடியும் பெரியாரின் கருத்தை பரப்புவதிலும் செயல்படுத்துவதிலும் கண்ணாய் இருந்தவர் .. போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி உள தூய்மையாய் களம்காண்போரை அருகிலேயே வைத்துக்கொண்டு பெரும்படையோட்டம் நடத்தியவர்
..
அவர் திறந்த புத்தகமாய் இருந்தார் .. எங்கெல்லாம் பெரியார் பேசபடுகிறாரோ அங்கெல்லாம் அவர் கண்விரியும் .. நல்ல சிந்தனையாளர்களை கண்டு அவர்களுக்கு களம் அமைத்து தந்து திராவிட சிந்தாந்தத்தை மக்களிடையே கொண்டு சென்றார் ..அவர் நட்ட நாற்றில் நானும் ஒருவன் .. ஆம்
நல்ல விதைகளை தேடி தேடி விதைத்துக்கொண்டே இருந்தார்
நல்ல விதைகள் ஒருநாள் விருட்சமாகும் அப்போதும் அவர் பெயர் நினைவுகூறபடும் ..
..
ஆம்
அவரது நிகழ்ச்சிகள் பலனுள்ளதாகவும் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாகவும் அமையும் .. அண்ணா நூற்றாண்டுவிழா, மணியம்மையார் நூற்றாண்டுவிழா அந்தவருடம் முழுவதும் நடத்தினார் .. ஒருமுறை பெண்களை மட்டுமே கொண்ட ஒரு மேடை என்ற போது சபாஷ் நடத்துங்கள் என எங்களை ஊக்குவித்தார் .. நானும் நண்பர் சிதம்பரம்.ந.தியாகராஜனும் நடத்தினோம் அந்தவாய்ப்பை எங்களுக்கு வழங்கினார் அதுவரை குவைத்தில் முழுக்கமுழுக்க பெண்களை கொண்ட மேடை அமைந்ததில்லை
அந்த மேடையில் மறைந்த மானமிகு பானு இக்பால், மறைந்த இலங்கைசேர்ந்த புகைபடகலைஞர் நசீமா,
"பெரியார் விருது" பெற்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை
மானமிகு சரண்யா தேவி "மஞ்சள் நிலா" இசைக்குழு மஞ்சுளா,கோல்டன் ஸ்டார் சிங்கர் சாமூண்டீஸ்வரி ,சமூக ஆர்வலர்
விஜயா நாயர்..
போன்ற ஆளுமைகள் அலங்கரித்து கம்பீரமாக்கினர் ..
..
பல்வேறு மேடைகளில் கருத்தியளாளர்கள் கொள்கையாளர்கள்  முன்னிலைபடுத்தபட்டார்கள், கலைஞர், பெரியார் பிறந்தாள் விழாக்களில் கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி, பெரியார் பிஞ்சு தஞ்சை சித்தார்த் என வரிசை நீளும் .. களப்பணியாளர்களை கொள்கை மறவர்களை கௌரவபடுத்தவும் தவறியதில்லை .. இளைஞர்களை ஊக்கபடுத்தி 
விருதுவழங்கியிருக்கிறார் .. தம்பிகள் மேட்டுவளை ஜானவாஸ், கரம்பக்குடி ஜாபர்சாதிக், கொணலை மணிகண்டன் ஆகியோருக்கு
"திராவிட செல்வம் " விருதுவழங்கி ஆசிரியர் அவர்களின் வாழ்த்துகளோடு சான்றிதழை வழங்கி
பாராட்டி கௌரவபடுத்தினார்.. உழைப்பவர்களை முன்னிலைபடுத்துவதிலும் கொண்டாடுவதிலும் அதிக கவனம் செலுத்தியவர் ..
..
ஒரு மனிதன் வாழ்வில் போற்றபட சில பக்கங்களேனும் வேண்டும் .. ஆனால் முழுவதும் வரலாறாய் சிலராலேயே செதுக்கிக்கொள்ள முடியும் .. வீண்விரயமற்ற, நேர்மையாய், நன்நெறியாய், கொள்கை உறுதியாய், எங்கும் வளைந்து கொடுக்காமல், சரியானதை சரியென்றும் தவறை உடனே சுட்டிகாட்டியும் எல்லோருக்கும் நல்ல புத்தகமாய் வாழ்ந்த ஞானி..
..
ஒருவர் ஐம்பதாண்டுகாலம் புத்தங்களோடு வாழ்ந்து, சின்ன சின்ன புத்தக சுமையோடு எல்லா நிகழ்ச்சிகளும் கலந்துக்கொண்டு விருந்தினருக்கு கொள்கை சார்ந்த புத்தகங்களை வழங்கி
மாற்றுகருத்தக்கொண்டோரும் மதிக்கும் பேரன்பாய் வாழ்ந்த பெருமகன் ..
அவரோடு இருந்தேன் பழகினேன் பயணித்தேன் அவரோடு இணைந்து பணியாற்றினேன் என்பது காலம் எமக்கு தந்த பெருங்கொடை
..
வீரவணக்கம்
..
ஆலஞ்சியார்


திமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள உறவு இருக்கிறதென சிலர் கதை பேசுகிறார்கள் .. பேசுபவர்கள் யாரென்று பார்த்தால் எதிலும் மதத்தை முன்னிலபடுத்தும் இஸ்லாமியர்களும் சாதியை வைத்தும் கட்டபஞ்சாயத்து செய்பவர்களும் தான் .. 
..
உண்மையில் பாஜகவோடு உறவு வைத்திருக்கிறதா .. கள்ளகுறிச்சி சம்பவத்தில் மென்மையான போக்கு, கல்வி தொலைக்காட்சியில் CEO நியமனம் என காரணம் சொல்கிறார்கள் .. உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்பவரில்லை நம் முதலமைச்சர் .. எதையும் நிதானித்து சரியாக காய்நகர்த்துபவர்  பிடித்தால் பிடி இறுகும் என்பதை சொல்ல வேண்டியதில்லை 
..
வெளிப்படையாகவே பாஜகவோடு இணங்கி போகமாட்டோம் கைகட்டி வாய்பொத்தி சொல்லுங்க எஜமான் என குறுகி நிற்க மாட்டேன் நான் கலைஞரின் பிள்ளை என மக்கள் மன்றத்தில் சொல்லிவிட்டுதான் டெல்லி செல்கிறார் ..அது மட்டுமா கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கோடிகணக்கில் தள்ளுபடி செய்தது யார் அப்பன் வீட்டு பணம் என நீதிமன்றத்திலேயே கேட்கும் தைரியம்  இந்திய ஒன்றியத்தில் வேறெந்த கட்சிக்காவது உண்டா ..
எங்களுக்கு பாடமெடுக்க உங்களுக்கு தகுதியில்லையென தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஊடகம் வாயிலாக கேட்கிறார் 
பொருளாதார அறிவிருக்கிறதா 
எங்களை போல நிதி ஆளுமை செய்ததற்கான சான்று இருக்கிறதா கேள்வி எழுப்ப பாஜகவும் அதன் ஊதுகளும் புலம்புகின்றன .. பிரதமரை அழைத்து வந்து திராவிட மாடல் வகுப்பெடுக்கும் தைரியம் இந்த மண்ணுக்கே உண்டு .. இங்கே பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் அப்படி தான் வார்த்தெடுத்திருக்கிறார்கள் 
இன்னமும் நம்பிக்கை வரவில்லையென்றால் கெட்டொழியுங்கள் என சொல்வதை தவிர வேறென்ன செய்ய இயலும் ..
..
இந்திய ஒன்றியத்தில் அதிக GST வரி செலுத்துவது தமிழ்நாடுதான் எங்களைவிட ஒன்றியத்தின் மிகப்பெரிய மாநிலமான உ.பி. ஐந்து மடங்கு குறைவாக தான் தருகிறது .. தனிநபர் வருமானம் மனிதவளம் சமூக மேம்பாடு, உயர்கல்வி என அனைத்து முன்னேறிய மாநிலமாக மாற்றியது யார்.. வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்கள் 4% விழுக்காடு  குஜராத் மாடலில் 27% விழுக்காடு இங்கே மதம் முன்னெடுக்கபடுவதில்லை சாதியை பேசி வந்தால் பாமக நிலைதான் இதற்கெல்லாம் காரணம் பெரியாரெனும் பெரும் நெருப்பு பாசிசத்தை/பிராமணீயத்தை அண்டவிடாமல் காப்பதுதான் .. அதனால் தான் தலைவர் மிக தெளிவாக "திராவிட மாடல்" என பெயர்சூட்டி திராவிட கொள்கைகளை  முன்னெடுக்கிறார் ..
..
மிகபெரிய பணபலம் ஊடகத்தின் துணை, ரௌடிகளையும் களவாணிகளையும், திருட்டுகும்பலையும், கொலை கொள்ளை செய்துவிட்டு திரிபவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு கலவர பூமியாக்க பெரும்திட்டத்தோடு பாஜக செயல்படுகிறது .. விளிம்புநிலை மக்களை விலைபேசும் தந்திரமும், பதவி ஆசைகாட்டி பள்ளத்தில் தள்ளும் சூத்திரமும், ஆளுநரை கொண்டு இடையூறு செய்வதும், சிறிய தவறென்றாலும் ஊதி பெருக்க வலைதளத்தில் பெருமளவில் அறிவிலிகளை அவசரகுடுக்கைகளை நியமித்தும் சதியாட்டமாடும் வேளையிலும் .. மிக கவனமாக ஒவ்வொரு களையும் பிடிங்கியெறிந்து களனி சிறக்க பாடுபடுகிறார்.. நல்ல விளைச்சலுக்கு கொஞ்சம் காத்திருக்கதான் வேண்டும் .. 
..
ஆலஞ்சியார்