Friday, April 30, 2021

நல்ல தலைவர்..
பதவி வரும் போது பணிவு  வரவேண்டும் என்பதற்கொப்ப தன் தொண்டர்களுக்கு நல்ல அறிவுரைகளை  வழங்கி .. நீ முக்கியம் ,பத்தாண்டு  பட்ட கஷ்டங்களிலிருந்து நாடு பெறும் விடுதலையை கொண்டாட எண்ணுவது இயல்பு ஆனாலும் பெருந்தொற்றுகாலத்து கொஞ்சம் விலகி இருத்தல் அவசியம் என உணர்ந்து 
வீடுகளிலேயே இருந்து மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள் என்கிறார்.. கூடவே மாற்றுகட்சியினருக்கும் அறிவுரை வழங்கி நல்ல தலைவராய் நிமிர்ந்து நிற்கிறார்..
..
எல்லா கணிப்புகளும் ஸ்டாலின் தமிழக முதல்வர் என உறுதிசெய்கிறது .. நீண்டகாத்திருப்பிற்கு பின் வரும் விடியல்.. கடந்தகால தவறுக்கு வருந்தி மக்கள் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறார்கள் .. "இவன் முடிப்பான்"  என்ற பெரும் நம்பிக்கை .. அடிதொழுது புறவாசல் கடந்துவந்த களவாணிகளால் நாம் இழந்ததை எண்ணி வருந்தியவர்கள் இனியும் இந்த பொய்யர்கள் தொடர்ந்தால் நாடு "வடநாடாகிவிடும்" என சிந்தித்து நல்ல  முடிவை எடுத்திருக்கிறார்கள்.. அடுத்த தொகுதிக்கே தெரியாத  அரைகுறைகள் "முதல்வர்" இருக்கையை அசிங்கபடுத்தி வடவனுக்கு கைகட்டி நின்று தமிழர்களை தலைகுனிய வைத்த நிகழ்வு வரலாற்றில் தீராத கறை..
..
தலைவர் ஸ்டாலின் 
பண்பட்ட  தலைவராய் போர்குணம் கொண்டவராய், பகைவெல்லும் வீரராய், தயாளகுணம் கொண்டவராய், மக்கள் மீது தீராத காதல் கொண்ட நன்மணியாய், கடின உழைப்பும் நேர்மையும் நன்னெறி அரசியலும் இயக்கத்தை வழிநடத்தும் ஆற்றலும், கொண்டகொள்கையும் தெளிவும் உறுதியும், எது பகையென  வெளிப்படையாக அறிவித்து  போர் தொடுக்கும் துணிவும், தொலைநோக்கு  பார்வையும் 
கலைஞரின் நேரடி பயிற்சியும் பெற்ற பெருமைமிகு தொண்டராய், நாடும் நாட்டுமக்களும் நம்பும் நல்ல தலைவராய்  மிளிர்கிறார்..
..
கடும் உழைப்பு திராவிடப் பெருந்தலைவர்கள் களத்தில் இல்லை  ,சில விவரகேடுகள் திராவிடத்தின் அஸ்தமனம் என்றெல்லாம் எழுதி தங்கள் அரிப்பை சொரிந்துக்கொள்ள, முடிந்ததுபார் திராவிடத்தின் ஆட்சி என சிலர் கொக்கரிக்க, வாய்ப்பிருந்தும், புறவாசல் வழி இருந்தும், மக்கள் தரவேண்டும், களம் கண்டு வென்றதாய் இருத்தல் வேண்டும்  மக்கள் அன்பை பெற்றதாய் தகுதியுள்ளவனை தேர்ந்தெடுத்ததாய் மக்கள்  மகிழவேண்டும், நேர்மையோடு எதுவும் கிட்டியதாய் வேண்டும் அதுவே சிறப்பு, வரலாற்றில் புகழப்படும் என  காத்திருந்து களம்கண்டு பெரும் வெற்றியோடு வருகிறார் தங்கதளபதி
..
இனி  ..
இழிவு நீங்கும்
துயர் துடையும் , நல்லாட்சி நம் ஆட்சி, நானிலம் போற்றும் திராவிட  ஆட்சி மலரும்..
காலம் தந்த தலைவனை கொண்டாடுவோம்
#தலைவர்_ஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்

Wednesday, April 28, 2021

இந்தியா சுவாசம் கேட்கிறது..
திறமையற்றவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்துவிட்டு உயிர்வளிக்காக (ஆக்சிஸன்) மக்கள் சுவாசமுட்டுகிறார்கள்..
சென்ற ஆண்டே பிப்ரவரியில்  இந்தியா கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்தும் கும்பமேளா நடத்தி உயிர்பலிக்கு காரணமாகியிருக்கிறது இந்தியா .. கொஞ்சம் கூட  வெட்கபடவில்லை தாங்கள் செய்தது மாபெரும் பிழை என்று கூட நினைக்கவில்லை இப்போதும் திமிராக பேச முடிகிறது இந்த குரங்கு புத்திகாரர்களால்.. இந்திய  ஊடகங்களின் வேசித்தனம் உலக நாடுகள் முன் கிழித்தெறியபடுகிறது .. அவசரநிலை காலத்தில் கூட நிமிர்ந்துநின்றவர்கள்  மூர்ச்சையாகி கிடக்கிறார்கள் அனைத்து ஊடகவியலாளர்களும் கள்ளமௌனம் காக்கிறார்கள் 
இந்த அவலநிலைக்கு முக்கிய காரணமான ஊடகங்கள் மனசாட்சியோடு இனியேனும் உண்மைகளை வெளியிட்டு இந்த அரசை தூக்கியெறிய போராடவேண்டும்.. பேனாமுனை
சரித்திரத்தை உருவாக்கும் ஆற்றல்  கொண்டது .. 
இனியேனும் செய்வார்களா..
..
கொலைக்காரர்களும் மதவெறியர்களும் மனித மாமிசத்தை உண்போரும் இந்தியாவை மெல்ல கொல்ல தொடங்கியிருக்கிறார்கள் .. அகோரிகளை சாமியார்களை கட்டுபடுத்த கெஞ்சவேண்டியிருக்கிறது பிரதமரால்.. எவ்வளவு  இழுக்கு .. சாமியாரை முதல்வராக்கியதின் பலன் அவன் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் தயார் செய்கிறான் மாட்டுக்கு கொரோனா வராமல் இருக்க முககவசம் அணிவிக்கிறான் .. மனித  உயிர் மயிருக்கு சமமென எண்ணி திரிகிறான் .. சென்றாண்டு குழந்தைகளை உயிரை காப்பாற்ற சொந்த செலவில் ஆக்சிஸன் வாங்கிய மருத்துவர் கபீல்கானை தேசிய பாதுகாப்பில் அடைத்த போது மனிதநேயமுள்ளவர்கள் எங்கே போனார்கள். கொஞ்சமும் இரக்கமில்லாத செயலை அரசு செய்கிறதே என நீதிமன்றம் கேள்வி கேட்டதா.. கிரிஜாவுக்கும் அர்னாப்பிற்கும் வேகமாக கதவை திறந்த நீதிமான்கள் அப்போது அமைதிகாத்தார்களே அன்றே  உயிர்வளி(ஆக்சிஸன்)  பற்றாக்குறை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை..
..
ஜோர்டான் நாட்டில் ஏழுபேர் உயிர்வளி கிடைக்காமல் இறந்ததற்காக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்கிறார்
இந்திய ஒன்றிய அரசின்
சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு மன சாட்சி என்று ஒன்று இருந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போன நிலையில் தனது பொறுப்பற்ற தன்மைக்காக பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.. 
இந்திய அரசு முழுவதுமாக தோல்வியடைந்து  நிற்கிறது.. முஸ்லிம்களை ஒடுக்கவேண்டும் என்பதிலேயே சிந்தனையை செலவிடும் முட்டாள்கள்  நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை.. 
..
Dr.மன்மோகன் சிங்
It will be a disaster if Modi becomes PM of India,'  மோடி இந்தியாவின் பிரதமரானால் அது ஒரு பேரழிவாக இருக்கும், ' என்றார்..
படித்த திறமையான நல்ல  நிர்வாகியை  புறக்கணித்து 
குஜராத்தில் குருதியில் விளைந்த நஞ்சை நாம் கொண்டாடியதின் விளைவு இன்று இந்தியா அனுபவிக்கிறது .. வாய்பந்தல்  போடும் முட்டாளின் கையில் தேசம் படாதபாடுபடுகிறது .. மதவெறிகளும் பிணந்திண்ணிகளும் நாடாண்டால் என்ன நடக்கும் என்பதை இந்தியா உணர  தொடங்கியிருக்கிறது ..
இதுதான் இவர்கள் சொல்லும் #ராமராஜ்ஜியம்
எழுபதாண்டுகள் காங்கிரஸ் செதுக்கியதை இந்த நவீன கோமாளி ஏழே வருடத்தில்  உடைத்தெறிந்தது நாடு கவலையோடு பார்க்கிறது ..
..
கடவுளோ மதமோ மாட்டுசாணியோ மூத்திரமோ பிணியை நீக்காது ..அறிவியல் கொண்டே சாதிக்க முடியும் .. புராணமும் புரட்டும் போலிகளை உருவாக்கும்.. பகுத்தறிவே நன்மை பயக்கும் அறிவை தரும் 
எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தரும் .. இதை ஆள்வோர் புரிந்து கொண்டு மூடவழக்கை இனியும் பின்பற்றாமல் கைதட்டு விலக்கேற்று என பீற்றாமல் 
தடுப்பூசியை எல்லோருக்கும் கிடைக்க , உயிர்வளி தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் .. 
..
ஆலஞ்சியார்

Saturday, April 24, 2021

ஆக்ஸிசன் தட்டுபாடில்லாத மாநிலங்கள் தமிழ்நாடு கேரளம்..
இரண்டுமே பாசிச  பாஜகவை  ஓரங்கட்டி வைத்திருக்கிறது.. 
நாட்டின் பிரதமரை  தேர்வு செய்வதில்  தோற்றுப்போயிருக்கிறது தேசம் .. 
ஒரே இரவில் பணமதிப்பிழப்பு செய்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவரை கேரளமும் தமிழகமும் புறங்கையால் தள்ளி நிறுத்தியது பாருங்கள் அங்கே இருப்பது தெளிவு..
வடமாநிலம் சுயம் சிந்தனை இழந்து ராம் ராம் என கோஷமிட்டு மதப்பற்றை/வெறியை அரசியலில் கலந்து கோவில் போதும் என்று எண்ணியதால் வந்த வினை இன்று மூச்சுதிணறுகிறது.. 
..
உயர்/உச்சநீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றன் ஆனால் அவை நீதிமன்றங்கள் தானா? என்ற கேள்வி எழ  தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது..  கட்டபஞ்சாயத்து செய்ய தொடங்கியும், பதவிகாலம் முடிந்து கனிவான காத்திருப்பாகவும் பாதைமாறிப்போய் குழிதோண்டி புதைக்கபட்ட நீதிகள் ஏராளம்.. மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை மாட்டுக்கு ஆம்புலன்ஸ் என்றபோதே கொட்டிருக்கவேண்டும் நீதியை நிலைநாட்டுவோர்.. இன்று படுக்கைகள்  காலியில்லை ஆக்ஸிசன் காலியில்லை ஏன் இதுவரை  பாஜக ஆண்ட மாநிலங்களில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை என கேள்வி கேட்க யாருமில்லை
கேட்டால் சிறை மீறி பேசினால் சுட்டுக்கொல்வோம், கொன்றவனை வெளியிலெடுப்போம் மாலை மரியாதையோடு வரவேற்போம் நீதிபதிகள் விடுவிக்க மறுத்தால் கொல்வோம் விடுவித்தால் கவர்னர் பதவி கிடைக்க  ஏற்பாடு செய்வோம் .. குண்டர்கள் கொலையாளிகள் கற்பழித்தவன் அமைச்சராகலாம் இதுதான் நவீன இந்தியா..
..
கேவலமான இருக்கிறது ..
வாய்பந்தல் போடும் பிரதமர் அவர்களே உலகமே உற்றுநோக்குகிறது .. இந்தியா எனும் தேசம் இப்படி திறமையற்ற மூடர்கள்  கூட்டத்தில் சிக்கி  சீர்குலைந்து நிற்பதை, பொய் பேசியும் பிரதமரை, மதவெறி தூண்டும் ஆட்சியாளர்களை, மனிதனை விட  மாட்டை நேசிக்கும் மகாமடையர்களை கொண்டிருப்பதை உலகமோ கவலையோடு பார்க்கிறது .. ஆக்ஸிசன் தேவைக்கு உதவ உலக நாடுகள் வரிசையில் .. பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாநில தேர்தலில் எப்படி தில்லுமுல்லு செய்யலாமென கூட்டுசதிக்கு  ஆலோசனை செய்கிறார்கள் ..
மார்ச் மாதமே கொரோனா 2.0  தாக்கம் தெரிந்த போதும் தேர்தலை விரைந்து முடிக்காமல் காலந்தாழ்த்தி பரவல் அதிகமாகிய போது பரப்புரையில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கலந்துக்கொண்டு நாடு எக்கேடு கேட்டால் என்ன ? என பொறுப்பற்றத்தனம் .. கைமீறிபோன பிறகு தொலைகாட்சி தரிசனம் நான் கூட இருக்கிறேன் என வசனம் பேசினால் போதும் .. உயிர்காக்கும் மருந்திற்கு GST  போடும் அயோக்கியத்தனம் மொத்தத்தில் முட்டாள்கள் மதவெறியர்கள் கையில் நாடு சிக்குண்டு இன்று கண்ணீர் வடிக்கிறது .. நாட்டின் வளங்களை இரு பெரும்  முதலாளிக்கு தாரைவார்த்துவிட்டு அதற்காக தொடர்ந்து நாட்டுமக்களை  வஞ்சித்து வரும் கேடுகெட்ட அரசு .. அமைச்சர்கள் அறிவுசார்ந்து சிந்திப்பதில்லை நான் வெங்காயம் தின்பதில்லை அதனால் அது விலை ஏறினால் கவலையில்லை என்கிற அறிவிலிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் மகாமுட்டாள் பிரதமர் கையில் நாடு சிக்கி தவிக்கிறது..
..
தொலைநோக்கு திட்டமில்லை 
கல்வியறிவை விட சாதிமதவெறி கைக்கொடுக்கும்  என்று நம்புகிற மூடர்கூட்டம், தேர்தல் அரசியலுக்காக
மக்களை  பிரித்து வன்முறையை கையிலெடுத்து அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி நீதியை மிரட்டி  அல்லது விலைக்கு வாங்கி, அதையும் மீறி எதிர்கட்சிகள் ஜெயித்தால்  எம்எல்ஏக்களை கடத்தி மிரட்டி  விலைபேசி ஜனநாயகத்தை குழிதோண்டி  புதைக்க தெரிந்தவர்கள் நாட்டை
நாட்டுமக்களை எப்படி  கவனிப்பார்கள்  .. 
..
இந்த நாட்டிற்கு  தன்னலமற்ற சாதி மதமற்ற, சுயபெருமை பேசாத, தொலைநோக்கோடு சிந்திக்கிற மக்களை கல்வியிலும், வாழ்க்கை தரத்திலும் உயர்த்த நல்ல திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் தலைவர்கள் தேவை .. 
ஆம்..
அச்சம் தவிர்ப்போம் 
அறிவியலால் வெல்வோம் என துணிவோடு செயலாற்றும் தலைவர்கள் ..  இனியும் மதவெறியர்களை கோவில் கடவுள்  புராணம் என பழமை பேசி மக்களை பிரித்தாளும் குறைமதியாளர்களை விரட்டியடித்து நன் மக்களை நல்ல தலைவர்களை கொண்டாட வேண்டும் .. பாசிச பாஜகவால் நாடு குட்டிசுவரானதுதை கண்டோம் .. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் உலகில் மிகவும் மோசமான  ஏழைநாடாக மாறும் ..
..
கொரோனாவை விரட்ட கைதட்டுவதாலோ  விளக்கேற்றி மணியடிப்பதாலோ கோ கொரோனா என பஜனை பாடுவதாலோ போய்விடாது .. அறிவியலை கொண்டே வெல்லவேண்டும் .. உயிர்காக்க மாட்டு சாணியும்  மூத்திரமும் (கோமியம்) குடித்தால் உயிர்போகும் ..மாறாக தடுப்பூசி போட வேண்டும் புலால் உணவை உண்ணவேண்டும், அறிவியலால் தான் முடியும்..
..
ஆரிய சித்தாந்தம் நாட்டிற்கு தேவையில்லை..
திராவிட  சித்தாந்தமே மனிதநலனுக்கானது நாட்டு தேவையானது ..நாட்டின்  வளர்ச்சிக்கானது.. கடைசியாக பண்டாரங்கள் ஆண்டால் நாடு கெடும்.. பகுத்தறிவாளர்களால் தான் நாடு மிளிரும்..
..
ஆலஞ்சியார்

Thursday, April 22, 2021

வாழ தகுதியற்ற நாடா எனது நாடு..
இந்திய ஒன்றியம் காங்கிரஸ் பேரியக்கத்தின் செயல்பாட்டால் எத்தனை வளர்ந்திருந்தது .. அறிவாளிகளை தன்னோடு  வைத்திருந்தார் .. அபுல்கலாம் ஆசாத் தவிர்த்து என்னால் வேறோருவரை கல்வியமைச்சராக நினைக்கமுடியவில்லை என்றார் நேரு.. இப்போதும் பெரிதும் உதவும் மருத்துவ கட்டமைப்பெல்லாம் காங்கிரஸ்  செய்தது தான் மூன்றுமுறை முதல்வராக இருந்த மோடி செய்ததெல்லாம் மதவெறியை தூண்டி கலவரம் கண்டதுதான் .. நவீன இந்தியா என வாய்சவடால் விட்ட  மோடியின் முகம் கிழிந்து தொங்குகிறது.. 
ஆக்ஸிசன் இல்லாமல்  உயிர்போகிறது.. திருடுங்கள் அல்லது பிச்சையெடுங்கள் என  உயர்நீதிமன்றம் சொல்லும் அவலம்.. ஆம் தமிழகத்திலிருந்து மாநில அரசிற்கு தெரியாமல் திருடுகிற அவலம்
..
மதவெறி அரசியலை கையிலெடுத்த கர்நாடக நிலை பரிதாபம்,
"நிலைமை கையை மீறி விட்டது. எங்களால் எதுவும் செய்ய இயலாத நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம்"  நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..
உ.பியில் மிக மோசம் சாலையில் பிணங்களின் வரிசை .. ஒளிரவில்லை பிணங்களால் பற்றி எரிகிறது இந்தியா..  
நானிருக்கிறேன் என தொலைக்காட்சியில் பேசினால் போதுமா.. செய்தியாளர்கள் சந்திக்க தைரியம் உண்டா .. 
ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன் என்றெல்லாம் மெழுகபட்ட பிம்பம் இன்று உருகுலைந்துப் போய்நிற்கிறது.. இன்றைய அவலநிலைக்கு ஊடகங்கள் மிகப்பெரிய  காரணம் ..  மன்மோகன்சிங்கை  வீழ்த்த எண்ணியது  எவ்வளவு பெரிய  தவறென்பதை இப்போது உணருகிறார்கள் .. மோடி தேசிய பேரிழிவு என்றார் மாண்பிமை மன்மோகன்சிங் எத்தனை உண்மை.. 
..
தமிழகம் மருத்துவத்துறை சாதித்தைப்போல்  வேறெந்த மாநிலமும் சாதிக்கவில்லை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை ராஜீவ்காந்தி மருத்துவமனையை உருவாக்கியவர் கலைஞர் .. உலகில் 8 வது  அதிகபடுக்கைகள் கொண்ட மருத்துவமனை  இதெல்லாம் தமிழகத்தில் திராவிட ஆட்சியின் சாதனை .. தேவையான ஆக்ஸிசனை தயாரிக்கும் ஆற்றல் கொண்ட  மருத்துமனை 
இந்த பேரிடர் காலத்தில் தொலைநோக்கோடு சிந்தித்து  கட்டமைத்த #கருணையாளன்_கலைஞரை நினைத்து பார்க்கிறோம்..
..
முழுவதுமாக தோற்றுநிற்கிறது திறமையில்லாத அரசன் .. ஆணவத்தோடு பதில் தரும் மந்திரிகள் .. கைதட்டுங்கள்  தீபமேற்றுங்கள் கோ கொரோனா என இசைபாடுங்கள் என அறிவுரை சொல்லும் அறிவிலிக்கூட்டத்தின் தலைவன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என அகங்காரத்தோடு பதில் சொல்லும் ஆரிய திமிர் .. மக்களைப்பற்றி சிறுதும் கலலைபடாமல் மாட்டிற்கு முககவசம் மாட்டும் குரங்குகள், கைமீறி போன பின் மன்னிப்பு கேட்கும் மடையர்கள்..  ₹3000 கோடிக்கு சிலை வைத்தால் போதும்  மருத்துமனைக்கு ஆக்ஸிசன் வாங்க தேவையில்லை  சொந்த காசில்  வாங்கி மக்களை குழந்தைகளை காப்பாற்றினால் தேசதுரோகி வழக்கு ..  நாம் எந்தமாதிரி நாட்டில் வாழ்கிறோம்..
மிக  கேவலமானவர்கள் கையில் நாடு  ..
..
மன்மோகன் சிங் போன்ற தன்னலமற்ற நாட்டை நேசிக்கிறவர்களை வேண்டாமென வைத்து குஜராத் மாடலென ஊடகவியாபாரிகள் கொண்டாடிய அடிமுட்டாளை கொண்டுவந்ததின் பலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.. இப்போதும் வாய்சவடாலுக்கு பஞ்சமில்லை.. செத்துவிழுவது மனிதர்கள் தானே மாடு இல்லையே..
..
"நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்"..
என்றான் வள்ளுவன்..
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்..
..
ஆலஞ்சியார்

Tuesday, April 20, 2021

பெரியார் போதும்

அம்பேத்கர் போதும் பெரியார் வேண்டாம் என்கிறவர்கள் மிக ஆபத்தானவர்கள்.. தமிழகத்தில் அம்பேத்கரை தவிர்த்து அரசியல் செய்திட முடியும்.. ஆனால் பெரியாரை பேசாமல் அரசியல் இல்லை .. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொன்னால் அம்பேத்கர் இங்கே தேவைபடவில்லை காரணம் பெரியார் தனது பணியை சரியாக செய்திருந்தார்..  தலித் அரசியலோடு முடிந்துபோகிற விடயம் மட்டுமே,பொதுநதியில் இணைய முடியாது ..இங்கே சமத்துவம் என்கிற சொல் செயலில் உண்டு ..விரும்பதகாத சில செயல்களை தவிர்த்தால் இங்கே திராவிடம் என்ற சுவர் காத்துநிற்கிறது .. பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்பது சமநீதிக்கான தொடக்கம் இங்கே பிற சமூகமக்களை ஒருங்கிணைக்கும்.. ஆரியம்/ திராவிடம் என பிரித்து தெளிவான களம் அமைத்தது, அதை தலித்  தலித்தல்லாதோர் என திசைதிருப்பல் ஆபத்தானது ..
தமிழகத்தை பொருத்தவரை தலித் மக்களுக்கு பெரும் பாதுகாப்பை தந்தது பெரியாரிய சிந்தனைதான்.. பெருந்தனக்காரராய் பிறந்து சாமானியர்களின் துயரை கண்டு வருந்தி அவர்கள் சமூகத்தில் நடத்தபடும் விதம் கண்டு ஆத்திரம் கொண்டு இந்த சனாதன கட்டமைப்பை அடித்து நொறுக்க பெரும் பயணம் செய்தவர் தந்தை பெரியார்.. இங்கே அம்பேத்கர் தேவைபடாமல் போனதற்கும் பெரியார் என்ற பெருஞ்சுவர் காத்துநின்றதும் காரணம் .. மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியதில் பெரியாரின் பணி யாராலும் ஈடுசெய்ய முடியாதது ..
இங்கே சில நீலசங்கிகள் பெரியாரை தவிர்த்து பேச வருவதின் பின்னில் பாசிசத்தின் பிடி இருக்கும் .. தலித்மக்கள் விடுதலை என்பது அதற்கான தீர்வை அம்பேத்கர் இறுதிஉரையில் சொன்னது தான் "இந்துவாக சாக விரும்பவில்லை" ..
தலித்களை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புசட்டம் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் தண்டிக்கபட்டவர்கள் 2% விழுக்காடு கூட இல்லை .. சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தள்ளுபடி செய்யபட்டதுதான் உண்மை .. 
..
திராவிட கழகத்தை சிலர் எதிர்க்க செய்கின்றனர் .. பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை ஆனால் தலித்கள் அதை செய்யும்போது நாம் இடைமறிக்க வேண்டியிருக்கிறது .. அம்பேத்கர் போதும், ஏன் அம்பேத்கர் சாலை இல்லை என்ற கேள்விகள் அவர்களின் அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது .. பிறந்த மண்ணில் அம்பேத்கர் பெயரில் கல்லூரி அமைக்கவே முடியாத சூழலில் இங்கே சட்டகல்லூரி அமைத்ததும் சட்ட பல்கலைக்கழகம் கண்டதும் பெரியாரின் துணைக்கொண்டுதான் .. பெரியாரிய சீடர்களால் தான் முடிந்தது இங்கே எந்த எதிர்ப்பும் வராமல் போனதற்கு பெரியாரிய சிந்தனைகளை ஏற்ற சமூகம் தமிழகம் கண்டிருந்ததே காரணம்
..
பெரியாரை ஏற்று வந்தவர்கள் சாதி சமயத்தை புறக்கணித்தவர்களாகவே இருந்தனர் இருக்கின்றனர் ஆனால் சுயசாதி பேசும் மூடர்கள் தான் எங்களுக்கு இவர் போதும் இவர் தேவையில்லையென நவீன புராணம் பாடுகின்றனர்.. நீலசங்கிகள்
அருந்ததியர் புதிரை வண்ணார் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாதவர்கள்.. (ஆனால் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்திற்காகவும் குரல் கொடுத்ததோடு அல்லாமல் தீர்வை கண்டது பெரியாரியம் பேசும் திராவிட இயக்கம்தான்)
இவர்கள் அழுக்கானவர்கள், சுயம் தெளியாதவர்கள் .. 
பிணத்திற்கு வீரமணி என பெயர்வைத்து பார்பனர்கள் சுமந்து சென்றதெல்லாம் தெரியாதவர்கள் ஆசிரியரை வசைபாடுகிறார்கள் .. இனியும் அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்து பேசுவது தேவையில்லைதான் .. பெரியார் போதும்.. நவீன நீலசங்கிகள் வெகுவிரைவில் உணருவார்கள் அம்பேத்கரை தேசிய தலைவர் என்பதலிருந்து தலித் தலைவராக சுருக்கவேண்டுமென்ற ஆர்எஸ்எஸின் செயல்வடிவம் இவர்கள் .. ஆம் இவர்கள் ஆர்எஸ்எஸின் #அட்டைக்கத்திகள்
நாம் அண்ணலை தேசிய தலைவராக பார்க்கிறோம் அவர்கள் தலித்களுக்கான தலைவர் என்கிறார்கள் ..தலித் சமூகத்தில் பள்ளர் சமூகம் அம்பேத்கரை கண்டுக்கொள்வதில்லை என்பதும் கவனிக்கதக்கது..
..
பார்ப்பனர் / பார்ப்பனரல்லாதோர்  என்ற அரசியல்தான் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே  வழிகாட்டும்,
நலதாய் அமையும்.. 
இங்கே பெரியார் போதும் ..
..
ஆலஞ்சியார்

Sunday, April 18, 2021

நீலம்..
இங்கே அம்பேத்கரை முன்னிறுத்துவதில் தவறில்லை ஆனால் அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும்.. அம்பேத்கர் மீது நமக்கு மரியாதை உண்டு ஆனால் சமூக புரட்சியை செய்திட முடிந்ததா என்ற கேள்வி எழும் போது மௌனம் பதிலாய் வரும் .. தாழ்த்தபட்ட மக்களை அவர் முன்னேற்றபாதைக்கு கொண்டுச் செல்லவேண்டுமென்பதில் அக்கறை கொண்டவர்தான் ஆனால் வடமாநிலங்களில் அவர்கள் நிலை இப்போதும் எப்படி இருக்கிறதென்பதை காட்சிகள் நமக்கு சொல்கிறது..
..
வெகுமக்களிடத்தில் அவரது பயணம் இருந்ததா .. மக்களை புரட்சிபாதையில் தயார்படுத்தினாரா .. இடஒதுக்கீடு மட்டுமே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்களை isolation லிருந்து வெளியேற என்ன தீர்வு கண்டார்  அதை பின்பற்ற யாருமே முன்வருவதில்லை.. தீண்டாமை "பாவசெயல் " படித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது..
..
இங்கே சிலர் பெரியாரை தவிர்த்து புரட்சி பேச வருகிறார்கள் .. அம்பேத்கரை மட்டுமே பேசுவோம் என்போரை கவனமாக கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள் .. பெரியாரை மறுத்து இங்கே குறிப்பாக தமிழகத்தில் எதுவும் நடக்காது .. பெரியாரை பிற்படுத்தபட்ட மக்களின் தலைவர் என்ற குறுகிய வட்டத்தில் அடைக்க நினைப்பது கூட சரியானது அல்ல.. அவர் மானுட புரட்சியாளர்.. ஒடுக்கபட்டமக்களை மட்டுமல்ல பார்ப்பனீயத்தால் பாதிக்கபட்ட உரிமைகள் மறுக்கபட்ட அனைவருக்குமானவர் .. அவர்கள் மக்களை சமூகபுரட்சிக்கு ஒருங்கிணைத்தார் .. சுயமாக சிந்தையை வளர்க்க சொன்னார்
அறிவுக்கொண்டு பார் என்றார் .. படிப்பு வராதுன்னு சொன்னவன் முன்னால படித்து முன்னுக்கு வந்துகாட்டு என்றார்.. சமூகத்தின் இடைவெளியை வெகுவாக குறைத்தார் .. அதனால் தான் தலித்கள் மீதான தாக்குதல்கள் இங்கே வடமாநிலங்களை விட குறைவாக பதிவாகிறது.. அது கூட சில சாதிவெறியர்களின் தூண்டுதலாலேயே நடத்தபடுகிறது.. 
..
திாவிடத்தை வீழ்த்தவேண்டும் அல்லது திராவிடம் என்ன செய்தது என சில நீலசங்கிகள் பரப்புரை செய்கிறார்கள் .. படிப்பும் கலையும் உனக்கில்லை என்ற பார்பனீயத்தை உடைத்து படிப்பு எல்லோருமானதென நீதிக்கட்சி காலத்திலேயே முன்னெடுத்து இன்று கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்
ஒரு சேதி போதும் .. 1904.ல் சென்னை மகாண சபைக்கு எதெல்லாம் தேவை என்பதை பரிந்துரைப்பதற்காக சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த கூட்டம் தஞ்சை ராமமூர்த்தி அய்யரெல்லாம் கலந்துக்கொண்ட சபையில் அயோத்திதாசர் மூன்று கோரிக்கைகளை வைத்தார்.. கோவிலுக்கு எங்களையும் அணுமதியுங்கள் என்ற முதல்கோரிக்கை உடனே தஞ்சை அய்யர் அதுதான் உங்களுக்கு தனி கோவில் உள்ளதே இதில் எல்லாம் வரகூடாது ஆகமவிதிப்படி தவறு எனச் சொல்லிவிட்டு இதை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கு தரும் பதிலையும் ஏற்க வேண்டும் என்றார் ..இரண்டாவது  கோரிக்கை எங்கள் குழந்தைகளை நான்வது வரையிலாவது படிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் .. அதற்கு பிறகு பிரச்சனையாகி அயோத்திதாசர் வெளியேற்றபட்ட வரலாறெல்லாம் படியுங்கள்..
..
ஐம்பதாண்டு கழித்து ஏறக்குறைய அதே கோரிக்கையோடு (எங்கள் பிள்ளைகளை நான்காவது வரை) சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் அன்றைய முதல்வர் ராஜகோபாலச்சாரியரிடம் வைக்கபட்டபோது  அவர் என்ன சொன்னார் தெரியுமா .. துறை ரீதியாக கேளுங்கள் சவுக்காரம் துவைக்க படித்துறை தண்ணீர் என கேளுங்கள் என பேசியதெல்லாம் வரலாறு .. இடையில்  நீதிக்கட்சி ஆட்சியில் அனைவருக்கும் கல்வி என்றால்தான் இனி பள்ளிகளுக்கு அனுமதி என்று அரசாணை 1924 ல் வந்தது தாழ்த்தபட்டவர்களை தனியே அமர வைக்கிறோம் அனுமதி தாருங்கள் என்ற போது அனுமதி மறுத்தது நீதிக்கட்சி என்பது வரலாறு ..
..
இன்றைக்கு பெரியார் வந்தபிறகு தான் அதிலும் திராவிடம் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சமூகநீதி நிலைநாட்டபட்டதும், இன்றைக்கு கருத்துசுதந்தரம் என்ற பெயரில் சிலர் வந்து உளறவும் முடிகிறது..
பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்றைய குஜராத்தை போலதான் இருந்திருக்கும் .. வடமாநிலங்களைப்போல தலித்கள் வேட்டையாடபட்டிருப்பார்கள் .. சுயமரியாதையோடு சுரணையோடு மானத்தோடு வாழ வழிசெய்தது திராவிடம்..
..
நன்றி! திராவிடப் பெருஞ்சுவராய் காத்துநின்ற எம் தலைவர்கள் 
பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா பேரருளாளன் கலைஞர்..
..
ஆலஞ்சியார்

Saturday, April 17, 2021

விவேக்

விவேக்..
வடிகர் என்பதை தாண்டி அவருக்கென்று சில முகங்கள் இருந்தன.. நல்லதை செய்யவேண்டும் நம்மால் முடிந்தளவு விழிப்புணர்வை பரப்புதல்,என ஒரு சமூகபார்வை அவருக்கிருந்தது .. நகைச்சுவையோடு எதைச் சொன்னாலும் பொல்லாப்பு வராதென்ற உண்மையை உணர்ந்திருந்தார் .. மக்களை மகிழ்விப்பவன் சற்று கோமாளியாக இருப்பது நன்று.. 
நகைச்சுவை சிறந்த மருந்து அதை தொடர்ந்து செய்வது சமூகத்தில் நல்ல பலனை தரும்..
சிலவரிகளில் உண்மையை உரக்கச் சொல்லிவிடலாம்.. 
அவா வேற வர்ணம்..
அவாளு வரணும் என்பார்  நகைச்சுவையோடு கூடி பேரிடியாய் இறக்கிவைப்பார்..
..
அவருக்கு சாதி இருந்தது மதம் கூட ஆனால் அதன் பிடியில் சிக்குண்டு மதியிழக்கவில்லை சிலநேரம் கேடயம் அது முடிந்த பிறகு தூக்கியெறிதல் நல்லதென்ற அறிவிருந்தது ..
எங்கோ அவர் சறுக்கியிருக்க வேண்டியவர் நிதானித்து தவிர்த்து தன் களப்பணியை அக்கறை காட்டி மறுவடிவம் பெற்றார்.. மரம் நடல் இந்த மண்ணிற்கு நீ செய்யும் நன்றிகடன்.. வரும் தலைமுறைக்கு நீ செய்யும் பேருதவி.. அதை தொடர்ந்து செய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்..
..
கலைஞர் அவர்களால் "சின்னகலைவாணர் " என அழைக்கபட்டவர்.. ரிஷியிடம் பெற்ற வரம் அது..சமூக பார்வையோடு கூடிய எண்ணங்கள் மூடநம்பிக்கைகளை அவர்பாணியில் கிண்டல் செய்து மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தல் அதற்கு நகைச்சுவை பேராயுதமாய் இருந்து காத்தது ..
அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் அதை வெளிகாட்டிக் வெறிக்கொள்ளவில்லை மூடங்களை விமர்சிக்கும் தைரியம் இருந்தது .. பசியும் வறுமையும் படிப்பினை தரும் ஆசான்கள் என நம்பியவர்.. 
..
ஒரேயொரு நிகழ்வு போதும்.. துன்பபடும் போது தோள்நிற்பது தேவையறிந்து உதவுவது அதை வெளியில் சொல்லாமல் காப்பது.. விவேக் நல்ல மனிதர் இதை மரியாதைக்குரிய நடிகர் குமரிமுத்து சொல்வதை கேட்டால் புரியும் தன் மகள் திருமணத்திற்காக நாடகத்தில் நடித்து வந்த தொகையை முழுவதுமாக தந்து பேருதவி செய்தவர் .. சின்னக்கலைவாணர் என சொன்னதன் பொருள் இப்போது புரியும்..
..
போய்வாருங்கள் விவேக்..
காலம் நினைவில் கொள்ளும்
..
ஆலஞ்சியார்

Friday, April 16, 2021

வளர்ச்சி எனநம்ப வைத்த குஜராத் நிலை .. அபாயகரமான காலகட்டத்தில் வெளிச்சம் பெறுகிறது.. இந்த குஜராத் நாயகன் தான் இன்று இந்தியாவின் பிரதமர்.. கல்வி மருத்துவம் கட்டமைப்பு என எதிலும் வளர்ச்சியடையாத ஒரு மாநிலத்தை இந்தியாவிற்கே முன்மாதிரி என பொய்யுரைத்து அதை ஊடகங்கள் அறமின்றி மக்களிடம் கொண்டு சென்றதும் வலைத்தளங்களில் பாஜகவெனும் கீழ்தர சிந்தனையாளர்கள் போட்டோஷாப் செய்து பரப்பியதும் இன்று தோலுரிக்கபடுகிறது.. 
மனிதனை விட மாட்டை கவனிக்கும் மகாபாவிகளால் இன்று உ.பி.யின் நிலை கவலைக்கிடமாக.. இவையெல்லாம் பிரதமர் தெரிந்தும் "மான்கிபாத்" க்கு செலவு செய்கிறார்.. அவர் தொகுதியில் கூட மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை.. ஒரே படுக்கையில் மூவர் என்ன கொடுமை.. கொரோனா மரணங்களை எரிக்க இடுகாடுகளில் இடமில்லை இவர்கள் தான் தமிழ்நாட்டை உத்திரபிரதேசம் போல் ஆக்குவேன் என பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் ..
..
மத அரசியல் செய்கிறவர்களிடத்தில் மனிதம் இருக்காது .. கோவில் கட்டுவதால் ஒன்றும் புண்ணியமில்லை நல்ல மருத்துவமனைகளை கட்டியிருந்தால் அவர்கள் நம்பும் கடவுளர்களே மகிழ்ந்திருப்பர்.. திறமையற்ற நிர்வாகம் அதில் மதவெறியர்களும் மகாபாவிகளும் கைகோர்த்து மதவெறியாட்டம் ஆடுவதும் மதத்தின் பெயரில் எந்த கொடுங்காரியமும் செய்யலாம் சிறுமிகளை வன்புணர்வு செய்யலாம், மாட்டுக்கறிக்காக மனிதனை கொல்லலாம், தலித்களை அம்மணாக்கி விரட்டலாம், உயர் கல்வியை குறிப்பிட்ட பிரிவினருக்கே வழங்கலாம், அதிகாரத்தில் பயிற்சியளித்த மதவெறியர்களை கொண்டுவரலாம், எதிர்த்து பேசினாலோ நீதியை நிலைநாட்ட நினைத்தாலோ கொலை செய்யலாம், ராமனை சொல்லி எதுவும் செய்யலாம் ஆனால் வளர்ச்சி அதெல்லாம் தெரியாது .. மடையர்களாக இருக்கும் வரைதான் இவர்கள் ஆட்டம் தொடர முடியும் .. 
..
கேள்வி எழ தொடங்கிவிட்டாலே முன்னேற்றம் தானாய் வரும்.. இங்கே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு மெச்ச தகுந்தநிலையை அடைந்ததற்கு கல்வியை எளியவர்களுக்கு வழங்கியதும் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அரசு பொதுமருத்துவமனைகளை தொடங்கி ,பாமரனும் உயர்சிகிச்சை பெற வழிவகுத்ததே காரணம் .. அதனால் தான் இங்கே தாமரை என்றால் காறி உமிழ்கிறார்கள் 
இங்கே வளர்ச்சி வளர்ந்த நாடுகளோடு போட்டிபோடும் நிலையில் இருக்கிறது இந்த கட்டுமானங்கள் திராவிட இயக்கத்தின் விழிப்புணர்வில், செயலில் ஆட்சி அதிகாரத்தில் வந்தது எதிலும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட #பேரருளாளன்_கலைஞர் எனும் மாமனிதனின் பெரும் உழைப்பால் உருவானது .. பெரியாரும் பேராசான் அண்ணாவும் காட்டிய வழியில் தமிழகத்தை வடிவமைத்தவர் கலைஞர் பெருமகன் .. 
..
தமிழகம் மட்டும் தனிநாடாக இரிந்திருந்தால் 17வது வளர்ந்த நாடாக  இருக்கும் பொருளாதாரத்தில் வல்லரசாக இருக்கும் என்றார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்தியா சென்(அமார்த்ய குமார் சென் ) மிகையில்லை தமிழகம் இந்திய ஒன்றியத்தின் பிறமாநிலங்களைவிட கல்வியில் மருத்துவத்துறையில் புரட்சி செய்திருக்கிறது ..
..
நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்காக அகமதாபாத் குடிசைகள் மறைக்கபட்டபோதே உமது திறமையான..? நிர்வாகத்தை நாடு அறிந்தது.. 
நாடே பெருந்தொற்றால் பீதியில் பிரதமர் எங்கே.. ? இந்திய ஒன்றியம் கண்ட மோசமான பிரதமர் எங்கே..? வளர்ச்சிபாதைக்கு வழிவகுப்பதாக சொல்லி ஏமாற்றிய பிரதமர் எங்கே..? மனிதர்களை மிருங்களுக்கு கீழாக எண்ணும் பிரதமரே எங்கே.. ? மதவெறியூட்டி மானுடத்தை மாசாக்கும் மதியாளரே எங்கே போனீர்..
வாய்சவடால் வீரரே எங்கே போனீர்.. 

#WhereIsPM 
..
ஆலஞ்சியார்
தமிழ் மீது தீராத பகை ஏன்..
குறிப்பாக பார்பனீயர்கள் தமிழ் மீது குரோத மனப்பான்மையே கொண்டிருக்கிறார்கள்.. தமிழை நீசமொழி சொல்ல அவர்களால் முடிகிறது .. தமிழின் வளர்ச்சியென்பது மொழியோடு மட்டுமல்ல அதன் கலாச்சாரத்தை முன்னெடுப்பதால் .. இவர்கள் கட்டிவைத்திருக்கிற சமஸ்கிருத அல்ல வடமொழிக் கலாச்சாரம் சுக்குநூறாவதால் வரும் கோபம்.. தமிழின் தொன்மை அவர்கள் இருப்பையே காலி செய்கிறது .. 
..
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அவன் கலாச்சாரத்தை நசுக்கு இல்லாதாக்கு என்பார்கள் .. அதன் வளத்தில் இடைசெருகலை செய் .. மொழி கலப்பை செய்.. தமிழ் மொழி மீதான திணிப்பு இவர்களுக்கு எளிதாக காரணம் நம்மவர்களுக்கு மறுக்கபட்டதும் 
அவர்கள் மட்டும் கல்வியில் சிறந்தவர்களாக நாம் நம்பியதும்
நம் மீது தொடுக்கபட்ட மொழித்திணிப்பை  நாம் சரி செய்யாதவரை தொடர் தாக்குதலை செய்துக்கொண்டே இருப்பார்கள் "தமிழ்வாழ்க" என்ற மாநகராட்சி கட்டிடத்தில் மேல் வைக்கபட்ட பதாகை எவ்வளவு உறுத்தியிருக்கிறது..
..
தமிழ்ச் சொற்களோடு கலந்தபோன சமஸ்கிருத வடமொழிச் சொற்களை புறக்கணிக்க வேண்டும் .. அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்க நாம் வடமொழிச் சொல்லை ஏன் சுமந்து திரியவேண்டும் .. அரிச்சுவடியில் இருந்து மாற்றத்தை கொண்டுவரவேண்டும் .. தமிழ் எழுத்துக்களில் கலப்புகளை நீக்கிவிட்டு தனித் தமிழை கொண்டுவர வேண்டும் .. 
..

Wednesday, April 14, 2021

ஈ.வெ.ரா சாலை..
இது சாலை அல்ல எமது பாதை
தமிழர்களை சமன்படுத்திய பாதை .. தமிழருக்காக உழைத்த பெருங்கிழவன் சமைத்த பாதை
அல்லல்படுவோரை காக்கும் பாதை .. எமது பிள்ளைகள் கல்வியில் சிறக்க அறிவில் மிளிர காரணமாய் அமைந்த பாதை .. எம்மை எமக்கே உணர்த்தி நீ..பழந்தமிழன் கல்வியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில் உலகுக்கே பாடமெடுத்தவன் என உணரவைத்த பாதை.. எம் தமிழ் மொழி மூத்ததென சொல்லி புரியவைத்த பாதை..
..
கலையும் கலாச்சாரம் உன்மீது திணிக்கபட்டது இதெல்லாம் உனதில்லை உனது கலாச்சாரம் மனிதம் சார்ந்தது மக்களை மகிழ்விப்பது .. வேற்றுமையற்ற உயர்சிந்தனை கொண்டது ..வீரம் பயமறியாபோக்கு பசித்தவனை அரவணைக்கும் பெருவாழ்வு வாழ்ந்தவன் நீ என உணர்த்திய பாதை.. வந்தேறிகள் வழிகெடுத்து உன் மீது திணித்ததெல்லாம் சீழ்வடிவும் சிந்தனைகள் .. புரட்டும் புராணமும் உனதில்லை..நீ இயற்கையை வணங்கிய பெருமகன் உலகின் மூத்தக்குடி என புரியவைத்த புதியபாதை.. 
..
இதிகாசங்கள் உனதல்ல நீ பின்பற்ற வேண்டியது திருக்குறள் என உனக்கு வகுப்பெடுத்த பாதையிது.. மூடத்தனத்தை தூக்கியெறி முட்டாளாய் திரியாதே.. சாதியோ மதமோ உனதல்ல நீ.. தமிழ்க்குடி இடையில் வந்ததுதான் நீ நம்பும் மதமும் சாதியும் மதமாற்றமும்.. நீ இயல்பானவன் இயற்கைபிறவி.. உன் மீது சுமத்தபட்ட கழிவுகளை துடைத்தெறி என அறிவுசொன்ன பாதை..
..
படி எவன் தடுத்தாலும் படி.. அறிவுக் கொண்டுபார்.. எவன் சொன்னாலும் அறிவேற்காததை ஏற்காதே.. உரிமையை எவன் தடுத்தாலும் விடாதே உனக்கானதை எவனும் எடுக்க அனுமதியாதே.. உன்னைவிட எவனும் உயர்வில்லை, அடுத்தவன் உணர்வை மதி .. எல்லோரும் சமம் .. ஏற்றதாழ்வுகாட்டாதே..
என சொல்லி புரியவைத்த புதிய பாதை..
உனக்கானதை தடுத்த பாசிச கூட்டத்தை சூழ்ச்சியை முறியடித்து, அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்து உரிமையை மீட்டுதந்தது புரட்சி செய்த பாதை..
..
சனாதனமும்,வர்ணாசரமும் உனதில்லை ..பெண்களை அடிமைகளாய் நடத்த சொன்ன இழிநிலை உனதில்லை என உணர்த்தி
பெண்கள் இணையானவர்கள், பெண் ஆண்களுக்கு கீழ்படிந்தவர்கள் அல்ல எல்லாவற்றிலும் அவர்களுக்கு உரிமை உண்டு.. பெண்கள் கல்விகற்வேண்டும் .. ஆணுக்கு இணையாக வேலைவாய்ப்பில் இடம்பெறவேண்டும்.. ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவை என்ற புரட்சியாளன் அமைத்த பாதை..
மானிடப்பற்றொன்றே மகத்தானது.. சாதிப்பற்றோ மதப்பற்றோ இனப்பற்றோ ஏன் மொழிப்பற்றோ எனக்கில்லை
மானிடப்பற்று எனக்குள்ளதென்ற தெளிவாக வகுத்த பாதை இது..
..
நல்வழிப்பாதை..
நானிலம் சிறக்க..
நல்லவர்தம் வாழ்வு சிறக்க
மனிதர்களை மனிதர்களாக்க..
மூடம் நீக்கி மறுமலர்ச்சி தந்த
மா மேதை சமைத்த பாதை ..
ஈ.வெ.ரா..சொல் அல்ல
சுடர்விடும் விளக்கு..
இருட்டை விரட்ட வந்த கிழக்கு
..
ஆலஞ்சியார்

Sunday, April 11, 2021

திருமா..
தொல்.திருமாவளவன் என்ற அரசியல்வாதியோடு முரண்பட்டும், உடன்பட்டும் இருக்கிறோம்.. ஆரம்பகால அரசியலில் தன்நிலை நிறுத்தலுக்காக அவரின் பேச்சும் செயலும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.. தன் இன மக்களின் விடுதலை என்ற குறுகிய வட்டத்திலிருந்து திருமா கரையேறி வெகுகாலமாகிவிட்டது.. அதைகூட நம் பார்வையில் குறைகூற முடியாது.. பட்டியிலினமக்களை நடத்தும் விதம் இப்போதும் சர்ச்சைக்குரியதுதான் .. சில நிலக்கிழார்கள் அவர்களை வைத்திருக்கும் இடம் வேதனைக்குரியது.. தீண்டாமை முழுவதுமாக மக்கள் மனங்களிலிருந்து நீங்கிவிட்டதா என கேள்வி எழுப்பினால் பதில் இல்லை.. சில ஆண்டபரம்பரை என சொல்லிக்கொள்வோர் இன்னமும் நெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்
..
அடங்க மறு அத்துமீறு திருப்பி அடி என்ற வாசகம் தலித் இளைஞர்களை ஒருங்கிணைக்க சுயம் எழ சுயமரியாதையை ஊட்ட செய்தது.. சில சம்பவங்கள் சறுக்கலை தந்தாலும் அவர்களின் பயணம் நெடுக காயங்களோடே இருந்தது .. எந்த சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லி புண்படுத்த விரும்பவில்லை மாறாக திருமா தவிர்க்கமுடியாத சக்தி என்பதில் மாற்றுகருத்தே இல்லை.. படித்தவர்கள் திருமாவோடு இல்லை என்ற வாதத்தை முழுவதுமாக நிராகரிக்கிறோம்.. படி,பண்படு செயல்படு என இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார்.. சிலரை போல முரடர்களாக முட்டாளாக , எங்கே விபரம் தெரிந்தால் திருப்பி அடிப்போனே என்று வெறியூட்டவில்லை.. ஆரம்பகாலங்களில் சரக்கு இருக்கு முறுக்கிருக்கு என்று பேசியவர்தான் ..உணர்ச்சி விளிம்பில் நிறுத்தியவர்தான் ஆனால் காலம் கனியவைத்திருக்கிறது.
..
திமுகவோடு முரண்பட்டு நின்றபோது கூட நாம் அணுசரனையோடுதான் பார்த்தோம் ..சில நினைவுகளும் சில கசப்புணர்வுகளும் கடந்துபோயின.. ஆனாலும் ஒடுக்கபட்ட மக்களிடமிருந்த ஒரு தலைவன் உருவாவது கடினம் .. உருவான சிலர் பாசிசத்தின் ஏவல்களாய் மாறிப்போனதும், தங்கள் செல்வாக்கை, செல்வத்தை உயர்த்திக்கொள்ள துரோமிழைத்த வரலாறுகள் நெடுக உண்டு .. ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி பூவைஜெகன் வரை இந்தியா முழுவதும் சமரசம் செய்துக்கொண்டவர்கள் ஏராளம்.. சனாதனத்தை எதிர்ப்பதில் தன் சமூகமக்களை அரசியல்படுத்துவதில், விழுப்புணர்வை ஏற்படுத்தியதில், ஒழுங்கு செய்ததில் திருமாவின் பங்கு அளப்பரியது.. சமகால அரசியலில் தலித் இனத்தையும் உள்ளடக்கிய அரசியல்பாதையை வகுத்து, உறுதி செய்தவர்.. தலித் அல்லாதோரும் விரும்புகிறவராய் மாற்றிக்கொண்டு பயணிக்கிறார்.. சாதிபலம் மட்டும் போதாது என்பது உணர்ந்து களம் காண்பதும்,சாதிமதமற்ற  பொது அரசியலே நிலைத்து நிற்க உதவும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்..இதெல்லாம் தன் சமூகமக்களை வழிகெடுக்கும் "கேடுகெட்ட" வர்களுக்கு புரியாது.. சமூகத்தை அடகுவைத்து சுகவாழ்வு வாழும் இனத்தை காட்டிகொடுக்கும் வீணர்கள் அறியமாட்டார்கள்..
..
திருமாவை விமர்சிக்க ஆயிரம் காரணம் உண்டு அதேபோல் அணைத்துக்கொள்ளவும்..
#istandwiththiruma
..
ஆலஞ்சியார்

Friday, April 9, 2021

தேர்தல் முடிந்துவிட்டது .. களத்தில் யாரையும் காணோம் ..மக்களுக்காக இயங்க மக்களைப் பற்றி சிந்திக்க இங்கே திமுக தவிர்த்து யாரையும் காணோம்.. சிலர் சாந்து பூசி நடிக்க போய்விட்டார்கள் .. சிலர் வெயிலில் கருத்து போனதற்காக பியூட்டிபார்லர் போய்விட்டார்கள் சிலர் சாதிவெறியை தூண்டி குளிர்காய போய்விட்டார்கள்,சிலர் இருக்கிற இடமே தெரியவில்லை .. ஆனால் திமுக தொடர்ந்து மக்கள் பணியில்..
..
காரணம் திமுக கட்சியல்ல இயக்கம் ..மக்களுக்கான இயக்கம் வெற்றி தோல்விப்பற்றியெல்லாம் கவலைக் கொள்வதில்லை வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்தி தமிழர் மேம்பாட்டிற்காக உழைப்பது கடமையென எண்ணுவதால் அவர்களால் எல்லா நேரங்களில் ஒருபோல இயங்க முடிகிறது.. மக்கள் பணி அதுவே திமுகவின் தொடர்ந்து பேச வைக்கிறது .. திமுக தலைமை எப்போதும் மக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் .. 
..
திடீர் போராளிகள் நாட்டை திருத்த வந்த நவீன கோமாளிகள், ஊழலை ஒழிக்க சகாயம் செய்ய வந்தவர்கள், சாதிவெறி கும்பல்கள், திராவிடத்தை ஒழித்தே தீருவேன் என முழக்கமிட்டவர்கள், பொழுதுபோகாமல் அரசியலுக்க
வந்தவர்கள், இவர்களெல்லாம் தேர்தல் முடிந்து அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள் அல்லது ஒளிந்துக் கொள்வார்கள்..
..
திமுக ஜனநாயக இயக்கம் .. மக்கள் துயர்துடைக்க அவர் தம் முன்னேற்றம் .. நாடு,இனம்,மொழி,கலாச்சாரம், பண்பாடு என தொடர்ந்து அதன் வளர்ச்சி காத்தல் என போராடிக்கொண்டே இருக்கும்.. இதோ தலைவர் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து சானிடேசர் கையுறை,முக கவசம் என பொதுமக்களுக்கு வழங்கவும் "ஒருங்கிணைவோம் வா" என பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.. மற்ற கட்சிகள் தங்கள் பணி தேர்தலோடு முடிந்ததென போய்விட்டார்கள்..
..
அரசியல் யாதெனில் இயங்குதல்.. அது திடீர் அரசியல்வாதிகளுக்கோ அடிக்கடி அணி தாவுகிறவர்களுக்கோ, பாசிசத்தின் அடிமைகளுக்கோ, பிழைக்க அரசியலுக்கு வந்தவர்களுக்கோ, தெரியாது.. இங்கே அரசியல் மக்களுக்காக இனத்திற்காக மொழிக்காக, பள்ளத்தை கிடப்போரை உயரத்தில் தூக்கிவிட, மறுக்கபடும் உரிமைகளை பெற்று தர, நம்மை அடிமைபடுத்த நினைப்போரை விரட்டி அடிக்க.. மானத்தோடு வாழ திமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தேவை.. திமுக மட்டும் தான் தொடர்ந்து இயங்கும்,பயணிக்கும், செயல்படும்,காக்கும்..
..
ஆலஞ்சியார்

Thursday, April 8, 2021

இரு வன்னிய இளைஞர்களை பாமக கொலைச் செய்திருக்கிறது.. சாதிவெறியை தூண்டி இளைஞர்களை வழிகெடுத்து அப்பனும் மகனும் சுகபோகவாழ்வு வாழ அப்பாவிகள் இருவர் கொலைச் செய்யபட்டிருக்கிறார்கள் வேதனை..
..
பாமக வேறு வன்னிய சமூகத்தினர் வேறு என்பதை உணர்த்தியிருக்கிறது.. படி,முன்னேறு என வழிகாட்டாமல் ஆண்டபரம்பரை என மீசையை முறுக்கி கையில் அரிவாளை தருகிற அயோக்கியர்கள் அப்பனும் மகனும்.. பாமக என்ற கட்சியை தடை செய்ய வேண்டும், உண்மையில் சமூகத்தின் மீது அக்கறையில்லை ..அரசியலில் கழிசடையாய் தன் நிலையை உயர்த்த பொய் சொல்வதும், சொல்வதை மாற்றிக்கொள்வதும் பெற்றதாயை கூட அவமானபடுத்துவதும் இந்த கேடுகெட்டவர்களுக்கு இலகுவாக வரும்.. தான் சார்ந்த சமூகத்திற்காக உழைக்க வந்ததாக சொன்னவர் இன்று இளைஞர்களை சாதிவெறிபிடித்து அலைய காரணமானது தான் கொடுமை.. இன்னமும் சிலர் இவர்கள் பின் நிற்பது தங்களை தங்கள் சமுதாயத்தை ஏமாற்றுகிற செயல்..
..
ஏன் தடைச் செய்யபடவேண்டும் 2021 தேர்தல் அறிக்கையில் சமத்துவம் நீதி என்ற தலைப்பில் சொல்லும் வார்த்தைகள் ஒன்றேபோதும் .. சமமாக நடத்துவதென்பது இரு சமமானவர்களுக்கிடையே அன்றி சமமற்றவர்களோடு சமமாக நடத்துவது அல்ல.. இதற்காக தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்தது இவர்கள் மீது தீண்டாமை வழக்கு போடபட்டிருக்கவேண்டாமா .. அரசியல்சாசனத்தை மீறிய செயலுக்கு தண்டனை பெற்றுதரவேண்டாமா.. சாதிமதம் பார்க்காமல் என்ற சொல்லின் பொருள் புரிந்தால் சமமற்றவர் என்ற சொல் வந்திருக்காது .. சாதிவெறியை தவிர வேறொரு கொள்கையும் இல்லாத ஒரே கட்சி பாமக ..  
..
கொலைச் செய்கிற அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டார்கள் தனக்கு பிடித்தமானவருக்காக தேர்தல் பணியாற்றியிருக்கிறார்கள் இதில் என்ன தவறு .. சாதியை மறந்து தேர்தலில் முக்கியத்துவம் உணர்ந்து விசிகவிற்காக வாக்குகேட்டது குத்தமா.. கொலையாளிகளை கைது செய்வதோடு முடிந்துவிடகூடாது தூண்டிவிட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரபடவேண்டும் இதுபோன்ற கொடியவர்களுக்கு பெற்று தரும் தண்டனை சமூகத்தில் ஏற்றதாழ்வை சொல்லி பகையையூட்டி கலவரம் செய்து குடிசைகளை கொளுத்தி மனிதர்களை கொன்று தின்னும் இந்த கேவலமான பிறவிகளை கடும்தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்.. சாபமிடுவதில் நமக்கு நம்பிக்கையில்லை ஆனால் நல்லவே இருக்கமாட்டீங்கடா..
..
பாமக தமிழ் சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும்.. இளைஞர்களை ரௌடிகளாக சாதி கலவரம் செய்யும் கருவியாக மாற்றும்.. பதவிக்காக மூளைச்சலவை செய்யபட்ட இளைஞர்கள் சிறுவர்கள் வட தமிழக கிராமங்களில் நிறைந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கண்டறிந்து கல்வியை வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் அவர்களை மீட்க வன்னிய சமூகம் தன்னலற்ற தலைவர்கள் முன்வரவேண்டும்..
..
மதவெறியை வளர்த்து மனிதர்களிடையே விரோதத்தை வளர்க்கும் பாஜக எப்படி ஆபத்தானதோ..அதேபோல  சாதிவெறியை வளர்த்து இளைஞர்களை வழிகெடுத்து நாசபடுத்தும் பாமகவும் ஆபத்தானது.. மதவெறியும் சாதிவெறியும் சமூககேடு..
தமிழகத்திலிருந்தே விரட்டபடவேண்டிய நாசகாரசக்திகள் இவர்கள்..
பாமகவை தடைசெய்யவேண்டும்
..
ஆலஞ்சியார்

Wednesday, April 7, 2021

தொட்டு பாரு தம்பி..
கனிமொழி பிரசாரத்தின் இடையே அரவங்குறிச்சி பாஜக வேட்பாளரை பார்த்து சொன்ன வார்த்தை.. 
ஆம் .. திமுக எனும் பேரியக்கம் அதன் தொண்டர்களால் அவர்தம் அயராத உழைப்பால் அவரின் தன்னலமற்ற சேவையால் அப்பழுக்கற்ற கொள்கைப்பிடிப்பால் இனத்தின் மொழியின் மீது கொண்ட உயிர்பால் உருவானது.. தலைமைக்கும் தொண்டனுக்குமான உறவு என்பது , தகப்பன் பாசத்தை போன்றது அண்ணனின் அன்பை போன்றது .. உயிரினும் மேலான என்ற வரிகள் உள்ளம்போடு வந்து விழும் வார்த்தைகள்.. தலைவன் தொண்டனுக்குமான இடைவெளியை பேரன்பின் பாலம் இணைக்கும்.. முக சாந்து
ஈர்ப்பில் வந்ததல்ல.. அகம் சார்ந்து கொள்கைப் பிடிப்பில் நம்பிக்கையெனும் கயிற்றால் இணைக்கபட்டது ‍..
..
ஆலஞ்சியார்


Tuesday, April 6, 2021

அமைதி புரட்சி..
காலை விடிந்தவுடன் தமிழகம் மிளிர தொடங்கியது.. மக்கள் தன்னார்வமாய் வாக்குசவாடிகளுக்கு வந்து தங்கள் கடமையாற்றுகிறார்கள்.. அரசியல் தலைவர்கள் தாண்டி சில பிரபலங்கள் குறீயீட்டை உணர்த்தி இந்த பொல்லாத அடிமை அரசும் பாசிசவெறி கொண்ட மய்ய அரசும் மக்களுக்கு தந்த துயரை உணர்ந்தெழுந்து மௌனமாய் சேதி சொன்னார்கள்..  தல தளபதி இருவரும் கருப்பு சிவப்பு (மாஸ்க் மிதிவண்டி ..) நிறத்தில் ..இது தமிழ்நாடு கருப்பே இதன் நிறம் கருப்பும் சிவப்பால் தான் பிடித்த பீடையை விரட்ட முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.. விஜய்சேதுபதி மதம்சாதிக்கெதிராக வாக்களித்தாக சொன்னதும்.. ஜெயம் ரவி நல்லாட்சிக்கென்றதும் நல்ல சேதியை சொல்கிறது
.. 
பொதுமக்கள் இந்த அரசு விரட்டபடவேண்டும் என்பதோடு மானங்கெட்டு தமிழகத்தை தலைகுனிய வைத்த இந்த கேடுகெட்டவர்களுக்கெதிராக விரல் புரட்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்..
ஸ்டாலின் தான் சரியான தேர்வு .. சில உதிரிகளுக்கு வாக்களித்து வீணாய் போவதைவிட ஒருசேர உதயசூரியனுக்கு வாக்களித்து இனத்தை காக்க மௌன புரட்சி செய்திருக்கிறார்கள்.. இது எதிர்பார்த்ததுதான் எனினும் இத்தனை வேகம் எதிர்பார்க்கவில்லை .. தங்கள் குழந்தைகளின் எதிர்கால கனவு நசுக்கபடும் .. வடவனுக்கு வாரிவழங்கி நம் பிள்ளைகளை கூலிப்பணிக்கு அனுப்பிவிடுவார்கள் .. இந்த கெடுமதியாளர்கள் என அஞ்சி ஸ்டாலின் தான் நம்மை காக்கும் சுடலைசாமி என தீர்மானித்து வாக்குகளால் ஒரு பெரும் புரட்சியை செய்திருக்கிறார்கள்..
..
பொதுவாக எல்லா தொகுதிகளிலும் அரசிற்கு எதிரான மனநிலை இருக்கிறது.. 
மண்ணை இழந்துவிட கூடாதென்கிற வெறி தெரிகிறது .. இனத்திற்கென்ற அடையாளத்தை அழிக்க நினைக்கும் ஆரிய கூட்டத்தை விரட்டியடிக்கும் போர் இது.. வெளிப்படையாகவே தளபதி அவர்கள் திராவிட ஆரிய போர் என பிரகடனபடுத்தியது நன்றாக மக்களிடம் பேசபட்டு மொழியை இனத்தை மண்ணை காக்க திமுக ஒன்றே சரியானதென முடிவை மக்கள் எடுத்திருப்பதை உணர முடிகிறது.. பாவிகள் நம்மை தலைகுனிய வைத்துவிட்டார்கள் ..வீர மரபிற்கு சொந்தமான இனத்தை யாருக்கும் எதற்கும் அஞ்சாத தமிழினத்தை பதவி சுகத்திற்காக காட்டிகொடுக்கும் நயவஞ்சகர்களை விரட்டியடிக்க இது தான் சரியான நேரம்  என பெரும் எதிர்பார்ப்போடு வரிசை காத்துநின்று வெயின் தாக்கம் அறிந்து ..நம் பணத்தை எடுக்கவே விடியவிடிய காத்திருந்ததை ஓர்த்து இந்த மகாபாவிகளை வீட்டிற்கு அனுப்ப ஒருநாள் வெயிலில் நிற்பதை நாங்கள் சகித்துக்கொள்வோமென துரோக கும்பலை விரட்டுகிறார்கள்..
..
உதயசூரியன் பார்வையில் 
தமிழகம் விழித்துக்கொண்டதன் அடையாளம் தெரிகிறது.. மக்களின் புன்னகை நல்லாட்சிக்கு வழிவகுக்கும் ..
200+ சீட்டு திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.. தளபதியின் உழைப்பு ..அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை பாசிசத்தை வேரறுக்க, தலையாட்டிகளை உடைத்தெறிய காலம் பார்த்து காத்திருந்த மக்கள் ஒரு மௌன புரட்சியை செய்திருக்கிறார்கள்..
வரலாறு படைக்கும் ..

Congratulations 
The honourable Chief Minister M.K Stalin 😍😍
..
ஆலஞ்சியார்

Saturday, April 3, 2021

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்
நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்.. #லெனின்
..
தேர்தல் பரப்புரைகள் முடிந்தது.. யாருக்கு வாக்களிப்பதென தீர்மானித்திருப்பீர்கள்.. வாக்குசவாடிக்கு போகும் முன் ஒருநிமிடம் யோசியுங்கள்.. கடந்த பத்தாண்டில் பாழாய்போன நமது எதிர்காலம் .. நம் குழந்தைகளின் கனவை,  எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசுபணிகளில் வடவர்களுக்கு அடிப்பணிந்து வேலை செய்யும் நிலையை ஏற்படுத்திய மகாபாவிகள் பன்னீரும் பழனியும் என்பதை ஒரு கணம் யோசித்தால் போதும்.. தமிழக அரசுபணிகளை யாருக்கும் தெரியாமல் கையெழுத்திட்டு பிறமாநிலத்தவரும் வரலாம் என திறந்துவிட்டு இன்று தமிழர்களுக்கு வேலையில்லை என்கிற நிலை இவை மாற்றபடவேண்டாமா..
..
பொள்ளாச்சியின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழுகிறதா.. அந்த குழந்தைகளுக்கு  குறைந்தபட்ச நீதி குற்றவாளிகள் தண்டிக்கபடுவது தானே.. அமைச்சர் பாண்டியராஜன் குழந்தைகளை வளர்க்க தெரியவில்லை என சொன்னதும் முதல்வரே இது நாடகம் என கட்சிகாரனை காப்பாற்ற ஆடிய நாடகம் இவர்கள் முகத்திரை கிழிக்கபடவேண்டாமா.. ?
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்து கொள்ளையடிக்கும் முதல்வர் 40 ரூபாய் விளக்கை ₹400 க்கு வாங்கும் மந்திரி .. குட்கா போதை பொருள் கடத்தலில் மந்திரியின் பங்கு இவையெல்லாம் விசாரித்து தண்டிக்கபடவேண்டாமா..
மிகவும் ஆபத்தானவர்கள் அதிமுக அடிமைகள் .. சொரணையற்று வீண்பழிசுமத்தி மானத்தை இழந்து தமிழகத்தை தலைகுனிய வைத்த இந்த "கேடுகெட்டவர்கள்" தண்டிக்கபடவேண்டும் என்பதை நினைவில் கொள்க..
..
பத்திரிக்கைகளில் பக்கம்பக்கமாக விளம்பரங்கள் திமுக ஆட்சியில் செய்தவையென பட்டியிலிட்டிருக்கிறார்கள் .. பத்தாண்டாய் ஏன் வழக்கு பதியவில்லை .. 2ஜி வழக்கே விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி திமுக மீது சுமத்தபட்ட பழியை துடைத்தாகி குற்றமற்றவரென செய்திகள் வந்ததெல்லாம் மக்கள் அறிவார்கள்.. ஏன் இதுவரை ஒரு திமுககாரன் கூட வழக்கில் தண்டிக்கபடவில்லை.. ஆனால் முதல்வராக ஜெயலலிதா நீதிமன்றம் சென்று குற்றவாளியாய் சிறைக்கென்ற வரலாறு அதிமுக கட்சிக்கு உண்டு .. அதிமுக அமைச்சர்கள் அரங்கநாயகம் மருங்காபுரி பொன்னுசாமி என குற்றவாளிகள் என தீர்ப்பு பெற்றவர்கள் உண்டு .. வரும்காலங்களில் பன்னீரும் பழனியும் கூட சிறைக்கு செல்வார்கள் .. இவையெல்லாம் மக்களுக்கு தெரியும்..  விளம்பரம் என்ற பெயரில் ஊடக அறம் இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது .. அதிமுகவில் சிறைசென்றவர்கள் பட்டியலை நாளை எதிர்பார்க்கலாமா. ? அதானே அறம்.. 
..
சமஸ்கிருதம் தெரியாத நம்மை ரௌடிகள் என்ற பாண்டியராஜனை, அதிமுக வெற்றி பெற்றால்  பாஜக ஆட்சிதான் நடக்கும் என்ற யோகி, உ.பி.முதல்வர் யோகி வருகையையொட்டி நடந்த கலவரத்தை சிறுசம்பவம் இதை கூட செய்யவில்லையென்றால் எப்படி எனும் வானதி.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சி பார்த்து தெரிந்துக்கொண்டேன் எனும் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்து வேலைவாய்ப்புகளை வடவனுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடும் பன்னீர்.. இவர்கள் ஆபத்தானவர்கள்.. இவர்களுக்கு முடிவுகட்ட வாக்களிக்கும் முன் யோசியுங்கள்..
..
நம்பிக்கை தரும் அணிக்கு.. 
நல்லதை விரும்பும், நமது உரிமைகளுக்கு குரல் கொடுத்து மீட்கும் ,காத்துநிற்கும் காவலனாய் திகழும்  திமுக அணியை வெற்றி பெற செய்வது நமது கடமை..
..
உதயசூரியன் நினைவிருக்கட்டும்..
..
ஆலஞ்சியார்
வியக்கிறேன்..
உதயநிதி ஸ்டாலின் வரும்போது பெரிதாக நினைக்கவில்லை கொஞ்சம் நையாண்டி கொஞ்சம் யதார்த்தம் ,பக்கத்துவீட்டு பையனை பார்ப்பதை போன்ற தோற்றம்,சினிமா முகம் அவ்வளவுதான் .. அரசியலில் மெருகேற நீண்ட பயணம் தேவைபடும் என நினைத்ததுண்டு ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்கள் விதையின் வீரீயம் வளர்ச்சியில் தெரிகிறது.. 
..
ஒற்றை செங்கல் தகர்த்தெறிந்துவிட்டது.. மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது.. சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை 
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது..
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
 உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்
..
மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் .. மக்கள் மொழியில் பேசினால் அடுத்துவருவார்கள் அவர்களின் இணக்கம் வரலாற்றில் புதியதொரு அடையாளத்தை தரும்.. அவர்களுக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதலே எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. உழைப்பு சமரசமற்ற பேராளியாய் கொண்ட கொள்கையில் பிடிப்போடு பிறழாமல் இருத்தல் உயரத்தில் எத்திவைக்கும்.. 
..
பொதுவாழ்வில் துணிவும் நேர்மையும்,எதிரியை பேசவிடாமல் செய்யும் ஆற்றலும், எதிலும் , களமறிந்து மக்கள் மனமறிந்து செயலாற்றலும் உயரத்திற்கு கொண்டு செல்லும்,
திராவிட இயக்கம் எதற்காக தொடங்கபட்டதோ அதனை உணர்ந்து,  பள்ளத்தில் கிடப்போரை உயரத்தில் ஏத்திவிட, சமூகநீதியின் குரலாய் தொடர்ந்து ஒலித்திட வேண்டும்..
பெரியாரும் பேரறிஞரும்,பேரருளாளனும் கட்டிகாத்த திராவிட இயக்கம் இன்று பகை சூழ்ந்து தமிழக நலனை காவுகேட்கும் சூழலில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பை உணர்ந்து பகைவர்களை பந்தாடி வழிதவற் வந்துவிட்டீர் நடையைகட்டும் என பறையடித்து விரட்டியவிதம் பெரும்நம்பிக்கை  ஒளிக்கீற்றாய் வெளிச்சம் தருகிறது..
..
உதயமாகிறது.. 
..
ஆலஞ்சியார்

Friday, April 2, 2021

தோற்கிறோம் என்ற பதற்றத்தில் பாஜக அதிமுக எதாவது செய்து கொஞ்சமேனும் மெச்சபடமாட்டோமா என நினைப்பது தெரிகிறது.. தலைவர் மகள் வீடு கரூர் செந்தில் பாலாஜி வீடு என வருமானவரி சோதனை செய்கிறார்கள்.. வீட்டை சுத்தம் செய்ய அரசே செய்யும் ஏற்பாடு இது.. பாஜகவோ அதிமுகவோ சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை.. மதுரைவீரன் படம் பார்த்தாயா என பிரதமர் கேட்கிற நிலையில் தான் அவரது தமிழக அரசியல் அறிவு இருக்கிறது .. ரயில் நிலையத்தை போல எல்லோரும் கோவிலுக்கு வருகிறார்கள் புனிதம் என்னாவது என யோகி கேட்கிறார் அது சரி உ.பி.யில் நாட்டின் முதன்மை குடிமகன் குடியரசு தலைவர் கூட கோவிலுக்குள் நுழைய முடியாது கோவில் தீட்டுபட்டுவிடும் ..
ஆனால் பெரியாரால் 1952 லேயே பரமேஸ்வரன் என்ற பட்டியலினத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்க முடிந்தது .. பரமேஸ்வரன் வரவு கண்டு தில்லை நடராஜரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் பதறும் காட்சிகண்டேன் அந்த மாட்சி கண்டேன் என பேரறிஞர் அண்ணா சொன்னதெல்லாம் காவி யோகிக்கு தெரியுமா என்ன..?
..
கோவையில் யோகி வருகையையோட்டி  கடையடைக்க சொல்லி மிரட்டியதை "சிறு சம்பவம் "  என்கிறார் வானதி சீனிவாசன்.. எது சிறிய சம்பவம் .. வியாபாரிகளை கடையை அடித்து உடைப்போம் என்பதா அதென்ன இஸ்லாமியர்கள் கடைகளுக்கு மட்டும் மிரட்டல் விடுவது .. வாக்கு கேட்க யார் வேண்டுமானாலும் வரலாம் பைத்தியங்களை கூட அழைத்து வாருங்கள் கவலையில்லை அது உரிமையும் கூட அதற்காக கடைகளை அடைக்க சொல்வது அத்துமீறல் .. அதை நியாயபடுத்துவது தரந்தாழ்ந்த செயல்.. கிடைக்கும் கொஞ்ச ஓட்டையும் காலி செய்தாகிவிட்டது ..  பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத நிலைக்கு வந்துவிட்டது  எதையாவது செய்து பரபரப்பை உண்டாக்க நினைக்கும் போதெல்லாம் தமிழகம் அறிவாயுதம் கொண்டு சுக்குநூறாக உடைத்தெறிகிறது காரணம் பெரியாரெனும் பெரும் நெருப்பு கயமையை, அறியாமையை, கோழைத்தனத்தை சுட்டெரித்து .. எதையும் அறிவுகொண்டு சிந்தித்து செயல்பட செய்கிறது.. அதனால் கோவில்களுக்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை வழங்குகிறான் கோவில் முதல் மரியாதையை பிற மதத்தவரும் பெறுகிறான்
..
ஆடு அண்ணாமலை பகிரங்கமாகவே செந்தில் பாலாஜியை மிரட்டுகிறார் அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறதாம் அது கர்நாடக முகமாம் ..தெரியும் அண்ணாமலை IPS அதிகாரி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியானதும் தொடர்ந்து பாஜகவில் ஐக்கிமானதும் தெரியும்..இது போன்ற மிரட்டல் எல்லாம் நிறைய பார்த்தாயிற்று.. வாசுதேவநாயர் என்ற IPS அதிகாரி நீங்கள் யார் என்ற போது மாவட்ட செயலாளர்  என்ற பதிலளிக்க அப்படின்னா .. அதுவா ஜில்லா கலெக்டர் மாதிரி என்று பதிலுரைத்த வரலாறெல்லாம் தெரியாதென்று நினைக்கிறேன்.. கடைக்கோடி தொண்டனை தொட்டுபார் என கனிமொழியே சொல்கிறாரென்றால்  புரிந்திருக்கும் .. பாஜக ஆதரவில் ஆட நினைத்தால் ஆட முடியாமல் போகும் இது கர்நாடகம் இல்லை தமிழகம் ..அதிமுக இல்லை.. திமுக, தீரர்கள் இயக்கம் ..
..
எத்தனை ரெய்டு நடத்தினாலும் கலவரத்தை நடத்த திட்டமிட்டாலும் ..வெட்டுவேன் குத்துவேன் என பேசி மிரட்ட நினைத்தாலும் எதுவும் வேலைக்காகாது .. வேறு மாநிலத்தில் வேண்டுமானால் முயற்சிக்கலாமே தவிர இங்கே ஒன்றும் நடக்காது.. மோடியைவந்து  எனது தொகுதியில் பிரச்சாரம் செய்யுங்கள் வெற்றி பிரகாசமாக இருக்குமென திமுக வேட்பாளர்களென ட்விட் போடுகிறார்கள்.. இதுதான் இங்கே பாஜகவின் நிலை மக்கள் பாஜகவை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.. வேறெதாவது யோசிக்கப்பா.. 
..
வாங்க இளநியை குடிப்போம்..
..
ஆலஞ்சியார்

Thursday, April 1, 2021

சலசலப்பிற்கெல்லாம் திமுக அஞ்சுவதில்லை .. திமுக தலைவர் மகள் வீட்டில் ரெய்டு வருமானவரி துறை பாசிச பாஜகவின் சொற்கேட்டு செயல்படுகிறது .. நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கவிஞர் கனிமொழி தூத்துக்குடியில் வாடகை வீட்டில் ரெய்டு நடத்தியது.. கடைசியில் வழக்கு கூட போடமுடியவில்லை வருமானவரி அதிகாரிகளே வாரண்ட் பிறப்பிக்கலாம் என்பதால் தன் விருப்பதற்கு அதை பயன்படுத்துகிறது மத்திய அரசு
..
திமுகவின் வெற்றி வரலாற்று சிறப்பானதாய் அமையும் என்பதை அறிந்து இது போன்ற செயல்களில் நடத்தி ஒரு பரபரப்பை உண்டாக்கலாம் ஆனால் பொதுவாக இதெல்லாம் மக்கள் மனதில் பாஜக மீது வெறுப்பையே தரும் .. இன்று தான் தலைவர் எக்காரணம் கொண்டும் என்னை விழவைக்க முடியாதென திராவிட திமிரோடு பதிலளித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன்பு எ.வ.வேலு வீட்டிலும் ரெய்டு நடந்தது எதுவும் கைப்பற்ற முடியவில்லை ..
..
பூச்சாண்டி காட்டியெல்லாம் பயமுறுத்த முடியாது .. திமுகவின் வெற்றியை எளிதாக்க வேண்டுமானால் இதுபோன்ற சோதனைகள் உதவும்.. 
..
கனமில்லை அதனால்
அஞ்சமில்லை..
..
ஆலஞ்சியார்